Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:29:45 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10458
#KOTW10458
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 20, 2013
‘எழுத்து மேடை மையம்’ அறிமுக நிகழ்ச்சி! இலக்கிய ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3246 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து செயல்படச் செய்யுமுகமாக, காயல்பட்டணம்.காம் இணையதளம் சார்பில், ‘எழுத்து மேடை மையம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி, இம்மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்றது.





காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை கட்டுரையாளர்களான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்., சிறப்புக் கட்டுரையாளர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காயல்பட்டணம்.காம் செய்தியாளர்களான ஹாஜி எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், எஸ்.கே.ஸாலிஹ் (நிறுவனர், தாருத்திப்யான் நெட்வர்க்) ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்து அதன் நிர்வாகி எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து, காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை பகுதி குறித்தும், சிறப்பு விருந்தினர்கள் குறித்தும் - எழுத்து மேடை கட்டுரையாளர் சாளை பஷீர் ஆரிஃப் அறிமுகவுரையாற்றினார்.



பின்னர், “ஊடகவியலாளனின் சமூக பொறுப்பும், என் அனுபவங்களும்” என்ற தலைப்பில், ஆவணப்பட இயக்குநரும், பூவுலகின் நண்பர்கள் குழுமத்தைச் சேர்ந்தவருமான - சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன் உரையாற்றினார்.



அத்துடன் முதல் அமர்வு நிறைவுற்றது. மஃரிப் தொழுகைக்குப் பின் மாலை 06.45 மணிக்கு இரண்டாம் அமர்வு நடைபெற்றது. துவக்கமாக, கவிஞர் ஏ.ஆர்.தாஹா - ஊடகம் குறித்து தான் இயற்றிய கவிதையை வாசித்தார்.



பின்னர், “கருத்து சுதந்திரம் — ஒரு முதிர்ந்த சமூகத்தின் உயிர் மூச்சு” என்ற தலைப்பில், கவிஞரும் - சமூக ஆர்வலரும் - திரைப்பட இயக்குநருமான அமீர் அப்பாஸ் உரையாற்றினார்.



இந்நிகழ்வுகளில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்களான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜெ.அந்தோணி, ஏ.ஹைரிய்யா, காயல்பட்டணம்.காம் இணையதள செய்தி வெளியீட்டாளர் ‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ மாலிக், எழுத்து மேடை கட்டுரையாளர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீ, இணையதள கருத்தாளர்களான ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ஏ.எல்.நிஜார் அஹ்மத், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கத்தீப் முஹம்மத் முஹ்யித்தீன், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் ஷகீல், கவிஞர் நெய்னா உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்களும், பொதுநல அமைப்புகள் - ஜமாஅத்துகளின் நிர்வாகிகளும், பொதுநல ஆர்வலர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.









நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நிகழ்விடம் - ரெட் ஸ்டார் சங்கத்தின் அங்கத்தினரான எஸ்.அப்துல் வாஹித், ஆஸாத், பொறியாளர் ஏ.பி.ஷேக், காஸிம், எம்.ஏ.ஜியா, எம்.ஏ.நவ்ஃபல் ரிஸ்வீ, எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகியோரும், ஷஃபீயுல்லாஹ், ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் மற்றும் ரெட் ஸ்டார் சங்க மாணவர் குழுவினரும் செய்திருந்தனர்.



நிறைவில், சுற்றுச்சூழல் தொடர்பான ஆவணப்படம் அசைபட உருப்பெருக்கி மூலம் மைதானத்தில் திரையிடப்பட்டது.







இந்நிகழ்ச்சியின் அசைபட பதிவுகளைக் காண இங்கே சொடுக்குக!

இந்த எழுத்து மேடை மையம் மூலம், நிழற்படம் எடுப்பதற்கான பயிற்சி, கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி, ஊடகங்களை பகுப்பாய்வு செய்தல், ஊடகங்களில் வெளியிடுவதற்காக ஆக்கங்களை ஆயத்தம் செய்தல், செய்தி சேகரிப்பு என பல்வேறு தலைப்புகளில் நகரில் தொடர் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்

அசைபடம்:
வீனஸ் ஸ்டூடியோ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [20 March 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26379

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

அன்பு எழுதுகோல் ஆளும் உலகமே முதற்கன் எனது முகமன் சந்தியும் சமாதானமும் இவ்வண்டம் எங்கும் நிறைவாக நிலவிட்டும் ஆமீன்.

ஆற்றலின் ஆணிவேர்களின் அமர்வுகளோடு இனிய உதயம் தந்திருக்கும் எழுத்துமேடையின் மேடையக்காண அனந்தகோடி ஆனந்தம் வீற்றிருக்கும் ஆர்வலர்களுக்கும்,ஆவலர்களுக்கும் நன்றியுடன்கூடிய வாழ்த்துக்கள்

நமது எழுதுகோலுக்கும் எழுத்தாற்றலுக்கும் மையிருந்தும் எழுத்தின் வேகத்திலும்,விவேகத்தும் இனிமையும்,இளமையும் இருந்தும் திரையிட்டபகலவனாய் எத்தனை,எத்தனையோஇமைதிறக்காத விண்மீன்களாய் வானம்கடந்தும் வரையறுக்கப்படாத தரைவாழும் தாரகைகள் நம்மில் மலிந்திருக்கிறன அப்படிப்பட்ட திறமைகளுக்கு வாய்ப்புத்தந்து தங்கள் வார்த்தைகளை வடிவமைத்துத கருத்துச்சுதந்திர மாலையாக தொடுக்க எத்தனை ஊடகங்கள் கரம் கொடுக்கின்றன?

யாதும் ஊரே யாவரும் கேளீர்.
என இணைப்புக்கரம் நீட்டியிருக்கிறீர்கள் நன்றி

நம் காயல் இணயதளம் நாம் இணைய புதியவழி புனைந்திருக்கிறது மனமார்ந்த நன்றி எமை எழச்செய்த ஏழாம் நிலமே காயல்பட்ணம் கலங்கரைப்பட்டினம் மட்டுமல்ல கலம்(எழுதுகோல்) எடுத்து களம் அமைக்கும் கலைப்பட்டினமும்கூட.

இமையையும் சுமையாகக்கருதும் விழிகளுக்கு விழிப்புணர்வு தரவேண்டும் அரும்விடயங்கள் தனக்குள்ளேயே அறுந்து விடைபெற்றுவிடாமல் எழுத்துச்சுதந்திரம் உலகத்தில் ஊடகவாயிலாகவும் உதவாக்கரையாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகளால் ஊடுருவியிருக்கும் தந்திரங்களை அந்தரமாக்கி சந்திரபிம்பமாக சகமும் உரையாடி,உறவாட வாடாதமலராக மக்களுக்கு சூடத்தரவேண்டும் வறுமையைவிரட்டவும் வாய்மையை உயர்த்தவும் சதிகள் அழியவும் வாழ்வாதார வசதிகள் பெருகவும் சமூகம் ஒருமுகமாக சுகமுடன் சுமூகமுடன் சுபிட்சமடையவேண்டும் வாழ்வாங்கு வாழவும் வாய்மை என்றென்றும் வெல்லவேண்டும் என்று வேண்டியவனாக இறைவன் நாடுவான்.

இந்நிகழ்வை அமைத்துத்தந்தமைக்கு மீண்டுமொருமுறை எனதுமனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன் இறைவன் உங்களுக்கு நல்விருதுகள் வழங்குவானாக ஆமீன்

இரைவன் மிகப்பெரியவன்.

நான் நானாகவே இருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [21 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26392

"எழுத்துமேடை மையம் "மிக அருமையான ஒரு நிகழ்வு. இதை சாத்தியமாக்கி தந்த "காயல்பட்டணம் .காம் "இணையதள நிர்வாகத்தினருக்கு நமது உளப்பூர்வமான நன்றிகள்.

பொதுவாக வியாபார சமூகம் நிறைந்த நமதூர் போன்ற ஊர்களில் இதுபோன்ற இலக்கியம் சார்ந்த விழாக்களை முன்னெடுப்பது அருமையிலும் அருமை. வேறு வேறு பொழுதுபோக்கு நிகழ்சிகளை விரும்புபவர்கள் இலக்கியம் என்றால் சற்றே முகம் சுளிப்பார்கள்.

அதே சமயம் இலக்கிய தாகம் உள்ளவர்கள் ஆங்காங்கே இலைமறைகாய் போல சமூகத்தில் நிறைய ஒளிந்திருப்பார்கள். அவர்களின் ஆர்வம் இதுபோன்ற நிகழ்வுகளில்தான் வெளிப்படும். அந்த வகையில் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரின் முகங்களில் அந்த இலக்கிய பரவசம் மின்னிட்டதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

தோழர் அமீர் அப்பாசின் ஆற்றொழுக்குமிக்க அருமையான, ஆழமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் இன்னும் பெரிய கூட்டங்களில் பேசக்கூடியவர். அந்த கவிஞ்சருக்கு நாம் வழங்கிய நேரமும் மிக குறைவு. அவரை நாம் இன்னொரு முறை மிக சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

அடுத்ததாக மரியாதைக்குரிய அட்மின் அவர்களுக்கு ஒரு சிநேக பூர்வமான வேண்டுகோள்

என்னை எழுத்தாளர் என்று பெருமையுடன் விளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஆனால் "எழுத்தாளர் "என்ற பதம் மிக விரிந்த பொருள் கொண்டது. ஒரு ஜெயகாந்தன் ஒரு ஜெயமோகன் ஒரு சுஜாதா ஒரு எஸ்.ரா. ஒரு சுந்தர ராமசாமி ஒரு கி.ராஜநாராயணன் ஒரு ஆ.மார்க்ஸ் --இவர்கள் போன்றவர்கள்தான் எழுத்தாளர் என அழைக்க முற்றிலும் தகுதி உடையவர்கள் நான் அல்ல. சும்மா பொழுது போகாமல் எதையோ கிறுக்கி கொண்டிருக்கும் நானும் எழுத்தாளர் ...இவர்களும் எழுத்தாளர் என்றால் எனது பெருமை ஒருபுறம் இருக்கட்டும் .அது இவர்களை சிறுமை படுத்துவது போலாகும். எனவே எழுத்தாளர் என என்னை நான் ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. வேண்டுமானால் ..நான் கட்டுரைகள் எழுதுவதால் என்னை "கட்டுரையாளர் "என்று அழைத்துக்கொள்ளுங்கள்.

இதை நான் அடக்கம் கருதி அல்ல .உண்மையாகவே சொல்லிக்கொள்கிறேன்.

விழாவில் என்னை மேடையேற்றி கவுரவம் செய்ததற்கு நன்றி....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. யதார்த்தம்...இதுதான் உண்மை!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [22 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26411

K.S. முஹம்மது சுஐபு அவர்களின் தன்னடக்கம் போற்றுதலுக்குரியதே! நிறை குடம் ததும்பாது. தாங்களின் ஆக்கங்களுக்கு என்னைப் போன்றோர் ஏராளமான பேர்கள் மதிப்பளித்து வருகின்றார்கள். உண்மையில் தாங்கள் நிதர்சன எழுத்தாளர் என்பதில் சந்தேகமேயில்லை!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved