Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:00:50 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14439
#KOTW14439
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 2, 2014
01ஆவது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3795 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற வெற்றிடங்களுக்கும் தேர்தல் அறிவிப்பு மறு ஆணை, கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியானது.

அதன்படி செப்டம்பர் 4 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 18 தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் நகராட்சியின் கோமான் மேலத்தெரு, கோமான் நடுத்தெரு, கோமான் கீழத்தெரு, அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடத்திற்கு, இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இருவர் போட்டியிடவுள்ளதாகத் தெரிகிறது.

கோமான் ஜமாஅத் சார்பாக பொது வேட்பாளரை அறிவிப்பதற்கான ஜமாஅத் கூட்டம், 31.08.2014 அன்று கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து எஸ்.ஐ.அஷ்ரஃப், நெய்னா முஹம்மத் ஆகியோர் மனு அளித்திருந்தனர். ஜமாஅத் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஏ.ஐ.அஷ்ரஃப் ஜமாஅத் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

காயல்பட்டினம் - 28/65, கோமான் நடுத்தெரு என்ற முகவரியைச் சேர்ந்த எஸ்.ஐ.அஷ்ரஃபுக்கு வயது 49. 05ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். காலஞ்சென்ற கே.எம்.செய்யித் இஸ்மாஈல் - ஆபிதா பீவி தம்பதியின் மகனான இவருக்கு, நூர் ஜஹான் என்ற மனைவியும், மொகுதூம் அனீஸா என்ற மகளும் உள்ளனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், காயல்பட்டினம் கடையக்குடி (கொம்புத்துறை)யைச் சேர்ந்த அமலக்கனி வேட்பாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டார்.

44 வயதான இவர் 05ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். ஏ.மரிய அந்தோணி - மரிய செல்வி தம்பதியின் மகளான இவர், எஸ்.மெல்கிஸ் என்பவரின் மனைவியாவார். இவருக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளனர்.

மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத் தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொறுப்பு வகித்து வருகிறார்.

அமலக்கனி, நாளை (செப்டம்பர் 03) காலை 11.00 மணியளவிலும், எஸ்.ஐ.அஷ்ரஃப் காலை 11.30 மணியளவிலும், காயல்பட்டினம் நகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வெற்றி நாயகன்.!
posted by omer anas (DOHA QATAR.) [03 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36960

எந்த கட்சி வந்தாலும்,எங்கள் அருமை தம்பி கோமான் தெருவின் நம்பிக்கை நாயகன் ஏ.ஐ அஷ்ரஃப் தான் வெற்றி நாயகன்! நாம் ஒற்றுமைக்கு ஒரு உதாரணம் கற்றுக்கொள்ள வேணும் என்றால் இந்த கோமான் ,கோமான், கோமான், மக்களிடமிருந்தே கற்றுகொள்ள வேணும்.இவன் தோற்றால்,,,?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சகோதரர் அஷ்ரப் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [03 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36962

ஆளும் அதிமுக, தனது வேட்பாளரை நிறுத்தி இருக்கும் சூழலில், கோமான் ஜமாஅத் சார்பில், சகோதரர் அஷ்ரப் அவர்களை நிறுத்தி உள்ளனர். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அந்த வார்டின் நமது சமுதாய அதிமுகவினர், தங்களது கட்சியை மறந்து, தங்களது ஜமாஅத் அறிவித்த வேட்பாளர், சகோதரர். அஷ்ரப் அவர்கள் வெற்றி பெற, தங்களது ஓட்டை போடுவது மட்டுமல்லாது, அவரின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

சென்ற தேர்தலில், அந்த ஜமாஅத் சார்பில் போட்டியிட்ட, சகோதரர் லுக்மான் காக்கா அவர்களை வெற்றி பெற வைத்தது போல், சகோதரர் அஷ்ரப் அவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by V D Sadak Thamby (hongkong) [03 September 2014]
IP: 113.*.*.* Hong Kong | Comment Reference Number: 36963

முதல்முறையாக அரசியல்கட்சி சார்பில் அதிகாரபூர்வ போட்டி. இனிமேல் அரசியல்கட்சீகலின் அதீக்கம்தான் நம் ஊரில் மேலோங்கும்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [03 September 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36971

நமது காயல்பட்டினம் நகராட்சியின் ஒன்றாவது வார்டு இடைதேர்தலில் போட்டிட வேட்பாளராக கோமான் ஜமாஅத் சார்பில் தேர்வு செய்து உள்ள சகோதரர் S.I. அஷ்ரஃப் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

உங்களது வெற்றியை வல்ல நாயன் உறுதி ஆக்கி தருவானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. உண்மையான ஒற்றுமை ஒருகாலமும் வீழாது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [03 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36973

ஒரு ஜமாத்தின் ஒற்றுமை வெல்லவேண்டும்.ஒரு ஜமாத்தின் ஒற்றுமை வென்றால் அதை சுற்றியுள்ள வட்டார ஜமாத் வென்றதற்கு சமம் அந்த வட்டாரம் வென்றால் ஊர் ஒற்றுமையால் ஒருமித்த கருத்தால் வென்றதற்கு சமம்!

ஊர் ஒற்றுமைக்கு முன்னால் எந்த கட்சியும் எடுபடாது, கட்சியையொ ஆட்சியாளர்கள் அனுசரணை கிடைக்கும் என்ற கீறல் ரிக்காடையோ சொல்லி சொல்லி ஒரு ஜமாத்தின் ஒட்டுமொத்த ஒரிங்கிணைந்தவெற்றிக்கு வேட்டு வைத்து விடாதீர்கள்!

உண்மையான ஒற்றுமை ஒருகாலமும் வீழாது! வெற்றி ஒற்றுமையான ஜமாத்தின் பக்கமே!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,

வாழ்த்துடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [03 September 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36975

ஜமாஅத் ஒற்றுமை என்பது நமதூரில் எல்லா ஜமாஅத்திலும் அவசியம் இருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

அதே நேரத்தில், அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாசலையொட்டி ஒரு ஜமாஅத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை, வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்போது காட்டிய அதே அக்கறையுடன் கண்காணிக்கவும் வேண்டுமல்லவா?

இந்த வார்டின் முந்தைய உறுப்பினர் நேர்மையானவர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே வேளையில் - நேர்மையற்ற சிலரின் திட்டங்களுக்கும் அவர் துணை போகவேண்டிய சூழல் ஏற்பட்டதே? அது குறித்து அவர் சார்ந்த ஜமாத்தின் அங்கீகாரம் பெற்றாரா?

தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்த ஒரு சில நாட்களில், உறுப்பினர்கள் பலரும் ஆளும் கட்சியில் இணைந்தார்களே, இந்த வார்டின் முந்தைய உறுப்பினர் உட்பட. அது ஜமாத்தின் ஒப்புதலுடன் நடந்ததா, இல்லையா?

யாரையோ குறை கூறுவதற்காகவோ, ஜமாஅத் ஒற்றுமை என்பதைக் கொச்சைப்படுத்துவதற்காகவோ நான் இதைச் சொல்லவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஜமாஅத் தலையிடுவதானால், தான் முன்மொழிந்தவரின் ஐந்தாண்டு கால நடவடிக்கைகளையும் ஜமாஅத் கண்காணித்து, சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனில் துவக்கத்திலேயே தலையிடாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வெறுமனே பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் மட்டும் தலையிட்டு, மற்றவற்றில் கவனம் செலுத்தாதிருந்தால், “ஜமாஅத் ஒற்றுமை” கேலியாகிவிடுமே?

இது அரசியல் களம். நடக்கக் கூடாததெல்லாம் நடக்கும். அதில் ஜமாஅத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்த நாமே வழிவிட்டு விடக்கூடாது. (எங்கள் குருவித்துறைப்பள்ளி ஜமாஅத்தில் இது விஷயத்தில் எனக்குக் கிடைத்த முன் அனுபவமே இக்கருத்தை எழுத என்னைத் தூண்டியது.)

இது என் ஆதங்கம் கலந்த பணிவான ஆலோசனை மட்டுமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஜமாஅத் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.....
posted by kavimagan (doha...qatar) [03 September 2014]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 36980

நண்பர் ஹாமீத் ரிஃபாய் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியவைகள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று..... அவரது ஆலோசனையை கோமான் ஜமாஅத் பரிசீலிக்கும் என்று நம்புவோமாக!

ஜமாஅத் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளர் வெற்றி பெறுவது, ஊரின் நன்மைக்கு உகந்ததாக இருக்கும்.... ஒவ்வொரு ஜமாஅத்தின் கரங்களும் வலுப்படுத்தப்பட வேண்டும்... அதற்கு எஸ்.ஐ.அஷ்ரப் காக்கா அவர்கள் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெற வேண்டும்.... அவருக்கு எனது நல்வாழ்த்துகள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஒற்றுமையின் ஒய்யார கோபுர கலசமாய் மின்ன வேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [04 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36986

வேட்ப்பாளரை ஜமாத் கண்காணிக்கவேண்டும் என்பதில் எவருக்கும் இரு கருத்துக்கள் இருக்க முடியாது.சென்ற வேட்பாளர்கூட தன்னிச்சியாக நடந்திருக்கலாம்.ஆனால் இவைகளையெல்லாம் அறிந்து நன்றாக அலசி ஆராய்ந்து ஒட்டுமொத்தமாக ஒருமித்த ஒற்றுமையோடு ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்து இருக்கிறார்கள் என்ற நல்ல சாதகாமான என்ணத்தை ஏன் நாம் நினைக்க கூடாது!

தேர்வான எல்லோர்களும் திசைமாறிப்போவார்கள் ஆகவே அவரவர்கள் விருப்பபடி வழி செல்லவிட்டுவிடுங்கள் என்ற சித்தாந்தத்திற்கு நாம் வலுகொடுக்க முன் வந்தால் பாரம்பரிய புகழ்மிகு நமதூரில் அரசியல் சாக்கடைதான் அங்கும் இங்குமில்லாமல் எங்கும் ஓடி வழியும்!

1 வது வார்டு உறுப்பினர் மட்டும் ஒரு அரசியல் கட்சியில் சேரவில்லை,தலைவர் முதல் அநேக உறுப்பினர்களும் அவரவர் இஸ்டத்திற்கு அங்கம் வகித்தார்கள் அணிமாறினார்கள்!

என்னைப்பொருத்தவரை எள்ளளவும் நினைக்கவில்லை தலைவியவர்கள் ஒரு அரசியல் கட்சியில் இணைவார் என்று. ஆக அது அவர் விருப்பம்.

ஆகவே தேர்ந்த உறுப்பினர் இப்படி நடப்பாரோ என்ற ஜோதிடத்தினுள் நுழையாமல் நல்லதையே நினைத்து ஒரு ஜாமத்தின் ஒற்றுமைக்கு நாம் உற்சாகம் கொடுப்பதை விட்டுவிட்டு கற்பனை கதைபேசி நம் ஒருமித்த உணர்வை பலகீனப்படுத்த வேண்டாம் தயவு செய்து.

எல்லா ஜமாத்திலும் குருவித்துறைப்பள்ளி ஜமாஅத்தின் தர்மசங்கட நிகழ்வுபோல் நிகழும் என்ற எதிர்ப்பார்ப்பும் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்!

முடிவாக நான் முறையிட முனைவது ஒரு ஜமாத் ஒற்றுமையாக ஒருமித்த எண்ணத்தோடு ஒரு வேட்ப்பாளரை நிறுத்தி இருக்கிறது!அவர்களின் ஒற்றுமையை நாம் மெச்சவேண்டும், அவர்களின் ஒருமித்த உணர்வை நாம் பாரட்டிப்புகழ்ந்து அதைபோல் அனைத்து ஜமாத்தும் நமதூறும் ஒற்றுமையின் ஒய்யார கோபுர கலசமாய் மின்ன வேண்டும் அதற்க்கு நாம் அனைவர்களும் ஒத்துழைக்க வேண்டுவது மட்டுமல்ல எல்லாம் வல்ல அல்லாஹ்வும் நம் துவாவை கபூல் செய்ய வேண்டும் ஆமீன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by V D SADAK THAMBY (HONG KONG) [04 September 2014]
IP: 113.*.*.* Hong Kong | Comment Reference Number: 36991

ஜமாஅத் சுட்டிக்காட்டிய வேட்பாளர் தேர்ந்தடுக்கப்பட்டு அவர் சரியாக செயல்படவில்லை என்றால் ஜமாஅத் தட்டிகேட்ட்கவேண்டும் என்று நாம் சொல்கிறோம். முற்றிலும் சரிதான்.

ஒருவேளை அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்று அவர் சரியாக செயல்படவில்லை என்றால் நாம் யாரை கேட்பது ? யார் அவரை தட்டிக்கேட்பது ? அம்மா அவர்களை நாம் கேட்கமுடியுமா என்ன ? எனவே ஜமாத்திற்கு நாம் கண்டிசன் எதுவும் போடவேண்டாம் என்பது எனது பணிவான கருத்து. எனவே கண்டிசன் போடாது நாம் ஜமாத்தின் வேட்பாளைரையே நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [04 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37003

ஒரு கருத்து எப்படியெல்லாம் திரித்துக் கூறப்படுகிறது என்பதற்கு இச்செய்தியின் கீழ் பதியப்பட்டுள்ள கருத்துக்களே சான்று.

எல்லோரும் ஜமாஅத் ஒற்றுமைக்கு வலிமை சேர்த்து கருத்து எழுதியுள்ளது போலவும், என் கருத்து அதற்கு மாற்றமானது என்பது போலவும் இங்கு விவரமறிந்தவர்களாக நான் கருதும் சிலராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

என் கருத்தை மீண்டும் நன்றாகப் படித்துப் பாருங்கள் புரியும். ஜமாஅத் மூலம் ஒரு வேட்பாளரை முன்னிறுத்துவதை நான் குறை காணவில்லை. அது வரவேற்கப்பட வேண்டியது என்பதை எனது முந்தைய கருத்தின் முதல் பத்தியே கூறுகிறது.

இதுபோன்ற விவகாரங்களில் ஜமாஅத் தலையிட்டால், அது வெறுமனே வேட்பாளரை முன்னிறுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல், அவரது பொறுப்புக் காலம் முழுவதும் மக்கள் சார்பில் கண்காணிக்கப்படும் வகையில் அதன் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றே கருத்துப் பதிவு செய்திருந்தேன்.

முந்தைய வேட்பாளர் விஷயத்தில், அவரது முக்கியமான செயல்பாடுகளில் கூட ஜமாஅத்துடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டதாகவோ, ஜமாஅத் அந்நடவடிக்கைகளைக் கண்காணித்ததாகவோ அறிய முடியவில்லை.

தட்டிக் கேட்பது இரண்டாவது கட்டம். முதல் காரியம் கண்காணித்து கருத்து தெரிவிப்பது. அதையாவது செய்யலாமே என்பதுதான் எனது ஏக்கம்.

இப்போதும் நான் தெளிவாகக் கூறுகிறேன். வெறுமனே வேட்பாளரை முன்னிறுத்துவதோடு நிற்பதாக இருந்தால் இதில் ஜமாஅத் தலையிடாமலேயே இருக்கலாம். தலையிடுவதானால், முழுமையாகத் தலையிடட்டும்.

இது ஜமாஅத் ஒற்றுமையை வலுப்படுத்த - அர்த்தமுள்ளதாக ஆக்கிட எனது பணிவான கருத்து மட்டுமே!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன்,
ஹாமித் ரிஃபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved