Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:26:20 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14448
#KOTW14448
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 4, 2014
1வது வார்டு இடைத்தேர்தலுக்கு கோமான் ஜமாஅத் சார்பாக தேர்வான எஸ்.ஐ.அஸ்ரஃப் வேட்பு மனு தாக்கல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3930 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற வெற்றிடங்களுக்கும் தேர்தல் அறிவிப்பு மறு ஆணை, கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியானது.

அதன்படி செப்டம்பர் 4 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 18 தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் நகராட்சியின் கோமான் மேலத்தெரு, கோமான் நடுத்தெரு, கோமான் கீழத்தெரு, அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடத்திற்கு - கோமான் ஜமாஅத் சார்பாக, எஸ்.ஐ.அஷ்ரஃப் என்பவர் தேர்வு செய்யப்பட்டு, தேர்தலில் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டார்.

இன்று (செப்டம்பர் 04) காலை 11.30 மணியளவில் அவர் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் வேட்பு மனுவைப் பெற்றுக்கொண்டார்.



இவ்வேளையில் - இவ்வார்டின் முன்னாள் உறுப்பினர் ஏ.லுக்மான், கோமான் ஜமாஅத் நிர்வாகிகள் தலைவர் சுல்தான், துணைத் தலைவர் எம்.ஒய்.ஹாஜா, செயலாளர் செய்து முஹம்மது, பொருளாளர் காசிம் உட்பட பொதுமக்கள் உடனிருந்தனர்.

மனு தாக்கல் செய்துவிட்ட வெளியில் வந்த வேட்பாளர் எஸ்.ஐ.அஸ்ரஃப்க்கு ஆதரவு தெரிவித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தினர்.











புகைப்படங்கள் மற்றும் தகவல்:
ஏ.ஆர்.சேக் முஹம்மது

[செய்தி திருத்தப்பட்டது @ 2:10 pm / 4.9.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [04 September 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36994

இந்த தேர்தலில் ஜெயிப்பவர்கள் யார் தெரியுமா?

நிறைய சவால்களை, நம்பிக்கையோடு எதிர்கொண்டு போராடுகிறவர்கள் இந்த தேர்தலில் வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெறுவார்கள்.

கடந்த 2014 ல் பாராளுமன்ற தேர்தல் திமுக கூட்டணிக்கு முஸ்லிம் லீக், பிற கட்சிகள், ஆதரித்தது போல மக்கள் சூழ்ந்து களம் இறங்கி இருக்கிறார்கள்.

இந்த தேர்தல் வெற்றி நிர்ணயம் கோமான் வாழ் பகுதிமக்களிடம் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஒருமித்த ஜமாஅத் வெல்லும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [04 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36996

உறுதி மிகுந்த ஒற்றுமையின் கைற்றில் ஒருசேர்ந்த ஓரணியாய் நிற்கும் இந்த நிழற்பட காட்சியைப்பார்க்கும் பொழுது வல்ல இறைவன் ஒருமித்த ஜாமத்தின் உணர்வுக்கு வெற்றியைத் தந்திடுவான்!

ஒருங்கிணைந்த ஜமாத்தின் ஒற்றுமையை குழைக்க நினைக்கும் எந்த எஃகு சக்தி எத்தர்களின் ஆட்டமும் ஆர்ப்பாட்டமும் எல்லாம் வல்ல அல்லஹ்வின் முன் அக்குவெரா ஆணிவேரா பிரிந்தொழியும் படங்களையும் பின்னர் பார்க்கத்தான் போகிறோம் இன்ஷா அல்லாஹ்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohamed salih (chennai) [04 September 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36997

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வெற்றியை தருவானாக ஆமீன் ..

என்றும் அன்புடன் ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்த்துக்கள்
posted by Shaik Sadakathullah (Hong Kong) [04 September 2014]
IP: 223.*.*.* Hong Kong | Comment Reference Number: 37000

கோமான் ஜமாஅத் சார்பில் களமிறங்கி உள்ள அன்பு சகோதரர் அஷ்ரப் அவர்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [04 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37001

ஐந்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். இதில் மூவர், மாற்று வேட்பாளர்கள். எனவே - இறுதியாக இந்த வார்டில் இரு வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள் போல் தெரிகிறது.

இந்த செய்திக்கு கருத்து கூறுபவர்கள் பலர், கோமான் ஜமாஅத்தின் ஒற்றுமையை பாராட்டியுள்ளார்கள். உண்மையிலே பாராட்டவேண்டியது தான். அந்த ஜமாஅத் சார்பாக ஒரு வேட்பாளர் தான் நின்றுள்ளார்.

இதை வாழ்த்தும் அதே நேரத்தில், அதே வார்டின் மற்றொரு பகுதியில் இருந்து ஒருவர் போட்டியிடுவதை, ஒற்றுமையை குலைக்கும் செயல் எனக்கூறுவது பொருத்தமாக இல்லை. ஒரு வார்டு, அதில் ஒரே பகுதி/ஒரே சமுதாய மக்கள் தான் உள்ளார்கள் என்றால் தான் தங்கள் கருத்து பொருந்தும்.

கடையக்குடியும் (கொம்புத்துறை), அருணாச்ச்சலபுரமும் நம் ஊரில் தான் உள்ளது. இதே வார்டில் தான் உள்ளது. அவர்களுக்கும் - தேர்தலில் நிற்க உரிமையுள்ளது.

இதை நான் கூறுவதால், நான் ஜமாஅத் ஒற்றுமைக்கு எதிரானவன் என தயவுசெய்து நினைக்காதீர்கள். தயவு செய்து இந்த குறுகிய எண்ணங்களில் இருந்து வெளியில் வாருங்கள். இருவரில் சிறந்தவர், நியாயத்திற்கு குரல் கொடுப்பவர் வெல்லட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. குறுகிய எண்ணம் என்றால் என்ன?
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [05 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37006

தற்போதைய தேர்தலில் நேரடி போட்டி தான். அதிமுக சார்பில் கடையக்குடியை சார்ந்தவரும், கோமான் ஜமாஅத் சார்பாக, சுயேட்சையாக சகோதரர் அஷ்ரப் அவர்களும், நிற்கிறார்கள். மற்றவர்கள் மாற்று (டம்மி) வேட்பாளர்கள்.

இந்தியாவில் யாரும் எங்கேயும் தேர்தலில் நிற்கலாம். (வெவ்வேறு தேர்தல்களுக்கு வெவ்வேறு சட்டம் உள்ளது). அதன்படி சகோதரி அமலக்கனி ஆளும் அதிமுக சார்பில் நிற்கிறார். அவரும் அந்த வார்டு வாக்காளர் தான். சந்தேகம் இல்லை. அவருக்கும் அந்த வார்டில் தேர்தலில் நிற்க முழு உரிமை உண்டு. இதை யாரும் குறை கூறவும் இல்லை.

ஆனால், பூர்வீககுடி மக்களுக்கும், பிழைக்க நமதூருக்கு வந்து, நமதூரின் ஒரு பகுதியின் பெயரை, தங்கள் இஷ்டத்துக்கு மாற்ற முயற்சித்தவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.

தான் ஆதரிக்கும் ஒரு நபர் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைபடுவதில், எங்கிருந்து குறுகிய எண்ணம் வருகிறது?

தயவு செய்து கருத்து பதிபவர்கள், சகோதரர் அஷ்ரப் அவர்களின் வெற்றியை பாதிக்காத வண்ணம் கருத்து பதிய வேண்டுகிறேன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [05 September 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 37014

/* தான் ஆதரிக்கும் ஒரு நபர் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைபடுவதில், எங்கிருந்து குறுகிய எண்ணம் வருகிறது? */ Copy & Paste

கண்டிப்பாக ஒருவரை ஆதரிப்பதும், ஒருவரை எதிர்ப்பதும் ஒவ்வொருவரின் உரிமை. அது போல் - தேர்தலில் போட்டிப்போடுவதும் - அனைத்து மக்களின் ஜனநாயக உரிமை. அதற்கு வர்ணம் பூசுவது - முறையற்ற செயல்.

குறுகிய எண்ணம் என்றால் ?!

/* பூர்வீககுடி மக்களுக்கும், பிழைக்க நமதூருக்கு வந்து ...*/ Copy & Paste

பூர்விகம் என்றால் எத்தனை வருடம் என்ற ஏதாவது அளவுகோல் வைத்துள்ளீர்களா? இவங்க இங்கு வந்து 50 வருஷம் இருக்கலாம், காயல்பட்டினம் மக்கள் இங்கு வந்து 800 வருசமா, 1000 வருசமா? இங்குள்ள எல்லா மக்களின் பூர்வீகம் 800 வருசமா, 1000 வருசமா? அதுக்கு முன்னாடி இங்கு மனித வாடையே இல்லையா?

அதென்ன பிழைக்கக் நமதூருக்கு வந்து ...? நம்ம என்ன, அரபு நாடுகளில் இருந்து இங்கு சுத்தி பார்க்க வந்தோமோ?

அவங்களாவது தமிழகத்தில் ஒரு பகுதியில் இருந்து இங்கு வந்தாங்க, நாம - வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கு வந்தோமேன்னு பெருமையா சொல்லி கொள்கிறோமே? அவங்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயமா? இது குறுகிய எண்ணம் இல்லையா, பரந்த மனப்பான்மையா?

/* நமதூரின் ஒரு பகுதியின் பெயரை, தங்கள் இஷ்டத்துக்கு மாற்ற முயற்சித்தவர்களுக்கும் ... */ Copy & Paste

கொம்புத்துறை பழைய பெயரா, கடையக்குடி பழைய பெயரா என்பது வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வு செய்து முடிவு செய்யட்டும். ஆனால், அதை கொலை குற்றம் போல் சொல்லிவிட்டு, ஒரு குடும்பத்தினர் - மூணு வீடு கட்டிட்டு, அந்த குடும்ப பெயரில் நகர் என அந்த பகுதிக்கு பெயர் சூட்டிக்கொள்வதை சரி காண்பது, குறுகிய எண்ணம் இல்லையா, பரந்த மனப்பான்மையா?

ஒரு தொழில் அதிபர் ஒரு பள்ளிக்கூடத்தை ஓர் இடத்தில கட்டியப்பிறகு, அந்த பகுதிக்கு பல்லாண்டுகாலமாக இருந்த பெயரை நீக்கி, அந்த தொழில் அதிபர் பெயரில் 1வது தெரு, 2வது தெரு என பெயர் சூட்டிக்கொள்வதை, பிறர் செய்தால் அதனை குறை சொல்லிவிட்டு, சரி காண்பது, குறுகிய எண்ணம் இல்லையா, பரந்த மனப்பான்மையா?

பிற பெயர் மாற்றங்களை குறைசொல்லிவிட்டு, எகிப்து தலைநகர் கைரோ மூலம் காஹிர்பதன் என்ற ஊர் பெயர் வந்து, அது தான் மருவி காயல்பட்டினம் ஆனது என்று பெருமை கொள்வது, குறுகிய எண்ணம் இல்லையா, பரந்த மனப்பான்மையா?

இதை நான் சொல்வதால் - ஏதோ, நான் ஒரு சாராரை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம். சில விமர்சனங்களில் உள்ள அபத்தங்களை பார்த்தப்பிறகு தான் - நியாயம் என பட்டதை எழுதியுள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. காயலின் வரலாறை விவரித்த சகோதரருக்கு நன்றி!
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [06 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37020

காயலின் வரலாறு என்ன என்று விலாவாரியாக சொன்ன சகோதரருக்கு நன்றிகள் பல.

கடையக்குடி மற்றும் கற்புடையார் வட்டம் பகுதிகளுக்கு, அந்த பகுதியினர், நமது நகராட்சியை புறந்தள்ளிவிட்டு, அரசு ஆவணத்தில் இல்லாத பெயரை, தங்கள் பகுதிக்கு கொண்டுவர, குறுக்கு வழியில் முயன்றதால், நமதூர் ஒன்று கூடி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது சகோதரருக்கு தெரியாது போல. அப்படி தெரிந்திருந்தும், இந்த கருத்தை பதிந்தார் என்றால், அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு உடன்பாடில்லை என்று அர்த்தம்.

"ஒரு குடும்பத்தினர் - மூணு வீடு கட்டிட்டு, அந்த குடும்ப பெயரில் நகர் என அந்த பகுதிக்கு பெயர் சூட்டிக்கொள்வதை சரி காண்பது,...." (C&P)

"ஒரு தொழில் அதிபர் ஒரு பள்ளிக்கூடத்தை ஓர் இடத்தில கட்டியப்பிறகு, அந்த பகுதிக்கு பல்லாண்டுகாலமாக இருந்த பெயரை நீக்கி, அந்த தொழில் அதிபர் பெயரில் 1வது தெரு, 2வது தெரு என பெயர் சூட்டிக்கொள்வதை......" (C&P)

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதே இணையத்தில் பலமுறை விளக்கம் சொல்லியாகி விட்டது. அந்த பகுதிகளுக்கு அரசு (நகராட்சி) ஆவணத்தில் என்ன பெயர் உள்ளதோ, அது தான் இன்றும் இருக்கிறது. அதை மாற்ற அவர்கள் எந்த முயற்சியும் செய்தது மாதிரி தகவல் இல்லை.

"இதை நான் சொல்வதால் - ஏதோ, நான் ஒரு சாராரை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம்". (C&P)

சகோதரர், தான் யாரை ஆதரிக்கிறார் என்பதை பல கருத்து பதிவுகள் மூலம் மறைமுகமாக தெரிவித்துள்ளார். அது அவரவர் உரிமை. மக்கள் விளக்கம் பெற்றால் போதும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஒட்டுமொத ஒருங்க்கிந்த ஒற்றுமை வெற்றிபெற வேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [06 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37066

தேர்தல் களத்தில் இருவர்கள்தான் நிற்கிறார்கள் ,ஒருவரை எதிர்த்து ஒருவர் நிற்கிறார் இது ஜனநாயக மரபும் உரிமையும் ஆகும்.இது எப்படி ஒற்றுமையை குழைக்கும் செயல் என்று எனதருமை நண்பர் கேட்க்கிறார்!

நான் எழுதியது,ஒரு ஜமாத் ஒட்டுமொத்தமாக ஒற்றுமையாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.அவரை எதிர்த்து அந்த ஜாமத்தை சார்ந்த எவரும் நிற்கவில்லை. ஆகவே அந்த ஜாமத்தின் ஒற்றுமை வெற்றிபெற வேண்டும்,அந்த ஜாமத்தின் ஒருங்கிணைப்புக்கு எந்த குந்தகமும் எந்த குழப்பமும் ஏற்படாவண்ணம் அவ் வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்றுதான் எழுதினேனே தவிர,எதிர்த்து நிற்கும் வேட்பாளர் வீழவேண்டும்,ஒழியவேண்டும் என்ற நேரிடியான அநாகரீக அசிங்கமான அரசிசியல் வசனங்களை வீசுகின்ற தரம் தாழ்ந்த கருத்துக்ககளை நான் பதிவு செய்ய வில்லை!

ஒருங்கிணைந்த ஒற்றுமையான ஒரு ஜமாத் வெற்றி பெற்றால் அது நம் புனித மார்க்கத்தை பின்பற்றிவாழும் நமதூரின் பாரம்பரிய வாழ்க்கைக்குறிய மக்களுக்கு ஒரு வழிகாட்டுதல் மட்டுமல்ல,அதுபோல் அனைத்து ஜமாத்தினர்களின் ஒற்றுமையையும் ஒருசேர வித்தூண்டும் உன்னத வழியாகும் என்ற அந்த ஒரு கண்ணோட்டத்தில் தான் என் கருத்தை பதிவு செய்தேன்!

என் கண் முன் நிற்பது நமதூரின் ஒரு அங்கமான ஒரு ஜமாத்தின் ஒருங்கிணைந்த ஒற்றுமை ஒன்று மட்டும் தான் அதற்க்கு அடுத்ததுதான் ஏனைய மற்றைய அமைப்பும், அரசியலும், உவமைக்கு ஒன்றை குறிப்பிட்டால்,நான் சார்ந்திருக்கும் தி.மு.க விலிருந்து ஒருவரை இந்த ஒற்றுமை ஜமாத் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட வைத்தால், இறைவன் அறிய கூறுகிறேன் என்னுடைய முழு ஆதரவு அந்த ஒட்டுமொத்த ஒற்றுமை ஜமாத்தின் பக்கமே!.

எம்மின மக்களின் ஒற்றுமைக்கு பாடுபடுவதற்க்காகத்தான் நான் வேறு அமைப்பிலும் அரசியலிலும் அங்கம் வகித்து வருகிறேன். எனக்கு வேண்டிய நண்பருக்கோ,ஒரு தனவந்தருக்கோ,ஒரு தலைவருக்கோ,தலைவிக்கோ நேரிடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தரும் விதமாக நமதூரின் எந்த ஒரு ஜாமத்தின் ஒற்றுமைக்கு எதராக செயல் படுகின்ற ஈனத்தனமான செயலில் எள்ளளவு கூடஎன் நேர்மை நிலைப்பாடு நுழையாது. அப்படி இரகசியமாக நான் ஆதரவு கொடுப்பேனேயானால். ஊர் ஒற்றுமை,ஊர் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும் என்ற என்னுடைய வார்த்தைகள் எல்லாம் வஞ்சகத்தன்மை உடையதாகும்!(அல்லாஹ்காப்பாற்றுவானாக!) .

நண்பர் குறிப்பிட்டதுபோல் களத்தில் இருக்கும் இருவரில் ஒருவர் கோமான்தெரு ஜமாத்தை சார்ந்தவர் எதிர்த்து நிற்பவர் BJP யை சேர்ந்த ஒருவரை இந்து முன்னணி நிறுத்துவதாக (ஒரு வாதத்திற்காக) வைத்து கொள்வோம், தற்போது நண்பரின் நிலைப்பாடு என்ன? ஜமாத்தாவது ஊராவது ஒற்றுமையாவது, உன்னத அரசியல் பாரம்பரிய முறைப்படி நாட்டில் எப்படி தேர்தல் எதார்த்தம் நடக்கிறதோ அதற்க்கு தலைவணங்க வேண்டும் என்ற கருத்தை கவ்விப்பிடித்து கொண்டிருப்பாரா?

அருமை அன்பு நண்பரே மனதை சற்று தளர்த்தி விசாலமாகவும் வெளிப்படையாகவும் ஊர் நலன் நாடியும்,ஊரின் ஒருமித்த ஒற்றுமைக்காகவும் உங்கள் எண்ணத்தை ஓட விடுங்கள். மேலோட்டமாகவும் மேதாவித்தனத்தின் சாமர்த்திய சாதுரிய எழுத்தாற்றலாலும்,பேச்சாற்றலாலும் கிடைக்கும் தற்காலிக வெற்றி விட்டில் பூச்சி வாழ்வுக்கொப்பானது!

ஒரு தெருவை தலைமை ஏற்று நடாத்தி செல்பவரும்,ஒரு ஜமாத்தை பொறுப்பேற்று நடத்துபவரும் ஒரு ஊரை,ஒரு மாவட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் தலைமையானது காய்தல்,உவத்தலின்றி,விருப்பு வெறுப்புகளுக்கப்பாற்ப்பட்டு நடுநிலமையாக, தான்அங்கம் வகிக்கும் ஏனைய இயக்ககத்தின் பக்கம் சாயாமல் தன் தலைமையை நம்பி இருக்கும் மக்களுடைய ஒற்றுமைக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்! தன்னுடைய நிலைப்பாட்டை எந்த ஒரு பிரிவுக்கும் பகிரங்கமாகவோ,பதுங்கியோ ஆதரவு கொடுக்க முன் வந்தால்,அத தலைமையின் சுயநலத்தன்மையின் சுயரூபம வெளி வரத் துவங்கி விடும்!

அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும், எச்சூழ்நிலையிலும் தன் கீழுள்ள மக்களின் நம்பிக்கைக்குறிய நடுநிலையில் ஒற்றுமையைப் பாதுகாக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த பிரிவினருக்கும் எதிராகவோ ஆதரவாகவோ தன்னுடைய தலைமையை வளைத்துக் கொடுக்காமல் பெருந்தன்மையால் அனைத்தையும் அவதானிக்கும் தலைமை தான் நம்முடைய தலைமை என்ற எண்ணம் என்போன்றோர் முதல் ஏனைய நடுநிலை வாதிகளின் எதிர்பார்ப்பாகும்.ஆனால் அந்த நியாயமான எதிர்பார்ப்பு இன்று எம்மைப்பார்த்து எக்காளமிட்டு சிரிக்கிறது.அந்த சிரிப்பொலி நம்மூரவர்களின் காதிலும் விழும் என்றும் நம்புகிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved