Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:51:47 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9646
#KOTW9646
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 19, 2012
DCWவின் மாசு கட்டுப்பாடு விதிமீறலைக் கண்டித்து நவ.29இல் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்! KEPA நடத்திய - நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், நகர்மன்ற அங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5302 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW ஆலையின் விதிமீறலைக் கண்டித்து, இம்மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA சார்பில் நேற்று நடத்தப்பட்ட - நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நலக்கமிட்டியினர் மற்றும் நகர்மன்ற அங்கத்தினர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு்ளளது. விபரம் பின்வருமாறு:-

“புற்றுநோய் காரணி கண்டறியும் குழு - CANCER FACT FINDING COMMITTEE - CFFC” சார்பில், 03.03.2012 அன்று, காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்கத்தில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளைக் கண்டறிந்து - பல்வேறு செயல்திட்டங்களுடன் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை அவ்வப்போது அளித்திடவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களால் துவக்கப்பட்டு - செயல்பட்டு வரும் அமைப்பு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA.

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த கழிவுநீர் - அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு, DCW தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் - அவற்றின் தன்மைகள் - அவற்றை தயாரிக்கும்போது வெளியாகும் கழிவுகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்குவதற்காக, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார மக்கள் கூட்டமைப்புகள் மற்றும் நகர்மன்ற அங்கத்தினர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம், 18.11.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.



KEPA தலைவர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழுத் தலைவர் நாவலர் ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம், KEPA துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். KEPA தலைவரும், கூட்டத் தலைவருமான ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, KEPA அமைப்பின் துவக்கம் மற்றும் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் குறித்து அதன் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார்.



அதனைத் தொடர்ந்து, DCW தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் - அவற்றின் தன்மைகள் - அவற்றை தயாரிக்கும்போது வெளியாகும் கழிவுகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் உள்ளிட்டவை குறித்து KEPA அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், அசைபட உருப்பெருக்கி உதவியுடன் கூட்டத்தினருக்கு விளக்கினார்.



கூட்டத்தில் கலந்துகொண்டோரின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு பின்ருமாறு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-

நவ.29 அன்று கடையடைப்பு & கண்டன ஆர்ப்பாட்டம்:
காயல்பட்டினம் கடற்பரப்பில் - அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளை மதிக்காமல் கழிவுநீரைக் கலக்கச் செய்தல் உள்ளிட்ட DCW தொழிற்சாலையின் அனைத்து மாசு கட்டுப்பாடு விதிமீறல் நடவடிக்கைகளையும் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு விதிகளின் படி அதனை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்திட மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளும் வகையிலும்,

29.11.2012 வியாழக்கிழமையன்று, நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் வட்டார நல கூட்டமைப்புகளின் ஆதரவுடன், நகரில் முழு கடையடைப்பு நடத்திடவும், அன்று காலை 09.30 மணியளவில் காயல்பட்டினத்திலிருந்து - பொதுமக்கள் பெருந்திரளாக வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்டு, DCW தொழிற்சாலை நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.


இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில், நகர ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் மற்றும் புறநகர் வட்டார நலக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.





கூட்ட ஏற்பாடுகளை, எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48) ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.

படங்களில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.MAHMOOD RAJVI (DAMMAM(SAUDI ARABIA)) [19 November 2012]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23952

அஸ்ஸலாமுஅலைக்கும்

வருகிற 29ஆம் தேதி நடக்க இருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நல்லமுறையில் நடைபெற வாழ்த்தி துஆ செய்கிறேன். வஸ்ஸலாம்!

மஹ்மூத் ரஜ்வி
தம்மாம், சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உயிர் கொல்லி நோய் தொழிற்சாலை
posted by Mohamed Azib (Holy Makkah) [19 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23953

கால தாமதமாக எடுத்த முடிவானாலும் மிகவும் சரியான முடிவு,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பூனைக்கு மணி கட்ட புறப்பட்டது ஓர் கூட்டம்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [20 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23954

இந்த நாசக்கார ஆலைக்கு எதிராக காயல் மக்கள் அணி திரண்டிருப்பது மகிழ்ச்சியே! ஆர்ப்பாட்டமும், போராட்டமும் ஆலைக்கெதிராக நடத்தும்போதுதான் ஆட்டம் காணும் அந்த ஆலை!

இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கின்றன. எனவே KEPA அமைப்பின் மூலம் விளக்கம் கேட்டு DCW வுக்கு இரண்டு நாள் அவகாசத்தில் ஒரு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அது திருப்தி அளிக்காத பட்சத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் தெரு முனைப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

புற்று நோய்க் காரணிகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் எவ்வாறெல்லாம் நம்மை பாதிக்கின்றது என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை மக்கள் மனதில் பதியும் படி எடுத்துரைக்க வேண்டும். கடை அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் குறித்து துண்டுபிரசுரங்களை அச்சிட்டு காலம் தாழ்த்தாமல் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

நம் மக்களின் தார்மீக உரிமைகளைத் தகர்த்தெறிந்து தான்தோன்றித்தனமாக செயல்படும் DCW வின் அட்டூழியத்தை ஒழிக்க, அதன் அதிகார வர்க்க சகவாசத்தை முறியடிக்க காயல்மாநகரத்தின் மண்ணின் மைந்தர்களே... அணி திரளுங்கள்! பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்! நாம் நம் மக்கள் நம் சந்ததிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என சூளுரைத்து நவம்பர் 29-ல் நடக்கவிருக்கும் முழு கடையடைப்பு மற்றும் ஆலைக்கெதிரான முற்றுகைப் போராட்டங்களில் சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் பங்கு பெற்று காயலின் ஆயுளை திடப்படுத்த முன் வாருங்கள்!

காலம் கடந்து கண் விழித்திருக்கும் காயலர்களே! இனியும் காலம் தாழ்த்தாமல் கடமை உணர்வோடு களத்தில் இறங்குங்கள்! அல்லாஹ் இதற்கோர் அழகிய வெற்றியையும், நிரந்தர தீர்வையும் தந்தருள்வான். இன்ஷா அல்லாஹ்...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இறைவனிடம் கை ஏந்துவோம்
posted by sheit (kayalpatnam) [20 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23956

பல உய்ர்களை காப்பாற்ற எடுக்கும் இந்த முயற்சிக்கு துவா செய்வோம் அதே நேரத்தில் எல்லாரும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். வெற்றி நமதே!

சேட்
காயல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வெற்றிபெற வாழ்த்துக்கள்,,,
posted by MOHAMMED LEBBAI MS (DXB) [20 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23959

நீண்ட காலமாக எங்கள் உள்ளங்களில் கேட்பாரற்று கிடந்த குமுறலை கேட்க புறப்பட்டிருக்கும் கேபா(KEPA) நீ கேளுப்பா??? இறை அருளால் இவ்வார்ப்பாட்டம் பெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

அனைத்து மக்களும் தவறாது கலந்து கொள்ளவும்,,, ஏனென்றால் இது நமக்காக மட்டும் நடத்தும் ஆர்ப்பாட்டம் அல்ல,,, நம் வருங்கால சந்ததிக்காகவும் சேர்த்து நடத்தும் ஆர்பாட்டம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மாஷா அல்லாஹ்..
posted by Mohamed Salih (Bangalore) [20 November 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 23960

மாஷா அல்லாஹ்.. மிக நல்ல முடிவு ..

என்னுடைய சிறிய வேண்டுகோள் நம் ஊரு மக்கள் மட்டும் போராடினால் மட்டும் போதாது .. நம் சுட்டறு வட்டார மக்களை ஒன்று கூடி போராட வேண்டும் ..

நடந்த கூட்டத்தில் நம் சுட்டறு வட்டார மக்களை ஒன்று கூடி அவர்களுக்கும் தெரிய படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ..

உங்கள் போராட்டம் மாபெரும் வெற்றி பெற வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் ..

இன்ஷா அல்லாஹ் கடந்த ஆர்ப்பாட்டத்தை போல் கூட்டத்தை பார்க்க காத்து இருக்கிறான் .

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Just 2 out of 18
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [20 November 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 23961

நடந்த இந்த கூட்டத்தில் முறையாக அழைப்பு கொடுத்தும் 18 வார்டு கவுன்சிலர்களில் இருவர் (சகோ., சம்சுதீன் & அந்தோணி சாச்சா) மற்றும் தலைவி ஆக மூவ்வர் மற்றுமே கலந்து கொண்டனர். இதிலிருந்து மற்றவர்கள் நமது ஊரின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

குறிப்பு: கடந்த காலங்களில் நமது பஞ்சாயத்து உறுப்பினர்களில் சிலர் DCW விற்கு கூலிவேலை பார்த்தவர்களும் உண்டு.

Just 2 out of 18 ?

It seems to be either
Planned boycott for the reason(s) of their own
or
Obeying the order of the Kingpin.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஜாக்கிரதை !!!!
posted by Salai Sheikh Saleem (Dubai) [20 November 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23964

அல்ஹம்துலில்லாஹ் !!!

எல்லா அமைப்புகளும் ஓரணியில் நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் தெரிவிப்பது கண்டிப்பாய் சம்பந்தப்பட்ட அரசு துறையின் கவனத்தை ஈர்க்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை எல்லாவிதமான சூழ்ச்சிகளிலும் இருந்து காப்பாற்றுவானாகவும் ஆமீன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [20 November 2012]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23965

லேட்டாக எடுத்தாலும் லேட்டஸ்ட் ஆக எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது. எல்லா நகராட்சி உர்ப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்ப பட்டதா ? அப்படி அனுப்பியும் வர வில்லை என்றால் மிகுந்த கண்டனத்திற்குரியது.

நம்முடைய போராட்டம் எழுச்சியாக அமைய அனைத்து சமூக அமைப்புகள், புற நகர் அமைப்புகள், நமதூர் எல்லா அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு அனுப்பி நமது எதிப்பை ஒற்றுமையாக காட்ட வேண்டும்.

தயவு செய்து ஈகோ பார்க்காமல் எல்லா அமைப்புகளும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றியை தருவானாக ஆமீன்.

என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Muhsin Kamil (Chennai) [20 November 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 23966

மாஷா அல்லாஹ்,

நீண்ட நாட்களாக எதிர் பார்த்து இருந்த ஒரு முயற்சி, இன்ஷா அல்லாஹ் இந்த முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. புறப்படட்டும் போராட்ட படை.வெற்றி நமதே ......
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [20 November 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23969

எத்தனை முறை எடுத்து சொல்லியும் கேட்க தவறிவிட்டது DCW நிர்வாகம். கடை அடைப்பும் கண்டன ஆர்ப்பட்டமும் நடத்தி நம் எதிப்பை கண்பிப்பது மிக சரியான முடிவு.

DCW தொழில்சலையின் மாசு கட்டுப்பட்டு விதி மீறல் எல்லா மீடியா மூலமாகவும் வெளிச்சத்துக்கு வரணும். எல்லா மீடியாகளையும் போராட்ட செய்திகளை வெளியீட அழைப்பது முக்கியம்.

சாதி, மத, அரசியல், கொள்கை, வயது பேதமில்லாமல் அனைவரும் நிச்சயமாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதிக்கு எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன். புறப்படட்டும் போராட்ட படை. வெற்றி நமதே......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Fareed (Dubai) [20 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23970

2 out of 18 counselors attended the KEPA meeting after proper invitation also, it is clearly showing that they are not care about health of their own family and think about their pocket money only. Definitely they are obeying their bosses.

Don't worry KEPA you go ahead .Allah and KPM public with you always


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by salai s nawas (singapore) [20 November 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 23971

ஏறத்தாழ இரண்டு வருடங்கள் கடின உழைப்பிற்கு பின் கிடைத்த சிறு வெற்றி கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம். எதையும் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்ட முடியாது. Give a dog a bad name and it sticks.

இந்த போராட்டம் அகிம்சை முறையில் வெற்றி கண்டிட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.

தீர்மான கூட்டதிற்கு போகாத உறுப்பினர்களே!!! நடக்க போகும் கண்டன ஆர்ப்பாட்டம் உங்கள் நலன் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நலனுக்காக என்பதை முதலில் மனதில் கொள்க!!!!

ஆர்பாட்டத்தில் 18 உறுப்பினர்களையும் முன் வரிசையில் நாங்கள் காண வேண்டும்.

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. கருத்துக் குருடர்களின் கண்களைத் திறக்கட்டும்!
posted by kavimagan (qatar) [20 November 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 23972

ஒரு நெடிய பயணத்தை துவங்குவதற்கான அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. சொந்த மண்ணின் சுற்றுச் சூழலைக் காத்திடவும், இயற்கை ஆதாரங்கள் காயப்படாமல் கண்காணிக்கவும், அடுத்த தலைமுறைக்கான நல்வாழ்வை உறுதி செய்யவும், KEPA உறுதியோடு போராடும் என்ற நம்பிக்கை, நகர மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இறைவனை முன்னிறுத்தி மக்கள் பணியாற்றும் இது போன்ற தியாக உள்ளங்களை வாழ்த்தி துஆ செய்வதோடு, நமது சொந்தங்களையும், இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்துவோம்.

உணவிலும் உயிரிலும் விடந்தனை விதைக்கும்
வஞ்சகர் வினைதனை வேரறுப் போம்!
கடலிலும் காற்றிலும் கந்தகம் கலக்கும்
கயவர்தம் கூட்டத்தின் கருகலைப் போம்!

இறைவன் அருளிய இயற்கைப் பேறினை
அழித்திடும் அவலம் தடுத்திடு வோம்!
இனிவரும் தலைமுறை இடரினை மாற்றிட
அனைவரும் கரமுடன் கரங்கோர்ப் போம்!

மழைதரும் மரங்களின் மகிமை உணர்ந்தே
மக்களைப் போலதை வளர்த்திடு வோம்!
அன்னையெம் பூமியின் அங்கம் முழுவதும்
அழகுற பசுமை போர்த்திடு வோம்!

வெல்க KEPA ! வாழ்க காயல்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23973

நல்ல முயற்சி..மக்கள் எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இப்படிப்பட்ட நிகழ்சிகளை வீடியோ எடுக்க ஏற்பாடு செய்யவேண்டும். அப்போதுதான் அதை குறுந்தகடில் பதிவு செய்து யாரும் கலந்துகொள்ள முடியாமல் போன முக்கிய ஜமாத்தார்களுக்கு போட்டு காட்டலாம். வெளியூரில் கேட்க ஆசைப்படுபவர்களுக்கும் கொடுக்கலாம். நேரலை ஒளி பரப்பு நடக்கிறதே அதைபோல் செய்வது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

இது பற்றி KEPA நிர்வாகம் கவனம் எடுக்க வேண்டும். இதற்கு செலவுகள் அதிகம் ஆகலாம். ஆனால் பேசியவர்களுடைய பேச்சு திரித்து வேறு மாதிரியாக சொல்லப்படும் வாய்ப்புகளும் உள்ளது. அப்போது அவர்கள் நம்மை சந்தேக கண் கொண்டு பார்ப்பார்கள். நாம் தினசரி பேப்பர்களில் இதை பார்த்து வருகிறோம்.

வெளிப்படை தன்மை மிக முக்கியம். எல்லா நிலையிலும் அந்த நம்பகத்தன்மையை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.. 29ஆம் திகதி நடக்கும் போராட்ட நிகழ்ச்சிகளயாவது இப்படி செய்ய முயற்சி செய்யுங்கள். இது எனது தாழ்மையான கருத்து. போராட்டம் அமைதியாகவும் சாத்வீகமாகவும் நடக்க இதன் தலைவர்கள் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...dcw கு kayalr கொடுக்கும் முதல் அடி
posted by suaidiya buhari (chennai) [20 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23976

அனைத்து மக்களும் இந்த ஒரு நாள் கடை அடைப்புக்கு முக்கிய துவம் கொடுத்து தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது ஒவ்வரு kayalar களின் கட்டாய கடமை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. முதல் அடியே மூர்க்கமாக இருக்க வேண்டும்
posted by S.A.Muhammad Ali (Dubai) [20 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23979

KEPA வின் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இந்த போராட்டம் தேசிய, மாநில அளவில் அனைவருக்கும் தெரிய வேண்டும். ஊடகங்களில் இப்பொழுதே விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள், நோட்டீஸ் போன்ற அனைத்து வகையிலும் மக்களுக்கு இந்த DCW என்ற அரக்கனின் உண்மை முகத்தை தோலுரித்து காட்ட வேண்டும்.

ZEE TV யின் "சொல்வதெல்லாம் உண்மை" போன்ற நிகழ்சிகளிலும் நமது குற்றச்சாட்டுகளை தெரிவிக்கலாம். சமீபத்தில் கீழக்கரையில் குப்பை கொட்டுவது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சி வெளி வந்தது நினைவிருக்கலாம்.

நம்முடைய ஊரில் CBSC பாடத்திட்டம் உள்ள பள்ளி ஒன்றை ஆரம்பித்து கமலாவதியை காலாவதி ஆக்குங்கள். அனைத்து அரசியல் கட்சி, அமைப்புகள் ஆதரவை எழுத்து மூலமாக பெற்று முதலமைச்சருக்கு மற்றும் இது சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அனுப்பவும்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் முக்கிய புள்ளிகளை ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள செய்யுங்கள். அன்றைய தினம் நமது ஊரின் அனைத்து பள்ளிகூடங்களும் தங்களது மாணவர்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ள செய்ய வேண்டும். விடுமுறை விடுவதை விட இதுவே நன்மையாக இருக்கும்.

இதற்காக தங்களது நேரங்களை, உழைப்பை, பொருளாதாரத்தை அளித்த அனைத்து நல்லுங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்............
posted by SK Shameemul Islam (Chennai) [20 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23982

I remember a proverb:

Slow and steady, win the race.

Though we delayed for so much, the path in which we came across had really guided us to its proper destination. May Allah help us in wiping out this ugliest structure (DCW) from our landscape thereby saving our foetus and gen.next from this monster.

May the soul and life of those died out of cancer and is dying everyday with that killer disease rest with peace.

Dear Kayalites, please ensure your participation along with your entire family and show the world our steadfastness in taming down this venomous structure.

Let us also learn the lesson from our neighbours in Koodankulam whose peaceful protest crossed more than 400 days.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [20 November 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23987

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அதை தொடர்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் அமைதியாகவும், நன்மை தரக்கூடியதுமாக அமைய வல்ல ரஹ்மானை இறைஞ்சுகிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டிப்பாக அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அனைவர்களுக்கும் உள்ளது. அவர்களுக்கும் முறையாக தெரிவித்து விடுங்கள். அவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களா..? என்ன..!!

நடப்பவைகள் அனைத்தும் நன்மையாக அமையட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [20 November 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23988

முழு அடைப்பு நடத்தி DCW வின் மாசு கட்டுப்பாடு விதிமீறலை நமது கடலில் கலக்காது அடையுங்கள். ஒன்று கூடுங்கள் ஊரின் ஒற்றுமையால் அந்த நோயை துரத்துங்கள். அல்லாஹ் நம்மளுடன் இருக்கிறான் வெற்றி நிச்சயம். நமது பக்கத்து ஊராரையும் அலையுங்கள். நல்லது நடக்க இறைவன் கிருபை செய்வான் அமீன்.

என்றும் ஊரில் ஒருவன்
பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. 'DO or DIE' struggle against DCW !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [21 November 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24003

Very first thing, I sincerly appreciate the continual efforts put forward by "KEPA" on this DCW issue. Staging dharna infront of DCW is something everyone suggested... finally it shows your guts. Eventhough most of our political parties have been silent on this issue for years... atleast KEPA's effort give a small hope to the kayalites.

Somewhere in the corner of the kayal, I hear the ringing bell (death bell to DCW) which will go aloud & stronger to shut down this Devil DCW. Let us not tire until it happens.

Generally speaking, fighting against devil is not easy. That too giant monster like DCW who is throwing bones & nuts to the greedy shameless people in politics and different forums.

We already lost so many lives & still being the victim of DCW. How many years we need to realize this ground fact? Are we going to realize only when everyone is dead or the death count goes up? Let us ensure each & everyone in kayal understand & realize that, death is chasing them in the name of DCW.

I'm pretty sure this energetic KEPA is travelling in the right direction with gained support from jamath, social orgs & general public. When the sound goes alarm, whoever peeking it from outside (political parties or individuals) also will jump into this since its a human nature. Please keep focussed & bring (escalate) this DCW issue to the attention of whole Tamil Nadu through Media & agitations.

I'm very optimistic about the success of this 'DO or DIE' struggle. Lip service on loving kayal doesnt help... It is the time for our political parties, jamath's, org's, our family members and general public to show our love on kayal. Let us be a good human being by taking part on this 'DO or DIE' struggle (common man war against DCW). May Allah help us to stay away from one among those 'hatemongers' or 'fault finding machines' & 'suspicious creatures' of this world.

Through this agitation, let us show them that LIVES OF KAYALITES & ITS NEIGHBOURGOOD IS NOT FOR SALE. We are not only fighting for ourselves but also for our next generation. Dawn is very nearer & let us chase it until we catch it !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [22 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24013

அஸ்ஸலாமுஅலைக்கும் .

மாஷா அல்லாஹ்.. மிகமிக நல்ல முடிவு ..........!வெற்றிபெற வாழ்த்துக்கள்,,,இறைவனிடம் கை ஏந்துவோம்,,,அவன் இல்லை என்று சொல்லுவதில்லை .....,

இன்னும் என்ன தாமதம் ?என்னதயக்கம் ?? ஜாக்கிரதை !!!!ஜாக்கிரதை !!!!ஜாக்கிரதை !!!!அனைத்து காயலர்களும் ஒற்றுமையோடு ஒன்றுபட்டு ஒருமித்த குரலில் ஒத்துழைப்பு நல்கினால் வெற்றி நமதே ......!!!வெற்றிக் கனியை எட்டிப் பிடிப் போம் !!!

உயிர் கொல்லி நோய் தொழிற்சாலையை கண்டித்து துணிந்தே செயல் படுவோம் !விரைந்தே செயல்படுவோம் !!இனிதே செயல்படுவோம் !!!இணைந்தே செயல்படுவோம் !!!!வருகிற 29ஆம் தேதி நடக்க இருக்கும் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டதிற்கு அலைகடல் என திரண்டு வாரீர் அன்பின் காயலர்களே.....!வாழ்க KEPA ! வளர்கKEPA சேவைகள் !ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு ! நலமான காயல் .......சுகமான வாழ்வு ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [22 November 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24021

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்லதோர் போராட்டம் ...இந்த போராட்டத்தை மேலும் ..மேலும் ...கடுமையானா முறையில் தீவிர படுத்த வேணும்....அப்போது தான் நமக்கு முழு வெற்றி கிடைக்கும்.

இந்த போராட்டத்தை நாம் வெளி உலகத்துக்கு தெரிய படுத்தும்.விதமாக அனைத்து .. T.V. சேனல்களில் / பத்ரிக்கைகளில் எல்லாம் போடணும்.அது தான் நமக்கு முழு பலம். அது தான் வெளி உலக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் .......

இந்த கடையடைப்பு போராட்டம் முழு வெற்றி அடைய வேணும் அது தான் நம் யாவர்களின் விருப்பம்.இதற்க்கு நம் ஊர் பொது மக்களின் முழு ஒத்துழைப்பு கண்டிப்பாக தேவை .....

இந்த போராட்டதில் அரசியல் கட்சி ..../ நம் ஊர் மற்ற பொது நல அமைப்புகள் / மற்றும் வணிக துரை அமைப்புகள் என்று பாகுபாடு இன்றி ஒற்றுமையாக கடை அடைப்பு போராட்டத்தை முழுமையான வெற்றி அடைய வழி வகுப்பது நல்லது .

படிப்படியாக நாம் இது போன்ற போராட்டத்தை கூட்டி கொண்டே போவது தான் நல்லதும் கூட....இல்லையெனில் நம் ஊரின் நிலைமை கஷ்டமே .....

நம் ஊரில் உள்ள அனைத்து ஜமாத் ஆதரவோடு ...பள்ளி மைக்கில் சொல்லி ...நம் ஊர் பொது மக்களை >>> D.C.W. <<< தொழிற்சாலையை நோக்கி கூட்டமாகவே வர சொல்லலாமே ....நம் மக்களின் கூட்டம் அதிகமாக இருப்பின் நம் அரசாங்க அதிகாரிகளின் முழு கவனமும் கூட நம் பக்கம் திரும்பும் ......

நாசமா போன >> DCW << தொழிற்சாலையை ஒழிக்கும் வரை நாம் ....போராட்டத்தை நிறுத்தாமல் ...வெறியோடு தொடர்ந்து கொண்டே இருக்கணும்.

நாம் ''மத்திய / மாநில '' அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டே ....நாம் மத்திய - மாநில அரசுகளின் முழு கவனத்தையும் ...நம் ஊர் பக்கம் இழுக்கவேனும்....இது தான் அவசியம் தேவை .....இவர்களின் பார்வை நம் ஊர் பக்கம் திரும்புவதர்க்கான அனைத்து வழிகளையும் கூட நாம் மேற் கொள்ளவேணும்........

நமதூரில் நன்கு படித்தவர்கள் / நல்ல பொசிசனில் இருப்பவர்கள் / அனைத்து அரசியல் கட்சிகளில் முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் .....என்று நம் ஊர் மக்கள் பல பேர்கள் இருக்கிறார்கள் ....அப்படி இருந்தும் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாத ?? என்ன ....கண்டிப்பாக முடியும்.....நம் ஊர் மக்களிடம் ஒற்றுமை இருப்பின் ....

நம் ஊர் அனைத்து பொது நல தொண்டு அமைப்புகளும் / அனைத்து ஜமாத்துகளும் / நம் ஊரின் முக்கியமான மரியாதைக்குரிய பெரியவர்களும் ....எல்லாம் இந்த >>KEPA << புதிய அமைப்புக்கு முழுமையானதோர்...ஆதரவை கொடுத்து .....இந்த அமைப்பை நாம் ஊக்க படுத்த வேணும் .....

இது தான் சரியான போராட்டம் நம் ஊர் பொது மக்கள் >>> D.C.W. <<< தொழிற்சாலையை நோக்கி அதிகமான கூட்டமாகவே நாம் யாவர்களும் வெறியோடு கோஷம் போட்டு கொண்டே போகணும் ......அப்போது தான் எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வு தோன்றும் ....

''' வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்டு, DCW நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் '''''மூலம் பஸ் போக்குவரத்தை நாம் '' இஸ்தபிக்க ''' வைக்க வேணும் ...அப்போது தான் மற்ற யாவர்களின் பார்வைகளும் நம் ஊரின் பக்கம் திரும்பும் .... ஆனால் நம் இந்த போராட்டத்தால் வெளி ஊரில் இருந்து வரகூடிய பஸ் பயணியர்களுக்கு எந்த ஒரு சிரமத்தையும் நாம் கொடுக்கவே கூடாது .... நம்மடைய இந்த போராட்டத்தால் அன்னிய பொது மக்களுக்கு நம் ஊரின் மீது அனுதாபம் தான் ஏற்படனுமே தவிர .....நம் மீது வெறுப்பு வராமல் நாம் பார்த்து கொள்ளவேணும் .....

இந்த கடை அடைப்பு முழு வெற்றி அடையவும் ....வாழ்த்தி / துவா செய்கிறோம் ..... கண்டிப்பான முறையில் நம் ஊரில் எந்த ஒரு கடையுமே திறக்காமல் பார்த்து கொள்ளவேணும் .நம் வீட்டு பெண்களுக்கு முன் கூட்டியே தெரியபடுத்த வேணும் .....அப்போது தான் வயதானவர்களுக்கும் / சிறு கை குழந்தைகளுக்கும் தேவையான சாமான்கள் வாங்கி வைப்பார்கள் அல்லவா ......

நம் நகர் மன்ற தலைவி அவர்களையும் / நம் மன்ற உறுப்பினர்களையும் இந்த போராட்டத்துக்கு அழைப்பது நல்லது ....

வல்ல இறைவன் நம் ஊர் மக்களின் இந்த போராட்டதின் மூலம் முழுமையான வெற்றியை தந்தருள் வானகவும் ஆமீன்.

>>> தனி மரம் தோப்பாகாது <<< அனைத்து அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை ............. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved