Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:23:20 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9639
#KOTW9639
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 18, 2012
கே.டி.எம். தெரு குடிமக்களை அச்சுறுத்தும் குப்பைக் கழிவுகள்! விரைவான நடவடிக்கையை எதிர்பார்த்து பொதுமக்கள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3817 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில், தாயிம்பள்ளியிலிருந்து வடபுறத்திலுள்ள குடியிருப்புகளின் உட்புறத்தில் நாராயண ஓடை என்ற பொது ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தவிர மற்றவை கொஞ்சங்கொஞ்சமாக சுற்றுவட்டார பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க எஞ்சிய ஓடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழியின்றி குப்பைகளைத் தேக்கும் இடமாக மாறியுள்ளது. அப்பகுதியில் வீடுகளைக் கொண்டுள்ளோர் தம் வீட்டுப் பின்புறங்களை மட்டும் சுத்தமாகப் பார்த்துக்கொள்வதாகவும், எஞ்சிய பகுதிகளில் யாரும் பார்க்காத நேரங்களில் தம் வீட்டுக் குப்பைகளைக் கொட்டிச் செல்வதாகவும், இதனால் எல்லாக் காலங்களிலும் - குறிப்பாக மழைக்காலங்களில் ஈ, கொசு, விஷ ஜந்துக்கள் பெருகி, வீடுகளுக்கு உட்புறம் வரை வந்து அச்சுறுத்துவதாகவும், அப்பகுதியிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள்.









ஏற்கனவே இந்த ஓடை நகர்மன்றத் துணைத்தலைவரும் - அந்தப் பகுதியை உள்ளடக்கிய 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் முயற்சியில், நகராட்சி மூலம் துப்புரவு செய்யப்பட்டது குறித்து அவர்களிடம் வினவுகையில், அந்த ஓடையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே சுத்தம் செய்யப்பட்டதாகவும், இதர பகுதிகளில் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும், இதுநாள் வரை பலமுறை அவரிடம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீனிடம் வினவுகையில், இதுவரை அந்தப்பகுதியிலுள்ள குப்பை குறித்து யாரும் முறையிடவில்லை என்றும், தனது வார்டில் சுகாதாரக் கேடு என யார் தகவல் தந்தாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தான் ஆயத்தமாகவே உள்ளதாகவும், தற்போது தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mauroof (Dubai) [18 November 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23919

குப்பைக் கொட்டுதலும்! குணங்கெட்ட மக்களும்!! என்று N.S.E. மஹ்மூது மாமா அவர்களின் கட்டுரை தலைப்பை நினைவுகூர்வதை தவிர்த்து வேறென்ன சொல்ல முடிகிறது?

மற்ற நல்ல கருத்துக்களை கருத்துப்புயல்கள் மற்றும் காயல் கலைவாணர்கள் முறையே பதிவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மனிதனுக்கு சுய புத்தியே இல்லையா?
posted by OMER ANAS (DOHA QATAR.) [18 November 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23923

இதுகுறித்து நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீனிடம் வினவுகையில், இதுவரை அந்தப்பகுதியிலுள்ள குப்பை குறித்து யாரும் முறையிடவில்லை என்றும், தனது வார்டில் சுகாதாரக் கேடு என யார் தகவல் தந்தாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தான் ஆயத்தமாகவே உள்ளதாகவும், தற்போது தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

தம்பி முஹியத்தீன் அவர்களே, நான் சொல்லுவது தப்பாக இருப்பின் மனம் பொருந்தவும். உம் பகுதியில் உள்ள குறைகளை நீர்தான் கண்டு அறியணுமே தவிர ஒருவனும் உம்மைத் தேடி வரக்கூடாது. நீர் சார்ந்த பகுதியில் உள்ள குறைகளை நீரே கண்டு அறியனுமேத் தவிர, மக்கள் உம்மைத் தேடி வரச்சொல்லக் கூடாது. நீர்தான் உங்களுக்கு நான் என்ன செய்திட வேண்டும் இனி என்று மக்களிடம் முறையிட வேண்டுமே தவிர மக்கள் உம்மிடம் முறையிடச் சொல்லாதீர்.

அப்பதான் நீர் மக்கள் தொண்டன்.இல்லையேல்....?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [18 November 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23925

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த மாதிரி குப்பைகள் நம் ஊரில் நிறைய பெண்கள் முடுக்கு பகுதிகளில் ...நிறைய இடங்களில் காணபடுகிறது.....இது போன்ற தகவல்களை தயவு செய்து நம் மரியாதைக்குரிய ...உறுப்பினர்கள் அவர்கள் ஏரியாக்களை அறிந்து ....நம் பொது மக்களின் நலம் அறிந்து ...குப்பைகளை அகற்றினால் ரொம்பவும் நல்லது ...

இது போன்ற மோசமான குப்பைகள் தேங்கி மொத்தமாக இருப்பதால்தான் ...நம் மக்களின் உடல் நலம் பாதிக்கிறது....ரொம்பவும் பாதிப்பது வீட்டில் உள்ள வயதானவர்கள் / குழந்தைகள் தான் ....

இப்போதைய சூழ் நிலைமையில் கண்டிப்பாகவே இந்த குப்பையை துரிதமாகவே அப்புற படுத்தி விடனும் ...நம் ஊரின் இப்போதைய சூழ் நிலைமை கிளைமேட்டு மாறுவதாலும்...நம் மாவட்டம் / பக்கத்து மாவட்டகளில் '' வைரஸ் காச்சல்'' வேறு பரவி வருவதாலும் ....நாம் தான் கவனமாக இருக்கவேணும் ...குப்பையை அப்புற படுத்துவதில் முழு கவனத்துடன். நம் நகர் மன்ற துணை தலைவர். S.M.முஹைதீன் அவர்கள் செய்வார்கள் .என்பது நமக்கு நன்கு தெரியும் ... அவரின் இவ் வார்த்தையில் இருந்தே நாம் அறியலாம் ...

>>>>>>>>>>>>>இதுவரை அந்தப்பகுதியிலுள்ள குப்பை குறித்து யாரும் முறையிடவில்லை என்றும், தனது வார்டில் சுகாதாரக் கேடு என யார் தகவல் தந்தாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தான் ஆயத்தமாகவே உள்ளதாகவும், தற்போது தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார <<<<<<<< அன்பு துணை தலைவர் .S.M.முஹைதீன் அவர்களின் வார்த்தையை ( இக்கருத்தை ) மனதார வரவேற்று ....பாரட்டுகிறேன் ...

இது போன்று நம் துணை தலைவர் .S.M.முஹைதீன் அவர்கள்........ அவர்கள் தொகுதில் தம் நேரடி பார்வையில் முன்பு ஒரு தடவை .. குப்பைகளை அகட்டியதை நாம் பார்த்து இருக்கிறோம் .....அந்த நம்பிக்கை தான் நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.......

நம் ஊர் பொது மக்களை பாதுகாப்பது ....நம் நகர் மன்றதின் ...கடமை அல்லவா...அந்த முழு நம்பிக்கை வினாகது ..என்று நாம் நம்புவோமாக .... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [18 November 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23926

என்னத்தைதான் படம் வரைந்து பாகம் குறித்தாலும், NSE மாமா கட்டுரை வடித்தாலும் ஊஹூம்.. மக்களுக்கு ஏறவே ஏறாது. இறைபயம், தனி மனித ஒழுக்கம் இல்லாதவரை ஒன்றும் பயன் கிடையாது.

யாரை குற்றம் சொல்லுவது என்று புரியவில்லை.

* நகராட்சி வண்டி காலையில் ஒரு முறை கரகரத்த ஹாரனை அடித்து, குப்பையை அள்ளிக்கொண்டு சென்று விடுகிறார்கள்.

அடுத்த ஹாரன் நாளையோ அல்லது மறுநாளோ அல்லது அடுத்த நாளோ அடிக்கும். அதுவரை வீட்டில் சேரும் குப்பைகள், கோழி கழிவுகள், இறால் கழுவின தண்ணீர் ஆகியவற்றை என்ன செய்வது..?

- ஒன்று தன் வீட்டிற்க்கு அருகில் கொட்டுகிறார்கள், அல்லது அடுத்த வீட்டுக்கு அருகில் கொட்டிவிடுகிறார்கள், அல்லது வீட்டு வேலைக்காரி வேலை முடித்து போகும் சமயம், பொட்டலம் கட்டி அவர்களிடம் கொடுத்து, போகும் பொது வீசிவிட்டு போ என்று கொடுத்து விடுகிறார்கள்.

** இந்த குப்பைகளை கண்டால் அனைத்து வியாதிகளும் கண்டிப்பாக வரும் என்பது உ. கை. நெ. கனி.

** இவ்வளவு குப்பைகள் அங்கு இருப்பது நகரமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியமே.! நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவருக்கு நன்றிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Ahamed Shahul Hameed(AbuSabu) (Kayalpattinam) [18 November 2012]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 23927

Assalaamu Alaikkum.

Avaravar veetu kuppaigalai Dhinamum varum kuppai vandiyil kottinaley.Moopanar odaiyil "Mookkai"pidithu kondu pogavendiya Avasiyam varathu.Photokku Bose kodukka Kuppaimettai thediyum pogavendi varaathu.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அந்த நாறும் ஓடை கண்டிப்பாக தூய்மையாக்கப்பட வேண்டும்.....
posted by Shuaib (Jeddah) [18 November 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 23931

அந்த நார ஓடை ( நாறும் ஓடை என்றழைப்பதே சரியாகப்படுகிறது ) எனும் நாராயண ஓடையில் குப்பைகள் மட்டும் கொட்டப்படவில்லை, கான் / கழிவு / சாக்கடை தண்ணீரும் சர்வ சாதாரணமாக ஓடுகிறது.

அதன் பக்கத்து குடியிருப்புகளுக்கு ( கே.டி.எம்.தெரு மற்றும் நெசவுத் தெரு மக்களுக்கு ) மிகுந்த பாதிப்பை உண்டு பண்ணுகிறது அந்த நாறும் ஓடை.

மழை காலங்களில் அந்த குப்பைகளில் தேங்கிய நீரும், அந்த கழிவு நீர் சாக்கடையில் கலந்த நீரும் சேர்ந்து ஒருவித ராட்ச்சச / பயங்கர துர்வாடையை உமிழும் ( உடல் பலகீனமானோர் அந்த துர்வாடையை நுகர்ந்தால் சாவு நிச்சயம் என்ற ரீதியில் வீசும் )

நிழற்படக்கருவி அந்த சாக்கடை நீரை CLICK பண்ணவில்லையே. இந்த நிழற்படம் உள்வாங்கி எடுக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் அப்படி முன்பாக தாயிம்பள்ளி மையவாடி பின்புறம் வரை வந்திருந்தால் அந்த சாக்கடை நீர், அங்கு வளர்ந்திருக்கும் உடை மரம், இன்னும் நிறைய குப்பைகள் CLICK பண்ணப்பட்டிருக்கும்.

B.A.சேகு காக்கா அவர்கள் அந்த நாறும் ஓடை குறித்த செய்தியை பல நாட்களாக சொல்லுவார். தற்போதுதான் அவருக்கு நேரம் கூடி வந்ததுபோல தளத்தில் போட்டு செய்திகளை மக்களோடு பகிர்ந்து கொள்ள.

அன்புச் சகோதரர் நகராட்சி துணைத்தலைவர் அந்தப் பகுதி உறுப்பினர் மும்பை முஹ்யித்தீன் அவர்கள் இது விடயம் குறித்து கூடுதல் அக்கறை எடுத்து அந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்தி ( எவ்வித குப்பைகளும், எந்த கழிவு நீரும் அங்கு காணாதவாறு ) சுகாதாரமாக்கித்தர உரிய முயற்சிகளை விரைந்து எடுக்கும்படி கே.டி.எம்.தெரு மற்றும் நெசவு தெரு மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்.

அரபி ஷுஅய்ப்.
ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தூய்மையான மார்க்கம்! தூய்மையை அலட்சியம் செய்யும் மக்கள்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [18 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23933

அப்போது என்னிடம் சைக்கிள்தான் இருந்திச்சு... காலை சுமார் பத்து மணிக்கு உம்மா வீட்டுக்குப் போய் கொண்டிருந்தேன். ஜலாலியா தாண்டி பஞ்சாயத்து உள் ரோட்டில் திரும்பிய போது ஒரு நபர் வேகமாக சைக்கிளில் என்னைத் தாண்டி சென்றார். என்ன அவசரமோ? என நானும் கண்டுகொள்ளவில்லை. அவர் சைக்கிளிலிருந்து ஒரு கேரி பேக் தொப்பென்று விழுந்ததைக் கூட அவர் கண்டு கொள்ளாமல் வேகமாக குத்துக்கல் தெருவிற்குள் வளைந்து விடார். அட! பாவமே என்று நானும் விரைந்து சென்று ரோட்டின் நடுவில் கிடந்த கேரி பேக்கை கையில் எடுத்தேன். துர்வாடையும், ஈரப்பதமும் கையில் தொற்றிக் கொள்ள உள்ளே இருந்தது இறால் கழிவுகள் என்னை முகம் சுழிக்க வைத்தது.

ச்சே! பாவி மனுஷன் இதை அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் போட்டிருக்கலாமே? இப்படி நடு ரோட்டில் வீசிட்டு போறாரே? விடக்கூடாதுன்னு அந்த நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் சைக்கிள் ஹேண்டில் பாரில் மாட்டிக்கொண்டு பறந்தேன். அவரோ சூஃபி மன்ஸில் பக்கத்தில் சர்வ சாதாரணமாக சென்று கொண்டிருந்தார். மடக்கி பிடித்து காக்கா உங்க கேரிபேக் கீழே விழுந்திடுச்சு...இத பிடிங்க கவனமா கொண்டு போங்கன்னு அவர் கையில் வலுக்கட்டாயமாக கொடுத்தேன்.

அவர் திரு திருவென முழித்து இது எண்டெ இல்லெ! நீங்க ஆள் தெரியாமெ தந்திருக்கீங்கன்னு மறுக்கவே அவர் சைக்கில் மர்கார்டில் இருந்த ஈரத்தை விரலால் வளித்து மோந்து பாருங்க.. இது உங்களுக்கே நல்லா இருக்கா? அல்லஹ்வுக்கு பயப்பட வேண்டாமா? எத்தனை பேர் பதுவாச் செய்வாங்க? இனி இப்படி செய்யாதீங்க! என நான் கூறிய பின் அவர் குற்ற உணர்வில் என்னிடம் மன்னிப்பு கோரி வாங்கிக் கொண்டார்.

சரி நீங்க போங்க நான் அந்த வழியாத்தான் போறேன் நானே குப்பையில் கொண்டு போட்டு விடுகிறேன் என்றேன். இல்லை தம்பி நான் செஞ்சது தப்புதான். ஏதோ அவசரத்துலெ இப்படி செஞ்சுட்டேன் நீங்க போங்க என்றார்.

பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்தே சென்று உரிய இடத்தில் அக் கழிவுகளை போட்டு விட்டு அருகிலிருந்த டீ கடையில் தண்ணீர் வாங்கி கைகளை கழுவி முகமன் கூறி பிரிந்தோம்.

அன்று நான் ஏதோ ஒரு பெரிய நன்மையைச் செய்த திருப்தியில் வீடு திரும்பினேன். இப்பொது அவர் என்னை எங்கு கண்டாலும் தம்பி சுகமாயிருக்கீங்களா? ன்னு விசாரிப்பார்.

குப்பை விஷயத்தில் நம் மக்களுக்கு விப்புணர்வும், இறையச்சமும் வராத வரையில் குப்பைகள் மண்டிக்கிடப்பது வீதியோரங்களில் மட்டுமல்ல அவர்களின் மனதிலும் தான்! தூய்மையான மார்க்கம்! தூய்மையை அலட்சியம் செய்யும் மக்கள்! சொல்லிப் பார்ப்போம் திருந்துவார்கள். இன்ஷா அல்லாஹ்...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Got an Idea
posted by Riyath (HongKong) [19 November 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 23937

Glad to know that Vice president of Municipality promised to clean this Narayana mini road.

I would like to propose my Idea here that dont just stop only with cleaning of road and think about aware people to not repeating same mistake by painting side walls with Quran Ayath with tamil tranaction and great history of the raod.

**Wasalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by suaidiya buhari (chennai) [19 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23943

assalamualaikum

சுத்தம் பன்னுவது பெரிதல்ல, அடுத்து குப்பை கொட்டாமல் பக்கத்து மக்கள் பாதுக்காக வேண்டும், இதனை கிளீன் பண்ண முன் மக்களிடம் கிளீன் ஆகாவைக்கும் படி முறை இட்டு குறிபிட்ட இடத்தில் "கீப் கிளீன்" எண்டு போர்டு வைக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. மக்கள் மனதில் மாற்றம் வேண்டும்
posted by S.A.MUHAMMAD ALI VELLI (Dubai) [19 November 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23944

நமது ஊரில் தோட்டங்கள் எல்லாம் வீடுகளாக மாறி வரும் வேளையில் காற்றோட்டமாக, சுகாதாரமாக வாழ்ந்த நாட்கள் எல்லாம் காணாமல் போய் விடும் போல் தெரிகிறது.

வீட்டில் உள்ள கழிவு நீரை கொட்டுவதற்கு கூட இடம் இடம் இல்லாமல் போய் விட்டது. போதிய வசதியின்மையால் பல சுகாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இது போன்று குப்பைகளை கொட்டுவதால் தொற்று கிருமிகள் பரவ வாய்ப்பாக அமைகிறது. மக்களின் சுயநலம் கொசுக்களுக்கு பொது நலமாகி விடுகிறது. அது குப்பை கொட்டியவர்களையும் விட்டு வைப்பதில்லை.

நம்முடைய பெண்களுக்கு சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம். சுத்தம் ஈமானில் பாதியாகும். உடல் சுத்தம், உடை சுத்தம் எவ்வாறு முக்கியமோ அதே போல் சூழல் சுத்தமாக இருப்பதும் அவசியம். தன் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்தால் போதும் என்று இல்லாமல் தனது சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ண வேண்டும். இந்த நாராயண ஓடையில் குப்பைகளை நீக்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் புதுபொலிவுடன் காண ஆசையாக இருக்கிறது. குப்பைகளை அகற்றிய பின் போட்டோ போடவும். இணைய தளத்தில் இந்த செய்தி வந்த பிறகு தான் இதற்கு ஒரு தீர்வு ஏற்படுகிறது என்பது மீடியாவின் சக்தி எந்த அளவிற்கு உள்ளது என்பதை எடுத்து காட்டுகிறது.

தொடரட்டும் உங்கள் மக்கள் பணி. இறைவனிடம் இதற்குரிய கூலி நிச்சயமாக உண்டு. காற்று வீசும் இடமெல்லாம் பரவட்டும் உங்கள் புகழ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [19 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23945

"குப்பை விஷயத்தில் நம் மக்களுக்கு விப்புணர்வும், இறையச்சமும் வராத வரையில் குப்பைகள் மண்டிக்கிடப்பது வீதியோரங்களில் மட்டுமல்ல அவர்களின் மனதிலும் தான்! தூய்மையானமார்க்கம்! தூய்மையை அலட்சியம் செய்யும் மக்கள்"!

சகோதரர் ரபீக் அவர்களின் எப்படிப்பட்ட எதார்த்தமான உண்மை வார்த்தைகள். நன்றி ரபீக் அவர்களே!

அந்த புகைப்பட காட்சியைப்பார்த்த உடனேயே பச்சைபுள்ளை கூட சொல்லிவிடும் நம் மக்களின் பொறுப்பற்ற தன்மையையும், நகராட்சியுடன் ஒத்துழைக்காத சுயநலத்தையும்.

இரு கைகைகள் தட்டினால் தான் ஓசை என்பது உலகம் அறிந்த உண்மை தத்துவம். மக்களும், மக்களால் தெறிவு செய்த உறுப்பினரும் ஒன்றன கலந்து ஒத்துழைப்புடன் காரியமாற்றினால்தான் நாம் வெற்றி இலக்கை எட்டமுடியும்.

சகோதரர் முகையதீன் அவர்களே, அது உங்கள் வார்டு உங்கள் பிள்ளை. அது ஒழுங்காக வளருகிறதா என்று கண் காணிப்பது உங்கள் கடமையல்லவா? அடுத்தவர்கள் சொல்லட்டும் என்று எதிர்பார்ப்பது எந்த அளவிற்கு பொறுப்புணர்ச்சியற்ற பதில் எபதும் தாங்கள் அறியாதது அல்ல!.

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved