Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:53:11 PM
ஞாயிறு | 1 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1858, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:2215:2518:3119:41
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:40
மறைவு18:26மறைவு17:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4719:1119:36
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8064
#KOTW8064
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 24, 2012
உடன்குடி அனல் மின் திட்ட பொறுப்பை முழுமையாக தமிழக அரசு ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2779 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உடன்குடி அனல் மின் திட்ட பொறுப்பை முழுமையாக தமிழக அரசு ஏற்று அமல்படுத்தும் என தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை முற்றிலும் நீக்கி, தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக ஆக்குவதற்கான முயற்சிகளில் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 1600 மெகாவாட் திறன் கொண்ட (2 * 800) மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கான (Super Critical Thermal Power Project) புரிந்துணர்வு ஒப்பந்தம் பாரத மிகு மின் நிலையத்திற்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் இடையே ஏற்பட்டது. இதனையடுத்து, உடன்குடி மின் கழகம் (Udangudi Power Corporation Limited) என்ற ஒரு கூட்டு நிறுவனம் (Joint Venture) 26.12.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது.

உடன்குடி அனல் மின் திட்டத்தின் மதிப்பீடு 8,000 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது. இந்த 8,000 கோடி ரூபாய், கடன் மற்றும் பங்கு மூலதனத் தொகையை உள்ளடக்கியதாகும். பங்கு மூலதனத் தொகையில் 26 விழுக்காடு தமிழ்நாடு மின்சார வாரியத்தாலும், 26 விழுக்காடு பாரத மிகுமின் நிறுவனத்தாலும் வழங்கப்படும் என்றும், எஞ்சிய 48 விழுக்காடு பங்கு மூலதனம் நிதி நிறுவனத்தாலோ அல்லது இந்தத் திட்டத்தை செயல்படுத்த முன்வரும் தனியார் நிறுவனத்தாலோ வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்திற்கான கடன் தொகை ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கூடிய தனியார் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் வரை, அதாவது கடந்த மைனாரிட்டி தி.மு.க. அரசு ஆட்சியை விட்டுச் செல்லும் வரை தீர்மானிக்கப்படவில்லை. திட்ட மதிப்பீடான 8,000 கோடி ரூபாயில், பங்குமூலதன விழுக்காடு எவ்வளவு என்றும், கடன் விழுக்காடு எவ்வளவு என்றும் கூட தீர்மானிக்கப்படவே இல்லை.

இந்தத் திட்டத்திற்காக பாரத மிகுமின் நிறுவனம் 32.5 கோடி ரூபாயும், தமிழ்நாடு மின்சார வாரியம் 32.5 கோடி ரூபாயும் ஒதுக்கியதைத் தவிர, திட்ட செயலாக்கத்திற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். அவ்வாறான சான்று பெறுவதற்கு இத்திட்டத்திற்கான நீண்டகால நிலக்கரி ஒதுக்கீடு (Long Term Coal Linkage) ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான நீண்டகால நிலக்கரி ஒதுக்கீடு (Long Term Coal Linkage) ஏற்படுத்தப்படாத காரணத்தால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று பெறப்படவில்லை.

இத்திட்டம் செயல்படுத்தப்படாததற்கு பாரத மிகுமின் நிறுவனத்தின் (BHEL) ஒத்துழைப்பின்மையும் ஒரு காரணமாகும்.

மேற்கூறிய காரணங்களினால் உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதற்கான காரணங்களை அரசு அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுடன் நான் 23.2.2012 அன்று ஆய்வு செய்தேன். உடன்குடி மின் கழகத்தின் மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது இயலாத காரியம் என தெரிய வந்தது. எனவே, தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக முடிவு எடுத்துள்ளேன்.

இத்திட்டத்திற்கான மொத்த செலவினமான 8,000 கோடி ரூபாயையும் தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பங்கு மூலதனமாக வழங்கும். மேலும், மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் இத்திட்டத்திற்கான நிலக்கரியை ஒதுக்கீடு செய்து எந்த உத்தரவும் வழங்காத நிலையில், இத்திட்டத்திற்குத் தேவையான நிலக்கரியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தெரிவித்து, அதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த நான்காண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடன்குடி அனல் மின் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் செயல்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டத்திற்கு பெரு மின் திட்ட தகுதி சான்றிதழ் (MegaPower Status) கிடைக்கும். இந்தத் தகுதியின் அடிப்படையில், வரி விலக்குகள் கிடைக்கப் பெற்று, திட்ட செலவுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1,600 மெகாவாட் மின்சாரம் முழுமையும் தமிழ்நாட்டிற்கே கிடைக்க வழிவகை ஏற்படும்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. varum.... aanaaaa
posted by Shaik Dawood (Hong Kong) [25 February 2012]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 17167

varuma ... varatha...???

namma ooru sub station la... Mann alli poadum thittama ithu...???

onnumae puriyala olahathulae...

may be project varummm....

aana minsaram varaathu...

ithu eppadi irukku???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உடன்குடி அனல் மின் திட்ட ...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [25 February 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 17176

அனல் மின்சாரம் வருவதற்கும் நமதூர் சப் ஸ்டேசனுக்கும் தொடர்பில்லை. உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் கடந்த ஆட்சியிலேயே அறிவிக்கப்பட்ட திட்டம். இன்றைய நிலையில் நமக்கு மின்சாரம்தான் முக்கியம். தட்டுப்பாடில்லாத மின்சாரம் நமக்கு கிடைக்குமானால் சப் ஸ்டேசன் கூட தேவையில்லை. உடன்குடி திட்டம் நிறைவேறுமானால் நமக்கு சீரிய அளவில் மின்சாரம் கிடைக்கு என நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உடன்குடி அனல் மின் திட்ட ...
posted by SEYED ALI (ABUDHABI) [27 February 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17229

அறிக்கைகள் வரும்.ஆனால் திட்டம் ஒன்றும் வராது.கஜானாவே காலி.அதனால்தான் பஸ் கட்டணம் பால்விலை எல்லாம் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.மத்திய அரசின் உதவியும் இல்லை.முந்தைய திமுக அரசு வாழைப்பழத்தை உரித்து வாயிலும் தீட்டாத ஒரே காரணத்தால் நமக்கு இந்த இழி நிலை.எனிவே மோனோரயில் வரும்,மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்,இன்னும் மொத்தத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரும்!வரும்!!வரும்!!!.வெறும் அறிக்கையில்.கனவில்.என்ன ஒன்றும் புரியவில்லையா.அதுதான் அப்பாவுக்கு கொஞ்சமும் சளைக்காத அம்மா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved