Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:27:19 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7565
#KOTW7565
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 14, 2011
எல்.எஃப். வீதியிலுள்ள கூரையால் வேயப்பட்ட பெண்கள் தைக்கா தீக்கிரையானது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4703 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எல்.எஃப். வீதியில் கூரையால் வேயப்பட்டிருந்த பெண்கள் தைக்கா நேற்றிரவு தீக்கிரையானது. காயல்பட்டினம் எல்.எஃப். வீதி வடபகுதி உட்புறத்திலுள்ள ஜெய்லானி நகரில் உள்ளது தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரை பெண்கள் தைக்கா.

ஆண்டுதோறும் ரமழான் காலங்களில் தராவீஹ் - சிறப்புத் தொழுகைகளும், வாரந்தோறும் மவ்லித் மஜ்லிஸ்களும் இந்த தைக்காவில் வழமையாக ஓதப்பட்டு வருகிறது.

நேற்றிரவு 09.15 மணிக்கு இந்த தைக்கா திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சுற்றுவட்டாரத்திலுள்ளவர்கள் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்புத் துறைக்கும், டி.சி.டபிள்யு. தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

சில நிமிடங்களில் அவ்விரு இடங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர்ந்தபோதிலும், அதற்கு முன்பாகவே பெண்கள் தைக்கா முழுமையாக தீக்கிரையானது. இதனால் அங்கிருந்த குர்ஆன் பிரதிகள், மவ்லித் நூல்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன.







இத்தீவிபத்து குறித்து கேள்வியுற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா, உடனடியாக அவ்விடம் விரைந்து வந்து பார்வையிட்டதோடு, விபத்து குறித்த விபரங்களைக் கேட்டறிந்தார்.

இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் மக்கள் திரள் கூடியதையடுத்து அவ்விடம் பரபரப்புடன் காணப்பட்டது.

இந்த தீ விபத்து, தைக்காவிற்கு அருகிலுள்ள மின் கம்பத்திலிருந்து தீப்பொறி விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அடையாளம் தெரியாத சிலர் யாரும் அறியாவண்ணம் தீ வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்றும் அவ்விடத்தில் கூடியிருந்தோர் தெரிவித்தனர்.

செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. (14.11.2011 - 19:01hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தீ விபத்து பற்றி தீர விசாரணை
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [14 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13346

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தீ விபத்து ஏற்பட்டதில் எவருக்கும் உயிர் சேதமோ , காயமோ ஏற்படாமல் பாதுகாத்த இறைவனுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்!

தீ விபத்து நடந்த இடத்திற்கு சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர்ந்தபோதிலும், அதற்கு முன்பாகவே தைக்கா முழுமையாக எரிந்துவிட்டது என்பது கவலைக்குரியது.

அங்கிருந்த குர்ஆன் பிரதிகள், மவ்லித் நூல்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகியது வேதனைக்குரியது - பக்கத்து வீடுகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லையே ?.
-----------------------------------------------
தீ விபத்து பற்றி தீர விசாரணை :

தைக்காவிற்கு அருகிலுள்ள மின் கம்பத்திலிருந்து தீப்பொறி விழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தால் அதை ஏற்று பொருந்திக்கொள்ளலாம்.

ஆனால் விஷமிகள் யாரும், தீ வைத்துவிட்டு சென்றிருந்தால் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

இரவு 9.15 மணி என்பதால் இத்தோடு முடிந்தது , அதே நேரம் எல்லோரும் உறங்கி கொண்டிருக்கும் நடு இராத்திரி என்றால் அக்கம் பக்கத்து வீடுகளின் ஜன்னல் கதவுகள் எல்லாம் தீக்கிரையாகி இருக்கும்.

அவசியம் இந்த தீ விபத்து பற்றி தீர விசாரணை மேற்கொண்டு பிற்காலத்தில் இந்த மாதிரி விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பது நல்லது. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எல்.எஃப். வீதியிலுள்ள கூர...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [14 November 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13348

நமதூர் பறந்து விரிவடைந்துள்ளது, இது போன்ற விபத்துக்களும் அதிகரிக்கிறது. ஆனால் நாம் இந்த விபத்துக்களை தடுக்க, இதில் ஏற்படும் சேதங்கள் பக்கத்தில் பரவாமல் தடுக்க நம்மை அடுத்துள்ள, நம்மை விட சிறிய ஊர்களையே நாடி உள்ளோம்.

நமக்கென தீயனைப்பு மையம், சொந்த தீயணைப்பு வாகனங்கள் கட்டாயம் அவசியம்.

பெரியவர்களும், பொது இயக்கங்களும், புதிய நகராட்சி நிருவாகமும் இதில் அக்கரை கொண்டு விரைவில் நமக்கென சொந்த தீயணைப்பு மையத்தை உருவாக்க முயற்சித்தால் நடக்காத காரியமல்ல.

இன்ஷா அல்லாஹ் விரைவில் நடந்தேறும் என எதிர்பார்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இறைவன் பாதுகாத்தான்..
posted by M Sajith (DUBAI) [14 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13352

இந்த ஓலை தைக்கா கட்டப்பட்ட நாள் முதல் இது போல ஒரு விபத்து நடக்கும் வாய்ப்பை நினைத பயம் அடுத்த வீட்டில் வசிக்கும் (என் சகோதரி) வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் எப்போதும் உண்டு. - இதை ஒரு முறை சொல்லப்போய் அதுக்கும் கொள்கை சாயம் பூசி ஒரு சர்ச்சையும் வந்துவிட்டது.

அருகில் உள்ள வீட்டிற்கு, மின்சார இனைப்பைத்தரும் வயர்கள் கருகியதையும், ஜன்னல்களின் கண்ணாடிகள் சேதமானதையும் தவிர பெரிய சேதம் பெரிய சேதம் ஏதும் வராமல் இறைவன் பாதுகாத்தான்.

வழமைப்போல இரவில் படுக்குமுன் தண்ணீர் அறுந்த சமையல் அரைக்கு வந்த தங்கையின் மகன் ஜன்னலுக்கு வெளியே வெளிச்சம் தெரிந்ததை தொடர்ந்து பார்த்த போது தீ பரவுவதை கண்டு கூச்சலிட்ட பின் தான் நடப்பு தெரிய வந்துள்ளது.

தைக்காவுக்கு தனியாக மின் இனைப்பு உள்ளது, தீ முதலில் பரவியது பின் புரத்தில் என்பதால், இது முன்புறத்திலுள்ள மின்கம்பத்தின் பொறியாக இருக்க வாய்ப்பில்லை. உள்ளே ஏதாவது மின்கசிவு ஏற்பட்டு இடுக்கலாம்.

முதலில் இது போல ஓலையால் வேயப்படும் தைக்காக்கள் தவிர்க்கப்படவேண்டும். மீண்டும் இதே இடத்தில் ஓலையால் கட்ட ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

தீயை கண்டதும் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி, பின் யாராவது தீயனைப்பு துறைக்கு தகவல் சொன்னீர்களா என்று கேட்ட பின் தான் தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது - இதுவும் உதவி வர சுனங்கியதற்கு காரணம்.

இது போன்ற அவசர சூழ்நிலைகளில் என்ன செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களுக்கு தரப்படுவது அவசியம்.

சகோதரர் ஜாபர் சாதிக் குறிப்பிட்டது போல, நமதூருக்கும் தீயனைப்பு சேவை வேண்டும்..

இன்றய காயலில் மிகவும் நெருக்கமான வீடுகளும், இடையிடையே இது போல ஓலையால் வெயப்பட்ட பந்தல்களும், தைக்காக்களும் தீ விபத்துக்கான வாய்ப்பை அதிகமாக்கிவிடும். முன்பு இருந்த பரந்த மைதானங்கள் எல்லாம் வீடுகளாக்கிவிட்ட நிலையில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது (இறைவன் பாதுகாப்பான்)

நமதூருக்கும் தீயனைப்பு சேவை வேண்டும், இதற்கான முயற்சிகளை தொடங்குவது மிகவும் அவசியம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வீடுகள் மிக பிரமாண்டமாக கலை நயத்துடன் பல லட்சம் ரூபாய் செலவில் கட்ட பட்டு மிக அழகாக காட்சி அளிக்கிறது மாஷா அல்லாஹ்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [14 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13355

எல்.எஃப். வீதியிலுள்ள கூரையால் வேயப்பட்ட பெண்கள் தைக்கா தீக்கிரையானது.. என்ற தலைப்பை எல்.எஃப். வீதி ஜெய்லானி நகரில் என்று குறிப்பட்டு இருந்தால் பல நபர்களுக்கு இந்த ஏரியா உடனே விளங்க வரும்....

காலகாலமாக பல ஆண்டுகள் இந்த பெண்கள் தைக்கா கூரையால் வேயப்பட்டதாகவே இருக்கின்றது ஆனால் அதை சுற்றி பல வீடுகள் மிக பிரமாண்டமாக கலை நயத்துடன் பல லட்சம் ரூபாய் செலவில் கட்ட பட்டு மிக அழகாக காட்சி அளிக்கிறது மாஷா அல்லாஹ்...

இப்படி பல லட்சம் ரூபாய் செலவு செய்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீடு கட்டி முடிக்க வல்ல இறைவன் இவர்களுக்கு பரக்கத்தை கொடுத்து இருக்கிறான்... அல்ஹம்துல்லிலாஹ்...

தீ எரிய பட்ட அந்த நெருங்கிய பகுதியில் இன்னும் பல பெரிய பட்ஜெட்டில் வீட்டு கட்டுமான பணிகள் நடந்து வர தான் செய்கிறது.. அல்ஹம்துல்லிலாஹ்...

இந்த ஏரியா குடியுருப்பு மக்கள் அனைவர்களும் இந்த தீ க்கு இரையாக பட்ட தைக்காவில்தான் தொழுது வருகிறார்கள்..

தங்களின் புதிய வீட்டு கட்டுமான செலவுக்கு ஒதுக்கும் பல லட்சத்தில் (தங்கள் வீட்டு கட்டுமான (பட்ஜெட்டில்) செலவில் சேர்த்து கொண்டு) ஒரு சிறிய தொகையை இந்த கூரையால் வேயப்பட்ட பெண்கள் தைக்காவை கல் கட்டுமான தைக்காவாக கட்டுவதற்க்கு நன்கொடை மனசு வைத்தாலே அது என்றோ கல் கட்டுமான தைக்காவாக மாறி இருக்கும்..

சரி காலம் இன்னும் நிறையவே இருக்கு இப்போதும் பல வீடுகள் அங்கு பல லட்ச பட்ஜெட் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.. இப்போதாவது இந்த பகுதி மக்கள் மனசு வைத்து அந்த தைக்காவை கல் தைக்கவாக கட்டுவதற்க்கு (நன்கொடை) முயற்சிகள் செய்யுங்கள்... அல்லாஹ் உங்கள் யாவர்களுக்கும் இன்னும் அதிக பரகத் செய்வானாக ஆமின்..

Moderator: கருத்தாளர் குறிப்பிட்டுள்ளது போல நிகழ்விடத்தின் பெயர் திருத்தப்பட்டுள்ளது. தகவலுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:எல்.எஃப். வீதியிலுள்ள கூர...
posted by Refai (Dar Es Salaam) [14 November 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13356

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்புள்ள இந்த தைகாவை பராமரிக்கும் நண்பர்களுக்கு ,

இன்ஷா அல்லாஹ் முடிவு எடுங்கள் தைகாவை உடனடியாக புதுபிக்கலாம் செங்கலை கொண்டு தைகாவின் மேல்புறம் சிமெண்ட் சீட் போடலாம்.

அதற்கான தொகை எவளவு என்று காயல் வெப்சைட் அட்மின் கிட்ட சொல்லி ஒரு அறிக்கை விடுங்கல் இன்ஷா அல்லாஹ் நம்ம ஊரு மக்கள் அதற்காக உதுவி பண்ணுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பணம் கொடுக்க வேண்டிய நபர் தொலைபேசி நம்பர் கொடுக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. முறைப்படி தைக்காவுக்கு என்று தனியாக எழுதி கொடுக்க படவில்லை...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [14 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13359

பன மர காடுகளை அழித்து அதில் பிளாட் போட்டு விற்பனை செய்யும் பொழுது அந்த இடத்தில் பெண்களுக்கான தொழுகை நடத்தும் ஒரு தைக்காவுக்கு இடம் ஒதுக்க பட்டுள்ளது என்று சொன்னதாகவும் பின்பு அந்த இடம் இதுதான் என்று நில உரிமையாளர் வாய்மொழி உத்தரவு மட்டுமே கொடுத்துள்ளார் என்றும் ஆனால் முறைப்படி தைக்காவுக்கு என்று தனியாக எழுதி கொடுக்க படவில்லை என்று அந்த பகுதி குடியிருப்பு மக்களில் எனது நண்பர் ஒருவர் எனக்கு அறிவித்தார்...

இது விசியமாக இந்த பகுதி மக்கள் நில உரிமையாளர் அவர்களிடம் இன்ஷா அல்லாஹ் முறைப்படி நியாயமாக பேசி தைக்காவுக்காக சொல்லப்பட்ட இந்த இடத்தை எழுதி வாங்கி கண்டிப்பாக நல்ல அழகான வடிவமைப்பில் நல்ல வசதியோடு கட்ட இந்த பகுதி மக்களிடம் நிதி திரட்ட படும் என்றும் எனது நண்பர் கூறினார்..

குறிப்பு:- நான் கருத்து பதிந்த பின்பு எனது நண்பர் சில விளக்கங்களை தந்தார் ஆகையால் இதையும் பதிவு செய்யுமாறு அட்மின் அவர்களை கேட்டு கொள்கிறேன் - நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:எல்.எஃப். வீதியிலுள்ள கூர...
posted by OMER ANAS (DOHA QATAR.) [14 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13361

N S E மஹ்மூது காக்கா உங்களின் கருத்து சரியே என்றாலும், கூரை பள்ளி என்பதால்தானே விஷமம், இல்லை இயற்க்கை, அல்லது மின் கசிவு இது போல் ஏதாவது காரணம் கொண்டு விபத்து நடை பெறுகிறது?

கருத்து எண் 5 சொந்த லாபத்துக்காக பல லகரம் கொண்டு கட்டபடும் வீடுகள்.பக்கத்தில் இருக்கும் பள்ளியை மறக்கும், இல்லை இல்லை படைத்தோனை மறக்கும் செயல்களே! கருத்து எண் 6 நிச்சயமாக நீங்கள் சொன்னது போல் வசூல் செய்து கல் கட்டினமாக கட்டப் பட வேண்டும்! வாருங்கள் ஒன்றாக நாம் இணைவோம்!

கத்தாரில் நின்று தம்பி குடாக் புகாரி, மூலம் இதன் வசூலை ஆரம்பித்து எங்களால் முடிந்த உதவி செய்கின்றோம்! இது போல் மற்ற உலக & தாயக காயல் வாசிகளும் உதவிக்கரம் நீட்டினால், நிச்சயம் இறை பள்ளி புத்துயிர் பெரும்! வாருங்கள் சகோதரர்களே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:எல்.எஃப். வீதியிலுள்ள கூர...
posted by kudack buhari (doha-qatar) [15 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13382

இது உடனடியாக கவனிக்க பட வேண்டிய விசியம், பெண்களின் இறைபணிகாகவும்,நபிகளாரின் புகழ் பாடும் இடமாகவும் இருக்கும் இந்த தைகாவை சில விசமிகள் தீகரை ஆக்கி இருப்பார்கலேயானால் ,நிச்சயமாக அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீது உண்டாகட்டும் ,ஒமர் காக்கா சொல்வதை போன்று எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த தைகாவை திரும்ப கட்டிஎளுப்புவோம் ,வல்ல இறைவன் அதற்கான நற்கூலியை நமக்கு இம்மையுளும் மறுமையுளும் தந்தருள்வான் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. விபரம் அறிந்து செயல்படுவது நல்லது..
posted by M Sajith (DUBAI) [15 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13386

அனஸ் காக்கா, சகோ. முத்து இஸ்மாயீல் மற்றும் சகோதரர்களுக்கு,

ஏற்கனவே பல வசூல்கள் நடந்தேரிவிட்டது. தைக்கா மாளிகையாக இல்லை என்றாலும் அந்தப்பணத்தில் ஒரு தகர ஷீட்டாவது போட்டிருக்க முடியும்.. எவ்வளவு வந்தது போனது என்ற கணக்கை கூட யாரிடம் கேட்பது என்பதை கூட தெரியத நிலை அங்கே..!!

இப்போதும் ஆர்வமாக பலர் முன்வருவது சந்தோசம்தான்.. மீண்டும் வசூலும் பணமும் வருமுன் இந்த இடம் முறையாக வக்ப் ரிஜிஸ்ட்ரேசன், நிர்வாக பொருப்பாளிகள், கணக்கு வழக்குகள் யாரிடம் இருக்கும் என்பன போன்றவைகளை தெரிந்து பின் வசூல் / நன்கொடை எல்லாம் துவங்கட்டும்.

இப்போதைக்கு, எனக்கு தெரிந்தவரை நிலத்தின் சொந்தக்காரர் தனது குடும்பத்தாரை மட்டும் தலைவர், செயலர் என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது - ஆனால் அன்றாட செயல்பாடுகளை கவணிப்பதும், வசூல் வகையறாக்களும் செய்பவர்கள் அனைவருமே வேறு வேறு டீம்கள் என்பதுதான் உண்மை.

வசூல் செய்யும் பணத்தை யாரிடம் கொடுப்பது, கட்டுமானத்திற்க்கும் வரவு சிலவுக்கு யார் பொறுப்பு என்பதை நில உரிமையாளர், டாக்குமென்டுகளில் குறிப்பிட்ட ஆரம்ப நிர்வாகிகள் அங்கீகரித்த பின்னர்தான் கட்டுமானப்பனிகள் தொடர இயலும்.

சிலரின் சொந்த தேவைகளுக்கு உதவ முற்பட்டால், தடை சொல்லவில்லை - இறைவன் அதற்கான பலனை நிச்சயம் தருவான்.

இதில் ஆர்வம் காட்டும் இதே வேளையில், ஜாபர் சாதிக் காக்கா குறிப்பிட்டது போல, ஊரில் தீயனைப்பு சேவை துவங்க ஆவன செய்ய தூண்டுங்கள். இது ஊரின் அனைத்து மக்களுக்கும் மிகவும் அவசியம்.

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், நமதூரில் ஏற்பட்டுள்ள தீவபத்துக்களில் தீயனைப்பு வண்டிகள் வந்து சேர்வது, எரிந்து மீதமுள்ள கங்குகளை அனைப்பதுக்குத்தான். காரணம் தூரம், திருச்செந்தூரிலிருந்தும் DCWவில் இருந்தும் வந்து சேர்வதுக்குள் நெருப்பு தன் வேலையை முடித்து விடுகிறது.

தீயணைப்பு சேவை துவங்க, நாம் சார்ந்திருக்கும் காயல் நலமன்றங்கள் வாயிலாக ஏதாவது செய்ய முயல்வது நல்லது என்பது என் கோரிக்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved