Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:27:48 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8069
#KOTW8069
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 26, 2012
சென்னையில் மின்வெட்டு நேரம் உயர்த்தப்படுகிறது! மாவட்டங்களில் குறைப்பு!! மின்வாரியம் அறிவிப்பு!!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3067 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தின் மாவட்டங்களில் 8 மணி நேரமாக இருந்த மின்வெட்டு பாதியாகக் குறைக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. இந்தப் புதிய நடைமுறை திங்கள்கிழமை முதல் (பிப்ரவரி 27) அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. மின் தேவையின் அளவு 11,500 மெகாவாட்டில் இருந்து 12 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 8 ஆயிரத்து 500 மெகாவாட் தான்.

இதனால், சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மின்சார கட்டுப்பாடு முறைகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு மணிநேரமும், மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாகவும் மின்வெட்டு அமலில் உள்ளது.

இந்த மின்வெட்டால் தொழிற்கூடங்கள் உற்பத்தி பாதிப்பை கடுமையாகச் சந்தித்து வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்வெட்டின் அளவைச் சீராக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், மாநிலத்தில் நிலவும் கடுமையான மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மின்வெட்டு முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.

இதுகுறித்து, வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மின்தட்டுப்பாட்டுப் பிரச்னையை எதிர்கொள்வதற்காக பல்வேறு உத்திகளை மின் உபயோகிப்பாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னை குறித்துத் தமிழக அரசு தீவிரமாக ஆராய்ந்து மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. மாநிலத்தின் மின்தேவை ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்து வருகிறது. எனவே பல்வேறு தரப்பினர் அளித்த யோசனைகளின் பேரிலும் அவற்றைச் செயல்படுத்தும் வழிவகைகளைக் கொண்டும் சில மின் விநியோகக் கட்டுப்பாட்டு முறைகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

=> தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின் வெட்டு

=> சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேர மின்தடை

=> மற்ற நகர மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு 4 மணி நேர மின்வெட்டு

=> வணிகப் பயனீட்டாளர்களுக்கு மாலை உச்ச நேர (மாலை 6 முதல் இரவு 10 வரை) மின் பயனீட்டுக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்.

இந்த மின்கட்டுப்பாடு முறைகள் தேவைக்கேற்றபடி அமல்படுத்தப்படும். மின் தேவையின் இடைவெளியைப் பொறுத்து மின் வெட்டின் அளவும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.

பள்ளிகளில் தேர்வு:

உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நேரம் என்பதால், அந்த நேரங்களில் முடிந்த அளவுக்குத் தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை:

மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க தொழிற்சாலைகளுக்கு மண்டலம் வாரியாக வாரத்தில் ஒரு நாள் மின்சார விடுமுறை விடப்படுகிறது. அதாவது, அந்த நாள் முழுவதும் அந்தப் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு மின்சார விநியோகம் இருக்காது. மார்ச் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

தகவல்:
தினமணி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வளரும் நாடுகளுக்குத் தேவை மின் சக்தி தான்.
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ்மைந்தன். (காயல்பட்டணம்) [26 February 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 17199

வளர்ந்து வரும் நாடுகளுக்கு முதுகெலும்பு போன்றது மின்சாரம் எனும் மகா சக்திதான்.அதுவே வளர்ச்சிக்கு மிக முக்கியமான மூலதனமும் கூட! எல்லாமே எந்திரமயமாகி விட்ட நிலையில் மின்சாரத்தின் தேவையும்,அவசியமும்,நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.தொழில் மேம்பாட்டிற்குத் துணை செய்யும் மின்சாரம் தொடர்ந்து கிடைக்காத பட்சத்தில் அதன் வளர்ச்சியை அது வெகுவாக பாதித்து உற்பத்தியை முடக்கி முன்னேற்றப் பாதையின் முன் கதவையே அடைத்து விடும் அபாயமும் உள்ளது.

இந்த மகா சக்தி மனித வாழ்வோடு பின்னிபினைந்து ஒன்றிப்போன காரணத்தால் மின்சாரம் இல்லாமல் மனித சமுதாயம் வாழ முடியாது எனும் அளவிற்கு வாழ்வியலில் ஊடுருவிப் பாய்ந்துள்ளதை எவராலும் மறுக்க முடியாது.அது தடை படும் போது ஏற்படும் தவிப்பும்,தத்தளிப்பும்,தவிர்க்க இயலாத ஒன்றாகிப் போவதும் உண்மையே!

வேகமாகச் சுழலும் இவ்வுலகம் காலத்தின் அருமையைக் கருதி தமது தேவைகளையும்,துரித உணவுகளையும்,அதை சேமித்துக் கெடாத வண்ணம் பாதுகாப்பதிலேயும் கவணம் செலுத்தியதன் விளைவு தான் இன்று, மிக்ஸி,கிரண்டர், ஃபிரிட்ஜ்ரேட்டர் ஓவன்,,ஃபேன்,ஏஸி, வாஷிங் மெஷின்,அயன்பாக்ஸ், டி.வி, என மின்சாரத்தால் இயங்கும் இவைகள். ஆம்! இவைகள் இல்லாத வீடுகளே இல்லை எனும் அளவிற்கு அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவை என்றாகி விட்டது.

சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு இன்று, தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நகரங்கள், பரீட்சை நடந்து வரும் நிலையில் வீட்டில் பாடம் படிக்க முடியாமல் பரிதவிக்கும் மாணவர்கள்,பல் பொருள் விற்பனைக்கூடங்கள்,உணவு சமைக்கப் படாதபாடுபடும் அடுப்படியின் அவலங்கள்,ஒளியிழந்த வீதிகள், இரவு பதினொன்று மணியாகியும் பாலகர்கள் உறங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருந்த போது,இன்னும் தூங்க வில்லையா? எனக்கேட்ட போது, வியர்க்கும் ,ஃபேன் ஓடாது,கரண்ட் வரட்டும்,எனும் பதிலைக் கேட்ட போது,காலையில் நேரத்தோடு எழுந்து பள்ளிக்குச் செல்லும்,மழலையர்களின் வேதனை,விசும்பல்தனை யாரிடத்தில் போய்ச் சொல்லுவது? அதிகாலை எனப் பல முறை பவர்கட்டாகி விடுவதால் பாலகரும்,பெரியவர்களும் தூக்கமின்மை காரணத்தாலும்,கொசுக்கடியின் வேதனையாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்ற கொடுமையை என்னவென்று சொல்ல?

நிலநடுக்கம் வருவதைக்கூட முற்கூட்டியே உணர்ந்தறிந்து உலகிற்கு உணர்த்தும் உபகரணங்களைக் கண்டுபிடித்த நமக்கு கரண்ட் எப்ப கட்டாகும்? எப்ப வரும்?ன்னு கண்டுபிடிக்கத் தெரியாதது காலத்தின் கோலமேயன்றி வேறெதைச் சொல்வது? கண்ணாபிண்ணான்னு கண்டபடி காலம்,நேரம், தெரியாமெ கரண்ட் கட்டாகி விடுவதால் பொது மக்கள் படு அவஸ்த்தையைச் சொல்லி மாளாது!

வரலாறு காணாத இம் மின்பற்றாக்குறைக்கு என்ன காரணம்? இதற்கு யார் பொறுப்பு? செய்ய வேண்டிய மாற்று வழிகள் தான் என்ன?அரசாங்கம் அதிரடியாகச் செய்ய வேண்டிய திட்டங்கள் என்ன?மற்ற மாநிலங்களில் இது போன்றக் கொடுமைகள் நிகழ்கின்றனவா? ஒளிரும் இந்தியாவின் மறு உருவம் இது தானா? அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு இப்படி இருளில் மூழ்கித்தான் இருக்குமா? இப்படி எண்ணற்றக் கேள்விகள் எரிச்சலோடு எழுகின்றது,மின்தடையில் நாம் வியர்த்துப் புழுங்கும்போது. கோடிக்கணக்கில் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கும்மாளம் போடும் அரசியல்வாதிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதே அசுரவேகத்தில் சொத்துக்களை குவித்து அள்ளி முடிவதால்தான் அடிமட்டத்தில் வாழும் பொதுமக்களுக்கு அல்லலும்,தொல்லைகளும்!

புரட்சிக்கவிஞன் பாரதி இன்று உயிரோடு இருந்திருந்தால், “என்று தனியும் இந்த மின் வெட்டு தா(க்)கம்”, எனப் பாடியிருப்பானோ? என்னவோ?

கடைசியில் மாட்டிக்கிட்டு முழிக்கிறது மக்கள் தானே...?
M.N.L.முஹம்மது ரஃபீக். ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சென்னையில் மின்வெட்டு நேர...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [26 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17201

சம்சாரம் அது மின்சாரம் என்று ஒரு பாடலை கேட்டோம்.ஆனால் இன்று கட்டாயம் மின்சாரம் அது சம்சாரம் என்ற அளவுக்கு வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

இந்த சீரற்ற மின்வெட்டு, மின் தட்டுப்பாடு முக்கிய மாக நிர்வாக திரமயின்மயாலும், ஆட்சிகளை தக்க வைக்க ஆளும் அரசின் கையாலாகாத தனமுமே! இலவச மின்சாரம் என கோடிஸ்வர விவசாயி குளிர்காய்கிறான். அன்றாடம் வேலை பார்க்கும் கல் வீட்டில், வாடகை வீட்டில் தங்கும் தொழிலாளி மின்வாரி யத்திற்கு தினக்கூலியை செளுத்துகிறான், இது என்ன கோட்பாடோ தெரிய வில்லை.

நம் பாரத திருநாட்டில் எந்த ஒரு பொது துறையும் தற்போது நிலவும் சூழ்நிலையில் அரசாங்கத்திடம் இருக்கும் போது அதிக நஷ்டத்தையும் பேரிழப்பையும் சந்திக்கிறது.

அதே துறை தனியார் மயமானால் இலாபம் கொழிக்கிறது, இது என்ன சூட்சுமமோ? நிர்வாக திறமையை தவிர வேறென்ன ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved