Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:37:45 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7982
#KOTW7982
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 7, 2012
பேருந்து நிலையம் அருகில் - கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக பரப்புரை! நிதி தர மறுத்த வணிகர்களுடன் வாக்குவாதம்!! பரப்புரையாளர்களை காவல்துறையினர் திருப்பியனுப்பினர்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4108 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக இம்மாதம் 11ஆம் தேதியன்று “கூடங்குளம் அணு உலை முற்றுகை பேரணி” நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு கோரியும், இன்றிரவு 07.30. மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், சிவப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த சிலர், மெகாஃபோன் ஒலிபெருக்கிக் கருவி துணையுடன் பரப்புரை செய்தனர். முற்றுகைப் பேரணி குறித்த விபரங்களடங்கிய - மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்தையும் அவர்கள் பொதுமக்களுக்கு வினியோகித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்களிலிருந்தோரிடம் நன்கொடை வசூலிக்க முனைந்தபோது, ஒருவரும் நிதியளிக்கவில்லை என தெரிகிறது.

நல்ல விஷயத்திற்கு ஆதரவளிக்க தயங்குவதேனென அவர்கள் கேட்க, “மக்கள் வரிப்பணம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை முடக்கி, அரசு தொழிற்சாலையை உருவாக்கும் வரை நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள்...? இப்போது எல்லாம் நிறைவுற்று, அணு மின் நிலையம் துவங்கவுள்ள இந்த நேரத்தில் திடீரென உங்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டது ஏன்?” என்பன போன்ற கேள்விகளை பரப்புரையாளர்களிடம் வணிக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கேட்டதாகவும், இதனால் விவாதம் தீவிரமடைந்து விவகாரம் முற்றும் நிலை உருவானதையடுத்து, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு மற்றும் சிலர், விவகாரம் பெரிதாகாதிருக்கும் பொருட்டு பரப்புரையாளர்களை திரும்பிப் போகுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் வைகுண்டம் உடனடியாக காயல்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு வந்து, பரப்புரையாளர்களை திருப்பியனுப்பவே, விவகாரம் முடிவுக்கு வந்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ச்சீ ச்சீ மக்கள் இப்பல்லாம் உஜாலாவுக்கு மாறிட்டாங்க! ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [08 February 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 16646

மக்கள் வரிப்பணம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை முடக்கி, அரசு தொழிற்சாலையை உருவாக்கும் வரை நீங்களெல்லாம் எங்கே சென்றீர்கள்...? இப்போது எல்லாம் நிறைவுற்று, அணு மின் நிலையம் துவங்கவுள்ள இந்த நேரத்தில் திடீரென உங்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டது ஏன்?” ஆகா அருமையான கேள்வி.மக்கள் இப்பல்லாம் குஜாலாவுக்கு ச்சீ ச்சீ உஜாலாவுக்கு மாரிட்டாங்கப்பா!

ஆனாலும் இதே கேள்வியை மற்றவர்கள் நம்மை பார்த்து கேட்க்கும் முன் D C W விரிவாக்கத்தினை தடுத்து நிறுத்த வேண்டும்.ஏன் என்றால் அணுமின் நிலையத்தை கொண்டு நன்மை இருக்குகிறது. ஆனால் D C W வைக்கொண்டு சொல்லவே நெஞ்சம் நடுங்கும் பல கொடிய நோய்கள் உருவாகிறது.இதை தடுக்க ஒன்று பட்டு இந்த மாவட்டமே திரண்டு அரசியல் இல்லா மக்கள் முற்றுகை போராட்டமாக அறிவித்து முளையிலேயே இதை கில்லி எரிய வேண்டும்!

ஏய் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா!
நீ ஆற்றுவெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா! ஏய்.......

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டுவந்ததென்னடா மீசை முறுக்கு! ஏய் ....

உண்டு உண்டு என்று நம்பி காலை எடு!
இதில் உன்னை விட்டால் பூமி ஏது கவலை விடு!
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு கோளை நிமிர்த்து!
அதில் நீதிவர வில்லையெனில் வாலை?நிமிர்த்து!ஏய்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இவர்களிடம் வெளிநாட்டின் (அமெரிக்கா பணம்) பல கோடிகள் கணக்கில்லாமல் குவிந்து கிடக்கிறது..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [08 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16649

இவர்கள் நிதி தாருங்கள் என்ற பெயரில் தனது அமெரிக்க பணத்தை மறைத்து இங்குள்ள பொதுமக்களிடம் வசூல் செய்ததாக அரசாங்கத்திடம் கணக்கு காட்ட இந்த நூதன நிதி திரட்டல்...! நீங்கள் 1 ரூபாய் கொடுத்தால் 100 ரூபாய் வரவு வைப்பார்கள்..! 10 ரூபாய் கொடுத்தால் 1000 ரூபாய் வரவு வைப்பார்கள்.. அரசாங்கம் இவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளை சரி செய்யவே இந்த நூதன வழியை கையாளுகிறார்கள்... இவர்களிடம் வெளிநாட்டின் (அமெரிக்கா பணம்) பல கோடிகள் கணக்கில்லாமல் குவிந்து கிடக்கிறது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பேருந்து நிலையம் அருகில் ...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [08 February 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16652

காரணம் நம் நாட்டின் சட்டம் சரிஇல்லை- வானக்குழி போடும்போது வாய்மூடி இருந்துவிட்டு, 20,000 கோடி செலவழித்த பிறகு (கிரகபிரவேசத்தில்) பிரச்சனை பண்ணும் இவர்களை வெளியில் நடமாட விட்டு இருப்பது...
இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?


[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பேருந்து நிலையம் அருகில் ...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [08 February 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 16654

பிச்சை எடுதாராம் பெருமாள் அத புடிங்கி திண்டாராம் அனுமார்? நோகாம நூங்கு திங்க பாக்குறாங்க போல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பேருந்து நிலையம் அருகில் ...
posted by siddiq (chennai) [08 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16661

http://www.maalaimalar.com/2012/02/08125607/publi-chased-kudankulam-power.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:பேருந்து நிலையம் அருகில் ...
posted by SEYED ALI (ABUDHABI) [08 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16673

இந்த அணுமின் திட்டம் வருமுன் இதுபற்றி பலரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்தனர்.

ரஷ்யாவின் செர்நோபில் அணுவுலை வெடித்த பிறகு கலங்கி பொய் இருந்த ரஷ்யாவுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாத வியாபார ஒப்பந்தமே கூடங்குளம். தினமணியில் இந்த திட்டத்தை எதிர்த்து மிக அருமையான ஒரு கட்டுரை வந்தது. அப்போது யாரும் மூச்சு விடவில்லை.

ஆனால் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பதினான்காயிரம் கோடி நம் வரிப்பணத்தையும் விழுங்கி இப்போது நிறைவுறும் தருவாயில் அதை வேண்டாம் என்றால் யாருக்கு நஷ்டம். அதோடு மின்சாரத்திற்காக வாடி வதங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சில சுயநல மாநில மக்கள் விரோதிகள் இதைப்பற்றியெல்லாம் கவலையே படாது போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

போராடும் அப்பாவிகளுக்கு ஒரு செய்தி. ஊனமுற்றிக்கிறது என்றால் அதை கருவிலேயே கலைத்து விடலாம், ஆனால் கரு முற்றி வளர்ந்த பிறகு அதை பெற்றேடுப்பதுதான் புத்திசாலித்தனம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:பேருந்து நிலையம் அருகில் ...
posted by அமீர் சுல்தான் (சவுதி அரேபியா) [10 February 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16705

காயல்பட்டினம் பற்றிய இந்த செய்தி பெரும்பாலும் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. சம்பவம் உண்மையாயினும் அது நடைபெற்ற பின்னணியையும் அலச வேண்டியுள்ளது.

பத்திரிகைகளில் வரும் அனைத்து செய்திகளையும் உண்மையே என்று நம்பும் சகோதரர்களுக்கு..... கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்வதற்காக அரசும் ஊடகங்களும் தற்போது பாசிச வகையறாக்களும் களத்தில் குதித்துள்ளனர். அதற்காகவேண்டியே போராட்டக்களத்தில் முனைப்புடன் செயல்படும் திரு.உதயகுமார் அவர்களை நாகரீகமற்ற வார்த்தைகளால் வசைபாடியும், அவருக்கு அமெரிக்க பணம் வருகின்றது, அன்னிய நாடுகள் துணைபுரிகின்றது என ஏக வசனத்தில் எழுதித்தள்ளுகின்றது தினமலர் போன்ற தரம் தாழ்ந்த பத்திரிகைகள். அதற்கு நம்மின் சகோதரர்களும் நம்பி தங்களது கருத்தாக பதிப்பது வேதனையளிக்கின்றது.

சதாரண வேதியியல் பொருட்களும் கொஞ்சம் மின்சாரமும் தயாரிக்கும் அருகிலுள்ள தாரங்கதார கெமிக்கல் மூலம் ஏற்பட்ட, ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற கேன்சர் போன்ற கொடிய வியாதிகள் ஏராளம் ஏராளம். அணு உலை மூலம்.......நினைக்கவே குலைநடுங்குகிறது....

அவ்வப்போது நம் கடல் செங்கடல் ஆகின்றது...அணுஉலை கழிவுகளால் நம் கடல் சாக் கடல் ஆகிவிடும்...

சகோரதர்களே....

பேருந்து நிலையத்திலிருந்து அணுஉலையை எதிர்ப்பு பரப்புரையை செய்த மகஇக தோழர்களை விரட்டிவிட்டவர்கள் நிச்சயமாக காவி சிந்தனைகளால் மூலைசளவைச் செய்யப்பட்ட வியாபாரிகளாகத்தான் இருக்கவேண்டும். சமீபத்தில் நெல்லை கலக்டர் அலுவலக வளாகத்தில் பெண்களிடம் செருப்படி வாங்கிய இந்து முன்னணியினரை பற்றிய செய்திகள் வெளிவந்ததை அறிந்திருப்பீர்கள். இவர்கள் அடிவாங்கிய காரணம் அணுஉலை எதிர்ப்புக்குழுவுக்கு எதிராக செயல்பட்டதுதான்.

இங்கே அணுஉலை பற்றிய சிறு தொகுப்பு நம் சகோதரர்களுக்காக..

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணுஉலை விபத்துக்குப் பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ரஷ்யா முடிவெடுத்த போது அதில் ஒன்றை இந்தியாவிற்கு விற்றது.இதற்கான ஒப்பந்தம் 1988ம் ஆண்டு இராஜீவ் - கோர்பசேவ் இடையே கையெழுத்தானது.கூடங்குளம் பிரச்னைக்கான மூலம் இங்கிருந்துதான் துவங்குகி;ன்றது. பத்தாண்டுகளாக கிடப்பிலிருந்த இத்திட்டத்தை 2001 இல் மீண்டும் துவங்கினார்கள்.இந்த அணுஉலையின் அபாயங்கள் பற்றி நிபுணர்கள் நிறையபேர் அச்ச உணர்வை வெளியிட்டு இருக்கிறார்கள்.இதற்காக மொத்த தாமிரபரணி நீரில் பாதியும் பேச்சிப்பாறை அணையின் நீரும் தேவைப்படும்.மேலும் கூடங்குளமானது தென்னகத்தின் பூகம்ப பாதையில் உள்ளது.2006ம் ஆண்டு இருமுறை மெல்லிய நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.இதனால் அணுஉலையின் பெரும்பாலான கட்டுமானங்கள் பாதிப்படைந்துள்ளன.இந்த அணுஉலையை நிறுவுவதற்காக கூடங்குளத்தை ஒட்டியுள்ள சுமார் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ள பகுதியில் வசிக்கும் 10 இலட்சம் மக்களையும் பாதிப்புகளை முன்னிறுத்தி வெளியேற்ற வேண்டும். அணுமின் நிலைய கழிவுகள் ரஷ்யாவிற்கு எடுத்துச்செல்லப்படும் என்ற ஒப்பந்தம்,இந்திய அரசின் பலகீனத்தால் இங்கேயே மறுசுழற்சி செய்யப்படும் என்று உருமாறிய போது நிபுணர்கள் அச்சம் கொண்டனர்.காரணம் 120 கடல் மைல் சுற்றளவு கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறிவிடும்.மீனவர்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமவாழ் மக்கள் பலர் பல ஆண்டுகளாக கேன்சர் உள்ளிட்ட கொடிய வியாதிகள் உடல் அங்ககீனம் மூளை பாதிப்படைந்த குழந்தைகள் பிறத்தல் போன்ற இன்னோரென்ன பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் என்பதை அரசும் சுற்றுப்புற செயல்பாட்டாளர்களும் நன்றாகவே அறிவர்.இவை அப்படியே கூடங்குளத்திற்கும் பொருந்தும். ஆமெரிக்க ஜெர்மன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளெல்லாம் அணுமின் திட்டங்களை கைவிட்ட நிலையில் மக்களின் நலனின் கொஞ்சம் கூட அக்கறையில்லாத இந்திய அரசு இத்திட்டத்திற்கு அணுமதியளித்துள்ளது.இவற்றினுடேதான் கூடங்குளம் பிரச்னையை அணுகவேண்டும்.

17000 கோடிக்குமேல் செலவான திட்டச் செலவைப்பற்றி பலர் அங்காலாய்கின்றனர்.அரசும் இதனையே கூறுகின்றது.ஏறக்குறைய 2இலட்சம் கோடியை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கோட்டைவிட்டவர்கள் கூறுவதுதான் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது.மக்களுக்காக திட்டங்களா?திட்டங்களுக்காக மக்களா?அரசின் போக்கு புரியவில்லை எரிபொருள் பற்றாக்குறை மின்சார பற்றாக்குறை இந்தியாவின் முக்கிய பிரச்னை என்பதை எவரும் மறுக்க முடியாது அதற்கான தீர்வுகளை நாடுவதும் அவசியமானதே.ஆகால் நம்முடைய மின்சார பற்றாக்குறையை தீர்பதற்கு அணுஉலைகள் மட்டுமே வழி என்பதை ஏற்கமுடியாது

இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுக்கவே அணுஉலைகள் ஆற்றல் உற்பத்திக்கு இலாபகரமானவை அல்ல என்ற முடிவுக்கு அறிவியலாளர்கள் வந்துவிட்டார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகள் அணுகழிவுகளை பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள்ஆகியவற்றுக்கான செலவுகளை நீண்டகால அளவில் கணக்கிட்டால் அணுஉலைகள் மிக மிக அதிகமாக செலவு பிடிப்பவை என நீருபிக்கப்பட்டுள்ளது.

அணுஉலைகளுக்குத் தேவைப்படும் பிரமாண்டமான முதலீட்டையும் தொடரும் நிருவாகச் செலவையும் பிற ஆற்றல் உற்பத்தி முறைகளுக்கு செலவிட முடிந்தால் உலகின் எரிபொருள் தேவையை சிறப்பான முறையில் எதிர்கொள்ள முடியும் இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும் போது ஏற்படும் இழப்புதான்.இன்னொன்று மின் திருட்டு.ஆக நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை விட இழக்கும் மின்சாரம் அதிகம்.இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுபாடு பெருமளவு நீங்கிவிடும்.

அடுத்து இந்த அணுஉலைகளை எப்போதுமே வெளிநாடுகள்தான் அமைத்துத் தருகின்றன.இதற்கான பணம் முழுக்க அந்நாடுகளுக்குதான் சென்று சேர்கின்றன.அந்நாடுகள் தங்களது காலாவதியான தொழில்நுட்பத்தை நமக்களிக்கினறன.அதற்கு ஈடாக பெரும் பணம் பெற்றுக்கொள்கின்றன.பேரங்கள் இராணுவ ரகசியங்களாக எஞ்சுகின்றன.

இந்தியாவில் எந்த அணுஉலையும் அதன் முழுத்திறனுடன் செயல்பட்டதில்லை.அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் கணக்கிட்டால் நீர் மின்சாரத்திற்கு ஆகும் செலவைவிட 50 மடங்கு அதிகம் ஆகவே அணுஉலைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு தேவையில்லை அவை இந்த நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.

அன்புடன்

அமீர் சுல்தான், சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் குறுமழை!  (9/2/2012) [Views - 2621; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved