Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:58:59 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7588
#KOTW7588
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 20, 2011
துளிர் பள்ளியில் வலிப்பு நோய் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி! தூ-டி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் கனி விழிப்புணர்வுரை ஆற்றினார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3148 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நவம்பர் 17ஆம் தேதியன்று வலிப்புநோய் விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் 17.11.2011 அன்று மாலை 05.00 மணிக்கு வலிப்புநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

‘மெகா!‘ உள்ளூர் நிர்வாகியும், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் யான்பு மண்டல பிரதிநிதியுமான ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் தலைமை தாங்கினார். துளிர் பள்ளியின் ஆசிரியை குழுமத்தினர் இறைவணக்கப் பாடல் பாடி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.



தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சித் தலைவர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் தலைமையுரையாற்றினார்.



வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துளிர் பள்ளியில் நடத்துவது மிகவும் பொருத்தமான செயல் என்று கூறிய அவர், மூளை வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வீட்டில் வைத்து பராமரிப்பதில் உள்ள சிரமங்களே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கையில், இதுபோன்ற பள்ளியை நடத்தி, அதில் அக்குழந்தைகளின் சுய தேவைகளை நிறைவேற்றுவது முதல் அவர்களுக்கு தொழிற்பயிற்சி வரை வழங்குவது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், இச்செயலை செய்து வரும் துளிர் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், உதவும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இறைவன் எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பின்னர், துளிர் அலுவலகப் பொறுப்பாளர் சித்தி ரம்ஜான் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.



ஒவ்வோர் ஆண்டும் இந்திய வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் நவம்பர் 17ஆம் நாள் கடைபிடிக்கப்படுகின்றது. 2001ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி 5.5.லட்சம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு வருடமும் 50,000 பேருக்கு மேல் அதிகரித்துக் கொண்டேயுள்ளது.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 74 சதவிகிதம் பேர் கிராமப்புறத்து மக்களே... அவ்வாறு பாதிப்பிற்குள்ளாகும் கிராமப்புற மக்களில் 75 சதவிகிதம் பேர் தகுந்த சிகிச்சை கிடைக்காமலோ அல்லது எடுக்காமலோ அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வலிப்பு நோய் என்று சொன்னாலே மூளை மழுங்கி பைத்தியம் பிடித்துவிடும் என்று மக்களிடையே கருத்து நிலவுவது மிகவும் வருந்தத்தக்கது. இது அவர்களின் அறியாமை, கல்லாமை, வறுமை, அச்சம், மூடநம்பிக்கை என்பதனையே பறைசாற்றுகின்றது.

கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம், வலிப்புநோய் சர்க்கரை நோயினால் அதிக அளவு பாதிக்கப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு வலிப்புநோய் ஏற்படும்.

மது உள்ளிட்ட போதை பழக்கங்களினால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செல்கள் அழிவதனாலோ அல்லது விபத்துக்களினாலோ மூளைச் சிதைவு ஏற்பட்டு வலிப்புநோய் உருவாகலாம். முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை இருந்தால் தங்கத்தினை விட உயர்ந்த நம் மூளையினை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.


இவ்வாறு அவர் தனதுரையில் தெரிவித்தார்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் கனி, வலிப்பு நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்த தகவல்களை உள்ளடக்கி விழிப்புணர்வுரையாற்றினார்.



வலிப்பு என்பது ஒரு நோய் அல்ல. தலைவலி, வலிப்பு என்பன மூளையில் ஏற்படும் குறைபாடோ, சிதைவோ இவற்றின் அறிகுறியின் வெளிப்பாடே... செயல்பாட்டு கோளாறு. மின்னலை ஒழுங்குமுறையில் குறை, வயிறு எரிச்சல், கை - கால் இறுக்கம், வாந்தி, திடீர் மயக்கம், மூளையில் ஏற்படும் கட்டி, இரவில் வியர்வையுடன் கூடிய சத்தம் வெளிப்படல், மூச்சிரைப்பு உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும்.

மூளைக்கு செல்லும் இரசாயனபொருளில் குறைபாடு ஏற்பட்டாலும் இந்நோய் ஏற்படும். இந்நோய் கண்டவருக்கு நல்ல தைரியமும், சமாதானமும் அளிப்பதுதான் முதல் மருந்து. சரியான மருந்தெடுப்பின் மூலமாகவும், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவும் இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும்.

இந்நோய் கண்டவர்கள்

சரியான உணவை, சரியான நேரத்தில் உண்ணல்...

நன்றாக தூங்குதல்...

டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட மிகுந்த ஒளிக்கதிர் நிறைந்த கருவிகளைப் பார்ப்பதையும், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் முன் இருப்பதையும் தவிர்த்தல்...

இவற்றை சரிவர செய்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் நல்ல மருத்துவ ஆலோசனையைப் பெற்று செயல்பட்டால், பிறக்கும்போதே குழந்தைகள் இந்நோயிலிருந்து போதிய பாதுகாப்பைப் பெற்றிட இயலும்.

மருத்தவமனைக்கு வரும் நோயாளிகளது தாக்கமும் பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் என நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களைத் தாக்க வாய்ப்புள்ளது.

போதையுடன் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து...
விபத்துகளின்போது தலையில் அடிபடுதல்...
ஆகியவற்றாலும் வலிப்பு நோய் வரலாம்.

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது தேவையான தடுப்பூசிகளை முறையான காலத்தில் போட வேண்டும்...

50 வயதைத் தாண்டியவர்கள் ஆண்டுக்கொருமுறை சர்க்கரை நோய், இரத்தத்தில் கொழுப்பின் அளவு, சிறுநீரக செயல்பாடு உள்ளிட்டவற்றை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்...

இந்த வழிமுறைகள் மூலம் வலிப்புநோய் வராமல் தடுக்கவும், வந்தால் கட்டுப்படுத்தவும் இயலும்.


இவ்வாறு, தூத்துக்குடி மருத்துவ கல்லூரியின் நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் கனி உரையாற்றினார். பின்னர், வலிப்பு நோய் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு நீண்ட நேரம் விளக்கமளித்தார்.



அதனைத் தொடர்ந்து, தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் நிறைவுரையாற்றினார்.

வருட நாட்களில் பல நாட்களை, பொதுமக்கள் நலன் கருதி உடல் நலம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் அரசு அனுஷ்டித்து வருவதாகவும், அந்நாட்களில் சிற்சில இடங்களில் சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வெறும் சடங்காகிப்போன இக்காலத்தில், பயனுள்ள இந்நிகழ்ச்சியை இந்த துளிர் பள்ளி வளாகத்தில் நடத்தியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், வருங்காலங்களில், இதன் பயன் கூடுதல் பொதுமக்களைச் சென்றடையும் வகையில், ஏதேனும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பி நடத்த வேண்டும் என்றும். அந்நிகழ்ச்சியில் தொலைபேசி வழியே பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தால், இந்நிகழ்ச்சிகள் முழுப்பயனளிக்கும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.

பின்னர், நிகழ்ச்சித் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினருக்கு, துளிர் ஆசிரியர் குழுமத்தின் வழிகாட்டலில் அப்பள்ளி மாணவ-மாணவியர் செய்திருந்த பொருட்களடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.





துளிர் பள்ளியின் பெற்றோர் மன்ற தலைவியும், துளிர் அறங்காவலர் குழு உறுப்பினருமான ஆயிஷா ஸாஹிப் தம்பி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், துளிர் பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சி ஏற்பாடுகளை, துளிர் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் அப்துல் காதர், செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோரது ஆலோசனையின் பேரில், கதீஜா, விமலிட்டா, மாரியம்மாள் உள்ளிட்ட துளிர் குழுவினர் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:துளிர் பள்ளியில் வலிப்பு ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [20 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13606

அஸ்ஸலாமு அலைக்கும்

முக்கியமாக நம் துளிர் குழுவினர் செய்திருந்த. இந்த முயற்சிக்கு நாம் யாவர்களும் மனதார பாராட்ட தான் வேண்டும். நாம் யாவர்களும் துளிர் காப்பகத்துக்கு நிறைய உதவிகள் செயய வேண்டும் . நம் ஊர் மக்கள் கொஞ்சம் சிந்திப்போம் .
வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:துளிர் பள்ளியில் வலிப்பு ...
posted by M.N.Sulaiman (Bangalore) [21 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13634

துளிர் பள்ளியின் ஒவ்வொரு முயற்சிக்கும் பல கோடி நன்றிகள். கடந்த ஹஜ் பெருநாள் சமயம் இப்பள்ளியின் அடுமனை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தபோது, அங்குள்ள நிகழ்வுகள் நம்மை தலைகுனிய வைத்தது. காரணம், வந்திருந்த நம்மூர் பிரமுகர்கள் வெறும் விரல் விட்டு என்னும் அளவில் தாம்.

உண்மையில், இப்பள்ளியின் முக்கியத்துவத்தை நம் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் உணர்ந்ததை கூட நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை. இன்னும் இதை பற்றிய விழிப்புணர்வு நம்மில் ஏற்பட வேண்டும. ஊருக்கு செல்லும் போது ஒருமுறை தவறாது இப்பள்ளிக்கு சென்று வாருங்கள். நிச்சயம் நம்மில் ஓர் மாற்றம் ஏற்படும். அங்கும் ஓர் உலகம் இயங்கி கொண்டிருப்பதை நாம் உணரலாம்.

இதற்காக உழைக்கும் அணைத்து இதயங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறேன். நாமும் அவர்களுடன் கைகோர்த்து உதவிடுவோம்.....வாருங்கள்....!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் மிதமழை!  (20/11/2011) [Views - 3298; Comments - 1]
நள்ளிரவில் சிறுமழை!  (18/11/2011) [Views - 3306; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved