Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:22:04 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9286
#KOTW9286
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 3, 2012
ஒரு வீட்டிற்கு ஒரு காஸ் சிலிண்டர் இணைப்புதான்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3888 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒரு வீட்டிற்கு ஒரு காஸ் சிலிண்டர் இணைப்புதான் என்ற விதிமுறையை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளவர்கள் - வரும் அக்டோபர் 31 க்குள் தங்கள் கூடுதல் இணைப்பை திரும்பி வழங்கவேண்டும். அவ்வாறு வழங்காதபட்சத்தில் - அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படும் என பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு காஸ் சிலிண்டர் பெற விரும்புபவர்கள் - முறையாக Double Bottle Connection (DBC) திட்டம் மூலம் விண்ணப்பித்து இரண்டாம் சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஒரு சந்தாதாரராகவே கணக்கிடப்பட்டு, ஒரு இணைப்புக்கு - தற்போது வரைமுறைபடுத்தப்பட்ட அளவிற்கு - மானியம் வழங்கப்படும்.

இந்தியாவில் மூன்று அரசு நிறுவனங்கள் (INDIAN OIL CORPORATION, BHARAT PETROLEUM, HINDUSTAN PETROLEUM) காஸ் இணைப்புகளை வழங்குகின்றன. சந்தாதாரர் விபரங்கள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டதால் - ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு வைத்துள்ளவர் விபரத்தை எளிதாக கண்டுபிடித்து விடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசு - ஒவ்வொரு காஸ் சிலிண்டருக்கும் மானியமாக சுமார் 350 ரூபாய் வழங்குகிறது. இந்தியாவில் மொத்தம் 12.5 கோடி இணைப்புகள் உள்ளன. இந்த வகை மானியமாக மட்டும் - மத்திய அரசு, ஆண்டுக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. மானிய வகை செலவை குறைக்கும் நோக்கில் - இந்திய அரசு, ஆண்டுக்கு 6 முறை மட்டுமே - மானியத்துடன் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆறுக்கும் கூடுதலாக காஸ் சிலிண்டர் பெற விரும்புவோர், மானியம் நீக்கி சந்தை விலையில் கூடுதல் சிலிண்டர் பெற வேண்டும். செப்டம்பர் 14 முதல் இந்த வழிமுறை அமலுக்கு வந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் மீதியுள்ள ஆறு மாதத்தில் 3 முறை தான் மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. எத்தனை முறை மானிய சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் - காஸ் சிலிண்டர் வழங்கும்போது, ரசீதில் அச்சடித்து (1/3, 2/3, 3/3, 1/6, 2/6, 3/6, 4/6, 5/6, 6/6) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சந்தாதாரரிடமும் DOMESTIC GAS CONSUMER CARD (DGCC) எனப்படும் நீல வர்ண புத்தகம் இருக்கும். அதில் உள்ள சந்தாதாரருக்கான பிரத்தியேக வரிசை எண்ணும், ரசீதில் உள்ள வரிசை எண்ணும் சமமாக உள்ளதா என காஸ் சிலிண்டர் பெறும்போது சரிபார்த்துகொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மானியம் இல்லாத சிலிண்டர் விலை (14.2 kg) சுமார் 750 ரூபாய் என செப்டம்பர் இறுதி வரை இருந்தது. அக்டோபர் 1 முதல் அது சுமார் 880 ரூபாய் என உயர்ந்துள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டரின் விலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [03 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22580

மானியம் இலவசம் விலையில்லாதது என்று எப்படி எல்லாமோ பெயர் வைத்து மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்கான யுக்திகளை கையாண்ட மத்திய மாநில அரசுகள் இப்போது அவற்றை வழங்கினால் ஆட்சி செய்ய முடியாது என்று புரிந்துகொண்டார்கள். மக்களும் அவற்றை எதிர்கொள்ள பழகி கொள்ள வேண்டும். கடையில் சீனி அரிசி, காய்கறி எல்லாம் விலை கொடுத்து வாங்குவதுபோல் சமையல் எரி வாயும் வாங்க வேண்டும்.அரசாங்கம் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் வெளி மார்கெட்டில் கிடைத்தால் எப்போதும் பிரச்சினை வராது.

இலங்கையில் ஒருநாள் நான் தங்கும் இடத்தில் சுபுஹு தொழுதுவிட்டு வந்து தேயிலை போட்டுக்கொண்டிருந்தேன். பால் மாவை போட்டவுடன் எரிவாயு தீர்ந்து விட்டது. மனம் படக்கென்றது. பக்கத்தில் இருந்தவரை கேட்டேன். ஒன்னும் யோசிக்காதீர்கள். ஐந்து நிமிடத்தில் காஸ் வந்து விடும் என்று ஒரு நம்பருக்கு பேசினார். என்ன ஆச்சரியம், காலை வேலை 6 மணி இருக்கும். எங்கிருந்தோ ஒருவர் வந்து கேஸ் மாட்டிவிட்டு பணம் வாங்கிகொண்டு போய்விட்டார். நமதூரில் நினைத்து பார்க்க முடியுமா? எத்தனை கேள்விகள், எத்தனை ஆதாரங்கள் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும். இதற்கு காரணம் வேறொன்றுமில்லை. மானியம் இலவசம் என்ற பேச்சு இல்லை. கையிலே காசு வாயிலே தோசை என்பார்களே அப்படிதான் இதுவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நீங்கள் எந்த நேரமும் எதையும் செய்வீர்கள்... அந்நேரம் அது உங்கள் ஆதிக்கமே...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [03 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22582

முதல்ல உருபடியா இருக்கிற இணைப்புக்கு தட்டுபாடு இல்லாமல் எரிவாய்வு பதிவு செய்த 20 நாட்களில் விநியோகம் செய்தாலே போதும்...

இலவசம்... இலவசம்... இலவசம்... என்று அனைத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக அறிவித்து அமுல்படுத்தி விட்டு இப்போது மக்களை மடையர்களாக்க முயற்சிப்பது முட்டாள் தனமானது...

இலவசம் என்று சொல்லி அதை வழங்கிய பொருள்களின் மதிப்பு தான் எத்தனை.. எத்தனை.. கோடிகள்...! அந்த கோடிகளை மின்சாரம்...அத்தியவாசிய குடி தண்ணீர்.. மருத்துவம்... சுகாதாரம்.. மற்றும் எரிவாய்வு இவைகளுக்கு சிரமம் இல்லாமல் செய்து இருக்கலாமே..

மத்திய அரசே... மாநில அரசே... நீங்கள் உங்களின் அரசியல் ஆதாயத்திற்காக நீங்கள் எந்த நேரமும் எதையும் செய்வீர்கள்... அந்நேரம் அது உங்கள் ஆதிக்கமே...

பாதிக்கப்படுவது மக்களே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [03 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22586

மானியம் இல்லாத சிலிண்டர் விலை ஒவொரு மாதமும் உயரும் போது சிலிண்டரின் எடை அளவு கூட வாய்ப்பு இருக்கும்மா? மத்திய அரசுவின் நிர்வாக ஊழல் குளறுபடியேதான் காஸ் சிலிண்டர் விலை ஏட்ட தட்டுபாடுக்கு காரணம். தனியார்வசம் ஒப்படைத்தால் எந்த தட்டுப்படும் இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:..மானியம்
posted by NIZAR AL (kayalpatnam) [03 October 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 22593

மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கில் லேட்டஸ்டாக மக்களின் மடியில் கைவைக்கும் கேவலமான நிலை ஏற்பட்டுள்ளது.மக்களின் மானியத்தில் இவ்வளவு கெடுபிடி செய்து நாட்டு வருவாயை மிச்சம் செய்கிறார்களாம்.அதற்கு தான் இந்த அறிவிப்புகள் எல்லாம் செய்யபடுகின்றன.இந்த அரசின் ஊழல் குற்றசாட்டு எல்லாம் ஒரு லட்சம் கோடி,இரண்டு லட்சம் என மக்கள் பணத்தை கொள்ளையடித்து தங்களை வளமாக்கிவிட்டு மக்களை வஞ்சிக்கும் இந்த அரசுகள் தொலைந்தால் போதும் என மக்களின் மனநிலை இருக்கிறது.

YOURS,

NIZAR AL
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இது விவாதமல்ல....வாதம்!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [03 October 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22594

தட்டுப்பாடு என வரும்போது கட்டுப்பாடு விதிப்பது இயல்பு! இதில் நாம் அரசாங்கத்தைக் குறை கூறி என்ன பயன்? சமையல் எரி வாயு உபயோகிப்போர் எண்ணிக்கை கூடுகின்ற போது உற்பத்தியையும் கூட்ட வேண்டும். அதற்குரிய வழிமுறைகளை அரசு செயல்படுத்த முன் வர வேண்டும். பற்றாக்குறை இருப்பின் உலக உற்பத்தி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அதன் சுமையை பொது மக்களின் முதுகில் சுமத்தி பொதி சுமக்கும் கழுதைகளாக்காமல் இருந்தால் நலம்.

நான் பணியாற்றும் இடங்களில் பொதுவாக இலங்கையைச் சார்ந்தவர்கள் எப்போதும் சில தம்பட்டம் அடிப்பது வழக்கம். அதை நான் பெரிது படுத்துவதில்லை. “என்னப்பா ஊரு இது ?உங்கடெ தமிள் நாட்டுலெ தண்னி இல்லையா? ஸ்ஸொ....எங்க நாட்டை சொல்லி வேலையில்லை. அப்படி ஒரு தண்ணி கிடைக்கும். கரண்ட்டுக்கு மிச்ச பிரச்சனையா? எங்கடெ கெண்டி, கொழுபுலெ பாருங்க பார லைட்டு தான்...! பகலைலெ கூட எரியும்! என்ன இந்தியாப்பா உங்கடெ இந்தியா...? இன்னும் இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

சரி, அது அவர் இந்தியாவை சரி வர விளங்காமல் சொல்கிறார்! மக்கி காக்கா சொல்வதைத் தான் என்னால் ஜீரனிக்க இயலவில்லை! இலங்கை என்பது தமிழ் நாட்டில் பாதி அளவு கூட கிடையாது. அதையும் இந்தியாவையும் ஒப்பிடுவது முறையல்ல. அங்குள்ள மக்கள் தொகைக்கு கரண்ட்.தண்ணீர், சமையல் எரி வாயு போதுமானதாக இருக்கும். நூறு கோடியைத் தாண்டும் நம் இந்தியாவுக்கு தேவையும், பயணாளிகளும் அதிகமாக உள்ளது. காஸ் சிலிண்டர் வர இலங்கையில் ஐந்து நிமிடமாகின்றது. அப்படி பார்ர்த்தால், இங்கே சவூதி அரேபியாவில் ஃபோன் போடக் கூடத் தேவையே இல்லை! மீன் விற்கிற மாதிரி தெருத் தெருவா காஸ் சிலிண்டரை ஸ்பேனரை வைத்து டிங்..டிங்..டிங்...என தட்டி ஓசை எழுப்பி கூவி விற்கின்றார்கள்.

எனவே, இத்துனூனண்டு(தம்மாத் துண்டு) இலங்கையை நம் அகண்ட பாரதத்தோடு ஒப்பிடுதல் ஏற்புடையதல்ல! -ராபியா மணாளன்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by sulaiman (abudhabi) [04 October 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22605

அஸ்ஸலாமுஅழைக்கும் , மத்திய அரசு மானியமாக ஆண்டுக்கு சுமார் ௦௦ 25௦௦,000 கோடி வழங்குகிறது!!! நமது நாட்டின் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும்,அரசு ஊழியர்களும் 1 மாதம் அடிக்கும் ஊழல் பணத்தின் கூட்டு தொகையைவிடவா இந்த 1 ஆண்டுக்கான மானியம் அதிகம்??? மக்களிடம் பெறுகின்ற வரி பணத்தை ஊழல் பெரிச்சாளிகள் சுருட்டி அனுபவித்தது போக எச்சி எலும்பைத்தான் இதுபோன்ற மானியமாக மக்களுக்கு வீசி எறிந்தார்கள்.இப்பொழுது இந்த எச்சி எலும்பையும் விடுவதாக இல்லையோ !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22610

ராபியா மணாளன் கருத்துக்கு நன்றி. ஒரு இடைஞ்சல் ஏற்படும்போது தாங்கள் சுகமாக இருந்த இடங்களை காலங்களை நினைப்பது மனித இயல்பு.
அப்படிப்பார்த்தால் இந்த அரசு செய்யும் எதுவும் மக்கள் நலனுக்காகத்தான் என்பதை நினைத்துக்கொண்டு அவற்றை ஜீரணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். குறை சொல்லக்கூடாது. மன்மோகன் சிங்க் செய்தால் தப்பு இருக்காது என்று மனதை சமாதானபடுத்தி கொள்ள வேண்டும்.

அரசு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்ல்லாம் வீதியில் இறங்கி ஆர்பாட்டம் செய்கிறார்களே இதெல்லாம் முறைதானா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved