Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:41:10 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10555
#KOTW10555
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 6, 2013
காயல்பட்டினத்தில் இன்றும், நாளையும் தப்லீக் இஜ்திமா! 50 ஆயிரம் பேர் திரள்வர் என எதிர்பார்ப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5261 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில், இம்மாதம் 06, 07 தேதிகளில் (இன்றும், நாளையும்) தப்லீக் இஜ்திமா (ஒன்றுகூடல்) நடைபெறவுள்ளது.எஎ இன்று மாலை 06.30 மணிக்கு மஃரிப் தொழுகையுடன் துவங்கும் நிகழ்ச்சிகள் நாளை இரவு 08.30 மணிக்கு இஷா தொழுகையுடன் நிறைவுறுகிறது.

இந்த இஜ்திமா நிகழ்வில், தமிழகத்தின் பல பகுதிகள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் ஆண்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஜ்திமா நடத்துவதற்காக, காயல்பட்டினம் எல்.எஃப். வீதியில், பேருந்து நிலையத்தையொட்டி சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் எளிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இஜ்திமாவில் பங்கேற்கும் பொதுமக்களின் வசதிக்காக - உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனம், முதலுதவிக்காக மருத்துவ சிகிச்சைக் குடில் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த இஜ்திமா நிகழ்விற்காக, கடந்த ஜனவரி மாதம் முதலே நிகழ்விடத்திலுள்ள புதர்கள் அகற்றப்பட்டு, பந்தல் அமைக்கும் பணி துவக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இஜ்திமாவில் கலந்துகொள்வதற்காக, நேற்று (ஏப்ரல் 05) முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளத் துவங்கியுள்ளனர். சென்னை தி.நகர் பகுதியிலிருந்து வந்த தப்லீக் ஜமாஅத்தினர், நேற்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரையில் அமர்ந்திருந்த காட்சிகள்:-









இதற்கு முன், காயல்பட்டினத்தில் 01.10.1954 அன்று இதுபோன்ற இஜ்திமா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 10:57 / 06.04.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாஷா அல்லாஹ்..
posted by M.A.C.AHAMED THAHIR (NEW DELHI.) [06 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26716

மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்.. மர்ஹபன் அஹ்லவ்வ சஹ்லன். அல்லாஹ் நம் யாவருக்கும் இந்த இஜ்திமாவை கொண்டு ரஹ்மத் அருளுவானாக.. இந்த ஊருக்கு பரகத் செய்வானாக ஆமீன்...

அல்லாஹ் எல்லாவற்றிருக்கும் மிக பெரியவன். அவனே நமக்கு மிகவும் போதுமானவன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வரவேற்போம் நல்லபடி!
posted by OMER ANAS (doha qatar.) [06 April 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 26717

வந்தோரை வரவேற்பதில் காயலே முதற்ப்படி!

வந்தவர்கள் நல்லபடி இஸ்திமா நடாத்தி விட்டு போட்டும். 50 பது ஆயிரம் பேர் திரள்வது என்றால், நிச்சயம் கடற்கரையில் டென்டு அடிக்க வேண்டுமே! புஹாரி சரீப் கந்தூரியை விட இது கூடுதல் இல்லையா?

பாதுகாப்பு நிச்சயம் வேண்டும். காயலில் அமைதி நிலவவேண்டும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Best wishes
posted by Moosa Sahib (Kayalpatnam) [06 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26718

இஜ்திமா சிறப்புடன் நடைபெற இறைவன் அருள் புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:
posted by mackie noohuthambi (kayalpatnam) [06 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26721

அல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை இவைகளை பின் பற்றி வாழ்ந்த சஹாபாக்கள், இமாம்கள், இறைநேச செல்வர்கள் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளை மட்டுமே எடுத்துக் கூறும் ஒரு மாபெரும் இறைப்பணி செய்பவர்கள் கூடும் நாள்.

வீடு வீடாக சென்று இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து பேசி அவர்களை பள்ளிவாசல் பக்கம் அழைத்து, பள்ளிவாசலிலேயே அமர்ந்து அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகளாரின் போதனையையும் பற்றி பேசுகின்ற ஒரு கூட்டம். தங்கள் கையிலிருந்து சொந்த பணத்தை செலவு செய்து, வீடு மனைவி குடும்பத்தை விட்டு வேகும் வெயிலிலும் கடும் குளிரிலும் தெரு தெருவாக அல்லாஹ்வுக்காக அலைந்து திரியும் ஒரு கூட்டம்.

கருத்து வேறுபாடு உள்ளவர்கள் இந்த மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொண்டு அவர்கள் பணியின் உண்மை நோக்கத்தை புரிந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் அல்லாஹ் நமக்கெல்லாம் வழங்கியுள்ளான்.இந்த மாநாடு முடிவில் இங்கிருந்து பல ஜமாத்கள் வெளியூருக்கு சென்று, காடு மேடெல்லாம் சென்று அல்லாஹ்வின் மகத்துவம் பற்றியும் நபிகள் நாயகம் அவர்கள் நாம் விழித்து எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை எவ்வாறு நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்பதை எடுத்து சொல்ல புறப்படுகிறார்கள்.

அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் பிரியமான ஒரு நல அமல் செய்யும் கூட்டம். இவர்கள் சேவையை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. நம் எல்லோருக்கும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.LAA THAWFEEQA ILLAA BILLAAH.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...மறு மலர்ச்சியின் பங்காளிகள்
posted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [06 April 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 26724

பாரக்கல்லாஹ் ! வரவேற்புகளும் வாழ்த்துக்களும் !!

நமதூரில் தப்லீக்கிற்கு மர்கஸ் வந்து சில மாதங்களிலேயே இஜ்திமாவும் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது.

நான் எனது சிறு பருவத்தில் ஒரு நாள் ஜமாஅத்தில் சென்றுள்ளேன். அத்துடன் ஜுமேராத்திலும் கலந்துள்ளேன்.

தப்லீக் ஜமாஅத் தோன்றி கிட்டதட்ட 80 ஆண்டுகள் ஆகின்றன.

---- இத்தனை வருடங்களில் இயக்கம் பிளவுபடவில்லை. போட்டி அணிகள் இல்லை.

--- தனி ஆள் ஆதிக்கம் இல்லை.

--- தேர்தல்களும் இல்லை. குழுக்களும் இல்லை.

--- வரவு செலவு இல்லை . அதனால் ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை.

--- விமர்சனங்களையும் அவதூறுகளையும் எதிர் விமர்சனங்களால் , மூன்றாந்தர சொற்களால் எதிர் கொள்ளாமல் மௌனமாக கடந்து செல்வது.

--- தன் கைக்காசை போட்டு பணி புரிதல்.

--- மஸ்ஜிதுகளை மட்டுமே மையமாக கொண்டு பணியாற்றுதல்.

--- யாருக்கும் எந்த வித தனி அந்தஸ்தும் இல்லை.

---எளிமையான வாழ்க்கை முறை , நாடோடி பயண முறை

--- யாருடைய செல்வாக்கிற்கும் ஆட்படுவதில்லை.

--- வண்ண வண்ண சுவரொட்டிகள் இல்லை . பக்கம் பக்கமாக துண்டறிக்கை இல்லை. காதை பிளக்கும் ஊர்தி பரப்புரையும் இல்லை.

அப்பாவி விளிம்பு நிலை முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு தொலைவில் இருப்பதை கண்டும் , ஹிந்துத்வ சக்திகளால் அவர்கள் மத மாற்றம் செய்யப்படுவதைக்கண்டும் மனம் வெதும்பிய சீரிய உள்ளங்களின் விளைவாக பிறந்ததே ஜமாஅத்துத் தப்லீக்.

இன்று உலகெமெங்கும் சீரான வலைப்பின்னலுடன் உள்ள ஒரே இஸ்லாமிய அமைப்பாகவும் மக்கள் அமைப்பாகவும் பரவியுள்ளது.

தப்லீக் ஜமாஅத்தின் துணை விளைவாக நாடு முழுக்க ஒரே பாட திட்டத்தின் கீழ் நடக்கும் குர்ஆன் மக்தபுகளும் சாத்தியமாகியுள்ளன.

இத்தனை சிறப்புகளும் பெருமைகளும் பின்னணியும் வாய்ந்த ஜமாஅதுத் தப்லீக் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளின் செயலாக்கத்திற்காக உழைக்கும் ஜமாஅத்துத் தப்லீக்கைப் போன்று பல்வேறு துறைகளில் உழைக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன.

தப்லீக் உட்பட இந்த அமைப்புகள் அனைத்தும் சம கால இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் தங்கள் உழைப்பை நல்கும் பங்காளிகள் என சாமானியர்களாகிய நாங்கள் கருதுகின்றோம்.

அத்தகைய இயக்கங்களுடனும் ஜமாஅத்துத் தப்லீக் அடிப்படை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு பரஸ்பர புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். அப்போதுதான் ஜமாஅத்துத் தப்லீக் என்பது இறுக்கமான ஒரு அமைப்பு... தங்களது சாத்திகளுக்குள்ளேயே ( தோழர்கள் ) மட்டும்தான் சகோதரத்துவத்தைப் பேணுபவர்கள் என்ற குற்றச்சாட்டை இல்லாமலாக்க முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தஃவாவில் ஒன்றுபடும் உள்ளங்களாக நம் அனைவரையும் ஆக்குவானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நல்ல தீர்மானங்கள் மூலம் ஐயப்பாடுகளை நீக்கலாம் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [06 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26725

இன்று உலகில் இஸ்லாமிய அழைப்புப்பனிகளில் ஈடுபடுகின்ற இயக்கங்களில் "தப்லீக் இயக்கமும் " ஒன்று . இந்த இயக்கத்தில் தலைமைக்கு (மர்கஸ்) கட்டுப்படும் நடவடிக்கைகள் இன்றும் சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது !

ஏனைய இயக்கங்கள் , ஜமாஅத்களில் இத்தகைய கட்டுப்பாடு முழுமையாக பின்பற்றப்படவில்லை . !

அதே நேரத்தில் இந்த இயக்கம் பற்றியும், இந்த இயக்கத்தின் தலைவர்கள் தங்கள் நூற்களில் , சொற்களில் கூறிய கூற்றுக்கள் பற்றியும் இஸ்லாமிய "அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜஅமாஅ" அறிஞ்சர்கள் இன்றும் மறுப்புரைகளும், ஆட்சேப்பனைகளையும் தெரிவித்து வருகிறார்கள் !

ஆனால் அதற்கெல்லாம் இந்த இயக்கத்தை பின்பற்றும அறிஞ்சர்களோ, அல்லது இந்த இயக்கத்தின் (மார்கஸ்) தலமைபீடமோ ஒரு சரியான , நிரந்தரமான , ஒரு தெளிவான மறுப்பையோ, பதிலையோ கூறி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவில்லை !

வெளிரங்கத்தில் இவ்வியக்கத்தாரின் அமல்கள் , செயல்பாடுகள் இவைகளைக் கவனிக்கும் பொதுமக்களுக்கும் இவர்களது கொள்கை நிலைபாடு என்ன என்பது குறித்து தீர்மானிக்க முடியாமல் தவித்தே வருகிறார்கள்!

ஆகவே ! இந்த இஜ்திமா மாநாடு மூலம் அதற்க்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வை, முடிவை தீர்மானம் மூலம் வெளியிட்டால் பொதுமக்களுக்கு இந்த இயக்கத்தின் மீதுள்ள ஐயப்பாடுகள் தெளிவாகும் !

அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த மாநாட்டின் இறுதியில் " முஸ்லிம்களுக்காக , இஸ்லாமிய சமுதாயத்தின் " நலனுக்காக மாநில, மத்திய அரசாங்களை வலியுறுத்தி நல்ல தீர்மானங்களை மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்ளலாம் !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இஜ்திமா சிறக்க வாழ்த்துக்கள்
posted by Mohamed Buhary (Kayalpatnam) [06 April 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 26726

அண்மைக் காலமாக இஸ்லாமும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதை ஊடகங்களினூடாக அறிகிறோம். ஊடகங்களேகூட இது போன்ற விமர்சனங்களுக்குத் துணைபோவதையும் பார்க்கிறோம். இத்தகைய காலகட்டத்தில் முஸ்லிம்களாகிய நமக்கிடையே பொதுக்கருத்தை நோக்கிய பயணம் தொடங்கப்பட வேண்டும்.

காலங்காலமாக நம்மிடையே காணப்படும் வேற்றுமைகளையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதாலோ அல்லது ஒருவர் மற்றவரை விமர்சித்துக்கொண்டிருப்பதாலோ அல்லது ஒரு ஜமாஅத் மற்றொரு ஜமாஅத்தை குறை கூறிக்கொண்டிருப்பதாலோ நன்மைகள் பயக்கப்போவதில்லை. பொது எதிரிக்குத்தான் இதில் அதிக நன்மை.

எந்தவொரு ஜமாஅத்தாக இருந்தாலும், இஸ்லாம் இயம்பும் அடிப்படையான விஷயங்களில் ஒற்றைக் கருத்துடையதாகத்தான் காணப்பட வேண்டும். அடிப்படைக்கு மாற்றமாக இருக்கும் ஜமாஅத் சமூகத் தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவை. இன்றைய காலத்தில் ‘அவாமுந் நாஸ்’ எனப்படும் பாமர மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். யாரும் எதையும் கூறி, மழுப்பித் தப்பித்துவிட இயலாது; தப்பிக்கவும் விடமாட்டார்கள். உண்மை எது? பொய்மை எது? என்பதையும் தெளிவாக அறிந்துள்ளனர். ஆனால், அறிஞர்களிடையேதான் கருத்து யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது ஒரு விதமான அரசியலாகப் பார்க்கப்படுகிறது. தமது தரப்பு அணியினர் தம்மைவிட்டு விலகிவிடக் கூடாது என்பதற்காகச் செய்யப்படும் மூளைச் சலவை. இஃக்லாசும், இறையச்சமும் குறைந்தபோனதுதான் இதற்கான அடிப்படைக் காரணிகள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தொன்மையான இஸ்லாமியக் கலாசாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பெயர்போன காயல்பதியில் தப்லீஃக் ஜமாஅத்தின் மாபெரும் இஜ்திமா நடைபெறுகிறது. இந்த இஜ்திமா குறித்த விமர்சனங்கள் பல எழுந்தாலும், தப்லீஃக் சகோதரர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது.

இந்த ஜமாஅத் காலங்காலமாக பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் பெங்களூரு தப்லீஃக் மர்கஸுக்குச் சென்று தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் தப்லீஃக் ஜமாஅத்தின் பணிகளும் சேவைகளும் தெரியவந்தது. ஒரு மஹல்லாவை இஸ்லாமிய அடிப்படையில் எவ்வாறெல்லாம் இயங்கச் செய்ய முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தப்லீஃக் ஜமாஅத் இதர ஜமாஅத்களோடு பொதுக் கருத்துகளில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தப்லீஃக் அல்லாத ஏனைய ஜமாஅத்தாரை சமூகத்திற்கு அப்பாற்பட்டவையாக காணும் போக்கு கைவிடப்பட வேண்டும். எல்லோரும் நம் சகோதரர்கள் என்ற நிலைக்கு வர வேண்டும். பொதுவான சமூகத் தீமைகளை அகற்றிட இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு இடைவெளியின்றி செயல்பட முன்வருவோமானால், நமக்கிடையே காணப்படும் கருத்து பேதங்கள் சன்னம் சன்னமாக குறைந்துபோகும். நமது முழுக் கவனமும் வளர்ச்சிப் பணிகளை நோக்கியதாகவே இருக்கும். இது குறித்து அவசியம் சிந்திக்க வேண்டும். இலங்கையில் செயல்படும் ஜம்இய்யத்துல் உலமா இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. தப்லீஃக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, ஸலஃபி ஜமாஅத் இணைந்ததொரு ஜம்இய்யத்துல் உலமா இங்கும் உருவாக்கப்பட வேண்டும். சமூகப் பணியில் களம் காணும் இளம் உலமாக்களும், சிந்தனையாளர்களும் காலத்தின் தேவை கருதி இந்தக் கருத்தை நோக்கி தங்களை நகர்த்த வேண்டும்.

தப்லீஃக் சகோதரர்களுக்கு இஜ்திமாவின் சிந்தனையாக இவற்றை முன்வைக்கிறேன். நாம் அனைவரும் பொதுக் கருத்தை நோக்கிய பயணத்திற்குத் தயாராக வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் தூய எண்ணங்களுடனும் செயல்பாடுகளுடனும் இணைப்பானாக. ஆமீன்.

இஜ்திமா சிறக்க வாழ்த்துக்களும், துஆக்களும்

எம்.என். முஹம்மது புகாரீ
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Noohu Amanullah (makkah) [06 April 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26727

அஸ்ஸலாமு அலைக்கும்..

நமது ஊரில் நடை பெரும் மாபெரும் இஜ்திமா..

- பெருங்கொண்ட கூட்டம் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வருகை தரும் கூட்டம்..

- ஷரியத்தில் அமல்களை கொண்டு மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும் என்பதை உறுதி செய்யும் கூட்டம்..

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகரில் இன்று தப்லீக் இஜ்திமா!
posted by S S Abdullah (Dubai) [06 April 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26729

மாஷா அல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்!!

இந்நிகழ்ச்சி பற்றிய எவ்வித பத்திரிக்கை செய்தி, நோட்டீஸ், போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்கள், நிகழ்ச்சி நிரல் சமந்தப்பட்ட அறிவிப்புகள் ஏதுமின்றி, இஜ்திமா நடப்பதை தானே அறிந்து பெரும் மக்கள் கூட்டம் கலந்துகொள்வது என்பது இந்த விளம்பர யுகத்தில் மிக மிக அற்புதம், அதிசயம். இந்த இஜ்திமா சிறப்பாக அமைந்து வெற்றி பெற வாழ்த்துகள்.

இந்த இஜ்திமாவில் கலந்துகொல்பவர்களுக்கும், நடைபெறும் நம் ஊருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ரஹ்மத்தையும் பரக்கத்தையும் கொடுப்பானாக! அங்கு நடைபெறும் நல் அமல்களின் பொருட்டால் நோயினால் வாடும் மக்களுக்கு பூரண சுகமளிக்கவும், இனியும் நோய் வராமல் பாதுகாக்கவும் இறைவனை பிரார்த்திப்போமாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by mohmedyounus (muscat) [06 April 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 26732

எண்ணற்ற விளிம்பு நிலை முஸ்லீம்களை உன்னதமான முஸ்லீமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் , ஓர் இறை கொள்கை தமிழகத்தில் வேர் விட்டு வளர்வதற்கும் தப்லீக் அமைப்பு ஒரு வாசலாக அமைந்தது அனைவரும் அறிந்ததுதான். இன்று "தௌஹீத் வாதிகள்" என்று சொல்லிகொள்ளும் பெரும்பாலோர் இதனை தொட்டு வந்தவர்கள்தான்.

அமைதியும்,வீணான விதண்டாவாதங்களுக்கும் இங்கு இடம் இல்லை என்பது இந்த அமைப்பின் ஒரு மிகப்பெரிய பலம். ஆனால் அதுவே சில இடங்களில், அதன் பலவீனமாகவும்,அது இன்னும் காண வேண்டிய வளர்ச்சிக்கு ஒரு முட்டு கட்டையாகவும் அமைந் விடுகின்றது . உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய இயக்கமாக காணப்படும் இந்த இயக்கம் இன்னும் சில முஸ்லீம்களை தன்னகத்தே கொள்ள வேண்டிஉள்ளது .காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, இஸ்லாமிய அடிப்படையில் பிசகாமல், தப்லீக் இயக்கம் தன்னை ஓர் மீள்பார்வை செய்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் .

இஜ்திமா சிறக்க வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved