Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:22:30 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7596
#KOTW7596
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 21, 2011
மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரையே வழங்குக! அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3312 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் தொடர்பாக அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்,

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீரில் க்ளோரின் கலந்து, பாதுகாக்கப்பட்ட குடிநீராக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட வேண்டும்...

நீர்த்தேக்கத் தொட்டிகளை உரிய கால இடைவெளியில் சுத்தம் செய்தல்:
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், அத்தொட்டிகள் உரிய கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுவதை குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சித் துறை மற்றும் பொது சுகாதார அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும்...

க்ளோரின் பவுடர் பயன்பாடு:
குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் குடிநீரில் கலக்கப்படும் க்ளோரின பவுடரை தேவையான அளவு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்... தினசரி க்ளோரின் பவுடர் பயன்படுத்தப்படும் அளவைக் கண்காணிக்க உரிய இருப்பு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்...

குடிநீர் வினியோகம் செய்யும் பொது நல்லிகள் தரைமட்டத்தை விட தாழ்வாக தோண்டி குடிநீர் எடுப்பதைத் தவிர்த்திட வேண்டும்... பொது நல்லிகள் அருகில் கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்...

மருத்துவ முகாம்:
ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் அல்லது பகுதியில் வாந்தி, பேதி போன்ற நோய்கள் அதிகளவில் கண்டறியப்படும்பொழுது, சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் முகாம் நடத்தி, பொதுமக்களுக்குத் தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்... தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் தடுப்பு மருந்துகளை தேவையான அளவில் இருப்பில் வைக்க வேண்டும்...

அனைத்துத் துறை அலுவலர்களும் மேற்கூறிய அறிவுரைகளைத் தவறாது கடைப்பிடித்திடவும், அவர்களது பணியில் ஏதேனும் குறைகள் கண்டறியப்படும்பொழுது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...


இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், அரசு அலுவலர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் ஜே.சைலஸ் ஜெயமணி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் எஸ்.பூபதி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சு.கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கே.இந்து பாலா, ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நமது நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு :
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [21 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13628

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நமது நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு :

அரசு அலுவலர்களுக்கு நமது மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியிருக்கிறார் - இந்த அறிவுரை நமது நகராட்சியில் வேலை பார்க்கும் அலுவலர்களுக்கும் சேர்த்துதான் என்பதை உணர்ந்து செயலாற்றும்படி வேண்டுகிறேன்.

இது மழைக்காலம், பல நோய்கள் உருவாக காரணமாகும் தருணம் - இந்த நேரத்தில் உங்கள் பணிகள் முறையாக நடக்குமானால் நோய்கள் வரும் முன் காக்கலாம்.
-------------------------------------------------
நோய் தடுப்பு நடவடிக்கை :

நோய்கள் பலவும் வரக்காரணமாக இருப்பது சுத்தமில்லாத குடிநீரே! - ஆகையால்தான் நமது ஆட்சியர், " பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரையே வழங்குக! என்று அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

எனவே நமது நகராட்சி நிர்வாகத்தினர் , குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சித் துறை மற்றும் பொது சுகாதார அலுவலர்களை தொடர்பு கொண்டு பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்தல் வேண்டும்.

மேலும் தேவையான போது, பொதுமக்களுக்குத் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.
-------------------------------------------------
நீர் முழுமையான சுகாதாரத்துடன் ..... :

மக்களே !

நமக்கு கிடைக்கும் குடிநீர் என்னதான் , எவ்வளவுதான் சுத்தமானதாக கிடைத்தாலும் - அதை நீங்கள் நேரிடையாக பருகாமல் குடிநீரை நன்றாக சூடாக்கி , கொதிக்க வைத்து ஆரிய பின்னரே பருகவும்.

அப்படி செய்தால்தான் கிருமிகள் முழுவதும் அழிக்கபட்டு நீர் முழுமையான சுகாதாரத்துடன் உடலுக்குள் சென்று நோயை தடுக்கும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மாவட்டத்தில் பொதுமக்களுக்...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [22 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13668

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊர் பஞ்சாயத் நிர்வாகத்தின் கவனத்திற்கு எங்களின் அன்பான ஓர் வேண்டுகள் . நமது மாவட்ட ஆட்சியர் அறிவுரை படி நாம் செயல்பட்டாள் தான் நம் மக்களுக்கு நல்லது & நோய்கள் வராமல் நாம் மக்களை பாதுகாக்கலாம். ( முக்கியம் சுத்தமில்லாத ( கொடிய ) நீர்த்தன் ????? SO - மக்களுக்கு நல்லதோர் குடிநீரையே நீங்கள் தான் தர வேண்டியது.

.... ப்ளீஸ் ..... ப்ளீஸ் .....

நமது ஊர் அரசு போஞ்சயட் உறுபினர் அவர்களுக்கும் சேர்த்து தான் மாவட்ட ஆட்சியர் அறிவுரை கூறி உள்ளார் ;;;; என்பதை நீங்களும் புரிந்து செயல்படும்படி தாழ்மையுடன் . வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவு நேரங்களில் சிறுமழை!  (24/11/2011) [Views - 2649; Comments - 1]
நள்ளிரவில் மிதமழை!  (20/11/2011) [Views - 3298; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved