Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:58:00 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8096
#KOTW8096
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 3, 2012
தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் மார்ச் 06ஆம் தேதி கடையடைப்பு! அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4544 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் தொடர் மின்வெட்டு செய்யப்படுவதைக் கண்டித்தும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி, கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும், வரும் 06ஆம் தேதியன்று ஒருநாள் அடையாள கடையடைப்பை நடத்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-

தொடர் மின்வெட்டு மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை் திறக்க வலியுறுத்தல் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த - நகர அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டம் 02.03.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் பழைய தொலைபேசி நிலைய வளாகத்திற்கருகிலுள்ள இல்லத்தில், முஸ்லிம் லீக் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



அதனைத் தொடர்ந்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் திருத்துவராஜ், நகர மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால், நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சுரேஷ், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம். சார்பில் எஸ்.அப்துல் வாஹித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ததஜ) சார்பில் சாளை முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா, சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் ஹாஜி எம்.என்.எல்.ரஃபீக் ஆகியோர், தொடர் மின்வெட்டு செய்யப்படுவதைக் கண்டித்தும், மின் உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் ஆலோசகர் ஆசிரியர் அப்துல் ரசாக் மற்றும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் துணைச் செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் தொடர் மின் வெட்டைக் கண்டிப்பதில் தமக்கு மாற்றுக் கருத்தில்லை என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோருவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து அச்சம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், கூட்ட தீர்மானங்களை மன்னர் பாதுல் அஸ்ஹப் பின்வருமாறு வாசித்தார்:-

தீர்மானம் 1 - தொடர் மின்வெட்டுக்குக் கண்டனம்:
காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக தினமும் சுமார் 10 மணிநேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இம்மின்தடையின் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. நேரம் துவங்க உள்ளதால் மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் கோடை காலம் துவங்கிவிட்டதால், முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இரவு நேர மின்வெட்டால் திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். தமிழக அரசு தினசரி 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதை காயல்பட்டினம் அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் மிகுந்த வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2 - அரசு அறிவித்த நேரப்படி மின்வெட்டு:
தமிழக அரசு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் வரும் 20 ம் தேதி முதல் 8 மணி நேர மின்வெட்டை குறைத்து 4 மணி நேரமாக மாற்றி புதிய மின்வெட்டு முறை அமலுக்கு வருகிறது என்று அறிவிப்பு செய்தும் தொடர்ந்து பழைய மின்வெட்டு முறைப்படியே 10 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது.

தற்போது நடைபெற உள்ள ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வைக் கருதி மாணவர்களின் படிப்பின் நலனை கருதியும், நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுவதை கருதியும் தமிழக அரசு உடனடியாக காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதிய மின்வெட்டு முறையான 4 மணி நேரத்தை அமுல்படுத்த வேண்டுகிறோம்.

தீர்மானம் 3 - கூடங்குளம் அணுமின் நிலையம்:
தமிழகத்தில் கடும் மின்வெட்டு தொடரும் வேளையில், கூடங்குளத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது தேவையற்றது. எனவே அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கி கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4 - அடையாள கடையடைப்பு:
காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தினசாp இரவு - பகல் பாராமல் சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதை மாற்றி, புதிய மின்வெட்டு முறை அறிவிப்பின் படி 4 மணி நேரம் மட்டும் அமுல்படுத்தக் கோரியும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க வலியுறுத்தியும் வருகிற 06-03-2012 செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள கடையடைப்பு நடத்துவது என காயல்பட்டினம் அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம், மற்றும் பொது நல அமைப்புகள் கலந்துகொண்டுள்ள இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.


இவ்வாறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
திராவிட முன்னேற்றக் கழகம் - திமுக,
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் - தேமுதிக,
இந்திய தேசிய காங்கிரஸ்,
பாரதீய ஜனதா கட்சி,

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
மனிதநேய மக்கள் கட்சி - மமக,
எஸ்.டி.பி.ஐ.
ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும்,

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு,
அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ததஜ,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் - தமுமுக,

காயல் நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை,
காயல்பட்டினம் கார், வேன் ஓட்டுநர் சங்கம்,
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் - சென்னை,
காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம்
ஆகிய பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by ummufathima (Saudi arabia) [03 March 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17420

அப்படியே DCW ஐ கண்டித்து ஓர் தீர்மானமும் போட்டிருக்கலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by Lebbai (Riyadh) [03 March 2012]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17426

தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு சரியே! இதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது.

ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் கடையடைப்பு என்றால், ஊரில் அனைவர்களும் இந்த அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக இருப்பது போல் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு மித்த ஆதரவு இருப்பதாக அறிய முடியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [03 March 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17427

இன்றைய தேவை , தடை இல்லா மின்சாரமே ... மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு தொடங்கி உள்ள , இந்த சூழலில், தொடர் மின் வெட்டால், மக்கள் படும் அவதி சொல்லி முடிவதில்லை .

இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கினால் மட்டுமே , மின் வெட்டு இல்லா, நிலை உண்டாகும் . தினந்தோறும் நம்மை சுற்றி இயற்கையான கதிரியக்கங்கள் நிகழ்துக்கொண்டே இருகிறதே ..நம் உடலில் , காற்றில் , மண்ணில் , பாறைகளில் ...என ஏராளம் . ஒருகிலோ நிலக்கரி சாம்பலில் மட்டுமே 2000 Bq கதிர் அளவு உள்ளதாக , Natural Background Radiation கூறுகிறதே .ஒரு வருடத்திற்கு சராசரியாக ஒரு மனிதன் 1 .5 மில்லி சிவ்வெர்ட் அளவிற்கு காமா கதிரியக்க தாக்குதலுக்கு ஆளாகிறான் என Natural Background Radiation கூறுகிறது .

அணு மின்நிலைய தேவைக்கும் - எதிர்ப்புக்கும் இடையில் நம்மக்கள் படும் பாடு , பாவத்திலும் பாவம் . ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு - மின்சாரம் தேவை ..

சிநேகமுடன்
K .V . A .T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில் ,
கே.வி .ஏ .டி . ஹபீப்
கத்தார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by SEYED ALI (ABUDHABI) [03 March 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17428

கூடங்குளம் பற்றி கட்டுரை மேடையில் ஒரு சகோதரர் ஒரு கட்டுரை எழுதிருந்தார்.அதை ஆதரித்து.அவர் எழுதியதில் ஒரு பகுதி நியாயமானதுதான்.அதாவது அணு உலை மின்சாரம் என்பது இதுவரை முழுமையான தன்னிறைவை தரவில்லை என்பது மட்டும்.

மற்றபடி பதினாலாயிரம் ரூபாயை விழுங்கி ஏப்பம் விடும் வரை சும்மா இருந்து விட்டு இப்போது வேண்டாம் என்கிறீர்களே ஏன்? புதிய மி திட்டங்களை உருவாக்குவதில் அக்கரையில்லாமை,இருக்கிற மின்திட்டங்களை பராமரிப்பதில் ஊழல் அக்கறை இன்மை என்று பல குற்றங்களை அடுக்கிருக்கிறார் கட்டுரையாளர்.

ஊழல் இன்று நேற்றல்ல, அது யார் ஆட்சிக்கு வந்தாலும் தொடர் கதைதான்,அதை வரவேற்றது,கள்ள வோட்டும் காசுக்கு ஓட்டும் இலவசங்களுக்கு ஓட்டும் போட்ட மக்கள்தானே.இதை எல்லாம் அப்போதே எதிர்த்து ஒரு கட்டுரை கூட வரவில்லையே ஏன்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அப்போ நம்ம ஊரு கூடங்குளம் அணுமின் நிலையத்தை வரவேற்கிறது?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [03 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17430

தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்தி என்ன பிரயோஜனம்? நமக்கு இப்போது தேவை தடை இல்லா மின்சாரமே அதற்க்கான ஆலோசனைகள் வழங்கும் இந்த http://www.onlinepj.com/unarvuweekly/thadayilla_minsaram_sathiyame/ கட்டுரையை நாம் முதலில் மனசு இருத்தி படித்து விட்டு சரி என்று நமக்கு தோன்றினால் இதை சேர்க்க வேண்டியவர்களிடத்தில் சேர்த்தால் அவர்கள் ஆலோசனை செய்யலாம் அல்லவா?

அப்புறம், கூடங்குளம் அணு மின் நிலையம் தீருமானம் இது கலங்கின தண்ணீரில் மீன் பிடிக்கிற மாதிரி இல்லே? தீருமானம் 3 னும், 4 லும் நன்றாக படித்தால் புரியும்.

சரி, எப்படியோ 2,3 நாட்களுக்கு முன்னாள் தான் தி மு க தலைவர் கருணாநிதி அவர்கள் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்டிருந்தார்கள். அதன் எதிரொலியோ இந்த கூட்டம் என்று நினைக்க தோன்றுகிறது. ஆளும் கட்சியின் சார்பில் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததது குறிப்பிட தக்கது.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by nizam (india) [04 March 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 17443

புற்றுநோய் பாதிப்பில் காயல்பட்டணம் அதிக பேரை பலிகொடுத்து அதன் விளைவாக அதற்கு காரணமான தொழிற்சாலையை கடுமையாக எதிர்க்கும் ஒரு காயலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது வருந்ததக்கது. விலையில்லாத மனித உயிரை குடிக்கபோகும் இந்த அனுவுலையை புறக்கணிப்போம். வேண்டும் என்றால் திரு நாராயணசாமி அவர்கள் புதுச்சேரியில் அமைத்து கொள்ளட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by mohmedyounus (trivandram) [04 March 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 17445

முன் யோசனை இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு. இஸ்லாமியர்களின் தாய் சபை என்று தன்னை என்று பெருமையோடு கூறிக்கொள்ளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போது கூட, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குஜராத்திலும், மும்பையிலும், கோயம்ப்புத்துரிலும் கொன்று குவிக்கப்பட்டு, சொத்துக்கள் சூறையாடப்பட்டு சின்ன பின்னமாய் சமுதாயம் ஆக்கப்பட்ட சமயங்களில் கூட, இந்த மாதிரியான "கடை அடைப்பு" நடத்தவில்லை. "கடை அடைப்பு நடத்தியவர்களை கூட, நீங்கள் அயோத்யா சென்று பள்ளி கேட்ட தயாரா? என்று நக்கல், நய்யாண்டி கூட செய்தது. ஏன் இப்போது நாங்கள் கேட்கிறோம்? "நீங்கள் கூடங்குளத்திற்கு கூட்டமாய் சென்று அதை திறக்க வேண்டியதுதானே?. நாம் நாளை நடத்த இருக்கும் "D.C.W" ஆலை எதிர்ப்பு போராட்டத்திற்கு நம்மை சுற்றியுள்ள மீனவர்களின் ஆதரவை எந்த முகத்தோடு சென்று கேட்பீர்கள்?

நமக்கு ஒரு நீதி, அவர்களுக்கு வருவது ஒரு நீதியா? நம்மக்கு D.C.W ஆலையினால் வருவது "புற்று நோய் என்றால், கூடன்குலத்து ஆலையினால் அவர்களுக்கு வருவது " வெறும் தும்மலா? . இருவர்களின் கோரிக்கையும் ஒன்று தானே.!



Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [04 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17446

வரவேற்க தக்க தீர்மானங்கள். வாழ்த்துக்கள்

அதே நேரம் கடையடைப்பு என்ற மார்க்ஸிய சிந்தனை நமக்கு தேவையா? பொதுமக்கள், மாணவர்கள் வியாபாரிகள், மற்றும் அனைவருக்கும் இது தீமை விளைவிக்க கூடியதே!

மற்றவர்கள் செய்கிறார்கள் என இந்த ஆயுதத்தை கையில் எடுத்திருப்பது அறிவுடமையாக தெரிய வில்லை. பாதிக்க படுபவர்கள் கஷ்டப்பட்ட பாமர மக்களே,

முன்னமே அத்தியாவசிய தேவைகளை தயார் செய்து வைக்க நடுத்தர வாதிகளான நம்மவர்களுக்கே இன்னும் முற்போக்கு சிந்தனை இல்லை என்பதனை ரேஷன் கார்ட் கால நீடிப்பில் இவ்வளவு நாட்கள் கொடுத்ததும் இன்னும் நம்மில் பலபேர் கால நீடிப்பு செய்ய வில்லை என்பதன் மூலம் அறியலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. எப்படியாச்சும் எங்களுக்கு CURRENT வேணும்...
posted by SHIREEN & NIHARA (Kayalpatnam) [04 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17451

CURRENT வேணும்.... CURRENT வேணும்......
எங்களுக்கு CURRENT வேணும்.....
வீட்ல ரொம்ப வேர்க்குது...
பரீட்சைக்கு படிக்க முடியல....
TV பார்க்க முடியல....
உயிருக்கு ஆபத்து இல்லாம எங்களுக்கு CURRENT வேணும்.....

ஷிரீன் & நிஹாரா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by A.Lukman (kayalpatnam) [04 March 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 17453

ஒரு நாள் அடையாள கடையடைப்பு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையும் சேர்ந்து நடத்துவதாக இன்று நோட்டீஸ் போடப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சியின் அழைப்பின் பெயரில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் ஊரின் ஒட்டு மொத்த ஜமாத்தின் கூட்டமைப்பான ஐக்கிய பேரவை எல்லா ஜமாத்துக்களின் ஆலோசனையை கேட்காமல் எப்படி கடை அடைப்பிற்கு அழைப்பு விடலாம்?

இந்த முடிவை ஒட்டுமொத்த ஜமாத்தும் ஆதரிக்குமா?
இது கண்டனத்திற்கு உரிய செயல்.

A .லுக்மான்
கோமான் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by Zainul Abdeen (Dubai) [05 March 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17455

ஐக்கிய பேரவையின் செயலாளர் மற்றும் மூத்த உறுபினர்கள் இந்த கூடத்தில் கலந்துள்ளனரே இன்னும் ஐக்கிய பேரவையை யாரும் சாடவில்லேயே என்று எண்ணும் நேரத்தில் வந்தது ஒன்றாம் வார்டு உறுப்பினரின் துவக்க கருத்து.

இந்த முடிவை ஒட்டுமொத்த ஜமாத்தும் ஆதரிக்குமா? .. இதுதான் அவருடைய ஆதங்கம். எப்படி ஒட்டுமொத்த ஜமாத்தும் ஆதரிக்கும் எப்போ இந்த மாதிரி நடந்திருக்கு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஐக்கிய பேரவையின் தனிச்சையான இந்த முடிவை ஒட்டுமொத்த ஜமாத்தும் ஏற்குமா..? ஐக்கிய பேரவை என்ன... அது ஒரு தனி அமைப்பா...?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.. (புது பள்ளி ஜமாஅத் ) [05 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17456

சகோதரர் லுக்குமான் அவர்களின் கருத்து பதிவை நான் வரவேற்கிறேன்... அதையே நானும் பதிவு செய்கிறேன்...!

ஒரு அரசியல் கட்சியின் அழைப்பின் பெயரில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் ஊரின் அணைத்து ஜமாத்தின் கூட்டமைப்பான ஐக்கிய பேரவை எல்லா ஜமாத்துக்களின் ஆலோசனையை கருத்துக்களை கேட்காமல் தனிச்சையாக எப்படி கடை அடைப்பிற்கு அழைப்பு விடலாம்?

ஐக்கிய பேரவையின் தனிச்சையான இந்த முடிவை ஒட்டுமொத்த ஜமாத்தும் ஏற்குமா..? ஐக்கிய பேரவை என்ன... அது ஒரு தனி அமைப்பா...? இந்த தனிச்சையான செயல் மிகவும் கண்டனத்துக்குரியது..!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்..
புது பள்ளி ஜமாஅத்
உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by Shahul Hameed (Hong Kong) [05 March 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 17459

அப்படி ஒரு வேலை எல்லா ஜமாத்தும் ஆதரித்தாலும் அனைத்து மக்களின் ஆதரவு உள்ளதா? என்ற கேள்வி எழும். இப்படியாக போனால் இன்னொரு தேர்தல் நடத்ட வேண்டியது வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by VSM.HASSAN (DUBAI) [05 March 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17460

மின்வெட்டை கண்டித்து பந்த். இதை எல்லோர்களும் வரவேற்க்கத்தான் செய்வார்கள். ஐக்கியபேரவை ஒவ்வரு விசயத்திற்கும் எல்லோர்களையும் கலந்துதான் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. நல்லது செய்யும்போது ஆதரவுகொடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [05 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17471

ஏதோ மின் பற்றாக்குறையின் பின்னணியில் கூடங்குளம் அணு மின் நிலையம் இருப்பதைப் போலவும் அதை திறந்தால் மட்டும் எல்லா பிரச்சினைகளும் சரியாகப்போய்விடும் என்பதைப்போலவும் இன்றைய மின்வெட்டை அணுகுவது சரியான பார்வை அல்ல. காங்கிரசின் கூட்டணி கட்சி என்பதாலும் கருணாநிதி அணு மின் உலையை ஆதரிப்பதாலும் முஸ்லிம் லீக் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

D C W தாரங்க தாரா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் வேதியல் பொருட்களினால் நமதூரில் நிறைய பேருக்கு "கேன்செர்:நோய் எற்ப்படுவதால் அதன் இருப்பே நமக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அந்த தொழிற்சாலைக்கு எதிராக நம்மில் பல சமூக ஆர்வம் மிக்க இளைய நண்பர்கள் போராடிக்கொண்டிருக்கும்போது அதே போன்ற அழிவையும் இன்னும் சொல்லப்போனால் அதற்கும் மேலான அழிவையும் தரக்கூடிய கூடங்குளம் அணு மின் உலையை ஆதரிப்பது மோசமானது.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது வெறும் தீர்மானங்களை போட்டு களைவது ஒரு சமுதாய இயக்கம் என்று சொல்லி கொள்வோருடைய வேலை அல்ல.

தீர்மானம் எண் மூன்றை அவர்கள் வாபஸ் பெறவேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by MAHMOOD HASAN(mammaash) (QATAR) [05 March 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 17477

அனுமின்னிலயதால் மின் பற்றாக்குறை எந்த மாற்றமும் பெற போவதில்லை, மாறாக சுகாதாரக் கேடுதான். மின் பற்றாக்குறைக்கு தீர்வு மாற்று வழி காண போராடலாம்...! அணு மினிலயதிர்காக நாம் குரல் கொடுப்பது தேவையற்ற ஒன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by SHAMS Kayal PFI (Kayalpattinam) [05 March 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 17481

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 8 மணிநேரம் மின்சார தடை நீடிக்கிறது.

பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு இவற்றால் அவதியுறும் மக்கள் மின்சார தடையினால் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

மாணவர்களுக்கு இரவு நேரங்களில் படிக்க இயலவில்லை. தொழிற்சாலை தொழிலாளர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் மின்சார அலுவலகங்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், அரசு மெளனம் சாதித்து வருகிறது. இதற்கு காரணம், தமிழகத்திற்கு உடனடி மின்சார தேவைக்கும், கூடங்குளம் அணு மின் நிலையம்தான் ஒரே தீர்வு என்பதை மக்களுக்கு புரிய வைக்க இவ்வாறு தமிழக அரசு நாடகமாடுவதாக கூறுகிறார்கள்.

வெளிமாநிலத்தில் இருந்து வாங்கும் மின்சாரத்தையும் தமிழக அரசு நிறுத்திவிட்டது. மக்களை வாட்டி எடுத்து அவர்களின் கோபத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது திருப்பத்தான் தமிழக அரசு திட்டம் ஆகும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்க கூடாது என்பதில் SDPI மற்றும் Popular front of India இன்னும் நிறைய கட்சிகள் இதில் உறுதியாக இருக்கிறது,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இதில் என்ன தவறு?  (3/3/2012) [Views - 9142; Comments - 83]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved