Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:29:32 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9648
#KOTW9648
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 20, 2012
கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் முயற்சியில் கடற்கரையில் வாகனங்களை நிறுத்த எல்லைக்கோடு அமைக்கப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3452 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையில், இரு சக்கர - நாற்சக்கர வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரை நுழைவாயிலில் அவர்கள் கட்டுப்பாடற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதால், நடந்து செல்வோர் - வருவோருக்கு அது பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில், கடற்கரை நுழைவாயிலில் வாகனங்களை நிறுத்த காயல்பட்டினம் நகராட்சியின் துணையுடன் எல்லைக்கோடு அமைக்கப்பட்டு வருகிறது.

கடற்கரை நுழைவாயிலிலிருந்து சுமார் 10 மீட்டர் இடைவெளியில் வாகனங்கள் எதையும் நிறுத்தாமலிருக்க தடுப்புக்கோடும், கடற்கரையில் முடியும் ஸீ-கஸ்டம்ஸ் சாலையின் வடபுறத்தில் நாற்சக்கர வாகனங்களை நிறுத்தவும் - தென்புறத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தவும் எல்லைக்கோடும் அமைக்கப்பட்டு வருகிறது.







காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ தலைமையில், 19.11.2012 திங்கட்கிழமையன்று (நேற்று) நடைபெற்ற பணிகளை, காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.

தடுப்புக்கோடு மற்றும் எல்லைக்கோடு அமைப்புப் பணியையொட்டி, நேற்று காலை முதல் இரவு வரை வாகனங்களில் கடற்கரைக்கு வருவோரிடம், கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பு கோரப்பட்டது.



உடனடியாக அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், இந்த ஏற்பாடு மிகவும் அவசியமானது என்றும், இதற்கு ஒத்துழைப்பு தர எப்போதும் ஆயத்தமாகவே உள்ளதாகவும் தெரிவித்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வினா எழுப்பும் சுயநல வாதிகளே...! நீ நகருக்கு என்ன செய்தாய்...?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [20 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23967

கடற்கரையில் வாகனங்களை நிறுத்த எல்லைக்கோடுவை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் இந்த ஏற்பாடு மிகவும் அவசியமானது என்றும், இதற்கு ஒத்துழைப்பு தர எப்போதும் ஆயத்தமாகவே உள்ளதாகவும் தெரிவித்த சகோதரர்களை பாராட்டுகிறேன்...

நகரில் புதிய புதிய அமைப்புகள் தோன்றி என்ன சாதித்தன...? என்று வினா எழுப்பும் நபர்கள் இதை புரிந்தால் சரி..!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நீதானா அந்தக்குயில்?
posted by OMER ANAS (DOHA QATAR.) [20 November 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23985

நமது கடற்க்கரை பயனாளிகள் சங்கம் வாகன நிருத்துமிடத்துக்கு மட்டும் ஒரு எல்கை கோடு வகுத்துள்ளது. நன்றி!

அதே நேரம், இங்கே வந்து போவோர் விடிய விடிய அங்கேயே தங்கி கூத்தடிப்பதை கண்டும் காணாமல் இருக்கும் நமது கடற்க்கரை பயனானிகள் சங்கம் நம் மக்களுக்கு என்ன சொல்ல விளைகிறது?

பெருநாட்க்களில் ஆகாய பலூன் என்ற பெயரில் நம் கடற்கரையில் வந்து கூத்தாடிகள் நம் நகராட்சி அனுமதி இன்றி நம் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு மாற்றமாக செயல்படுவதை எந்த கடற்க்கரை பயனானிகள் சங்கம் தடுத்தது?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள சிலர் நினைப்பதை பார்த்தால், நிச்சயம் நீதானா அந்தக்குயில் என்று நினைக்க வேண்டி வருகிறது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [20 November 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23989

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் ..கடற்கரை பயனாளிகள் சங்கத்தின்...இந்த செயல் பாடு பாராட்டுக்குரியது......நம் மக்களின் முழு ஒத்துழைப்பும் கண்டிப்பாகவே தேவை ...நம் மக்களும் உணர்ந்து இத் திட்டதை நடை முறை படுத்த இந்த அமைப்போடு ஒத்துளைக்கவேனும்.......

நம் ஊர் கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் செயலாளர் MR..கைலானி அவர்களுக்கு.பொது சேவை என்பது ...லட்டு தின்பது போல் அல்லவா.....

இந்த நல்ல திட்டத்தை நம் மக்கள் தான் '' தொய்வின்றி ''கொண்டு செல்ல வேணும் .

முழு ஒத்துழைப்பு அளித்த நம் நகராட்சி நிர்வாத்தையும் நாம் பாராட்டனும் .

நம் கடற்கரையின் ஒரு சில குறை பாடுகள் ...இருப்பதையும் இந்த "" கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் "' மூலம் நிறைவு பெற்றால் நல்லது தான் ...

நமது ''கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் '' கண்பார்வை பட்டு விட்டது ...இன்ஷா அல்லாஹ் நம் ஊர் கடற் கரையும் ....சீரடையும் . வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [20 November 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23991

பாராட்டுக்கள்.

தொடரட்டும் உங்களின் மக்கள் சேவைகள், நிதானமாகவும், சீராகவும்.

** ஊரில் இருக்கின்றோமா, சம்பாதித்தோமா, சுகமாக வாழ்ந்தோமா என்று இருக்காமல், நம்மால் முடிந்த உதவிகளை தனியாகவோ, ஒருங்கினைந்தோ, பல அமைப்புகள் உருவாக்கியோ, மக்களுக்காக செய்யும் உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

உங்களின் சேவைகளை வல்ல அல்லாஹ் அகீகரிப்பானாக.!

விமர்சனங்கள்தான் உங்களை வளர்க்க உதவும் உரம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்துவதற்கு மனம் வேண்டும்!
posted by kavimagan (qatar) [20 November 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23992

ஆக்கப்பூர்வமான சேவைகள் பல செய்து வரும் சகோ.கைலானி அவர்களை செயலாளராகக் கொண்ட கடற்கரை பயனாளிகள் சங்கத்தை பாராட்டி வாழ்த்துகிறேன்.

நம்மில் அநேகர் செய்யாத ஒரு காரியத்தை ஓர் இயக்கம் செய்யும்போது அதனை பகிரங்கமாக வாழ்த்த வேண்டும். அவர்கள் செய்யத் தவறியதை அவர்களைத் தொடர்பு கொண்டு நமது ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டும்.

எதையுமே எதிர்மறையாக சிந்திக்கும் குணம் படைத்தவர்களின் பிடியில் இருந்து, எனது அருமை நண்பர்கள் உமர் அனஸ் காக்கா போன்றவர்கள் வெளியேற வேண்டும். எப்போதுமே ஊர் நலனைக் குறித்து சிந்திக்கும் உமர் காக்கா போன்றவர்கள், நேர்மறை செயலாக்கத்திற்கு வரும்போது, கடற்கரையில் படுத்துத் தூங்குபவர்களை மாத்திரமன்றி, தூங்குவதைப் போல நடிப்பவர்களையும் தட்டி எழுப்ப முடியும்.

எனது நீண்ட நாள் எண்ணத்தை இன்று பதிவு செய்து விட்டேன். இந்தத் தம்பியின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்வீர்களா உமர் காக்கா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. தொடரட்டும் மக்கள் நலப்பணி !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [20 November 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 23993

கடற்கரை தொடர்பான சில செய்திகளில் இடம்பெற்றிருந்த கருத்துக்களை (விமர்சனங்களை?) படித்ததில், ஒரு தன்னார்வ சமூக அமைப்பிடம் மக்கள் 'அளவுக்கு அதிகமாக' எதிர்பார்க்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுகின்றது. இதனால்தான் என்னவோ... நம்மில் பலர் 'சோசியல் சர்வீஸ்' என்றாலே பத்தடி தள்ளி... நமக்கேன் இந்த வம்பு, தேவையில்லாத வேலையென்று ஒதுங்கி நிற்கின்றார்கள்.

பரப்பரப்பான இக்காலசூழலில் மனிதன் தன்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும், ஒன்று காசாக்க நினைக்கின்றான் அல்லது தான் - தனது குடும்பம், டிவி / கிரிக்கெட் (பொழுதுபோக்கு) என்று செலவழிப்பதிலேயே அக்கறை செலுத்துகின்றான்.

ஊர்நலனில் அக்கறை கொண்ட இவர்களை போன்ற சகோதரர்கள் (எந்த அமைப்புகளை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி) தங்களுடைய பொன்னான நேரத்தை ஊர்நலனுக்காக சிந்திப்பதும், அதற்காக நேரத்தை "களப்பணியில்" செலவழிப்பதே மிகப்பெரிய விஷயம்.

களப்பணியில் இறங்கி நம்மால் செய்ய முடியாத ஒன்றை (நல்லதை), நமக்காக நாளைய நமது வருங்கால தலைமுறையினருக்காக உழைக்கும் இவர்களை போன்றவர்களை / சமூக அமைப்புகளை, குறைந்த பட்சம் ஆதரிப்போம்... பாராட்டுவோம்... அவர்களை ஊக்குவித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தேவையான பொருளாதார உதவிகளை வழங்கிடுவோம் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...தேவை இல்லாத விமர்சனங்களை தவிர்த்திடுங்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [21 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23995

நல்ல விஷயங்கள் செய்பவர்களை பாராட்டுங்கள். தேவை இல்லாத விமர்சனங்களால் அவர்கள் முயற்சிகளை தொய்வடைய செய்து விடாதீர்கள். பணத்தை செலவழிக்க ஆள் இருந்தாலும் உடல் உழைப்பு நேரம் இவற்றை தியாகம் செய்து வேலை செய்பவர்களை குறைந்த பட்சம் நல்ல வார்த்தைகளால் பாராட்ட மனம் இல்லாவிட்டால் அமைதியாகவாவது இருங்கள்.

ஆடுகளத்திலே விளையாடுபவர்கள் 11 பேர் தான். ஆனால் அவர்கள் விளையாட்டை பார்க்க வருபவார்கள் 1000 பேர் CHEER பண்ணும்போது விளையாட்டு வீரார்களுக்கு உற்சாகம் பிறக்கும். நாம் களம் இறங்கி ஆடி பார்த்தால்தான் தெரியும் அதில் உள்ள பிரச்சினைகள்.

" மண் காண யுமினு பில்லாஹி வல் யவ்மில் ஆகிரி, பல் யகுள் க்ஹைரன் அவ் லியஸ்முத்... அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிப்பவர்கள் நல்லதையே பேசுங்கள். அல்லது வாய் மூடி மௌனமாக இருங்கள். MANN KAANA YUVMINU BILLAHI VAL YAVMIL AAKHIRI FAL YAQUL KHAIRAN AV LIYASMUTH என்று கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் இரத்தின சுருக்கமாக நமக்கு சொல்லி தந்து இருக்கிறார்கள்..

அல்லாஹ் ஊரின் பொதுநலத்தில் அக்கறைகொண்டு வேலை செய்யும் எல்லோருக்கும் நீண்ட ஆயுளையும் நல்ல தேக ஆரோக்கியத்தையும் கொடுப்பானாக. ஆமீன். தொடரட்டும் உங்கள் பணி. போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். எனது கடன் பணி செய்து கிடப்பதே என்று ஒவ்வொருவரும் நினைத்து செயல்படும்போது மனவலிமை அதிகமாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஒய்யாரக் கொண்டையிலே.... (?!)  (22/11/2012) [Views - 4187; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved