நடந்து முடிந்த CENTRAL BOARD OF SECONDARY EDUCATION 2013 (SSE) மத்திய கிழக்கு பிராந்தியத் தேர்வின் முடிவு (Board Based) மே மாதம் 30ஆம் தேதி வியாழக்கிழமையன்று வெளியானது.
இம்முடிவுகளின்படி, சஊதி அரபிய்யா ரியாத் நகரிலுள்ள அல்-யாஸ்மின் இன்டர்நேஷனல் பள்ளில் பயின்ற - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த எஸ்.டி.செய்யித் முஹம்மத் அலீ - குளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் பேரனும், முஹ்யித்தீன் சதக்கத்துல்லாஹ் - குளம் ஹாஜரா பீவி ஆகியோரின் மகனுமான ஹாஃபிழ் அப்துர்ரஹ்மான்,
ரியாத் அல்-யாரா இன்டர்நேஷனல் பள்ளில் பயின்ற - காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் பீனா அபுல் ஹஸன் மற்றும் மர்ஹூம் பிரபு ஷேக் தாவூத் ஆகியோரின் பேரனும், ஷாதுலி அபுல் ஹசன் - பிரபு நஃபீஸத் தாஹிரா ஆகியோரின் மகனுமான ஹாஃபிழ் முஹம்மத் ஷாதுலீ,
ஆகிய இரண்டு ஹாஃபிழ் மாணவர்கள் பத்துக்கு பத்து புள்ளிகள் (CGPA = 10) பெற்று A1 தகுதியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களைப் போன்று மதிப்பெண் பெற்றவர்களை, கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, ரியாதில் வெளியான சந்திரிகா மலையாள நாளேட்டில் பாராட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
![](/newsimg/126201348185.jpg)
இந்த இரு மாணவர்களும் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்யாமல், ரியாத் நகரிலுள்ள அல்-ஜாமியா ஹுறைசில் சம காலத்தில் ஹாஃபிழ் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சந்திரிகா மலையாள நாளேடு மூலமாக
ரியாதிலிருந்து அபு அஹ்மத் சோனா |