Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:33:40 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8172
#KOTW8172
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 19, 2012
நகரில் தூய்மைப் பணி செய்த திருச்செந்தூர் ஐடிஐ என்எஸ்எஸ் மாணவர்களுக்கு, கடற்கரை பயனாளிகள் சங்கம் பாராட்டு - வழியனுப்பு விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3099 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த ஒரு வார காலமாக காயல்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணி செய்த, திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் வழியனுப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-

திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் அமைந்திருக்கும் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், “தூய்மைப் பணியில் இளைஞர்கள் - YOUTH FOR CLEANLINESS“ என்ற முழக்கத்தை முன்வைத்து, 12.03.2012 முதல் 18.03.2012 வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

துவக்க நாளான 12.03.2012 அன்று காயல்பட்டினம் கோமான் தெருவில் நடைபெற்ற துவக்கவிழாவுடன் தூய்மைப் பணியைத் துவக்கிய இக்குழுவினர், கோமான் தெரு சுற்றுப்புறப் பகுதிகள், மகுதூம் பள்ளி மையவாடி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில், தூய்மைப் பணியில் இறங்கி, அப்பகுதிகளிலுள்ள முட்புதர்கள், தேவையற்ற மணற்பரப்புகள், குப்பை - கூளங்களை அகற்றி, பல இடங்களில் மரங்களை நட்டு நீர் பாய்ச்சினர்.

மகுதூம் பள்ளி மையவாடியில் மாணவர்கள் தூய்மைப் பணியிலீடுபட்டிருந்த காட்சிகள்:-





காயல்பட்டினம் கடற்கரை வளாகத்தைத் தூய்மைப்படுத்தியமைக்காக, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில், முகாம் நிறைவு நாளான 18.03.2012 அன்று மாலை 05.00 மணியளவில், திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி மைய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களையும், அவர்களை நெறிப்படுத்திய திட்ட அலுவலர்களையும் பாராட்டும் நோக்குடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க தலைவர் ஓ.ஏ.சி.நஸீர் அஹ்மத் தலைமை தாங்கினார். அதன் துணைத்தலைவர்களான எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், பொருளாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் மற்றும் திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் க.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சித் தலைவர் ஓ.ஏ.சி.நஸீர் அஹ்மத் வரவேற்புரையாற்றினார். கடற்கரை பயனாளிகள் சங்கம் துவங்கப்பட்டதற்கான நோக்கம், அதன் செயல்திட்டங்கள், அண்மையில் அது செய்து வரும் பணிகளை அவர் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.



பின்னர், திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ.எடின்பர்ட்டி ராயன் உரையாற்றினார்.



தம் பயிற்சி மையத்தின் முதல்வர் முருகன் ஒப்புதலின் பேரில், காயல்பட்டினத்தில் கடந்த ஒரு வார காலமாக தூய்மைப்பணி செய்யப்பட்டு வந்ததாகத் தெரிவித்த அவர், இடையில் சில தினங்கள் மழை பெய்த காரணத்தால், தூய்மைப்பணி செய்ய திட்டமிடப்பட்டிருந்த ரெட் ஸ்டார் சங்க வளாகம், தாயிம்பள்ளி மையவாடி, ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி மையவாடி, குருவித்துறைப் பள்ளி மையவாடி உள்ளிட்ட நகரின் இதர பகுதிகளில் தூய்மைப்பணி செய்யவியலாமற்போனதாக தெரிவித்தார்.

இந்த முகாமின்போது, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து தந்தமைக்காக காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான், கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் தூய்மைப் பணியின்போது ஒத்துழைப்பளித்த அந்தந்த பகுதி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு அவர் தனதுரையில் நன்றி தெரிவித்தார்.

பின்னர், தூய்மைப்பணியிலீடுபட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் சான்றிதழ்களும், அன்பளிப்புப் பொருட்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா துவக்கமாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புப் பொருட்களை வழங்கினார்.



அவரைத் தொடர்ந்து, நகரின் பொதுநல ஆர்வலர்களான லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புப் பொருட்களை வழங்கினர்.







பின்னர், திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களான ஏ.என்பர்ட்டி ராயன், க.முருகேசன் ஆகியோருக்கு, கடற்கரை பயனாளிகள் சங்க தலைவர் ஓ.ஏ.சி.நஸீர் அஹ்மத் அன்பளிப்பு பொருட்களை வழங்கினார்.



பின்னர், கடற்கரையில் தூய்மைப் பணி செய்ததைப் பாராட்டி, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு, நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சால்வை அளித்து பாராட்டினார்.



நிறைவாக, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.



இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், ஏ.ஏ.அஜ்வாத், இ.எம்.சாமி மற்றும் நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.













நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் ஹாஜி எல்.எம்.இ.கைலானீ ஒருங்கிணைப்பில், நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், எல்.டி.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எல்.டி.சித்தீக் ஆகியோர் அன்பளிப்புப் பொருட்களுக்கு அனுசரணையளித்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகரில் தூய்மைப் பணி செய்த...
posted by Kader K.M (Dubai) [19 March 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17752

சுத்தம் சுகம் தரும்! நம் ஊர்மக்கள் சுகமாக வாழ சேவை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்!

தொடரட்டும் உங்கள்சேவை! வாழ்க வளமுடன்! நாமும் இச்சேவையில் நம்மையும் ஈடுபடுத்திக்கொள்ள முற்படுவோம்! வஸ்ஸலாம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகரில் தூய்மைப் பணி செய்த...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH - K.S.A.) [19 March 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17757

Great Job , welldone boys .......

தயவு செய்து குப்பைகள் போடா குப்பை தொட்டிகள் நாலா புறமும் வைக்கவும்.... இதை கண்டிப்பாக நடைமுறை படுத்தவும்...

கஞ்சி , சால வடை, கடைகளை அப்புறபடுத்தி , அல்லது தனி இடவசதி பண்ணி கொடுக்கவும்... இப்படி செய்தால் கடற்கரை கொஞ்ச காலத்துக்காவது சுத்தமாக இருக்கும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகரில் தூய்மைப் பணி செய்த...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [19 March 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 17762

பாராட்டு விழா ஓகே தான் . இனி நாம் பராமரி கிரதில்தான் இருக்கு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகரில் தூய்மைப் பணி செய்த...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [19 March 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17767

அஸ்ஸலாமு அலைக்கும்.

நிச்சயம் நமதூர் மக்கள் யாவர்களும் இவ்வளவு நல்ல மனதுடன் செயல் பட்ட இந்த பிள்ளைகளை பாராட்ட தான் வேண்டும் . நமது ஊர் பஞ்சாயத்து நிர்வாகம் முழு கவனம் செலுத்தி நம் கடற்கரையை தூய்மையாக வைக்க உதவ வேண்டும்.+ நம் மக்களும் துணை போக வேனும்.

மாலை நேர கஞ்சி / வாடா .விற்பனை செய்ய கூடிய நம் பெண்களை கொஞ்சம் கடற்கரையை தூய்மையாக வைக்க உதவ சொல்லவும் .

ஆமா எங்கள் அருமை நண்பர் ஹாஜி .கைலானி அவர்களை ரொம்ப நாளைக்கு பிறகு இப்போது பார்பதில் மகிழ்சியாக உள்ளது. பொதுவாக இவர் எல்லாம் நம் ஊர் பொது காரியங்களில் முழு மனதோடு நல்ல முறையில் செயல் படக்கூடியவர்களில் ஓருவர். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved