Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:11:18 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15307
#KOTW15307
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 30, 2015
கடற்கரையைத் தூய்மைப்படுத்த உதவி! துபை கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2550 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையைத் தூய்மைப்படுத்திட உதவி செய்யப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-

குப்பைக் கூளங்கள் அதிகரித்து, பொலிவிழந்து காணப்படும் நமதூர் கடற்கரையைச் சுத்தப்படுத்த தேவையான உதவிகளை துபை காயல் நல மன்றம் செய்து தரும் என்று கடந்த 23.01.2015 வெள்ளியன்று நடந்த துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாலை 5 மணியளவில் மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் விளக்கு தாவூத் ஹாஜி அவர்கள் தலைமை தாங்கினார். நமதூர் நகரின் பல பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.



மழை வெள்ள நிவாரணம்

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் நமதூரில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சேதமடைந்த 15 வீடுகள், குடிசைகள் ஆகியவற்றின் மராமத்துப் பணிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஆதலால் மன்றம் உதவி செய்யும் அவசியம் ஏற்படவில்லை என்று ஊர் சென்று வந்த மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மகளிர் சுய உதவி வேலைவாய்ப்புத் திட்டம்

சமீபத்தில் ஊர் சென்றிருந்த மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் நமதூர் முன்னாள் சேர்மன் வஹீதா அவர்களைச் சந்தித்து மகளிர் சுய உதவி வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து பேசினார். முந்தைய பங்குக்கான உதவித் தொகையை அரசாங்கம் இன்னும் தரவில்லை. ஆதலால் அதனைப் பெற்ற பின்தான் மன்றத்தின் அடுத்த கட்ட உதவியைப் பெறுவோம் என்று அவர்கள் கூறினர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தீர்மானங்கள்

1. பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்களின் மறைவுக்கு இரங்கல்

முஸ்லிம் குடும்பத்தில் கீழக்கரையில் பிறந்து, மிகப் பெரும் சாதனைகளைப் படைத்து சமுதாயத் தூணாக விளங்கிய பெருந்தகை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்கள் மறைவு குறித்து இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் மஃக்ஃபிரத்திற்காக துஆ செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. துளிர் பள்ளி கூட்ட அரங்கின் ஒலிபெருக்கி

இந்த அரங்கில் பல முக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்று வருவதால், ஒலிபெருக்கி அமைப்பு ஏற்பாடு செய்வதற்கு மன்ற நிர்வாகிகள் ஊருக்கு வந்திருந்தபொழுது துளிர் பள்ளி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தார்கள். இது குறித்து மேற்கொண்டு ஆவன செய்ய தீர்மானிக்கப்பட்டது.

3. துபை காயல் நல மன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கான பேரவை

துபை காயல் நல மன்ற உறுப்பினர்களாக இருந்து பின்னர் நிரந்தரமாக ஊருக்குச் சென்று வாழும் முன்னாள் மன்ற உறுப்பினர்களுக்காகவும், இனிமேலும் அவ்வாறு செல்லக்கூடிய மன்ற உறுப்பினர்களுக்காகவும், அவர்களின் குடும்ப நலனுக்கு தேவையான உதவிகள் புரிவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதற்காகவும் ஒரு பேரவையை ஏற்படுத்தவும், அதற்கான அனைத்து உதவிகளையும் மன்றத்தின் மூலம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

4. கடற்கரையைச் சுத்தப்படுத்துதல்

சமீபத்தில் ஊர் சென்று வந்த மன்ற நிர்வாகிகள் நமதூர் கடற்கரையின் நிலையை கவலையோடு தெரிவித்தனர். குப்பைகள் அதிகம் சேர்ந்து, தூய்மைப் படுத்தப்படாமல் கடற்கரை பொலிவிழந்து காணப்படுவதாக அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

நமதூர் கடற்கரையைச் சுத்தம் செய்வதற்கும், அதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதற்கும் மன்றத்தால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மன்றம் தீர்மானித்துள்ளது.

5. பொதுக்குழுக் கூட்டம்

அடுத்த பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் இன்ஷா அல்லாஹ் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரை, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் & படங்கள்:
M.S.அப்துல் ஹமீத்


துபை காயல் நல மன்றத்தின் முந்தைய (டிசம்பர் 2014) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கடற்கரையை சுத்தப்படுத்துதல்...
posted by mackie noohuthambi (colombo) [30 January 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39125

சுத்தமாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் எண்ணும் அளவுக்கு விழிப்புணர்ச்சி ஊட்ட வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு அதுவும் உலக நாடுகளில் கால் படாத இடம் இல்லை என்று உலா வரும் காயல்பட்டினத்து மக்களுக்கு இப்படி ஒரு "தூய்மை காயல்" என்ற கோஷத்துடன் அதற்கு உதவிகள் வழங்க துபாய் காயல் நல மன்றம் முடிவு எடுத்திருப்பது பாராட்ட தக்கது. நகர் மன்றம் செய்ய வேண்டிய வேலையை காயல் நல மன்றம் செய்ய முன் வந்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

இந்த சிறியவனின் ஒரு ஆலோசனை.

கடற்கரை பகுதியில் அமைந்துள்ள - நான் முதலாவது செயலாளராக பொறுப்பேற்று ஆரம்பித்த இளைஞர் ஐக்கிய முன்னணி - ஊரின் முன்னணி செயல் திறம் படைத்த பொது வாழ்வில் மிக ஆர்வம் கொண்டுள்ள ஒரு சங்கம். இந்த முன்னணியின் செயலாளர், தலைவர் அவர்களிடம் இது பற்றி ஆலோசனை கேட்டு கடற்கரை துப்பரவு பணிக்கு ஒரு குழுவை அமைத்து அவர்கள் பொறுப்பில் விட்டால், அதற்கான செலவுகளுக்கான நிதி உதவியையும் அவர்களிடமே ஒப்படைத்தால், மிக பொறுப்புடன் அதை கண்காணித்து செயல்படுத்துவார்கள். முயற்சித்து பாருங்கள்.

கடலோரம் வாங்கிய காற்று
இதமாக இருந்தது நேற்று
என்ற பாடலும்

நான் காற்று வாங்கபோனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
என்ற பாடலும்

காயல்பட்டினம் கடற்கரைக்கு மிக பொருத்தமாக அமைந்துள்ளது. எங்கள் இளமை காலங்களில் பல கவிதைகளை நாங்கள் பாடி மகிழ்ந்து உலா வந்ததும் இந்த கடற்கரைதான்.

கால சுழற்சியில் அந்த இன்பங்கள் காணாமல் போய்விட்டன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [31 January 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39130

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் '''கடற்கரையைத் '' தூய்மைப்படுத்த உதவி....துபை கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம் ....பாராட்டுக்குரிய ஒரு நல்ல முயற்ச்சி ......நம் ஊர் கடற்கரையை நம் நகர் மன்றம் தான் எந்த ஒரு முயற்ச்சி எடுக்க வில்லை ....இந்த நல்லதோர் முயற்ச்சியை வரவேற்று .....நம் ஊர் கடற்கரையை '' தூய்மைப்படுத்த வேண்டியது ரொம்பவும் அவசியமே .....

துபாய் காயல் நல மன்றத்தை பாராட்டுகிறோம் .........தங்களின் நம் ஊருக்கான பல நல்ல செயல் திட்டங்கள் தொடரட்டும் ....வாழ்த்துக்கள் ....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved