Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:09:21 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8177
#KOTW8177
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 20, 2012
சவுக்கு தோட்டத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4015 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஒடக்கரை கடற்கரை சவுக்கு தோட்டத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் வீரபாகு. இவரது மகன் வீரமணி(17). தந்தையுடன் இணைந்து ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வீரமணி தனது தம்பி பாலமுருகனுடன் ஆடு மேய்க்க ஓடக்கரை பகுதிககு சென்றார். வீரமணி ஓரிடத்திலும், பாலமுருகன் ஓரிடத்திலும் ஆடு மேய்த்தனர்.

இந்நிலையில் வெகு நேரமாகியும் வீரமணி வீட்டிற்கு பேசாததால் அவனை தேடி தந்தை வீரபாகு சென்றார். அப்போது ஒடக்கரை பகுதியில் கடற்கரைக்கு அருகில் உள்ள சவுக்கு தோட்டத்திற்குள் வீரமணி கத்தியால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகண்டு அதிர்ச்சியடைந்த வீரபாகு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ராஜகுமாரி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பெண்கள் கடற்கரை நடைபயிற்சியை தவிர்ப்பது நல்லது
posted by V D SADAK THAMBY (China) [20 March 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 17774

நம் பெண்கள் காலை நேரத்தில் நடை பயிற்சிக்காக கடற்கரையில் வெகுதூரம் செல்கின்றனர். அதிலும் பெண்கள் தனியாகவோ அல்லது ஒரிருவராகவோ கடல் ஓரமாக தெற்கு - வடக்காக அதிகதூரம் நடைபயிற்சி செல்வதை பல நேரங்களில் காண முடிகிறது.

இது பாதுகாப்பற்றது. இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.இந்த செய்தி நம் பெண்களில் எத்தனை பேரை சென்றடைகிறது என தெரியவில்லை. ஆண்கள்தான் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சவுக்கு தோட்டத்தில் வாலிப...
posted by Zubair Rahman-AB. (Doha-Qatar) [20 March 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17779

சதக் அவர்களின் பதிவு சரியானதே. இதனைப்பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் பெண்கள் மத்தியில் ஏற்ப்படுத்த வேண்டும் . நடைப்பயிற்சி என்கிற பெயரில் ஊரின் எல்லையைக் கடந்து மிக தூரம் செல்வதை நான் பலதடவைகளில் பார்த்திருக்கிறேன்.

மிக நீண்ட தூர நடைப்பயிற்சி செல்லவேண்டுமெனில் நமதூரின் ஒருமுனையிலிருந்து மறுமுனைவரை நடந்தாலே போதுமானது,

இதனை மனதிற்கொண்டு தயவுசெய்து பெண்கள் நடைப்பயிற்சி என்கிற பெயரில் ஊரின் உள் எல்லையை சுற்றிவந்தாலே போதுமானதுதான்.

இது பற்றிய விழிப்புணர்வை எல்லா அமைப்புகளும் அவரவர் தம் பகுதிகளில் மக்கள் மத்தியில்"குறிப்பாக நம் தாய்மார்கள்"மத்தியில் ஏற்ப்படுத்த வேண்டும் என்பது என் அவா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சவுக்கு தோட்டத்தில் வாலிப...
posted by T,M,RAHMATHHULLAH (73) (KAYALPATNAM 04639 280852) [21 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17780

1. Re:பெண்கள் கடற்கரை நடைபயிற்சியை தவிர்ப்பது நல்லது சரியான யோசனை-தேங்க்ஸ் 4 காப்பி பேஸ்ட்.
---------------------------------------------------
நம் பெண்கள் காலை நேரத்தில் நடை பயிற்சிக்காக கடற்கரையில் வெகுதூரம் செல்கின்றனர். அதிலும் பெண்கள் தனியாகவோ அல்லது ஒரிருவராகவோ கடல் ஓரமாக தெற்கு - வடக்காக அதிகதூரம் நடைபயிற்சி செல்வதை பல நேரங்களில் காண முடிகிறது.

இது பாதுகாப்பற்றது. இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.இந்த செய்தி நம் பெண்களில் எத்தனை பேரை சென்றடைகிறது என தெரியவில்லை. ஆண்கள்தான் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

posted by V D SADAK THAMBY (China) [Tuesday, March 20, 2012] IP: 119.*.*.* China | Comment Reference Number: 17774
-------------------------------------------------
மேலும் இந்த செய்தியை பிரின்ட் எடுத்து ஜெராக்ஸ் பத்து பதினைந்து காப்பி என்லார்ஜமண்டில் ஒன த்ரீ பேப்பெரில் எடுத்து எல்லா பொது ஸ்தாபனத்துக்கும் போட்டு விட்டால் மெத்த பிரயோஜனம். செலவுக்கு? இன்ஷா அல்லாஹ் நாமும் ஒரு பங்கு தரலாம்.

TMR/ CELL 80852


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சவுக்கு தோட்டத்தில் வாலிப...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [21 March 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 17781

சதக் காக்கா அவர்களின் கருத்தை கண்டிப்பாக ஆலோசித்து நடப்பது நம் யாவருக்கும் ( பெண்கள் ) மிக நலம். வரும் முன் காபோம். சதக் காக்கா அவர்களுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:சவுக்கு தோட்டத்தில் வாலிப...
posted by kithuru mohamed abbas (Dammam) [22 March 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17802

அஸ்ஸலாமு அழைக்கும் நமது காயல் சகோதரர் சதக் அவர்களின் கருத்தை கண்டிப்பாக ஆலோசித்து நமது எல்லா ஜமாத்துக்கும் .கடற்கடையிலும் இந்த கருத்தை போட்டோகோபி எடுத்து அங்கு வாக்கிங் செல்லும் பெண்களுக்கும் கொடுத்தால் நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சவுக்கு தோட்டத்தில் வாலிப...
posted by mackie noohuthambi (colombo) [22 March 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17811

உடனடியாக ஜும்மாஹ் பிரசங்கங்களில் இந்த செய்தியை அறிவிக்க ஏற்பாடுகள் செய்யுங்கள். 1000 நோடீஸ் அடித்து வீடு வீடாக கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். பொது நல தொண்டு நிறுவனங்கள் இதை செய்யுங்கள். பள்ளிவாசல்களில் கொடுத்தால் கை துடைக்க பொய் விடும். பெண்களிடம் செய்தி போயி சேராது. இதற்கான தொகையை மருமகன் ஸாலிஹ் அவர்கள் என் வீட்டிலேயே சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லா நம் தாய்க்குலங்களை இந்த முசீபத்திலிருந்து பாதுகாப்பானாக.

மக்கிநூஹுதம்பி
0094775131287


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. குற்றமற்ற காயல் மாநகரை உருவாக்குவோம்..............
posted by Shameemul Islam SKS (Chennai) [23 March 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 17829

அவசர காலத்தில் இதுவெல்லாம் சகஜம் தான் என்பது போல நமதூரில் கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவதைப் பற்றியும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் சிந்திக்காமல் அனைவரும் ஒரே விதமாக பெண்கள் பாதுகாப்பு பற்றித் தான் பதிவு செய்துள்ளார்கள். காலையின் வசந்தக் காற்றில் கடற்கரை ஓரமாக நடை சென்று உடலை கட்டுப்பாடாக வைக்க விரும்பும் தாய்மார்களுக்கு இது ஒரு கசப்பான கருத்தாகவே இருக்கும்.

எங்கு பார்த்தாலும் குற்றங்கள். குற்றவாளிகளை கண்காணிக்க கண்காணிப்பு காமிராக்கள் என நாட்டு நிர்வாகம் சிந்திப்பதைப் போல நாமும் உடனுக்குடன் பாதுகாப்பு பற்றி கவலையுற முனைகிறோம். அமைதியான சூழலுக்கு உள்ள தடைகளைக் களைந்து குற்றமற்ற ஊர் காயல்பட்டணம் என்பதை உருவாக்க முயற்சிப்பதே சரியாக இருக்கும்.

தீமைகளின் ஊற்றுக் கண்களை முதலில் அழிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பின் வரவுள்ள ஒரு காலத்தை நினைவு படுத்தினார்களே ஞாபகம் இருக்குதா. சன்ஆ முதல் ஹதரமௌத் (யமன்) வரை ஒரு பெண் தன்னந் தனியாக பயணிப்பாள். இறை அச்சத்தைத் தவிர வேறெந்த பயமும் அப்போது அவளுக்கு இருக்காது என்றார்களே.

அதற்குத்தேவை சிறந்த சமூகம் உருவாக சில அர்ப்பணிப்புகள் ;
சில தியாகங்கள். அவ்வளவு தான். அந்த தியாகத்தின் நடுவே நின்றுகொண்டு நபி இடம் இறைவனைப் பிரார்த்திக்க வினவிய ஒரு நபித்தோழருக்குப் பகர்ந்த ஆறுதல் வார்த்தைகள் தாம் இவை. எனவே கொலைகளைத் தடுப்போம். அவை உருவாகக் காரணமான விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்வோம். குற்றமற்ற காயல் மாநகரை உருவாக்குவோம். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:சவுக்கு தோட்டத்தில் வாலிப...
posted by mackie noohuthambi (colombo) [23 March 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17846

ஷமீம் என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள், உங்கள் தந்தயய்போல் தம்பியை போல் களத்தில் இறங்கி செயல்பட உங்களுக்கு வயது போதாதா அனுபவம் போதாதா, பொருளாதார வசதி போதாதா?மாற்று யோசனைகளை யாரும் சொல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்.

மடிக்கணினியும் அலைபேசியும் தொல்லைகள் என்று பேசுகிறோம் அவை அல்லாஹ்வின் ரஹ்மத், நியுமத் என்று எடுத்துக்கொண்டு அதை நல்ல வழியில் பயன்படுத்துவதற்கு யோசனை சொல்லிதாருங்கள்.

சாதாரணமாக காயல்பட்டினதிளிருந்து ஆருமுகநேரிக்கு போகவே பயமாக இருக்கிற நேரத்தில் ஹதர மௌத் வரை எப்படி செல்ல? நபிகள் நாயகம் சொன்ன வழியில் முஸ்லிம்களே நடக்க வில்லையே, கொலை, கொள்ளை, குடி, போதைவஸ்து கடத்தல் என்ற தொழில்களில் முஸ்லிம்களே ஈடு பட்டுக்கொண்டிருக்கிரார்களே, இந்த சமுதாயத்தின் இழி நிலை பார்த்தீர்களா, நெஞ்சி பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று வசனம் பேசியவர்கள், பூசாரியை தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக கோயிலிலே குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக என்று பேசியவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

ம ங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது. என்பதுபோல் நாட்டில் உள்ள தலைவர்களே கொள்ளையர்களாக, கொலைகாரர்களாக மாரிவிட்டிருகிரார்களே,

அல்லாஹ்விடம் நமது கோரிக்கைகளை வைப்போம் கூடியவரை குரான் ஹதீத்களில் சொன்னபடி நம் வாழ்கையை அமைத்துக்கொள்ள முயற்சிப்போம். மக்கள் மத்தியில் அடிக்கடி விழிப்புணர்ச்சி கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யுங்கள். அதுவும் ஒற்றுமை உணர்வுகளை வளர்ப்பதற்கு, பேதங்களை மறந்து செயல்படுவதற்கு. மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved