Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:55:54 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9643
#KOTW9643
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 19, 2012
ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.90 ஆயிரம் நிதியொதுக்கீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3703 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.90,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

உலகெல்லாம் படைத்தாளும் வல்லிறை ஏகன் அல்லாஹ்வின் நல்லருளால்.

ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 32 வது செயற்குழு மற்றும் விடை பெற்று செல்லும் மூத்த உறுப்பினர் களுக்கு பிரிவு உபசார கூட்டம் கடந்த நவம்பர் 15.11.2012 வியாழன் பின்னேரம் 7 .30 மணியளவில் மன்றத்தின் தலைவர்ஹாஜி M.N.மின்ஹாஜ் முஹிய்யதீன் அவர்கள் இல்லத்தில் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி M .E .L. நுஸ்கி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அல் ஹாபிழ் ஷெய்க் தாவூத் இத்ரீஸ் அவர்கள் திருமறையின் வசந்த வார்த்தைகளை ஓதி துவங்கி வைத்தார்.



தொடர்ந்து M.N. மின்ஹாஜ் அவர்கள் வந்தோரை வரவேற்று நமது ரியாத் மாநகரில் பணிபுரிந்து விடை பெற்று செல்லும் நமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி N.T. பாதுல் அஸ்ஹாப் (எமது மன்றத்தின் முதலாம் தலைவர்) மற்றும் ஹாஜி S .S .ஷாகுல் ஹமீத் (மூத்த உறுப்பினர்) ஆகியோர்கள் நமது மன்றத்திற்கும், நமதூர் மக்களுக்கும் தமது ஸ்தாபனத்தை, மற்றும் தமது இல்லத்தை எந்த நேரமும் பயன் படுத்தி கொள்ளவும் முகம் கோணாது ஒத்துழைத்தார்கள் என்றும். இவ்விருவரும் நம்மிடம் இருந்து விடைபெற்று காயல் மாநகரில் தொழில் ஸ்தாபனத்தை நடத்த இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொள்ள இருக்கும் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் கண்டு எல்லா நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை உளமார பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து தலைமை உரை ஆற்றிய நுஸ்கி அவர்கள் தமது உரையில் ”நமது காயல் மக்கள் ஒன்று கூடும் கேந்திரமாக சிங்கபூர் பிளாசா மற்றும் டிசைன் பார்க் இருந்ததாகவும். இவ்விரு ஸ்தாபனங்களும் நமக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தது மட்டுமல்ல இவர்களின் இல்லம் பல்வேறு சமயம் நமது மன்ற செயற்குழு மற்றும் ஆலோசனை செய்யும் இடமாகவும் இருந்தது என்றும், இன்று இவ்விருவரும் நம்மிடம் இருந்து விடைபெற்று தாயகம் திரும்புவது நமக்கு ஒரு பேரிழப்பாகும். இருந்த போதிலும் 30 வருடங்களுக்கு மேலாக சவுதி அரேபியாவில் பணியாற்றி தாயகம் சென்று குடும்பத்தினருடன் இருந்து அங்கேயே தொழில் துவங்க இருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறோம் என்றும். அவர்கள் மேற்கொள்ளும் தொழில் துறையில் நல்ல அபிவிருத்தி அடையவும், எல்லா நலமும், வளமும் நீண்ட ஆயுளும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை உளமார பிரார்த்திகிறோம் என்று குறிப்பிட்டார்.”

அடுத்து வழமை போன்று நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டு கீழ் கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

- மருத்துவ வகைக்கு நான்கு பேர்களுக்கு ரூபாய் 80 ,000 /=(எண்பதாயிரம் )
- சிறுதொழில் வகைக்கு ஒரு நபருக்கு ரூபாய் 5 ,000 /= (ஐந்து ஆயிரம் )
- கல்வி வகைக்கு ஒரு மாணவருக்கு ரூபாய் 5 ,000 /= (ஐந்து ஆயிரம் ) ஆக மொத்தம் 90 ,000 /= ஒதுக்கீடு செய்யப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும் புகழ்சியும்.

நடப்பு ஆண்டு 2012 –ல் இதுவரை எமது அமைப்பின் முலம் 1 மில்லியன் இந்திய ரூபாய் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு அதிகபடியான ஒரு இலக்கை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை செயற்குழு உறுப்பினர்களின் பரந்த மனப்பான்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் கருணை உள்ளத்தினாலேயே எங்களால் எட்ட முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இதில் பங்களித்த அனைத்து நல்லுல்லங்களுக்கும் அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டுமாக. ஆமீன்!

எமது செயற்குழுவின் உறுப்பினர்களான அல்ஹாபிழ். பி.எம். முஹம்மது சர்ஜுன் மற்றும் எஸ்.எம். முஹம்மது லெப்பை ஆகியோர் வேலை நிமித்தம் ரியாதைவிட்டு சென்றதையடுத்து, அவர்களின் இடத்திற்கு அல்ஹாபிழ். ஏஸ்.ஏ.ஸி. அஹ்மது ஸாலிஹ் மற்றும் கே.எஸ். செய்யது சபீயுல்லாஹ் ஆகியோர் சென்ற கூட்டத்தின் அலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு எங்களின் மனமாற்ந்த வாழ்த்துக்கள்.

தொடர்ந்து மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி ஹைதர் அலி தனது உரையில் நமது மன்றத்தின் செயல்பாடுகள் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் இருப்பதாகவும் தம்மால் இயன்ற அளவு மன்றத்தின் செயல் பாடுகளில் பங்கு கொள்வேன் என்றும் தெரிவித்தார். இன்னும் விடை பெற்று செல்லும் மூத்த உறுப்பினர்களின் சேவையை நினைவு கூர்ந்தார். இவ்விருவர்களும் நமதூர் பெண் மக்கள் சிறு தொழில் கூட்டாக செய்ய ஆவன செய்யுமாறும், அதற்கு நமது மன்றம் என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை வைத்தார்.

தொடர்ந்து நமது பொதுக்குழு உறுப்பினர் லால்பேட்டையைச் சார்ந்த அப்துல் நாசர் அவர்கள் நமது மன்றத்தின் சேவை எனக்கு மிகவும் பிடிதிருக்கிறது, எத்தனையோ மன்றங்கள் பொழுது போக்குக்காக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஊரில் உள்ள வறிய மக்களுக்கு உதவும் மனப்பாங்கு உங்களை போன்ற வாலிப பிள்ளைகளுக்கு இருப்பதை எண்ணி அல்லாஹ்விடம் உங்களுக்காக என்றென்றும் பிரார்த்தனை செய்வதாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் விடைபெற்று செல்லும் மூத்த உறுப்பினர்களின் எஞ்சிய காலம் சிறப்பாகவும், சந்தோசமாகவும் அமைய பிரார்த்திகிறேன் என்று வாழ்த்தினார்.

தொடர்ந்து ஹாஜி வாவு கிதுறு முஹம்மது நமது அமைப்பின் செயல்பாடுகளை வாழ்த்தி வரவேற்றார்.

அடுத்து மன்றத்தின் தலைவர் மின்ஹாஜ், விடைபெற்று செல்லும் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி N.T. பாதுல் அஸ்ஹாப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் வழங்கினார் . மன்ற துணை தலைவர் ஹாஜி முஹம்மது நூஹு நமது மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி S .S .ஷாகுல் ஹமீது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார். தொடர்ந்து விடை பெற்று செல்லும் ஹாஜி S .S .ஷாகுல் ஹமீது அவர்கள் நன்றி தெரிவித்தார்.



அடுத்து விடை பெற்று செல்லும் ஹாஜி N.T . பாதுல் அஸ்ஹாப் அவர்கள் தமது நன்றயுரையில் ஐந்து ஆறு பேர்கள் இணைந்து ஆரம்பித்த இம்மன்றம் தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட நமதூர் மக்களை கொண்ட மிகப்பெரும் அமைப்பாக செயல்பட்டு வருவது மிகுந்த வாழ்த்திற்குரியது. நானும் ஷாகுல் ஹமீது அவர்களும் தொழில் ஸ்தாபனம் நடத்தி வந்த காரணத்தினால் ஒரு கூட்டத்திற்கு கூட வரமுடியாத சூழ்நிலை, பொது குழு கூட்டத்திற்கு மட்டும் வந்து தலைகாட்டி விட்டு சென்று விடுவோம் . இந்த செயற்குழு கூட்டத்திற்கு மட்டும் தான் முழுமையாக கலந்து கொள்ள முடிந்தது. இதில் கலந்து கொண்டது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.

எவ்வளவு அற்புதமான வேலை, வாலிப பிள்ளகைகள் போட்டி போட்டு நமதூர் வறியவர்களின் துயர் துடைக்கும் பணியில் வாரி வழங்குகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களை போன்ற எண்ணம் நமதூரில் எல்லா மக்களுக்கும் ஏற்படுமேயானால் நிச்சயமாக அல்லாஹ்வின் துணை கொண்டு எவ்வளவோ சாதிக்க முடியும். ஒரு குறுகிய நேரத்தில் 90 ,000 /= ரூபாய் ஒப்புதல் வழங்கி எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் நல்ல பெயர் வாங்கி விட்டீர்கள். இதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தொடர்ந்து வழிநடத்தி செல்லுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் வாழ்வில் வசந்தம் தொடர்ந்து தருவான். நாங்கள் ஊரில் இருக்கும் சமயம் நமது மன்றத்திற்கு எங்களால் முடிந்த எல்லா உதவிகளும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து செய்வோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் எல்லா நலமும் வளமும் தந்து நமது மன்றம் என்றென்றும் நமதூர் மக்களுக்கு தொய்வின்றி சேவை ஆற்றிட அருள் புரிவானாக. ஆமீன்! என்று தனது நன்றியுரையில் எடுத்துரைத்தார்.

இறுதியாக செயற்குழு கூட்ட நன்றியுரை, ஹாஜி சம்சுதீன் அவர்கள் வழங்கினார். அல்ஹாபிழ் P .S. J. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் துஆ ஓதி மற்றும் ஸலவாத்து ஓதி கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்குளும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுவையான சமூசா, கட்லெட், தம்மடை, நானாகத்தா, மற்றும் சுவையான டீ வழங்கப்பட்டது.




இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
A.H.முஹம்மது நுஹ்
துணைத்தலைவர்
ரியாத் காயல் நற்பணி மன்றம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துக்கள்.......
posted by Faizal Rahman (Doha- Qatar) [19 November 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 23949

அஸ்ஸலாமு அழைக்கும்,

என் அன்பிற்கினிய N T பாதல் அஷாப் காக்கா, S S சாகுல் ஹமீது காக்கா அவர்களக்கு பிரிவு உபசரிப்பு விழா ஒரு அருமையான நிகழ்வு.

நம் காயல் மக்களுக்கு வேலை வாய்பகட்டும், தங்கும் இடம் அணைத்து வசதிகளையும் செய்ய என்றுமே மனம் கோணாமல் உதவி செய்வதற்கு அவர்கள் தவறியது இல்லை.

அவர்களின் 30 ஆண்டு சவுதி வாழ்க்கை விட்டு இப்போது ஒய்வு பெற்று நம் காயல் மாநகரில் தொழில் தொடங்கி அவர்கள் குடும்பத்தார்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை தொடங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்.

இப்படிக்கு
பைசல் ரஹ்மான்
தோஹா- கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்.
posted by s.s.md meerasahib (kayalpatnam) [19 November 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 23950

எனது ரியாத் காயல் நலமன்ற உறுப்பினர் அனைவருக்கும் உங்களின் ஒருவனான எஸ்.எஸ்.முஹம்மது மீராசாஹிபின் அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் மன்றம் துவக்கம் முதல் பல இடையூறுகள் மத்தியிலும் இடஉதவி மற்றும் தகுந்த ஆலோசனைகள் வழங்கியும் வந்த நம் மன்றத்தின் முதல் தலைவரும், மூத்த உறுப்பினருமான எனது மாமனாருக்கும், சாச்சப்பாவுக்கும் செயற்குழு அழைப்பில் கண்ணியப்படுத்தி, துவாவுடன் கூடிய பிரிவு உபசரிப்பு நடத்திய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்வில் எனக்கு பங்கு எடுக்கமுடியாமைக்கு வருந்துகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் மன்றம் நீடூழி வாழ அருள்புரிவானாக ஆமீன்.

எங்களின் மன்றத்தில் இருந்து விடைபெறும் எனது மாமனாருக்கும், சாச்சப்பாவுக்கும் எம் மன்ற தலைவர் ஜனாப் M.N.மின்ஹாஜ் முஹிதீன் உரைத்ததையே...... முன்மொழிந்து வாழ்த்தி, நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நன்றி மறவேன்...இன்றளவும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [20 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23955

ரியாத் காயல் நலமன்றத்தின் உதவி மற்றும் சேவைகள் உன்னதமானது. அருமையான ஒத்துழைப்பும், ஆர்வமும் நிறைந்த நிவாகிகள், உறுப்பினர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். என் அருமை மைத்துனர் M.E.L.நுஸ்கி அவர்கள் மதீனா நல மன்றத்தில் இருந்த போது அவரது சேவைகள் ஊர் நலத்தில் உள்ள அக்கறை யாவையும் கண்டு நான் பல முறை வியந்துள்ளேன்.

N.T.பாதுல் அஸ்ஹாப் காக்கா, S.S.ஷாஹுல் ஹமீது காக்கா ஆகியோர் நலமுடன் தாயகம் திரும்பி வளமுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

1990-ல் நான் ரியாத் மாநகரில் இருந்த போது செல் ஃபோன்கள் கிடையாது. கடிதப் போக்குவரத்து மட்டும்தான் எங்களுக்கு உயிர் நாடியாக இருந்து வந்த காலம் அது! நமதூரிலும் வசதியானவர்கள் வீட்டில் மட்டுமே தொலைபேசிகள் இருந்தன. லேண்ட் ஃபோன் பேச வேண்டுமெனில் இங்குள்ள மெஷினில் ஒரு ரியால் காயின்ஸ் நிமிடத்திற்கு நான்கு விழு(ங்கு)ம். சலாம் சொல்லி அவர்களின் பதிலைப் பெறுவதற்குள் மூன்று காயின்ஸ்களை அது விழுங்கிக் கொள்ளும்.

சிங்கப்பூர் பிளாஸா மற்றும் டிரஸ் வெல் போன்ற ஸ்தாபனங்கள்தான் காயலருக்கு தலைமைச் செயலகமாக செயல் பட்டு வந்ததை என்னால் மறக்க முடியாது. கடிதம் மற்றும் பார்ஸல்கள் தேடிவரும் எங்களிடம் இவர்கள் வியாபார மும்முரத்தில் கூட ஒரு போதும் முகம் சுழித்தது கிடையாது. பலருக்கும் பல வகையில் உதவியும், வழிகாட்டியுமாக இருந்த பாதுல் அஸ்ஹாப் காக்காவை நான் இன்றளவும் நினைவு கூர்வதில் பெருமிதம் அடைகின்றேன்.

பெரும்பாலும் காயலர்கள் வெள்ளிக்கிழமை இரவில்தான் ஒன்று கூடுவோம். நண்பர்கள், சொந்த பந்தங்கள் வெளியூரிலிருந்து பார்க்க வந்தவர்கள் என பத்ஹா எனுமிடத்தில் ஒரே விழாக்கோலம் பூண்டிருக்கும் காட்சி, அடேயப்பா...! இத்தனை இந்தியர்களா? என மனதை நெகிழச் செய்யும்.

ரியாதில் வேலை தேடி வருவோர்க்கும், இக்காமா பிரச்சனைகளால் அபயம் தேடி வருவோர்க்கும் முத்துச்சாவடி அமைத்து தந்த பெருமை ரியாத் நல மன்றத்திற்கு உண்டு.

இம்மாமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் குறிப்பாக என் அருமை நண்பர் ஹைதர் அலி அவர்களுக்கும் என் உளமார்ந்த நற் சலாத்தைக் கூறிக் கொள்கின்றேன்.

ரியாத் நல மன்றத்தின் ஒப்பற்ற சேவையும் உயர்ந்த நோக்கமும் இறைவனிடத்தில் அதற்கான நற் கூலியை பெற்று தரும் இன்ஷா அல்லாஹ்!

-ராபியா மணாளன் (சஹாரா ரியாத் ஏர்போர்ட் ஹோட்டல் முன்னாள் ஊழியன்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...பிரியா விடை
posted by NIZAR AL (kayalpatnam) [20 November 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23958

ரியாத் காயல்மன்றம் செயற்குழுவில் நம் ஊரு மக்களுக்கு தொண்ணுறு ஆயிரத்தை வாரி வழங்கி இருப்பது நெஞ்சை தொடும் நிகழ்வாக இருக்கிறது. இன்றைய நம் இளைய சகோதாரகளின் பங்களிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது இதன் மூலம் விளங்க முடிகிறது.இந்த நிகழ்ச்சின் புகைபடத்தில், பாசத்துக்குரிய சகோதரர்களை பார்த்ததில் மிகுந்த சந்தோசமாக உள்ளது,

குறிப்பாக, நுஸ்கி, அபுல்ஹசன், மின்ஹாஜ், ஹைதர் மற்றும் ரியாத் இல் இருந்து பிரியாவிடை பெரும் என் மச்சான்மார்களை பார்க்க முடிந்தது.

எனக்கும் ரியாத்தில் இரண்டரை வருடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. வேலையில் சேர்ந்த என்னை தங்கும் இடத்துக்கு கூட்டு சென்று பிரமாண்டமான கட்டிடத்துக்கு அருகில் காரை நிறுத்தினார்கள். அஹா இப்படி ஒரு எடமா என்கிறபொழுது, எங்களை அந்த கட்டிடத்தின் பின்னால் கண்டைனர் டப்பாவில் தங்கவைத்து போன்ற பல சுவராசியமான நிகழ்வுகள் இன்றும் கண் முன்னே வந்து நிற்கிறது.

சொல்லென்னா துயரம் இருந்தாலும் வியாழன் பின்னேரம் முதல் வெள்ளி பின்னேரம் வரை சிங்கப்பூர் பிளாசாவில் கிடைக்கும் சந்தோசம் அத்துணை கவலையும் மறக்கும் இடமாக இருந்தது என்றால் மிகையாகாது.

மேலும் நம் ஊரு மக்களுக்கு இந்த கடை தபால் அலுவலமாக இருந்தது மட்டுமல்லாமல் நம் ஊரு மக்களிடம் மச்சான்மார்கள் மிகுந்த அன்புடன் கடையிலும் வீட்டிலும் நடந்து கொள்வார்கள்.

நம் ஊரு பிள்ளைகளுக்கு பிரச்சனைகள்,ச ங்கடங்கள் ஏற்பட்டால் தாங்களாகவே முன்வந்து உதவுவது எல்லோருக்கும் தெரிந்ததே.

பத்தாவில் சிங்கப்பூர் பிளாசா என்பது நம் ஊரு மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு சிறந்த லேண்ட்மார்க்காக விளங்கியது என்றால் பாருங்களேன்.

இப்படிபட்ட அனுபவம் நிறைந்த சாகுல் மச்சான், பாஜு மச்சானை ரியாத் சகோதரர்கள் பிரிவது மிகுந்த சங்கடமும், இழப்பும் ஆகும். ,அவர்களை வாழ்த்தி பிரியாவிடை கொடுத்த இனிமையான காயல் ரியாத் சகோதரகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெர்விதுகொல்கிறேன்.

வரும் காலங்கள் அவர்களுக்கு வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:... வாழ்த்தி வழி அனுப்புகிறோம்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [20 November 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23968

ரியாத் நகரை விட்டும் பிரியா விடை பெரும் எனது அருமை சகலை சாகுல் ஹமீது மற்றும் எனது அருமை மச்சான் பாதுல் அஷாப் அவர்களை வாழ்த்தி துவா செய்து வழி அனுப்பி வைப்பதில் நானும் பெருமை படுகிறேன் .

அவர்கள் இருவருமே நம் காயல் நகர மக்களுக்கு என்றுமே உருதுணையாகவும் , நல்ல பல அலோசனைகளையும் தந்து பல நேரங்களில் நிறைய உதவிகளையும் செய்து உள்ளார்கள் .இந்த நேரத்தில் நாம் அதை நினைத்து பார்பதுடன் , அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளோம்.

அவர்கள் தாயகம் சென்று குடும்பத்தினருடன் இருந்து அங்கேயே தொழில் துவங்க இருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன் அவர்கள் மேற்கொள்ளும் தொழில் துறையில் நல்ல அபிவிருத்தி அடையவும், எல்லா நலமும், வளமும் நீண்ட ஆயுளும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை உளமார பிரார்திக்கிறேன்.

வல்ல நாயன் அவர்களின் எல்லா முயர்சிகளிலும் வெற்றியினை கொடுத்து அவர்களின் வாழ்வு வளம்பெற அருள்புரிவான .ஆமீன். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. N.T.B அவர்களும் ,சாகுல் ஹமீத் அவர்களும் நம் தாயக மண்ணில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [20 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23977

1978 ஆம் வருடம் ரியாதில் அல்ஜுமேய் நிறுவனத்தின் வீட்டில் வசிக்கும் என்னையும், என் நண்பர் மெய்னாகாதரையும் சந்திக்க வந்திருந்த என் அருமை நண்பர் N.T.பாதுல் அஷாபும், மரியாதைக்குறிய ஹபீப் ஹாஜியார்(நெசவு தெரு) ஆகியோரும் ஜும்மா தொழுதபின்னர் பகல் உணவை முடித்து விட்டு, நமதூர் மக்கள் ரியாதில் எத்தனைபேர் இருக்கிறோம் என்று எண்ணத் தொடங்கிக்னோம், ஒழுங்கா எண்ணினால் ஒன்பது, பத்தை தாண்டவில்லை. அவ்வளவு குறைவானவர்கள் இருந்தோம்.

அக்குறைவானவர்களை வைத்து அவர்களிடமிருந்து பண உதைவியைப்பெற்று நமதூரில் இருக்கும் ஏழை எளியவருக்கு உதவினால் என்ன? என்ற நல்லெண்ண கால்கோலை அன்று ஊன்றினோம். அந்த நல்லெண்ண காற்று அரபு மண்ணில் அங்கெனாதபடி எங்கும் வீசியதால், ஏராளமான நல மன்றங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு கொண்டு புண்ணியங்களை செய்து குவிக்கின்றன.அல்ஹம்துலில்லாஹ்!

ரியாதில் எவருக்கும் எந்த இக்கட்டான நேரத்தில் ஒரு நெருக்கடி வந்தாலும் ஓடோடிச்சென்று உதவ முன்வருபவர்களில் ஒருவரான அருமை நண்பர் N.T.B யின் சேவை என்றும் என் இதயத்தில் பதிவு ரேகையாக பதிந்துள்ளது.

EXIT அடித்து ஏர்போர்ட்டில் பயணமேற்கொள்ளவிருந்த காயல் சகோதரை காப்பாற்றி, அவருக்கு வேலை வாங்கி கொடுத்ததோடு, எராளமான நமதூர் நண்பர்களுக்கும் வேலை வாய்ப்புகளையும் பெற்று கொடுத்ததின் புண்ணிய பணியின் முன்னணி வரிசையில் ஒருவரானவர் N.T.B என்றால் அது மிகையல்ல!

அன்பு நண்பர்களான N.T.B அவர்களும் ,சாகுல் ஹமீத் அவர்களும் நம் தாயக மண்ணில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்!

அரபகத்தில் தற்போதுள்ள நிலைமை, அடுத்தவர்களுக்கு வேலைபெற்று தரக்கூடிய அளவிற்கு, அவர்களுக்கு கால அவகாசமில்லாமல் பெரும்பாலோர்கள் பறந்துகொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்! அது உண்மைச்செய்தி என்றால் அது வருத்தமான செய்தியே!

நம் காயல் மண்ணின் மைந்தர்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள், அப்படி ஒதுக்கும் நேரமானது அந்த வேலையற்றவருக்கு மட்டுமல்ல அந்த குடும்பத்திற்கு வாழ்ஒளி ஏற்றிய ஒப்பற்ற உன்னத காரியத்தை செய்த மன நிம்மதியைப்பெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ்!

உதாரணத்திற்கு தற்போது நான் வசிக்கும் யான்போ நகரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அமைதியான அழகான ஊர் மட்டுமல்ல, வளர்ச்சியின் உச்சாணியை எட்ட எறும்பை விட சுறுசுறுப்பாக இயங்கும் இலட்சக்கணக்கான வேலையாட்களும், வல்லுனர்களும் விடிபொழுது வரை உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்

இங்கு நம் நண்பர்களுக்கு வேலைவாங்கி தருவதில் நம் காயலர்கள் மும்முரம் காட்டுகிறார்கள், குறிப்பாக மரியாதைக்குறிய ஹாஜி "கலவா" அபுபக்கர் அவர்கள் அவர்களின் தம்பி இபுறாகீம், வெல்கம் சிங்கை ஹவ்ஸ், S.T.நிறுவனதர்களாகிய சுல்தான் வகையராக்கள் மற்றும் ராயல்கமிஷன் சகோதரர்கள் அனைவர்களும் மிக, மிக அக்கறையுடன் செயல்படுவதைப்பார்த்து பெருமையும் பெருமகிழ்வும் அடைகிறேன் அல்ஹம்திலில்லாஹ்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Cnash (Makkah ) [20 November 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23978

ரியாத் என்றாலே எனக்கு பாதுல் அஷாப் மாமா நினைவுதான் முதலில் வரும்...

12 வருடங்கள் ஓடி விட்டது.... நேற்று நடந்தது போல் இருக்குது,, ஏதோ பல வருடங்கள் பழகியது போல் பாசம் காட்டும் பண்பு, உபசரிப்பு என்றும் மாறா புன்னகை ...

ரியாதில் இருந்த அந்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் .சிங்கப்பூர் பிளாசா வையும் பாதுல்அஷாப் மாமாவையும் பார்த்துவிட்டு வந்தால்தான் ஆறுதலும் ஊரை பார்த்தது போல சந்தோசமும் கிடைக்கும்.

அதே போலதான் சாகுல் ஹமீது காக்காவும். உங்கள் பணி ரியாத் இல் நிறைவு பெற்று காயல் திரும்பும் உங்களுக்கு அல்லாஹ் எல்லா வித நலத்தையும் , பரக்கத்தையும், பூரண சுகத்தையும் தர வேண்டி வல்லோன் இடம் பிராத்திக்கிறோம்..

என்னை போன்ற எத்தனையோ மருமக்களின் துஆ உங்களுக்கு எப்போதும் உண்டு .. அல்லாஹ் உங்கள் இருவரின் எல்லா காரியங்களிலும் வெற்றியை தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Muzammil (Dubai) [20 November 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23984

நமது காயல் மக்கள் ஒன்று கூடும் கேந்திரமாக சிங்கபூர் பிளாசா இருந்தது . நான் ரியாத் வந்த போதில் 2002 ல் இந்த சிங்கபூர் பிளாசா தான் அடைக்கலமும் ஆதரவும் தந்ததை மறக்கமுடியாது.

30 வருடங்களுக்கு மேலாக சவுதி அரேபியாவில் பணியாற்றி தாயகம் சென்று குடும்பத்தினருடன் அவர்கள் மேற்கொள்ளும் தொழில் துறையில் நல்ல அபிவிருத்தி அடையவும், எல்லா நலமும், வளமும் நீண்ட ஆயுளும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை உளமார பிரார்த்திகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...நம்ப முடியவில்லை
posted by mackie noohuthambi (Kayalpatnam) [21 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23996

என்ன? பாதுல் அஷாப் ஷாகுல் ஹமீது நாடு திரும்புகிறார்களா நம்ப முடியவில்லையே அவர்கள் ரியாத் நகரை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு பெருநாள்களிலும் காயல் நல மன்றங்கள் கூடிய நாட்களிலும் நமதூர் மக்களுக்கு இன்முகத்துடன் அவர்கள் உணவளித்து சேவைகள் செய்ததை என் போன்றவர்கள் மறக்க முடியுமா....

தொழில் அதிபர்களாக ஏற்றம் பெற்று உயர் நிலைய அடைந்து இருந்தவர்கள் அந்த நாட்டின் சிறப்பு பிரஜைகளாகி இருப்பார்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் வாழ்ந்த நாடு அமெரிக்காவாக இருந்தால் இது வரை GREEN CARD.. பெற்று அந்த நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முக்கிய நபர்களாகி இருப்பீர்களே....

நமதூரில் தொழில் செய்ய புறப்பட்டு வருகிறீர்கள்...வாருங்கள் தொழில் மயமான இந்தியா ஒளிமயமான காயல்பட்டினம் உங்களை வரவேற்கிறது.. அந்நிய நாட்டினரே நம் நாட்டில் முதலீடு செய்து சில்லறை வர்த்தகம் செய்வதற்கு நமது அரசாங்கம் பச்சை கொடி காட்டிய பிறகு நீங்கள் இங்கு வந்து உங்கள் முத்திரையை பதிக்கத்தான் வேண்டும்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [21 November 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23999

நான் சார்ந்து இருக்கும் நமது ரியாத் காயல் நற்பணி மன்றம் ஓசை எழாமல் ஊருக்கு பல பல நல்ல உதவிகளை வழங்குகிறது இன்ப சந்தோசம். விளம்பரம் தேவை இல்லை அல்லாஹுவின் உதவி மட்டும் போதும் என்று ஊருக்கு உதவுகிறார்கள்.

N.T பாதுல்அஷாப் காக்க அவர்களை நாங்கள் சின்ன MGR என்று அழைப்போம். அவர்கள் கடையல் ஊரில் இருந்து வரும் கடிதங்களை வைபதற்கு தனி இடத்தை ஒதுக்கி உதவி புரிந்தவர்கள். வீட்டுக்கு போனால் புன்முறுவலுடன் அழைப்பார்கள். காயலருக்கு ஒரு முத்துசாவடியாக இருந்தது அவர்கள் வீடு. 30 வருஷம் கடந்து ஊரு போகும் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக அமீன்.

என்றும் உங்கள்
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved