Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:45:59 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10563
#KOTW10563
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 7, 2013
காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா நேற்று துவக்கம்! ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5457 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா நிகழ்ச்சிகள் 06.03.2013 சனிக்கிழமையன்று (நேற்று) துவங்கின. காயல்பட்டினம் பேருந்து நிலையத்தையொட்டிய பரந்த மைதானத்தில் நடைபெறும் இந்த இஜ்திமா - ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள், பேருந்துகளிலும், வேன், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களிலும் வந்து நிகழ்விடத்தில் திரண்டனர்.



திருநெல்வேலி, தூத்துக்குடி வழித்தடங்களிலிருந்து காயல்பட்டினத்தை நோக்கி வந்த பேருந்துகள் அனைத்திலும், இஜ்திமாவில் கலந்துகொள்வதற்காக முஸ்லிம் மக்களே நிறைந்து காணப்பட்டனர். போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திடுவதற்காக, தூத்துக்குடியிலிருந்து வந்த பேருந்துகள் காயல்பட்டினம் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. காயல்பட்டினத்திலிருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும், வழமை போல ஆறுமுகநேரி - காயல்பட்டினம் நெடுஞ்சாலை வழியே சென்றன.







பேருந்து, வேன், கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக ஆங்காங்கே வாகன நிறுத்தங்கள் தனித்தனியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







இஜ்திமாவில் கலந்துகொள்வோருக்காக பந்தலிலேயே - மாவட்ட வாரியாக தனித்தனி மெஸ்களில் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இஜ்திமாவில் பங்கேற்க வருவோரிடம் 100 ரூபாய் கட்டணமாகப் பெற்று, நேற்றிரவு உணவு, இன்று காலை, மதியம் மற்றும் இரவு உணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலை 06.30 மணியளவில் மஃரிப் தொழுகையுடன் இஜ்திமா நிகழ்வுகள் துவங்கின. மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.







நேற்றைய முதல் நாள் நிகழ்வுகள் அனைத்தும் இரவு 09.00 மணியளவில், இஷா தொழுகையுடன் நிறைவுற்றன.



பின்னர், இரவுணவை, அந்தந்த மாவட்டத்தினர் அவரவர் பகுதி மெஸ்களில், நீண்ட வரிசைகளில் நின்று, பொறுப்பாளர்களிடம் உணவு டோக்கனில் பதிவு பெற்றுவிட்டு, பந்தியில் அமர்ந்து சாப்பிட்டனர். ஒரு ஸஹனுக்கு (தட்டு) 4 பேர் என அவர்கள் பந்தியில் அமர்ந்து உணவுண்டனர். காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், “காயல்பட்டினம் மெஸ்”இல் உணவுண்டனர்.







முடித்துவிட்டு, பலர் இஜ்திமா பந்தலிலேயே உறங்கினர். ஒரு சாரார் பள்ளிவாசல்களிலும், இன்னும் சிலர் கடற்கரை மணற்பரப்பிலும் படுத்துறங்கினர்.

இஜ்திமாவில் கலந்துகொள்ள வந்திருந்த ஏராளமான பொதுமக்கள், இன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகையை முடித்துவிட்டு, 06.00 மணி முதல் காயல்பட்டினம் கடற்கரையில் திரண்டனர். சிலர் கடல் நீரில் கால் நனைத்தும், பலர் கடலில் குளித்தும் தமது காலைக் கடன்களை முடித்துக்கொண்டனர்.









கடற்கரை தொழுமிடத்திலுள்ள கிணற்றடியிலும், கடைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிவாசல்களின் கிணறுகளிலும் பலர் குளித்தனர். பின்னர், காலை 08.30 மணியளவில் அனைவரும் நிகழ்விடமான இஜ்திமா பந்தலுக்கு திரும்பிச் சென்றனர்.



நேற்று மட்டும் சுமார் 20 ஆயிரம் ஆண்கள் திரண்டிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், இஜ்திமா நிறைவில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயல்பட்டினத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர், இஜ்திமா நிகழ்விடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டணம்.காம்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாஷா அல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ்..
posted by M.A.C.AHAMED THAHIR (NEW DELHI) [07 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26741

மாஷா அல்லாஹ். அல்ஹம்து லில்லாஹ்..

இந்த நிகழ்வை பார்க்கையில் மிகவும் சந்தோசமாகவும், ஆனந்தமாகவும் உள்ளது. கண்களில் கண்ணீர் முட்டுகிறது. ஏனென்றால் உதாரணத்துக்காக, IPL கிரிக்கெட் MATCH தற்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. அதுபோல பொழுதுபோக்கு அம்சங்கள் பல உள்ளன SUNDAY விடுமுறையில் (இன்று). பெரும் கூட்டம் இதில் மூழ்கி திளைத்துக் கொண்டு இருக்கிறது. தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னே அமர்ந்து தன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் இந்த மக்கள் அல்லாஹுடைய மார்க்கம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கேட்க, பார்க்க, ஒரு இடத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி இருப்பது அல்லாஹ் வுக்கு அடிபணியும், கட்டுப்படும் செயல் இல்லையா.. இறைவனை நினைவு கூறும் நிகழ்வு இல்லையா..

நான் இந்த மாபெரும் இஜ்திமாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று தற்பொழுது என் மனதில் பெரும் சோகம் நிலை கொண்டுள்ளது. மிகவும் என் மனம் ஏக்கமாக உள்ளது. என் வேலை பழுவின் காரணமாக இந்த மாபெரும் இஜ்திமாவில் கலந்துக்கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று வருந்துகிறேன்.

அல்லாஹுதாஆலா இந்த மாபெரும் இஜ்திமாவின் உண்மையான நோக்கத்தை பொருந்தி கொள்வானாக.. இதை கொண்டு நம்மக்கள் யாவருக்கும் அல்லாஹ் நேரான வழியில் நின்று, நம் வாழ்கையில் சுன்னத்தான முறைகளை பின்பற்றி கண்மணி நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் காட்டி சென்ற உண்மையான முறையில் வாழ்வதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

இந்த மாபெரும் இஜ்திமாவை கொண்டு நம் ஊருக்கு, நம் நாட்டுக்கு, ஏன் இந்த உலகத்துக்கே அல்லாஹ் நம் யாவருக்கும் நேரான வழியை காட்டி, நம் யாவருக்கும் நோய் நொடி இல்லாமல் வாழவும், நம்மிடையே கருத்து வேற்றுமை, கொள்கை வேற்றுமை இல்லாமல், நாம் யாவரும் இஸ்லாமியர்கள் என்ற ஒரு நிலையில் வாழ்வதற்கு அல்லாஹ் தௌபீக் செய்வானாகவும் ஆமீன். இந்த இஜ்திமா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவதோடு, அல்லாஹ்விடமும் மனம் உருகி துஆ இறைஞ்சுகிறேன். யா அல்லாஹ் இந்த இஜ்திமா எந்த நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதோ, அந்த நல்ல நோக்கத்தை நீ பொருந்தி கொள்வாயாகவும்.. ஆமீன்.

அல்லாஹுக்கே எல்லா புகழும், புகழ்ச்சிகளும் என்றேன்டும் உரிதாகட்டுமாக.. (அல்ஹம்துலில்லாஹ்)..

M.A.C.அஹ்மது தாஹிர்,
புதுடெல்லி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ALL ROADS LEAD TO KAYALPATNAM
posted by mackie noohuthambi (kayalpatnam) [07 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26742

ALL ROADS LEAD TO ARAFAAH என்று ஹஜ்ஜுக்கு மக்கள் செல்லும்போது அரபா உடைய நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை சவுதி நாளிதழ்கள் வர்ணிக்கும். அதே போல் ALL ROADS LEAD TO KAYALPATTINAM காயல்பட்டினத்தை நோக்கி சாரி சாரியாக பேருந்துகளும் வேன்களும் பைக் களும் வந்து குவிந்த வண்ணம் இருந்த காட்சி ஒரு சரித்திர திருப்புமுனையை நோக்கி காயல்பட்டினம் முன்னேறிக் கொண்டிருப்பதை காட்டுகிறது.

1964 பல மார்க்க விற்பன்னர்களால் அடையாளம் காட்டி அங்குரார்ப்பணம் செய்யப் பட்ட ஒரு புனித மார்க்கப் பணி, இடைக் காலத்தில் சற்று தொய்வுடன் காணப்பட்டது. ஆனாலும் "சத்திய வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும்" என்ற இறைவசனத்தை இந்த கூட்டம் உண்மைப் படுத்துகிறது. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. காயலில் ஓர் கண்கொள்ளாக்காட்சி.!
posted by s.s.md meerasahib (kayalpatnam) [08 April 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 26743

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு என் காயலர்களே........ இந்த இஜ்திமா நம் காயல்பதியில் நடந்ததை நினைத்தும், கண்டுகளித்தும்,பங்கேற்றும் உண்மையிலேயே..... உள்ளப்பூரிப்படைகின்றன, சாந்தியும் அடைகின்றன. மாஷாஅல்லாஹ்

பங்கேற்றவர்கள் பாக்கியவான்கள் என்றே.... சொல்லலாம். என்ன அருமையான மனம்களை இணைக்கும் சொர்ப்பொழிவுகள்,கூட்டுதுவாக்கள்.நம்மை மெய்சிலிர்க்க செய்தன.நம்மை நாமே..... நம் ஈமானை பலப்படுத்திகொள்ளும் தஃவத்துதான் அவர்களின் முக்கிய குறிக்கோள்.

ஆடம்பரங்கள் இல்லாமலும்,அனாச்சாரம்கள் இல்லாமலும்,விளம்பரம்கள் இல்லாமலும் கூடின இறைவனின் விருந்தாளிகள். விருந்தாளிகளின் ஹாலாலான நாட்டம்களையும்,தேட்டம்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [08 April 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 26747

இஜ்தமா நிகழ்வுகள் 06/04/2013 அஷர் ஜமாத்தோடு துவங்கியது ,உங்கள் செய்தியில் மக்ரிப் தொழுகைக்கு பின் துவங்கப்பட்டதாக போடப்பட்டுள்ளது ,மேலும் அன்றைய இஷா ஜமாத்தில் சுமார் 50 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டார்கள் ,இங்கு தவறாக 20 து ,ம் ஆயிரம் என்று போடப்பட்டுள்ளது(50 ஆயிரம் token விநியோகிக்கப்பட்டுள்ளது)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved