Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:37:51 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9926
#KOTW9926
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 8, 2013
கடையக்குடி கழிவுநீரோடையில் DCW ஆலை சார்பில் பராமரிப்புப் பணிகள்! உடனடியாக நிறுத்தக் கோரி KEPA சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரகத்திற்கு தொலைநகல் மூலம் முறையீடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3212 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடையக்குடியில், DCW தொழிற்சாலையின் தென்கிழக்குப் பகுதியில் ஆலையையொட்டி ஓடும் கழிவு நீரோடையில் DCW தொழிற்சாலையின் மூலம் இன்று காலையில் பொக்லைன் இயந்திரத்தின் துணையுடன் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது.

இப்பணியை மேற்கொள்வதற்காக பொக்லைன் இயந்திரத்தை கடையக்குடி வழியாக கொண்டு சென்றபோது, கடையக்குடி பொதுமக்கள் வழிமறித்து, “நாங்க ஊரே சேர்ந்து போராடிக் கொண்டிருக்கும்போது, நீங்க ஏன் மீண்டும் மீண்டும் அங்கே சென்று வேலை செய்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்டதாகவும், அதற்கவர்கள் - தாங்கள் கழிவு நீரை கடலில் கலக்கப் போவதில்லை என்றும், கடல் நீர் தொழிற்சாலையின் புறவாயில் வரை இருக்குமாறு மட்டுமே வெட்டிவிடப் போவதாகக் கூறியதாகவும் தெரிகிறது.

இத்தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் நீரோடை கடலில் கலக்கும் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது. அப்போது, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் காசிராஜன் மேற்பார்வையில், பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது நேரடியாக கண்டறியப்பட்டது.

அத்துடன், அந்த நீரோடை, அருகிலுள்ள ஊர்களின் விவசாயக் கழிவுநீர் என்று விளக்கும் வகையில் ஏற்கனவே அடையாளம் தெரியாதோரால் நிறுவப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையும் காணப்படவில்லை.































பின்னர், கலந்தாலோசனை செய்துகொண்ட KEPA நிர்வாகிகள் - அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் தொலைநகல் (ஃபேக்ஸ்) மூலம் இதுகுறித்து முறையிட்டுள்ளதுடன், உடனடியாக மேற்படி பணிகளைத் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை அளித்துள்ளனர்.

கழிவுநீரோடையில் பணிகள் நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [08 January 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 24942

இதற்கு கருத்து மிக பெரிதாக தேவை இல்லை என்பது என் கருத்து அதாவது ஒரு வரி. (திருடனுக்கு தேள் கொட்டியது போல) (எங்கப்பன் புதருக்குள்ள) இப்படி சொன்னால் புரியும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இதை எதிர்த்து போராட மக்கள் சக்தி விழிப்புணர்வு பெற்று ஒற்றுமையை கடைபிடிக்கும் நேரம் நெருங்கி விட்டது...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [08 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24943

கடல் நீர் தொழிற்சாலையின் புறவாயில் வரை இருக்குமாறு மட்டுமே வெட்டிவிடப் போவதாகக் கூறியதாகவும் தெரிகிறது. copy - paste

கடற்கரையில் (அரசுக்கு பாத்தியப்பட்ட) இடத்தில் ஒரு தனியார் கம்பெனி இப்படி வெட்டிவிட யாரிடம் அனுமதி கேட்டது...? மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - காயல்பட்டினம் நகராட்சி அலுவலகம் இதில் ஏதாவது ஒன்றில் அனுமதி பெற்று தகவல் கொடுத்து அல்லவா..! செய்ய வேண்டும்...

இந்த அத்துமீறல் வன்மையாக கண்டிக்க கூடியது...!

DCW தொழிற்சாலையின் கொடிய அமில கழிவு அதிகம் அங்கே நிறைந்து வழியும் சூழலால் ஏற்பட்டு இருக்கலாம் அதை கொட்டுவதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவே நினைக்க தோன்றுகிறது...

செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் தகவல் கொடுத்து மக்கள் சக்தியை திரட்டி இதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கலாம் - அப்போது பொது மக்கள் - மீனவ சகோதரர்கள் - காவல்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள், நகராட்சி ஆணையர் - தலைவர் - உறுப்பினர்கள், தாசில்தார், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் இவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து இதில் என்ன நடக்கிறது என்று விபரம் கேட்டு (நமது அச்சத்திற்கு தகவல் அறிந்து) விழிப்புணர்வு பெற்று இருக்கலாம்...

நகர மக்கள் ஒற்றுமையாக இருந்தால் கண்டிப்பாக நாம் இதை சாதிக்கலாம்...

குறிப்பு - இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கடலில் மிக பெரிய மாற்றம் ஏற்படலாம் - கொடிய அமில கழிவுகளை கொட்டவே இந்த ஏற்பாடு....! என்னால் உணர முடிகிறது..

இதை எதிர்த்து போராட மக்கள் சக்தி விழிப்புணர்வு பெற்று ஒற்றுமையை கடைபிடிக்கும் நேரம் நெருங்கி விட்டது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மீண்டும் சைத்தான்.....
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [09 January 2013]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 24949

மீண்டும் சைத்தான்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [11 January 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24975

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த நாசமா போன >>DCW << தொழிற்சாலையின் முறை அற்ற செய்யலை நாம் என்னவென்று சொல்லுவது ....நம் அருமை சகோதரர் .முத்து இஸ்மாயில் அவர்கள் குறிப்பிட்டது போன்று ....உடனே நம் பொது மக்களை ஓன்று திரட்டி அந்த ஸ்பார்ட்டுக்கு போய் இருந்தால் .....அந்த இடத்துக்கு தமிழக அரசு அதிகாரிகளும் வந்து .....நடவடிக்கை எடுக்க தோதுவாக இருந்து இருக்கும் அல்லவா .....நம் ஊர் பொது மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற் பட்டு இருக்கும் அல்லவா ??

இதில் நமக்கு ரொம்பவுமே நம் மனதுக்கு வேதனையான ஒரு விஷயம் என்ன வென்றால் நம் ஊர் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் MR .காசிராஜன் மேற்பார்வையில் தான் JCB இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது நேரடியாக கண்டறியப்பட்டது. என்கிற செய்தி தான் ....... இந்த நபர் ஊர் மக்களின் நலன் { உயிர் } பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை படுபவர் போல் தெரியவே இல்லை....பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்களே ....அது இது தானோ ?? என்னவோ ?? யாம் அறியேன் .......

நம் மரியாதைக்குரிய . மாவட்ட அதிகாரி அவர்களின் அனுமதியோ & நம்நகர் மன்றத்தின் அனுமதியோ ..... இல்லாமல் எப்படி போல இவர்கள் >>DCW << செயல் படுவார்கள் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அராஜக செயல்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [11 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24977

ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வரும் நிலையில் DCW வின் இந்த அத்து மீறிய அராஜக செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. KEPA தொடர்ந்து குரல் கொடுத்து மக்கள் நலனுக்காக போராட வேண்டும். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் இதமழை!  (8/1/2013) [Views - 2432; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved