Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:09:18 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8071
#KOTW8071
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 26, 2012
ஒருவழிப்பாதை வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 7787 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (34) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 11)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் ஒரு வழிப்பாதையை அமல்படுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கடந்த ஜனவரி 6 அன்று உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தார்.

அதனை தொடர்ந்து பிப்ரவரி 2 அன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.கண்ணையா, பணி மேற்பார்வையாளர் செல்வமணி, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் மற்றும் அலுவலர்கள், காயல்பட்டினம் கூலக்கடை பஜாருக்குச் சென்று, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களைச் சந்தித்து அவ்வாக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட உத்தரவிட்டனர்.

மறுநாள் (பிப்ரவரி 3) - காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலிருந்து தாயிம்பள்ளி வழியே திரும்பி, பெரிய நெசவுத் தெரு, கூலக்கடை பஜார் வழியாக ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியரின் ஆணையின் தொடர்ச்சியாக இன்று காலை பெரிய நெசவு தெரு - எல்.கே.லெப்பை தம்பி சாலை பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. வட்டாச்சியர் வீராசாமி, கிராம அதிகாரி செல்வலிங்கம், நகராட்சி ஆணையர் வீ.எஸ். சுப்புலட்சுமி, திருச்செந்தூர் டி.எஸ்.பி ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் உட்பட ஏராளமான அரசு அலுவலர்கள் அவ்விடத்தில் இருந்து பணிகளை கண்காணித்தனர்.







































புகைப்படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்

[தலைப்பில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. @ 15:11/27.02.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by OMERANAS (DOHA QATAR.) [26 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17204

எப்படியாவது எவன் வீட்டை பிளந்தாவது எங்களுக்கு வழி பிறந்தால்,சரி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஒடையில் ஓர் ஆக்ரமிப்பு
posted by தேக் முஜீபு (எர்னாகுளம்) [26 February 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 17205

நெசவு ஜமாஅத் காட்டித்தருகின்ற மாற்று வழியை பேருராட்ச்சி உடணடியாக கவணத்தில் எடுத்து மாற்று வழியை ஏற்படுத்தியிருக்களாம் இன்னும் 10 வருடம் கழித்து மக்கள் நெறுக்கடியாகும் போது அன்று மாறு்று வழியை யோசிப்பதர்க்கு இன்றே உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுடைய மனநிலையைப் புரிந்து மாற்று வழியை உடணடியாக நடைமுறைப்படுத்துங்கள்

பஸ் விட்டு ஒரு சில நாட்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஓரு ஓடையை அகற்றி பஸ்ஸை விடுவதர்க்கு எடுத்த முயட்ச்சியை உண்மையில் ஆக்கிரமிப்பை முறையாக செய்தால் ஓரு வழிப்பதையே தேவையில்லை

காயல்பட்டினத்தில் பெறும்பாலான தெருக்களில் ஓரு ஆட்டே போனால் ஒரு ஆட்டோ வரமுடியாத தெரு எல்லாம் இறுக்கிறது(ஆட்டோ போவதர்க்கேகூட அந்த தெருக்கலை ஓன்வேயகமாற்ற வேண்டும் )

அந்தமாதிரி தெருவுக்கு நெசவு தெரு என்று பெயர்வைத்தால் மட்டும் போதும் அந்த தெரு ஒருவழிப்பதையாகவும் மாறிவிடும் ஆக்கிரமிப்பு உடணடியாக அகற்றப்படும்

தேக் முஜீப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சட்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றது...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்) [26 February 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 17206

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! இதில் ஆதங்கப் படுவதற்கோ,ஆவேசப்படுவதற்கோ ஒன்றுமில்லை! எந்த அரசாங்கமும் முறையாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதில்லை.விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்திற்கு கூட முன் அறிவிப்புகள் நல்கி, குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்றுவது வழக்கம்.

தகுந்த ஆவணங்கள்,சான்றுகள் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.சட்டம் இன்னும் உயிருடன் தான் இருந்து வருகின்றது.அரசு நிலத்தை அல்லது போக்குவரத்துப் பாதையை ஆக்கிரமித்து கட்டியிருந்தால் அதை அகற்றும் உரிமையும்,அதிகாரமும் அரசுக்கு உண்டு. சிலர் பாதிக்கப் படுகின்றார்களே என்று பலரை பாதிப்புக்குள்ளாகும் ஆக்கிரமிப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு போதும் உகந்ததல்ல!

-ராபியா மணாளன். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by ahmed meera thamby (makkah) [26 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17207

அரசாங்க நிலத்தில் கடை, வீடு கட்டினார்ஹல் அதை அரசாங்கம் இடிகிறது,பாவம் கஷ்ட்ட பட்டவர்களின் நிலத்தை அபகரிக்கிரார்ஹலே அவர்ஹளுக்கு யார் புத்தி சொல்வது? அரசாங்கத்திற்கு எல்லாம் மேல் ஒரு அரசாங்க அதிபதி ரப்புல் ஆலமீன் இருக்கிறான் என்பதை மறந்து விட்டார்களா? அறியாமல் செய்பவன் ஏமாளி,அறிந்தே செய்பவன் யார் மக்களே நீங்களே சொல்லுங்கள் நில மோசடி காரர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் தப்பு செய்தவர்கள் தண்டிக்கபட்டே ஆக வேண்டும் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் பாது காப்பானாக ஆமீன்

வஸ்ஸலாம்
அபூ முனவ்வரா
(அஹ்மத் மீரா)
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by amzedmoosa (dammam) [26 February 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17208

அஸ்ஸலாமுஅலைக்கும்

இந்த பணி மெயின் ரோட்டிலும் நடந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது செய்வார்கள் என நம்புகிறோம் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by Shaik Dawood (Hong Kong ) [27 February 2012]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 17210

Somewhat good job...

I don't understand one thing...they demolish a building behind a telephone post??? then is the post on the road's area or what...?

but it is great lesson to the people who are encroaching on govt's or others land.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA) [27 February 2012]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 17213

Kayal....in BLACK DAY.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இந்த வீட்டை கட்ட அனுமதி வழங்கியது யார்...? அதற்க்கு தீர்வை பணம் வாங்கியது யார்...?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17214

இந்த இடத்திற்கு வில்லங்கம் பார்த்து பத்திரம் போட்டு பதிவு செய்து கொடுத்தது யார்..? இந்த வீட்டை கட்ட அனுமதி வழங்கியது யார்...? அதற்க்கு தீர்வை பணம் வாங்கியது யார்...? இப்படி நிறைய முன் ஆரம்பம் இருக்கிறது..! அரசு அதிகரிகள் இவர்கள் தான் முதல் மோசடிகாரர்கள் (குற்றவாளிகள்) முக்கியமாக இந்த நபர்கள் மேல் தான் சட்ட நடவடிக்கை எடுக்க படவேண்டும்..! பிறகு அந்த இடத்தை வீடு மற்றும் கடை அவர்கள் அனுபவிக்கும் இடத்தை அகற்ற வேண்டும்... அரசு அதிகாரிகள் முதலில் தண்டிக்க பட வேண்டும்...! அவர்களின் திருட்டு தனத்தால் ஏற்பட்ட விளைவே...

போங்க ஐயா.. உங்க சட்டமும்.. உங்க செயலும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by mohd ikram (saudi arabia) [27 February 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17215

சட்டம் தனது கடமையினை செய்கிறது . நாம் நமது கடமைகளை சரிவர செய்தால் யாரும் நம் மீது கை வைக்க முடியாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. பின்னாடி பார்த்துகொள்ளலாம்
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [27 February 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17216

சகோ. முத்து இஸ்மாயில் அவர்களின் கருத்துக்கள் அருமை.

யார் யாருக்கு என்னென்ன கொடுக்கனுமோ அதை கொடுத்து, என்னன்ன வாங்கனுமோ அதை வாங்கிக்கொண்டு, சட்டத்துக்கு புறமாக காரியத்தை சாதித்து விடுகிறார்கள். பிரச்சனைகள் ஏதும் வராதா?.. -- ஊஹூம்.. அது வந்தால் " பின்னாடி பார்த்துகொள்ளலாம்". இந்த " பின்னாடி பார்த்துகொள்ளலாம்" என்ற மனப்பான்மைதான் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம்.

நடப்பவைகள் நன்மையாக இருக்கட்டும்.

ஒன்று மட்டும் புரியவில்லை, பல் துருத்திக்கொண்டு வெளியில் இருக்கின்றது என்று, கடவாய்ப்பல்லை புடுங்கின கதையாக, வெளியில் ஆக்கரமிப்பு மாதிரி துருத்திக்கொண்டு இருக்கின்ற இரண்டு பக்க கட்டிடங்களை விட்டுவிட்டு, உள்ளே இருக்கின்ற ஒரு கட்டிடத்தை மட்டும் இடிக்கின்றார்களே..!! (புகைப்படம் 2, 12, 14, இறுதி இரண்டு ).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. :நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by hasbullah mackie (DUBAI) [27 February 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17217

ELECTRIC POST க்கு பின்னாடி இருக்கிற பில்டிங் எல்லாமே இடிக்கிறாங்க .....அப்படின்னா ELECTRIC POST மாற்றுவாங்களா அல்லது அப்படியே தான் இருக்குமா?

மெயின் ரோட்டில் இதே மாதிரி ஆக்கிரமிப்புகள் வேலையே முதல்லே செய்திருந்தால் இந்த ஒருவழி பாதையே தேவையில்லை...

என்னத்த இருந்தாலும் எப்படி GOVERNMENT நிலத்துக்கு பட்டா போட்ட கொடுக்கிறாங்களே ? மக்களை இப்படியும் ஏமாற்றுகிறார்களே?

இதே போன்ற ஆக்கிரமிப்புகள் எல்லா பகுதியிலும் செய்யப்பட வேண்டும்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [27 February 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17218

"Black Day" என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை....

அரசு நிலத்தில் வீடு/கடை கட்டியிருந்தால், அது அரசாங்கம் இடிக்கின்றது.

இடிக்கப்பட்ட வீடு அரசாங்கத்திற்கு சொந்தம் இல்லை, உடயவருக்குதான் சொந்தம் என்றால், அவர் அதற்க்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH- K.S.A.) [27 February 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17219

ஆக்ரமிப்பு என்று குடி இருந்த வீட்டை உடைத்து விட்டார்கள், பக்கத்தில் உள்ள வணிக வளாகம், பள்ளிகூட சைக்கிள் நிறுத்துமிடம், நிலைமை என்ன...? பெரியநெசவு தெரு, வீட்டை இழந்த ஏழை மக்கள் நிலை...?

இவர்களுக்கு மாற்று வழி ஏதும் நகராட்சி மூலம் செய்து கொடுப்பார்களா..?

பணம் உள்ளவர் மாற்று ஏற்பாடு செய்து கொள்வர் ஆனால் வீட்டை இழந்த வறியவர் நிலையை கொஞ்சம் நகராச்சி, மற்றும் பொதுமக்கள் கவனத்தில் எடுக்கவும்.

அல்லாஹு போதுமானவன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by seyed mohamed (ksa) [27 February 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17220

காயல்பட்டினத்தில் பெறும்பாலான தெருக்களில் ஓரு ஆட்டே போனால் ஒரு ஆட்டோ வரமுடியாத தெரு எல்லாம் இறுக்கிறது (ஆட்டோ போவதர்க்கேகூட அந்த தெருக்கலை ஓன்வேயகமாற்ற வேண்டும் )அந்தமாதிரி தெருவுக்கு நெசவு தெரு என்று பெயர்வைத்தால் மட்டும் போதும் அந்த தெரு ஒருவழிப்பதையாகவும் மாறிவிடும் ஆக்கிரமிப்பு உடணடியாக அகற்றப்படும்.-முஜீப்

முஜிப், ஆட்டோ க்காக ஒரு வழி பாதையா? அத்தும் பெரும்பாலான தெருக்களிலா? எந்த தெரு அப்படி இருக்கு? கடந்த முறை KTM பூர இடிபட்டது, அந்த தெருவுக்கு நெசவு தெரு என்றா பெயர் இருத்தது.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகரில் ஆக்கிரமிப்புகளை அக...
posted by HAMEED SIRAJUDEEN (Pondicherry) [27 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17222

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மேலே கமெண்ட் எழுதிய சகோரர்களில் பலர் ஒன்றில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். “தனக்கு வரும் போது தான், தலைவலியும் திருகு வலியும் தெரியும்” – என்பதை நாம் எல்லோருமே மறந்து விடுகிறோம். சரி! அது மனித இயல்பு. ஆனால், போகிற போக்கில் கமெண்ட்களை அள்ளி வீசாமல், தயவு செய்து அடுத்தவர்களின் மனவலிகளையும் சிறிது யோசித்து எழுதியிருக்கலாம்.

நீங்கள் சொல்வதைப் போல், ஆவணங்களும் சான்றுகளும் சரியாக இருந்தால், இடித்த வீட்டை கட்டிக் கொடுத்து விடுவார்களா? வீட்டின் உரிமையாளர் இல்லாத போது, அரசாங்க அதிகாரிகள் வருவார்களாம், நோட்டீஸ் கொடுத்தோம், பதில் இல்லை என்று கூறி வீட்டை இடித்து விடுவார்களாம். அவரது நிலையை யாராவது கணக்கில் எடுத்தார்களா? கிட்டத்தட்ட 25-30 வருடம் பழமையான வீடு அது. இதுவரை எந்த அரசாங்க அதிகாரிக்கும் கண்ணில்படாமல் மறைந்து இருந்ததா?.

20 வருடமாக ஒருவழி பாதை வரவேண்டும் என காயல்பட்டணமே தவம் கிடக்கிறது. இத்தனை வருடமாக எடுக்கப்படாத முயற்சி, சில நாட்களிலேயே எடுக்கப்படுவதைப் பார்த்தால், சகோரதரர் முஜீப் அவர்களின் கருத்தின் கடைசி பாராவில் உள்ள வரிகள் உண்மையாகிவிடுமோ என சந்தேகம் வருகிறது..

கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் தான் பெரிய தெருவாசிகளும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இதே வெப்-சைட்டில் எழுதினார்கள். அப்போது எழுதியதற்கும், இப்போது நீங்கள் எழுதுவதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. (இப்போது மீண்டும் முதல் பாராவை படிக்கவும்)

இடிக்கப்பட்ட வீடு, ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் அனைவருமே காசு உள்ளவர்களா? (பணம் உள்ளவர்களாக இருந்தாலும், இப்போதுள்ள விலைவாசியில் கட்டுபடியாகுமா? மறுபடியும் கட்ட முடியுமா?)

எல்லாவற்றிற்கும் வல்ல இறைவன் போதுமானவன். வஸ்ஸலாம்

சினேகத்துடன்
சிராஜூதீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. அகற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை! ஆனால் இதுவரை அனுமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [27 February 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17223

அஸ்ஸலாமு அழைக்கும்

மக்களின் தவறான செயல்களுக்கு துணை நின்ற வீட்டின் ப்ளான், குடிநீர் மற்றும் மின்சாரம் அனுமதி, இத்தனை காலம் வாங்கப்பட்ட தீர்வை இவைகளின் பொருப்பாளிகலான அணைத்து அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

செய்திடுமா அரசு சட்டங்களும் அதன் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. முற்பகல் செய்த செயல் இன்ஷ அல்லா பிற்பகல் ஒருநாள் விளையும்!
posted by theak mujeeb (kayalpatnam ) [27 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17224

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழவேண்டும் நமக்கு ஆக்கிரமிப் வந்து விட்டால் நமக்கு என்னவாகும் அதனால் எப்படியுயம் பஸ்ஸை ஒனேவே ஆகிவிட்டால் நம் ஆக்கிரமிபில் இருந்து தப்பித்து விடலாம் என்று முற்பகல் செய்த செயல் இன்ஷ அல்லா பிற்பகல் ஒருநாள் விளையும்!

ராபியா மணாளன் அவர்களே !!!!!

சிலர் பாதிக்கப் படுகின்றார்களே என்று பலரை பாதிப்புக்குள்ளாகும் ஆக்கிரமிப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு போதும் உகந்ததல்ல! என்ற உங்கள் கருது உண்மை என்றல் யாரும் பாதிக்காத மற்று வழியை ஏன் நீங்கள் சிந்திக்க கூடாது

பெரிய நெசவு தெரு மக்கள் நம் சகோதர்கள் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற எண்ணம் ஏன் இல்லை இதையல்லாம் வைத்து பார்க்கும் போது பெரிய நெசவு தெரு கயல்பட்னத்தில் இலையோ என்ற சந்தேகம் வருகிறது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by hasbullah (dubai) [27 February 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17226

ஒரு சிறு திருத்தம்

இந்த மாதிரி ஆக்கிரமிப்புகள் மற்ற இடங்களிலும் அகற்றப்பட வேண்டும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by Shaik dawood (Maldives) [27 February 2012]
IP: 27.*.*.* Maldives | Comment Reference Number: 17228

அஸ்ஸலாமு அழைக்கும் ,

ஒருதலை பட்சமான இந்த நிகழ்வுக்கு காரணமானவர்கள் நாளை மறுமையில் பதில் சொல்லியே ஆகவேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by OMER ANAS (DOHA QATAR.) [27 February 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 17231

தம்பி ஜியாவுத்தீன் உங்கள் தேடல் அருமை! உண்மை இன்னும் தூக்கத்திலேயே இருக்குகிறது என்றுதான் நானும்,எப்படியாவது எவன் வீட்டை பிளந்தாவது எங்களுக்கு வழி பிறந்தால்,சரி! என்று கருத்து எழுதினேன்! உண்மையில் இடிக்கப்பட வீடுகள்,எல்லாம் மனித சுனாமிகளால், இடிக்கப் பட்டதே!

இன்று அதிகாரம் தன கையில் என்று நினைப்போர்,நாளை நம்மை படைத்தோன் இடம் மாட்டிக் கொள்ளும் போது இந்த இடம் கூட கிடைக்காமல் அலைவார்கள்!அலையவேண்டும்! பொதுவா நம் ஏழை சகோதரன் வயிற்றில் அடிக்க நினைக்கும் ஒவ்வொருவனும், இது நம் தெரு என்றால்? நீ என்ன நினைப்பாய் என்று சிந்திக்க வேண்டும்! உண்மையில் ஜியாவுதீன் நீங்கள் கண்டு சொன்னது, ஊர் மக்களுக்கும் புரியும்! புரியவேண்டும்! வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by Umar Rizwan Jamali (Singapore) [27 February 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 17232

السلام عليكم ورحمة الله وبركاته

இந்நிகள்விலிருந்து .........

வீடை இழந்தவர்கள் வருத்தத்திர்க்குரியவர்களே!

ஆனால் நாம் தவறை செய்யும்போதோ! அல்லது பிறர் நம்மை தவறு செய்ய தூண்டும்போதோ! நாம் சிந்திக்க வேண்டியது ???

நல்லவற்றுக்கு துணை நிற்பவன் இக்கட்டான சூழலிலும் துணை நிற்பான்.

தீயவற்றுக்கு துணை நிற்பவன் தருணத்தில் எதிரியாவான் என்பதற்கு இது ஒரு சிறந்த பாடம்.

யாரும் செய்யாத தவறையா நான் செய்து விட்டேன்? என நியாயப்படுத்த முனைந்து, இன்றோ அல்லது என்றோ ஒருநாள் நஷ்டப்படுவதைவிட

எப்போதும் நேர்மையுடன் நின்று ஜெயம்பெறுவோம்.

வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by thajulanam (yenbu ksa) [27 February 2012]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 17233

ethu appvai nadaka vandia kariam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. கொஞ்சம் ஊரோடு ஒத்துப்போங்க! பிரதர்.அல்லஹ் உங்களுக்கு அருள்ச் செய்வான்!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்) [27 February 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 17236

அன்புச் சகோதரர் தேக்,முஜீப் அவர்களே!

நான் உங்கள் தெருவுக்கோ,ஜமாஅத்துக்கோ எதிரான கருத்துடையவன் இல்லை! என் கருத்துப் பதிவில் உங்கள் தெருவின் பெயரையும் நான் குறிப்பிட்டு எழுதவுமில்லை. பொதுவாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது சிலர் பாதிக்கப்படுவது உண்மை! நிலம் வாங்கும் போது,வீடுகள் கட்டும் போது,கடைகள் துவங்கும் போது நம் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.வில்லங்கம் உள்ளதா? பிரச்சனைக்குரிய நிலமா? அரசு அனுமதி வழங்கியுள்ளதா? எந்தப் பிரச்சனையும் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்டவர் நீதி மன்றத்தின் உதவியை நாடலாம் என்ற வழிகாட்டுதலைத் தானே எழுதியுள்ளேன்.

-ராபியா மணாளன்.காயல்பட்டணம்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by CADER (JAIPUR) [27 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17241

முஜீப் காக்கா நெசவுத் தெருவு ஆக்கிரமிப்புகள் மற்றும் அகற்றவில்லை எல்.கே.லெப்பை தம்பி சாலையும் அகற்றப்பட்டன என்பதையும் உங்களுக்கு தெரியபடுத்தி கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [27 February 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17243

இடித்தது சரியா அல்லது தவறா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்,,,, அது என்னங்க வலது பக்கத்து கடைகளை விட்டுட்டு இடதுபக்க ஸ்கூல் கோட்டையே விட்டுட்டு உள்ளே இருக்கிற வீட்டை இடிக்கிறதுலே அத்துணை வேகம்??????? அந்த வீட்டுகுள்ளேயா பஸ் போகபோகிறது???????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. ஏதோ இங்கு மட்டும் தான் ஆக்கிரமிப்பு உள்ளது என்று நாம் யாரும் மார்தட்டி கொண்டால் அது சிறு புள்ளைத்தனம்..
posted by சட்னி .செய்யது மீரான் (ஜித்தா ..) [27 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17245

அஸ்ஸலாமு அலைக்கும்..

அன்றாடங்காய்ச்சிகள்,ஏழைகள் பெரும்பான்மையாய் உள்ள பகுதி. இந்த சம்பவம் மூலம் இருந்ததை இழந்து பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள நம் மக்களுக்கு நாம் ஆறுதலாக இருப்பது காயலர்களாக அதுவும் முஸ்லிம்களாக பிறந்த நம் அனைவர்கள் மீதும் ஆகுமானதாக உள்ளது..

இக்கால சூழ்நிலையில் ஒரு சிறு கட்டிடம் கட்டுவதற்கு ஏற்படும் செலவுகள்,சிரமங்கள்,சிக்கல்கள் எத்தனை உள்ளது.. என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

இத்தனை காலம் அகற்றாத (விழிக்காத,இடிக்காத )அரசு அதிகாரிகள் இப்பொழுது கச்சை கட்டி களத்தில் இறங்கி காரியம் ஆற்றி உள்ளார்கள்..

எல்லோருக்கும் பொதுவான நமது நகர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் (இவர் இந்த பகுதி மக்களால் உறுப்பினர் ஆனவர் ) இந்த மக்களுக்கு ஆறுதலும் ,அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனையும் கூறும் தகுதி உடையவர்கள் இவர்கள், இந்த இக்கட்டான நிலைமையில் இவர்கள் இங்கு வந்தார்களா?? என்பது அல்லாஹ்விற்கு வெளிச்சம்..

ஏதோ இங்கு மட்டும் தான் ஆக்கிரமிப்பு உள்ளது என்று நாம் யாரும் மார்தட்டி கொண்டால் அது சிறு புள்ளைத்தனம். கடந்த 30 ,40 வருடங்களுக்கு முன்னர் நாம் சிறு பிள்ளைகளாக இருந்த சமயம் விசாலமாக,விரிவாக இருந்து ஆடி,ஓடி விளையாடிய நம் தெருக்கள் இன்று குறுகலாக சுருங்கி போய் உள்ளதை என்ன சொல்வது???????

நம் ஊரில் புற்று நோயின் தாக்கத்தினால் பல மக்களின் விலை மதிக்க முடியாத உயிர்களை கொள்ளை கொல்வதை நாம் அன்றாடம் காண்கின்றோம் அல்லது அறிகின்றோம்.. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நம்மால் முடிந்த உதவிகளை செய்வதோடு படைத்த ரஹ்மானிடம் மனமுருக பிரார்த்தனையும் செய்கின்றோம். எல்லா மக்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்..

நம் ஊரில் இந்த கொடிய புற்று நோயை விட மிக மிக மிக வேகமாக பரவி வரும் புதிய நோய்

பொது மக்களுக்கு உண்டான,உரிமையான தெருக்களில் காம்பவுண்ட் சுவர் எழுப்புதல். மிக பெரிதாக படி கட்டுதல்,கழிவு நீர் தொட்டி கட்டுதல் (இதை விட பலால் நீர் கொட்டுதல்,குப்பை வீசுதல் வேறு ) என அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு ஆக்கிரமிப்பு செய்துள்ளதை நாம் அனைவரும் கண்டும்,சிலர் செய்தும் வருகின்றோம்..

அடுத்தவர் நிலத்தில் ஒரு அங்குலம் இடம் எடுப்பவனின் நிலை மண்ணறையிலும்,மறுமையிலும் என்ன நிகழும் என்பதை இறைவனும்,அவனது இறுதி தூதரும் எடுத்து இயம்பியதை பல முறை நம் மார்க்க மேதைகள் சொன்னதை கேட்டவர்கள் ஆனால் செயல்படுத்த தான் முடியாதவர்களாக முடங்கி போய் உள்ளோம்..

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், தீய வினை விதைத்தவன் தீயதையும், நல்லதோர் தி(தீ)னைவிதைத்தவன் நல்லதையும், பெறுவார்கள் என்பது என்றுமே உண்மையானது..

இதை யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லாது பண்படுத்தவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிறு தூண்டுதல் .

எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.

என்றும் மாறாத அன்புடன் .....

சட்னி .செய்யது மீரான்
ஜித்தா ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by mackie noohuthambi (colombo) [28 February 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17248

வரவேற்கக்கூடிய துணிச்சலான நடவடிக்கை. ஆனால் இந்த தெருவோடு இந்த ஆக்கிரமிப்பு வேலைகள் நின்று விட்டால் அது பழிவாங்கும் செய்திபோல் ஆகிவிடும். பிரதான சாலையில் அஞ்சல் அலுவகத்துக்கு அடுத்தாண்மையாக உள்ள கட்டிடங்கள் பற்றியும் மக்கள் யோசிக்கிறார்கள்.

அதே சமயம் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளனவே, என்ன வரைமுறை அல்லது ஆங்கிலத்தில் சொல்வதானால் WHAT IS THE YARDSTICK THE CONCERNED OFFICIALS HAVE FIXED FOR THE "ENCROACHMENT" என்று வீட்டு உரிமையாளர்களுக்கு தெளிவாக சொல்லி இருக்கிறார்களா, பக்கத்தில் உள்ள நகை கடைகள், தர்காக்கள் பள்ளிக்கூடங்கள் இவை எல்லாம் பத்திரமாக இருக்கின்றனவே, இறை நேச செல்வர்களின் சாபம் உண்டாகிவிடும் தெய்வ நிந்தனைக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தார்களா அல்லது கல்விக்கூடங்களை இடிப்பதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படும் என்று பச்சாதாபப்பட்டு அவற்றை இடிக்காமல் வாளாவிருந்தார்களா ஒன்றும் புரியவில்லையே.

பாதிக்கப்பட்டவர்கள் நீதி மன்றத்தை அணுகினால் நீதி என்ன அவ்வளவு இலகுவில் கிடைத்துவிடுமா நமது நாட்டில். இஸ்லாமிய கலீபாக்கள் ஆட்சியா நடக்கிறது இங்கே, சட்டத்தை கையில் எடுத்துக்கொள்பவர்கள், கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் உடனடியாக தண்டிக்கப்பட்டால் கூட அவர்களுக்காக வக்கலாத்து வாங்கும் அரசியல் கட்சிகள், வழக்குரைஞர்கள் வாழும் மிக பெரிய ஜன நாயக நாடல்லவா நம் நாடு. எனவே பாதிக்கப்பட்டவர்கள் பொறுமையுடன் இருங்கள். இடிபாடுகள் அகற்றப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தபின் உங்கள் இடங்களை செப்பனிடுங்கள். உங்கள் பக்கம் நியாயம் இருக்குமானால் அல்லா உங்களுக்கு இந்த இடத்தின் பெறுமதியை உயர்த்தி உங்களை மகிழ்ச்சியுற செய்வான்.

VAL FAJR என்ற சூராவில் இறைவன் கூறுவதைப்போல், உங்களுக்கு வாழ்வாதரங்களை நல்லபடி அமைத்து தந்தால் , இது நான் சம்பாத்தியம் செய்தது என்னால் நடந்தது என்கிறோம். அவன் நமக்கு சோதனை ஏற்படுத்தினால் இறைவன் என்னைக்கைவிட்டு விட்டான் என்று பிரலாபிக்கிறோம். நல்லது நடக்கும்போது அல்லாஹ்வை ஷுக்று செய்வதும் சோதனைகள் வரும்போது பொறுமையுடன் இருந்து அல்லாஹ்விடம் உதவி தேடுவதும் ஒரு மூமினுக்கு அழகு. அல்லாஹ் மிக அறிந்தவன்.

பொறுமையுடன் இருப்பவர்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். நாம் என்ன கொண்டு வந்தோம் இழப்பதற்கு. நேற்று ஒருவனுடைய் பொருள் இன்று என்னுடையது. நாளை அது வேறு ஒருவனுக்கு சொந்தமாகலாம். இது தத்துவம் அல்ல, அல்லாஹ்வில் தீர்ப்பு. வீடு இழந்தவர்களை அல்லாஹ் கை தூக்கி விடுவான் பொறுமையாக இருங்கள். மன வேதனையுடன் மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by masood (calicut) [28 February 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 17251

நெசவு தேரு ஜமாஅத் மக்களின் ஆக்கிரமிப்புகள் மாத்திரம் இடிக்கபட்டால் சஹோதர முஜீப் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது . ஆனால் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது நெசவு ஜமா- அத்தை சாராதவர்களின் இடங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இது ஒரு தலை பட்ச மானது இல்லை என்பது நிதர்சனம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by rafeek (trivandrum) [28 February 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 17278

நல்ல நியூஸ் ஆனால் இதுபோல் மெயின் ரோட்லும் அக்ரம்முபு அகற்றப்படநும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by Abubacker Siddiq (Riyadh, KSA) [28 February 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17279

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நெசவு தெருவில் இருந்த வீட்டை இடித்த அதிகாரிகளின் கண்களுக்கு மெயின் ரோட்டை சுருக்கி (ஆக்கிரமித்து) நேற்று முளைத்த காளான் கட்டிடங்கள் தெரியாமல் போனது பண பலமா? சூழ்சியா?

சூட்சமம் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் நமக்கு எதிராக செயல்படும் அணைத்து சூழ்ச்சிகளையும் அழித்து, நியாயத்தின் பக்கம் வெற்றியை திருப்புவானாக...

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' ஹதீஸ்: புஹாரி

இம்மையில் ஆள்பலமும் பணபலமும் ஜெயிக்கலாம் ... மறுமையில் ???

அபூபக்கர் சித்திக்,
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by OMER ANAS (DOHA QATAR.) [29 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17280

அடுத்தவர் நிலத்தில் ஒரு அங்குலம் இடம் எடுப்பவனின் நிலை மண்ணறையிலும்,மறுமையிலும் என்ன நிகழும் என்பதை இறைவனும்,அவனது இறுதி தூதரும் எடுத்து இயம்பியதை பல முறை நம் மார்க்க மேதைகள் சொன்னதை கேட்டவர்கள் ஆனால் செயல்படுத்த தான் முடியாதவர்களாக முடங்கி போய் உள்ளோம்..

எனது தம்பி, பாலிய சிநேகிதன்,என்னோடு படித்த அன்பு சகோதரன்,சட்னி செய்யிது மீரான் போன்று,இறையோன் மேல் பயம் உள்ளஎல்லோரும், அவரது கருத்தில் நியாயம் உள்ளது என்று புரியவேண்டும்!

இத்தனை காலம் அகற்றாத (விழிக்காத,இடிக்காத )அரசு அதிகாரிகள் இப்பொழுது கச்சை கட்டி களத்தில் இறங்கி காரியம் ஆற்றி உள்ளார்கள்

இடிக்கப்பட இடம் எல்லாம் ஆக்கிரமிப்பு என்றால் பாராட்டுவோம்! அதே நேரம் ஏழைகளை,இல்லை நடுத்தரவாதிகளை, நோண்டி நொங்கு எடுக்க நினைப்போர், நிச்சயம் ஒருகாலம் நம் சகோதரன் வீட்டை இடிக்க துணை புரிந்த குற்றத்திற்கு, இறைவன் முன்பு தலைகுனிய நேரிடும்!

சபாஷ் செய்து மீரான்! உன்னைப்போன்றோர்,ஒருசிலர் அநியாயங்களுக்கு துணை போகாமல் நியாயங்களை மக்களுக்கு உரிய நேரத்தில் எடுத்து சொல்வதை பாராட்டுகிறேன்! மக்களே! உங்கள் வீடு நெசவுத் தெருவில் இருக்குமானால், நீங்கள் என்ன கருத்தை எழுதுவீர்கள்!

அதை எழுதுங்கள்!அப்பத்தான் உண்மை விளங்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. எடுக்கப்பட்ட என்கௌன்ட்டர்
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [29 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17285

இப்படி எடுத்த எடுப்பிலேயே நமதூரில் இந்த என்கவுன்டருக் கொப்பான நடவடிக்கை சரியானதாக தெரியவில்லை. தவறு செய்திருந்தாலும் முதல் எச்சரிக்கை, இரண்டாம் எச்சரிக்கை, இறுதி எச்சரிக்கை அதுவும் பின்பற்ற படவில்லை எனில் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு இப்படி பல வித எச்சரிக்கைகள் மூலம் அவர்களை பணிய செய்திருக்கலாம். அவர்களும் குடியிருக்க வசதியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அதே வீட்டில் குடியிருக்கலாம். மாறாக இப்படி எடுத்த எடுப்பிலேயே பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்திருப்பது என்கௌண்டருக் கொப்பானதே!

பாதிக்க பட்ட வீடுகளின் உள்ளமைப்புகளை பார்க்கும் போது நடுத்தர மற்றும் ஏழைகளின் வீடுகளாகவே தெரிகிறது. இதற்கு நமது ஊர் நிர்வாகிகளின் முதிர்ச்சியின்மையும் ஒரு காரணமே!

உள்ளவர்கள் நீதி மன்றத்தை அணுகி ஸ்டே வாங்கி இருப்பதாக தெரிகிறது. இதற்குள் இவர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்வார்கள். இல்லாத பாதிக்க பட்ட நடுத்தர ஏழைகளின் கதிதான் அதோகதியாகி இருக்கிறது. நாம்தான் இவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. இழப்பீடு கொடுங்கள்!!!
posted by Muhammad Abubacker (Kayalpatnam) [01 March 2012]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 17318

ஆக்கிரமிப்பா இல்லையா என்ற சர்ச்சைக்கு நான் வரவில்லை. இடிக்கப்பட்ட வீடுகளில் வசதியானவர்களும் வசதியற்றவர்களும் இருக்கலாம். திடீரென்று இடித்தால் அவர்களும் எங்கே சொல்வார்கள். சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வழியெல்லாம் செய்து கொடுக்கும் அரசு நம்முடைய மக்களுக்கும் இழப்பீடு அளித்தால் நல்லது.

சட்டம் என்பதற்கு மேலாக மனிதாபியமானம் என்று ஒன்று இருக்கின்றது. நெசவு தெரு மக்களும் நம்முடைய சகோதரர்களே. பொது நலம் முக்கியம்தான் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில இருந்து கொஞ்சம் பாருங்கள்.

நான் நெசவு தெருவை சார்ந்தவன் அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:ஒருவழிப்பாதை வழித்தடத்தில...
posted by SEYED ALI (ABUDHABI) [04 March 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17449

நெசவு தெருவும் கூலக்கடை பஜாரும் மட்டும் ஒருவழிப்பாதை அல்ல.பிரதான சாலையிலும் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன.மேல் பகுதியில் தபால் நிலையத்திற்கு மேற்க்கே பாதை ஆபத்தாக குறுகி இருக்கிறது.அது போல் கிழக்கே பாதை கேடிஎம் தெருவுக்கு திரும்பும் முனை ஆபத்தாக இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved