Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:32:30 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10557
#KOTW10557
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 6, 2013
துபை கா.ந.மன்ற ஏற்பாட்டில், களிப்புடன் கொண்டாடப்பட்டது காயலர் தினம் 2013! வியப்பிலாழ்த்தி, பார்வையாளர்களை கண் கலங்கச் செய்தார் காயல் க்ராண்ட் மாஸ்டர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5902 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற ஏற்பாட்டில், வழமை போல இவ்வாண்டும், “காயலர் தினம் - 2013” என்ற தலைப்பிலான காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி களிப்புடன் கொண்டாடப்பட்டுள்ளது. பார்வையாளர்களை வியப்பிலாழ்த்தி, கண்களில் கண்ணீர் மல்கச் செய்தார் காயல் க்ராண்ட் மாஸ்டரான சிறுமி.

காயலர் தினம் - 2013 குறித்து, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை வருமாறு:-

மறையளித்த இறையோனுக்கே மாபெரும் புகழனைத்தும் உரித்தாகுக!

காயலர் தினம் - 2013:

இறையருளால் எமது துபை காயல் நல மன்றத்தின் 2013ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், உறுப்பினர்களின் அனுசரணையில் "காயலர் தினம் 2013" என்ற தலைப்பில் களிப்புடன் கொண்டாடப்பட்டது.

துணைக்குழுக்களின் சிறப்பேற்பாடுகள்:

இக்கூட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் பூங்கா அனுமதி முதற்கொண்டு, உணவு ஏற்பாடு, வாகன வசதிகள், சந்தா வசூல், தேவையான பொருட்களை எடுத்துச் செல்லல், விருந்தினர்கள் உபசரிப்பு, பவுத்தி சாப்பாடு, விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு, தன்னார்வத் தொண்டர்கள் ஏற்பாடு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் துணைக்குழுவினர் கச்சிதமாக செய்திருந்தனர். இந்த ஏற்பாடுகளைப் பிசகின்றி செய்து முடிப்பதற்காக, வாரந்தோறும் துணைக்குழுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு, செய்து முடிக்கப்பட்ட பணிகளின் தரம் குறித்தும், செய்ய வேண்டிய பணிகளை விரைந்து செய்வது குறித்தும் கலந்தாலோசித்து, முடிவுகள் எடுக்கப்பட்டது.

காயலர்கள் வருகை:

காயலர் தினம் - 2013 நிகழ்வு நாளன்று, அமீரகம் வாழ் காயலர்கள் அனைவரும் சாரி சாரியாக நிகழ்விடமான பூங்காவை நோக்கி குறித்த நேரத்திலேயே வரத் தொடங்கிவிட்டனர். வாகன வசதி இல்லாதோரை அழைத்து வருவதற்காக தேரா நகரில் அமைந்துள்ள அஸ்கான் D பிளாக்கிலிருந்து பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேனீர் - சுண்டல் வரவேற்பு:

நிகழ்விடம் வந்தோரை வரவேற்குமுகமாக காயல்பட்டினம் பாணியிலான இஞ்சி கலந்த தேனீருடன், சூடான சுண்டல் பரிமாறப்பட்டது.

காயலர் அரட்டை:

ஜும்ஆ தொழுகை நேரம் வரை உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் ஒருவரையொருவர் சந்தித்து, முகமன் கூறி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டவர்களாக அரட்டையில் ஈடுபட்டனர்.

உறுப்பினர் விபரங்கள் பதிவு:

கூட்ட நிகழ்வு நாளன்று, உறுப்பினர்கள் அனைவரும் நண்பகல் 12.00 மணிக்குள் வந்து, தமது சுய விபரங்களைப் பதிவு செய்து, குலுக்கல் மூலம் தங்க நாணயத்தைப் பரிசாகப் பெற்றுச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி, நண்பகல் 12.00 மணிக்கு முன்பாக நிகழ்விடத்திற்கு வருகை தந்தவர்களின் தொடர்பு விபரங்கள் சேகரிக்கப்பட்டு, குலுக்கல் பரிசுக்காக பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.



பொதுக்குழுக் கூட்டம்:

ஜும்ஆ தொழுகைக்குப் பின், பொதுக்குழு கூட்டம் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல் ஹசன் தலைமையில், துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ, அபூதபீ காயல் நல மன்ற தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, அதன் கவுரவ தலைவர் ஹாஜி ஐ.இம்தியாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.





ஹாஃபிழ் எச்.என்.டி.ஹஸ்புல்லாஹ் மக்கீ இறைமறை திருக்குர்ஆனின் சில வசனங்களை கிராஅத்தாக ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.





தலைமையுரை:

அவரைத் தொடர்ந்து, கூட்டத் தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் வரவேற்புரையாற்றினார்.



நகர்நலப் பணிகளே காயல் நல மன்றங்களின் முக்கிய நோக்கமென்று கூறிய அவர், அந்நோக்கம் சிறப்புற செயலாக்கம் பெறுவதற்கு, அனைத்து உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஒத்துழைப்பும் மிகவும் இன்றியமையாதது என்று கூறினார்.



துபை கா.ந.மன்ற தலைவர் உரை:

அடுத்து, துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறப்புரையாற்றினார்.



மன்றத்தால் நடத்தப்படும் நடப்பு கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக நடந்தேற, அவற்றுக்கான ஏற்பாடுகளை மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் மட்டுமே செய்து வருவதாகவும், அனைத்து உறுப்பினர்களும் இது விஷயத்தில் மனமுவந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு, உதவியும் - ஒத்துழைப்பும் வழங்கினால் இன்னும் அழகாகவும், நேர்த்தியாகவும் நிகழ்ச்சிகளை நடத்திட இயலும் என்றும் கூறிய அவர், நடப்பு கூட்டத்திற்கான அனைத்தேற்பாடுகளையும் திறம்பட செய்த அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.



பொதுநலப் பணிகளில் ஈடுபடுவது அல்லாஹ்வுக்கு உவப்பான பணி என்றும், இறை உவப்பைப் பெற்றிடுவதற்காக அனைத்துறுப்பினர்களும் மன்றப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அபூதபீ கா.ந.மன்ற தலைவர் உரை:

அடுத்து, அபூதபீ காயல் நல மன்ற தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ உரையாற்றினார்.

இதற்கு முன் அமீரக காயல் நல மன்றமாகவும், இப்போது துபை காயல் நல மன்றமாகவும் இயங்கி வரும் இம்மன்றம் 25 ஆண்டு காலமாக இறையருளால் சிறப்புற செயல்பட்டு வருவது, காயல்பட்டினத்தின் நகர்நலச் சேவையில் ஒரு பெரிய மைல் கல் என்று கூறிய அவர், இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும், இளைஞர்கள் தாமாகவே முன்வந்து இவ்வறப் பணிகளில் ஈடுபட வேண்டுமென்றும் கூறினார்.



பல் மருத்துவ இலவச முகாம் குறித்து விளக்கம்:

பின்னர், அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட பல் மருத்துவ இலவச முகாம் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் விளக்கிப் பேசினார்.



பொது அறிவுப் போட்டி:

இவ்வாறாக உரைகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, பார்வையாளர்களிடம் - இடையிடையே பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோர் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.



மதிய உணவு - களறி சாப்பாடு:

பின்னர், நாவில் நீர் சுரக்கச் செய்யும் சுவைமிக்க காயல் களரி சாப்பாடு, அனைவருக்கும் சுடச்சுட பரிமாறப்பட்டது. சாப்பாட்டின் சுவை, சாப்பிட்ட அனைவரையும் நமதூருக்கே கொண்டு சென்றுவிட்டதாக, கூட்டத்தில் பங்கேற்றோர் பலர் மகிழ்ச்சிப் பெருக்குடன் கூறியது ஏற்பாட்டாளர்களை மகிழச் செய்தது.





கண்ணீரை வரவழைத்த காயல் க்ராண்ட் மாஸ்டர்:

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவைச் சார்ந்த ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூனின் மூத்த புதல்வியான 8 வயது சிறுமி உம்மு உமாரா நடத்திய GRAND MASTER நிகழ்ச்சி வந்திருந்த அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.



புனித குர்'ஆனில் கூறப்பட்ட மலக்குகள், நபிமார்கள், நல்லடியார்கள், மனிதர்கள், ஜின்கள், தீயவர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் - இவற்றில் ஒன்றின் பெயரை போட்டியாளர் மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். அவர்களிடம், ‘Kayal Grand Master’ உம்மு உமாரா கேள்விகளைக் கேட்பார். அதற்கு ‘ஆம்’, ‘இல்லை’ என்று மட்டும் போட்டியாளர் பதிலளிக்க வேண்டும். சில கேள்விகளுக்குப் பின், போட்டியாளர் மனதில் நினைத்த பொருளின் பெயரை க்ராண்ட் மாஸ்டர் சொல்வார். இதுவே போட்டி முறை.

இவ்வாறாக போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்க, போட்டியாளர்கள் மனதில் நினைத்ததை, க்ராண்ட் மாஸ்டர் உம்மு உமாரா மிகவும் துல்லியமாகக் கண்டுபிடித்ததும், சில சமயங்களில் க்ராண்ட் மாஸ்டர் கேட்ட கேள்விகளுக்கு போட்டியாளர் கவனக் குறைவால் தவறான பதிலளிக்கையில் அதையும் அவர் திருத்திக் கொடுத்ததும் பார்வையாளர்களை வியப்பிலாழ்த்தி, அவர்களின் கண்களிலும் கண்ணீரை மல்கச் செய்தது.



சிறுமி உம்மு உமாராவைப் பாராட்டி, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் தனது பேனாவை மேடையிலேயே அன்பளிப்பாக வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறுமிக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.



வேடிக்கைப் போட்டிகள்:

விஜய் டிவி புகழ் “சொல்லுங்கண்ணே சொல்லுங்க” நிகழ்ச்சியைப் போல, "சொல்லுங்க காக்கா சொல்லுங்க" என்ற பெயரில் பார்வையாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அனைவரின் ஆர்வத்தையும் தூண்டி களைகட்டச் செய்தது.



பின்னர், ‘120 வினாடி தமிழ் பேச்சு’, ‘மாத்தி யோசி’ உள்ளிட்ட - உள்ளம் கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சிகள் பல தொடர்ச்சியாக நடத்தப்பட்டமை, உண்ட மயக்கத்திலிருந்த உறுப்பினர்களை, மாலை தேனீர் வேளை வரை இழுத்துச் சென்றது.



இந்நிகழ்ச்சிகளை மன்றத்தின் துணைத் தலைவர் சாளை ஷேக் ஸலீம், செயலர் டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் ஆகியோர் சிறப்புற நடத்திட, உறுப்பினர் சுபுஹான் பீர் முஹம்மத் மற்றும் காயல் அப்துல் வாஹித் ஆகியோர் அவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர்.

மழலையர் - சிறார் போட்டிகள்:

பின்னர், சிறார் பங்கேற்பில் பலூன் ஃபைட்டிங், மியூஸிக்கல் சேர், லெமன் அன்ட் ஸ்பூன், ஓட்டப் பந்தயம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.















அனைவருக்கான போட்டிகள்:

பின்னர், சிறாரைத் தவிர்த்து அனைவரது பங்கேற்பில், உரி அடித்தல், சாக்கு ஓட்டப்பந்தயம் போன்ற ‘வீர விளையாட்டு’ப் போட்டிகள் நடத்தப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுக்காரர்கள் ஓடுவதை மகளிர் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.



கண்ணைக் கட்டிக்கொண்டு உரி அடிக்கும் போட்டியில், போட்டியாளர்கள் - இலக்கைத் தவிர அனைத்தையும் ‘மிகத் துல்லியமாக’ கம்பால் அடித்து வெளுத்த விதம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கச் செய்தது.



இவ்வாறாக விளையாட்டுப் போட்டிகள் நடந்தேற, அதனைத் தொடர்ந்து, சுடச் சுட சிக்கன் சமோஸாவுடன் மாலை வேளைக்கான தேனீர் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

பரிசளிப்பு:

பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுப்பினர்களுக்கான "தங்கக் காசு" குலுக்கலில், உறுப்பினர் எம்.ஏ.தைக்கா தம்பி வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு, பரிசுக்கு அனுசரணையளித்திருந்த ஜமீல் ஜுவெல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரும் - மன்றத் தலைவருமான ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.



மகளிருக்கும், அவர்களது பகுதியில் தனியாக சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.







‘காயலர் தினம் - 2013’ நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட அனைத்துப் போட்டிகளிலும் வென்ற அனைவருக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டன. அதுபோல, இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த அனைத்து சிறாருக்கும் - அவரவர் வயதுக்கேற்ப பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகள்:

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மன்றத்தின் துணைத் தலைவர் சாளை ஷேக் ஸலீம் நெறிப்படுத்தினார். ஒலி அமைப்புகளை உறுப்பினர் எம்.ஏ.ஸாஜித் நேர்த்தியுடன் செய்திருந்தார்.

துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன. இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆண்கள் - பெண்கள் என சுமார் 370 பேர் கலந்துகொண்டனர்.





குழுப்படத்தை பெரிய அளவில் காண இங்கே சொடுக்குக!

மனசே இல்லே...

நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்ற பின்னர், வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வில் பங்கேற்ற மகிழ்ச்சியைக் கொண்டவர்களாக, அரை மனதுடன் அனைவரும் இருப்பிடம் திரும்பிச் சென்றனர்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!


இவ்வாறு, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
துபை காயல் நல மன்றம் சார்பாக
சாளை ஷேக் ஸலீம்
(துணைத் தலைவர்)

படங்கள்:
H.K.ஃபயாஸ்
ஸாஜித் முஹம்மத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. காணக்கண் கோடி வேண்டும்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [06 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26728

துபாய் கா.ந.மன்றம் களிப்புடன் கொண்டாடிடும் காட்சியைக்காண கண்கோடிவேண்டும்!எத்தனை மகிழ்ச்சி,எத்தனைகொண்டாட்டம், எத்துனை ஒற்றுமையான ஒருங்கிணைப்பு. இவை அத்தனையும் அரபிக்கடல் தாண்டி அக்கரையில் நடைபெறுகிறதே,

அதே உணர்வும்,,ஒற்றுமையும்,விட்டுகொடுத்து போகின்ற தன்மையும் இக்கரையாம் நம்காயலில் நடைபெறும் நாள் எப்போது,?

அந்த இனிமையான நிம்மதியான நாட்களுக்காக ஏங்கி எதிபார்க்கும் எத்தனையோ இதயங்களின் பிரார்த்தனைகளை ஏற்கும்முகமாக எங்கள் மனம்குளிரும் அந்த மகத்தானநாள் நாளைமுதல் நடைமுறைக்கு வராதா?வல்ல நாயகனே! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [07 April 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26734

களிப்புடன் கொண்டாடி முடிந்த, துபை கா.ந.மன்றத்தின், காயலர் தினம் 2013 திற்கு நல்-வாழ்த்துக்கள்.

இந்த நிகழ்வுகளை பார்க்க பார்க்க பொறாமையுடன் கூடிய சந்தோசம் வருகின்றது.

நாங்கள் வசிக்கும் சவுதி அரேபியாவில் இது மாதிரியான ஒன்று கூடுதல் எல்லாம் சாத்தியமே இல்லை. ஒவ்வொரு கூட்டத்தையும் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு, ஒருவித பயத்துடன்தான் நடத்தவேண்டியது உள்ளது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள், அல்ஹம்து லில்லாஹ்.

- ஒவ்வொரு புகைப்படங்களையும் பார்க்கும் போது பூரிப்பாக உள்ளது. அனைவர்களின் முகத்திலும் எவ்வளவு சந்தோசம். மனம் ஒன்றிய புன்னகை அனைவர்களின் முகத்திலும் ஓடுகின்றது. இந்த உலகில் வேறு என்னையா வேண்டும் மனிதனுக்கு.. இந்த சந்தோசம்தானே.

- குட்டி குட்டி மலர்களின் முகங்களிலும் எவ்வளவு சந்தோசம். கலப்படம் இல்லாத சிரிப்புகள்.

** இந்த நிகழ்வில் இரண்டு காமடிகள்.. ரசித்து சிரித்தேன்.

" உரி அடித்தல், சாக்கு ஓட்டப்பந்தயம் போன்ற ‘வீர விளையாட்டு’ப் போட்டிகள் ".

- உங்களுக்கு இந்த போட்டிகள் எல்லாம் வீர விளையாட்டா..? ஒரு காளை மாட்டை ஓடவிட்டு பிடிக்கலாம் அல்லவா.

" நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுக்காரர்கள் ஓடுவதை மகளிர் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர் "..

- திருமணத்திற்கு முன்பு சுறுசுறுப்புடன் ஆட்ட ஓட்டத்துடன் இருந்தவர்களை, இப்படி ஆக்கிவிட்டோமே என்று கவலைப்பட்டு இருப்பார்கள். இனி சுதந்திரம்தான் அனைத்து ஆடவர்களுக்கும்...! சரிதானே சாளை சலீம் காக்கா. ச்ச்..சும்மா.

*** காயல் க்ராண்ட் மாஸ்டர் உம்மு உமாரா, எப்படி பாராட்டுவது என்றே புரியவில்லை. இந்த குழந்தையை எப்படி பாராட்டலாம் என்று யோசித்தே, ஒரு நாள் கடந்துவிட்டது, கருத்து எழுதுவதற்கு.

வல்ல அல்லாஹ், இந்த குழந்தையை எல்லா விதத்திலும் அவனுக்கு பிடித்தமான, அபிவிருத்தி நிறைந்த குழந்தையாக ஆக்குவானாக. பெற்றோர்களுக்கு ஸ்பெஷல் பாராடுக்கள். தம்பி ஸர்ஜூனின்.. சூப்பர்.. உன்னை நினைத்து துஆ செய்து பூரிக்கின்றேன்.

பரிசு கொடுத்த ராவன்னா அபுல் ஹசன் ஹாஜியார் அவர்களுக்கும் நன்றிகள். இந்த குழந்தைக்கு நீங்கள் ஒரு பிளாங் செக்கே கொடுக்கலாம். !!

- டிவி-இல் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" என்ற நிகழ்ச்சியை பார்த்த பின்புதான், நம் மக்கள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கின்றார்கள், நம் கல்விக் கொள்கை எவ்வளவு சிறப்பாக உள்ளது என்று அறிய முடிகின்றது. "சொல்லுங்க காக்கா சொல்லுங்க" எப்படி.. அப்படிதானே. யூடியூபில் பதிவு உள்ளதா..?

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்த கேம் அங்கிள், சகோ. எம்.ஏ.ஸாஜித், சுப்ஹான் காக்கா முதல் அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகள்.

தொடரட்டும் உங்களின் சந்தோசம், இந்த ஒற்றுமை, மனம் நிறைந்த பூரிப்பு, ..மற்றும் மக்களின் தொடர் சேவை.. வல்ல ரஹ்மான் அங்கீகரித்த வழியில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by shaik sinan (BANGKOK) [08 April 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 26744

மாஷா அலல்ஹ் இந்த மகிழ்ச்சி , சிரிப்பு , ஒற்றுமை என்றும் என்றும் இருக்க அல்லா உதவி புரிவனாஹ் ஆமீன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved