Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:59:33 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9674
#KOTW9674
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 24, 2012
தகுந்த இடம் கிடைத்தால் ஏ.டி.எம். கருவி நிறுவப்படும்! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டத்தில் தெரிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2973 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகரில் தகுந்த இடம் கிடைத்தால், புதிய ஏ.டி.எம். கருவி நிறுவ ஆவன செய்யப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டத்தில் அதன் மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காயல்பட்டினம் கிளையின் வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டம், 22.11.2012 வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், வங்கி வளாகத்தில் நடைபெற்றது.

வங்கியின் மூத்த வாடிக்கையாளர்களுள் ஒருவரான ஜெஸ்மின் ஏ.கே.கலீல் முன்னிலை வகித்தார். வங்கி மேலாளர் குணசேகரன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, வாடிக்கையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.





*** வங்கியின் பெண் வாடிக்கையாளர்கள் பொதுப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், பெண்கள் பகுதியில் திருப்தியான சேவை தரப்பட வேண்டும்...

*** வங்கி அலுவலர்கள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்...

*** பழுதடைந்துள்ள ஜெனரேட்டர் விரைவில் சரிசெய்யப்பட வேண்டும்...

*** வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குப் புத்தகங்களைப் பாதுகாத்து வைத்து, அவர்கள் கேட்கும்போதே கொடுக்கப்பட வேண்டும்...

*** வங்கியின் பணப்பரிமாற்றத் தேவைக்கான அனைத்து வகைப் படிவங்களும் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி வைக்கபட வேண்டும்...

*** வங்கி வளாகத்திற்கும், ஏ.டி.எம். கருவிக்கும் காவலர் நியமிக்கப்பட வேண்டும்...

*** பணப் பரிமாற்றம் நடைபெறும் அனைத்து கவுண்டர்களிலும் பணம் எண்ணும் கருவி இருக்க வேண்டும்...

*** 6 மாதங்களுக்கொருமுறை நடைபெறும் இந்த வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டம் முற்கூட்டியே அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் - ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட வேண்டும்...

*** Online Banking வசதி குறித்த விரிவான தகவல்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்...

*** நகரின் இதர பகுதிகளிலும் ஏ.டி.எம். கருவி நிறுவப்பட வேண்டும்...


என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இக்கூட்டத்தில் வாடிக்கையாளர்களால் முன்வைக்கப்பட்டது.

அவற்றுக்கு விளக்கமளித்து வங்கி மேலாளர் குணசேகரன் பேசுகையில்,

*** தற்போது வங்கியில் போதிய அளவுக்கு அலுவலர்கள் இல்லாத காரணத்தால் பெண்கள் பகுதியில் சில நேரங்களில் சேவை தடைபடுகிறது...

வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டம் வங்கி வளாகத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது... எனினும், இனி வருங்காலங்களில் உள்ளூர் ஊடகங்கள் வாயிலாகவும் அறிவிக்க ஆவன செய்யப்படும்...

*** ஆன்லைன் பேங்கிங் வசதி குறித்த தகவல்கள் விரைவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்படும்...

*** கடைகள் அமைந்துள்ள பகுதிகளில், பாதுகாப்பான இடம் கிடைத்தால், அங்கு ஏ.டி.எம். கருவி நிறுவ ஆவன செய்யப்படும்...


என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில், வங்கி வாடிக்கையாளர்களும், அலுவலர்களும் திளராகக் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பெண்களே ஆண்கள் பகுதிக்கு வராதீர்கள் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [24 November 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24081

அஸ்ஸலாமு அலைக்கும் ! வங்கி நிர்வாகம் கண்டிப்பாக கூடிய சீக்கிரம் பெண்கள் பகுதிக்கு தகுந்த அலுவலர்களை நியமித்து அவர்களுக்கான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டிப்பாக ஆண்கள் பகுதிக்குள் பெண்கள் வரவே கூடாது ! இப்படி ஒரு ஒழுங்குமுறை இல்லாவிட்டால் மார்க்கம் பேணும் நமதூரில் மார்க்கம், ஒழுக்கம் ,கலாச்சாரம் என்பதேல்லாம் வெறும் வீண் பேச்சாக ஆகிவிடும். அத்தகைய ஒருநிலை வராமல் பாதுகாப்பது நம் அனைவர்கள் மீதும் கடமையாகும்.

ஆகவே ! வங்கி நிர்வாகத்துடன் இணைந்து இத்தகைய ஒரு நடவடிக்கை மேற்கொள்ள அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
posted by NIZAR AL (kayalpatnam) [24 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24092

ஒரு வருட நோன்பு மாதத்தில் ICICI வங்கி திவால் என்று வதந்தி பரவ தூத்துக்குடி வரைக்கும் இரவோடு இரவாக ஒவ்வொரு ATMலும் வங்கி கணக்கை வலித்து எடுத்து, வேறு வழியில்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் IOB யில் டெபொசிட் செய்யபட்டுது. இது வேலையாட்களுக்கு சம்பளமே கொடுக்க முடியாம இருந்த IOB க்கு அடித்த மிகபெரிய ஜாக்க்போட் என்றே சொல்லலாம். அதிலிருந்து இந்த வங்கி மிகுந்த வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியாக திகழ்கிறது.

ஆனால் மக்களுக்கு எந்த வசதியும் அதிகபடுதாமல் அந்த பழைய அமைப்பிலேயே வங்கியை கொண்டு செல்கிறது. ஒரு பழைய ஜெனரேடர் வச்சி அதை பழுது பார்த்துகிட்டே இருக்காங்க. அதனால எப்பொழுதும் மின்சாரம் இருப்பதில்லை. புதிய ATM தருவதை விட இருக்கிற ATM யை ஒழுங்காக செயல்படுத்தினாலே போதுமானது. எப்ப போனாலும் ஒன்னு மிஷின் அவுட், ஆப ஆர்டர், இல்லன்னா காஷ் அவுட் என்றுதான் சொல்லுது, எனவே இது ATM இல்லை இதற்கு வேண்ணா STM ன்னு வய்யுங்கன்னு வங்கி மேலாளரிடம் சொன்னேன். இதனாலே இந்த ATM கார்டை மற்ற ATM ல போட்டா உடனே 20 ரூபாய் சூடு வைக்குது.

எப்பா பணம் எடுக்க வரவங்க காலையில் வந்தா அசருக்குதான் வீட்டுக்கு போகணும். அவ்வளவு தாமதம். கேட்டா ஆள் இல்லை என்கிறார்கள். குறைவான ஆளை வைத்து ஏன் வேலை செயரீங்கன்னா, நாங்க கேட்டோம் மேலிடம் தரலை என்கிறார்கள்.

வங்கி மேலாளர் மிகவும் பொறுமையும் திறமையும் கொண்டவராக திகழ்வது பாராட்டக்குரியது. ஆனால் அவர் என்ன செய்ய முடியும்? மேலதிகாரிகள் வசதி ஏற்படுத்தி கொடுப்பதில்லை.

தூத்துகுடியில் உள்ள ரீஜினல் அலுவலகத்தின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த வங்கி ஒரு பழைய கூப்பன் கடை போல உள்ளது. இதை தூதுகுடியில் உள்ள ரீஜினல் மேனேஜரிடம் கேட்க முறையிட எந்த பொது அமைப்பிற்கும் நாதி இல்லை. பெண்கள் எல்லாபக்கமும் சுழன்று வறுகிராகள். மீனவர்களுக்கு மிகுந்த சலுகையும் கடனுதவியும் அளிக்கிறது என்றால் பாருங்கலேய்ன்.

இப்படி எத்தனயோ சொன்னாலும் இதலாம் தட்டி கேட்கறது எந்த பொது அமைப்பு? தெரிந்தா சொல்லுங்கலேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வருமானத்துக்கு ஏற்ற வசதிகள் இல்லை...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [25 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24095

NIZAR AL காக்கா நான் சொல்ல வந்த அத்தனை விஷயங்களையும் புட்டு புட்டு வைத்து விட்டார்கள். அவர்கள் கூறிய கருத்து தான் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் கருத்து! நல்ல வருமானத்தோடும், வைப்புத் தொகையோடும் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கான வசதி நஹி ஹெ! இது தான் உண்மை!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [25 November 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24098

பல ஆண்டுகளாக இந்த வங்கியில் NRI கணக்கு வைத்துள்ளேன் கடந்த மே மாதம் விடுப்பில் தாயகம் வந்த நான், ATM விண்ணப்பித்தேன், பெயர் பொரிக்காமல் வேண்டும் என்றால், மறுநாளே பெற்று கொள்ளல்லாம் என்றும், பெயருடன் வேண்டும் என்றால் இருபதுநாளில் வீட்டிற்கு PIN CODE அடங்கிய தபால் வரும் என்றும், அதன் பின்னர் வங்கியில் வந்து ATM பெற்றுகொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

இருபது நாள் தானே பெயருடனே கிடைக்கட்டும் என்று நானும் கூறிவிட்டேன், இருபது, முப்பது, நாற்ப்பது, ஐம்பது நாட்கள் ஆகியும் அவர்கள் கூறிய தபால் கிடைக்கவில்லை ஆனால் எனது விடுப்பு நிறைவு பெற்றுவிட்டது.

நான் பஹ்ரைன் மார்க்கமாக ரியாத் வந்தேன், பஹ்ரைனில், ரியாத் செல்லும் விமானத்திற்காக காத்துகொண்டிருக்கும் பொது, எனது வீட்டில் இருந்து ஒரு SMS, "IOB இல் இருந்து லெட்டர் வந்திருக்கு" என்று? என்னத்த சொல்ல......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் தொடர் தூறல் மழை!  (25/11/2012) [Views - 2648; Comments - 0]
மழைக்கால முத்தம்! (?!)  (24/11/2012) [Views - 3214; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved