Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:55:58 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8072
#KOTW8072
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 27, 2012
பள்ளிக்கூடங்களுக்கு தமிழக அரசு ஜெனரேட்டர் வழங்கும்! முதல்வர் அறிவிப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4022 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் நிலவிவரும் மின்சார தட்டுபாட்டை சமாளிக்க மின்சார வாரியத்தின் புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி - சென்னையில் கூடுதல் ஒரு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. மேலும் - மாவட்டங்களில் மின்சார தடை குறைக்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகமும் தற்போது வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே - தேர்வுகாலத்தை கணக்கில் கொண்டு - தமிழக அரசு, பள்ளிக்கூடங்களுக்கு ஜெனரடோர் வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா - வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழகத்தில் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுக்காத காரணத்தால், தமிழ்நாடு தற்போது மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சி காலத்தில் 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக ஏற்படுத்தப்பட்டது. என்னுடைய முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தித் திட்டங்களைக் கூட முந்தைய தி.மு.க. அரசு செயல்படுத்த தவறிவிட்டது. மேலும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களும் உரிய காலத்தில் முடிக்கப்படாததால், நமக்குத் தேவையான மின்சாரம் கிடைக்கப் பெறவில்லை. முந்தைய தி.மு.க. அரசு அன்றாடம் வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் வாங்குவதையே வழக்கமாக கொண்டிருந்தது.

எனவே, நீண்டகால மின்சார கொள்முதலுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தினை பெற இயலவில்லை. இது தவிர, மின் கடத்தும் மின் தொடர் அமைப்பில், அதாவது, Transmission Corridor-ல் மின் தொடர் நெருக்கடி உள்ளதன் காரணமாக, வெளி மாநிலங்களிலிருந்து தேவையான மின்சாரம் பெற இயலவில்லை. உதாரணமாக, குஜராத் மாநிலத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான ஒரு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இருந்தாலும், தற்போதுள்ள மின் தொடர் நெருக்கடியின் விளைவாக, அதிலிருந்து தற்போது 235 மெகாவாட் அளவிற்கே மின்சாரம் பெற இயலுகிறது. இதன் விளைவாக, மின் இருப்புக்கும், மின் தேவைக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் 17.2.2012 மற்றும் 23.2.2012 ஆகிய நாட்களில் நான் விரிவாக ஆய்வு நடத்தினேன். தமிழ்நாட்டில் தற்போது மின் தேவையின் அளவு 11,500 முதல் 12,500 மெகாவாட் என்று உள்ள நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் 8,500 மெகாவாட் என்ற அளவில் தான் உள்ளது. அதாவது, 3000 முதல் 4,000 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை உள்ளது.

எனவே, கிடைக்கப் பெறும் மின்சாரம் குறையும் போது, அறிவித்ததற்கும் மேலான மின்வெட்டு தவிர்க்க இயலாததாகிறது என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு முறையாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். தற்போதுள்ள இக்கட்டான மின் நிலைமையை சமாளிக்கும் வகையிலும், தொழில் துறையினர் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ள மின் விநியோக கட்டுப்பாட்டு முறைகளை 25.2.2012 அன்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள இந்த மின்வெட்டு காரணமாக, பொதுத் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும். ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும்.

இதே போன்று அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பள்ளிக்கூடங்களுக்கு தமிழக...
posted by thajulanam (yenbu ksa) [27 February 2012]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 17234

very good project thanks for tamilnadu goverment.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பள்ளிக்கூடங்களுக்கு தமிழக...
posted by OMER ANAS (DOHA QATAR.) [27 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17235

நீங்கள் ஓசியில் ஜெனரேட்டர் தருவீர்கள் சார்!
அதை ஓட்ட யார் டீசல் தருவா சார்?
நீங்க ஓசியில் அரிசி தருவீங்க சார்!
அதை பொங்க யார் தண்ணீர் தருவா சார்?
நீங்கள் ஓசியில் வாக்கு தருவீர்கள் சார்!
அதை எந்த அரசாங்கம் உண்மையில் நிறைவேற்றும் சார்?
இது போன்றதை குற்றம் என்று மக்கள் சொன்னா சார்,
எங்களுக்கு யாரு ஜாமீன் தருவா சார்?
இந்த உண்மையை நாங்கள் சொன்னா சார்,
எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் சார்?
அட போங்க சார்! நீங்கள் யார் சார்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பரீட்சைக்கு படிப்பது பள்ளிக்கூடத்தில் அல்ல அவரவர் வீடுகளில்தான்
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [27 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17237

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

என்னுடைய கருத்து அரசியல் அல்ல - எனக்கு அரசியல் விருப்பமுமல்ல.

முதலமைச்சர் அவர்கள் 10 ஆவது 12 ஆவது வகுப்பு மாணவ, மாணவியருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதால், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் , தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும் , ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உட்பட அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும் என்றும்

இதே போன்று அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக் கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும் என்றும் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பு கேட்பதற்கும் , பார்ப்பதற்கும் நல்லது போல் தெரிகிறது ஆனால் 10 % கூட பிரயோஜனம் இருக்காது.

-----------------------------------------

வீடுகளுக்கு மின்சாரம் தேவை

மாணவ , மாணவியர்கள் தேர்வு எழுதவதற்கு முன்பு படிக்க வேண்டுமே! பள்ளிகளில் பாடங்களெல்லாம் முடிந்து விட்டது, தேர்வுக்கு ஒரு வாரமே இருக்கின்றது. அவர்கள் எல்லாம் பாடங்களை திரும்பத் திரும்ப புரட்டிப் பார்த்து படிப்பதிலேதான் இரவு, பகலாக இருக்கின்றார்கள்.

பாடங்களை படிப்பது பள்ளிக்கூடத்தில் அல்ல அவரவர் வீடுகளில்தான் எனவே மின்சாரம் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுடைய வீட்டுக்கும் தேவை. ஆகையால் மாணவ , மாணவிகளுடைய தேர்வுக்கு பாதிப்பு வரக்கூடாது என்றால் அவசியம் தேர்வு நேரத்தில் வீடுகளுக்கு மின்சாரம் தேவை.

-------------------------------------------

மாணவர்களுக்கு மன உளைச்சல்

மேலும் இந்த வருடம் பள்ளிக்கூட ஆரம்பத்திலேயே நம் மாணவர்கள் சமச்சீர்க் கல்வி பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்கள். அந்த பாதிப்பு இன்னும் நீங்கவில்லை. அவைகளை ஒருவாறு சமாளித்து ஏதோ ஓரளவு படிக்கலாம் என்றால் தொடராக மின்சாரம் தடை பெற்றுக்கொண்டிருந்ததன் காரணமாக முடியவில்லை. அந்த மாணவர்களுக்கு மன உளைச்சல் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

----------------------------------------------

இது முறையாக நடக்க முடியாத காரியம்

சரி அதெல்லாம் போகட்டும் இப்பொழுது அரசாங்கம் செய்திருக்கிறபடி எல்லா பள்ளிகளுக்கும் ஜெனரேட்டர் கிடைக்கவா போகிறது நிச்சயமாக கிடைக்காது.

தேர்வுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன இந்த எட்டு நாட்களில் அரசு பள்ளி , தனியார் பள்ளி அப்புறம் ஜனரேட்டர் , டீசல் அது, இது என்று பல குழப்பங்கள் உண்டு , அதில் ஊழல்களும் உண்டு என்பதால் இது முறையாக நடக்க முடியாத காரியம்.

ஆகையால் ஜெனரேட்டர் வாடகைக்கு எடுப்பது, டீசல் செலவை அரசு ஏற்பது என்பது எல்லாவற்றையும் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு மின்சாரத்தை எந்த வகையிலாவது விநியோகித்தால்தான் அது அந்த மாணவ, மாணவியரின் படிப்புக்கு உதவியதாக இருக்கும் .

இதை அரசு செய்யுமா?.

எது எப்படியோ நம் அன்பு மாணவமணிகள் அனைவரும் நல்ல முறையில் தேர்வுகளை எழுதி அதிகமான மதிப்பெண்களை பெற்று தேர்ச்சிப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பள்ளிக்கூடங்களுக்கு தமிழக...
posted by ATC ABUBACKER (Dubai) [27 February 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17238

இது ஒரு நல்லதொரு முடிவு..

தேர்வுகாலத்தை கணக்கில் கொண்டு - தமிழக அரசு, பள்ளிக்கூடங்களுக்கு ஜெனரேட்டர் வழங்க முடிவு செய்துள்ளது..

அப்படியே வீடுகளுக்கும் ஒரு இன்வேர்ட்டர் கொடுத்தா இன்னும் நல்லா இருக்குமே... குழந்தைங்க படிப்பும் கெடாம... தேர்வு நல்லா முறையில எழுதுவாங்க..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பள்ளிக்கூடங்களுக்கு தமிழக...
posted by ஹாஜி (Riyadh) [27 February 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17239

நல்ல திட்டமாதானே இருக்கு !!!

இதே மாதிரி எல்லா வீடுகளுக்கும் ஜெனரேட்டரும் டீசலும் தமிழக அரசு கொடுத்தா நல்லா இருக்குமோ ??

மின்தட்டுப்பாடு சரியாகும்வரை போதுமே !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:பள்ளிக்கூடங்களுக்கு தமிழக...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [27 February 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17240

என்னங்க இது அநியாயமா தெரியலை? எந்த ஸ்கூலில் இருட்டானபிறகு பாடம் நடத்துறாங்க? அப்படியே நடந்தாலும் பெண்களுக்குமா நடக்குது? இது சரிவராதுங்க............ இப்படி செய்தா என்ன? பேசாம வினாத்தாளை கையிலேகொடுத்துட்டா???????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:பள்ளிக்கூடங்களுக்கு தமிழக...
posted by Vilack SMA (Heli , Kangxi .) [28 February 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 17246

தேவை அறிந்து செய்யும் அவசியமான உதவி . பாராட்டுக்கள்.

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பள்ளிக்கூடங்களுக்கு தமிழக...
posted by Fasi Ismail (Jiangmen, China) [28 February 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 17247

நீங்க ஒன்னும் எங்களுக்கு சும்மா ஒட்டுபோடலே ஒரு ஓட்டுக்கு 2000 விகிதம் வரை கொடுத்துதான் நாங்க ஆட்சியில் அமர்திருக்கிறோம் ஆதலால் நீங்கள் யாரும் வாய்திறக்க கூடாது.

நாங்கள் எதை கொண்டு வருகிறோமோ அதுதான் எங்கள் திட்டம். அதை நிரவேதினால் அதுதான் எங்களுடைய சட்டம். யாராவது இதை தவறு என்று முழங்கினால் அவர்களுக்குத்தான் நஷ்ட்டம்.

நாங்கள் என்ன செய்ய நாடிகிரோமோ அது எங்கள் இஷ்டம். மொத்தத்தில் நாங்கள் ஆட்சியில் அமர்திருபதில் ஒங்களுக்கு துரதிஷ்டம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஹலோ.... ஹலோ..... மைக் டெஸ்ட்டிங்.
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [28 February 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17253

காயல்பட்டினம் சவுண்ட் சர்விஸ் காக்காமார்களும் தூசி தட்டி...... ஒயில் செக்பண்ணி..... ஜெனரேட்டரை..... கழுதையை குதிரையாக்கி வைக்கவும். அம்மாவின் ஆடர் வரும்..... ஜெனரேட்டர் ஓடாட்டாலும் பரவா இல்லை. கமிசன் மீட்டர் கண்டிப்பா ஓடனும் சரியா?......... என்றால் டபுள் ஒகே.... எங்களுக்கு.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இரவில் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் மின்தடை ஏற்படுத்தவேண்டும்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [28 February 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17254

அஸ்ஸலாமு அழைக்கும்.

இந்த அரசு பதவிக்கு வருமுன் முந்தய அரசின் மின்பற்றா குறைகளை எவ்வாறு கூறியதோ அதே போன்று இன்றுவரை கூறிக்கொண்டு வருகிறது. மேலும் நாங்கள் ஆட்சி பொறுப்பில் வந்தால் இதை சரி செய்து வெளிச்சமான தமிழகமாக மாற்றிடுவோம் என்று மார்தட்டிவிட்டு இன்னும் பழைய ஆட்சியின் குறைகளை கூறி கொண்டு இருந்தால் மக்களின் நமிக்கை நீங்கி திறமை இல்லா கடந்த அரசை போன்று இவர்களும் திறமையற்று அவர்களை விட மிஞ்சி விட்டார்களே என்று நம்மிகைஇல்லா அரசாகிவிடும்.

N.S.E. மகமூது காக்கா அவர்களின் கருத்துகளை ஆமோதித்து மாணவர்களின் நிலை ஆரம்பத்தில் சமசீர் திட்டம் என்ற பழைய அரசின் செயல்த்திட்டத்தை ஈகோவால் அமுல்படுத்த காலதாமதம். இன்று தொடர் மின் வெட்டு. மாணவர்களின் நிலைமை பரிதாபம்.

அரசுக்கோர் அறிஉரை!

தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் [ அத்திய அவசியமான முருத்துவம், குடிதண்ணீர், பால் உற்பத்தி போன்றவைகளை தவிர] மாலை 6 மணிமுதல் இரவு 12 மணி வரை இந்த பரிட்சை காலத்திற்காவது மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு அதை அனைத்து இல்லங்களுக்கும் வழங்கினால் மாணவர்கள் தடை இல்லாமல் படிக்க முடியும்.மேலும் 12 மணிக்கு மேல் படிப்பதும் உடல் நலத்திற்கு நல்லதல்ல.மீண்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து சூரிய ஒளியில் படிப்பை தொடர்வார்கள்.

தொழிற்சாலைகளின் மின் துண்டிப்பு காலை இல்லாமல் மேலே குறிப்பிட்ட நேரத்தில் வைத்தும், நிறுவனங்களும் அவர்களின் வேலை மற்றும் உற்பத்திகளின் செயல் திட்டங்களை இதற்க்கு தகுந்தாற்போல் மாற்றி மின்சாரம் இல்லாத சமயங்களில் இயந்திர பராமரிப்பு, MANUAL PACKING, அடுத்த வேலைகளுக்கு தயார்படுத்துதல், மினசாரம் அவசியம் இல்லாத வேலைகளை மின்துண்டிப்பு நேரத்தில் செய்தால் அவர்களுக்கும் குறைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

மேலும் ஜெனரேட்டர்களை பள்ளிகளுக்கு கொடுப்பது பயனற்றது. அனைத்து மாணவர்களும் காலையில் சூரிய ஒளியிலும் இரவில் வீடுகளிலும் படிப்பதினால். அதை தேவைப்பட்டால் மிக அவசியமான தொழிற்சாலைகளுக்கு கொடுக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:பள்ளிக்கூடங்களுக்கு தமிழக...
posted by syedahmed (GZ,China) [28 February 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 17255

once our CM decided for the goodness , it should making implementation at fast effective morale that achieve surprisingly for us and our state would be fetch more beneficial schemes which only done by our honourable CM. Well appreciated.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:பள்ளிக்கூடங்களுக்கு தமிழக...
posted by SEYED ALI (ABUDHABI) [28 February 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17261

யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களை ஏமாற்றும் வெற்று அறிக்கைகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.காரணம் மக்கள்தான்.இது மாதிரி அறிக்கைகளை பக்கத்திலுள்ள மலையாளிகள் காணும்போது நம்மைதான் பேமானிகள் என்கிறார்கள்.வெட்கமில்லையா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved