DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் நவம்பர் 16 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி
தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கில், அனைத்து தரப்பின்
எழுத்துப்பூர்வமான வாதங்கள் (PLEADINGS) சமர்ப்பிப்பு - செப்டம்பர் 3, 2015 அன்று நிறைவுற்றது.
இதனை தொடர்ந்து - இவ்வழக்கில் வாதங்கள் (SUBMISSIONS) - அக்டோபர் 5 அன்று துவங்கின.
அக்டோபர் 5 அன்று - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர் டி.நாகசைலா, தனது வாதங்களை துவக்கினார். 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த முதல் நாள் வாதங்களை தொடர்ந்து, வழக்கு
அக்டோபர் 10 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் இவ்வழக்கு விசாரணை அக்டோபர் 10 அன்று வந்தது. அப்போது - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) வழக்கறிஞர்
டி.நாகசைலா - சுமார் 1.5 மணி நேரம் - வாதங்களை முன் வைத்தார். இரண்டாம் நாள் வாதங்களின்
நிறைவில், நவம்பர் 2 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் இவ்வழக்கு விசாரணை நவம்பர் 2 அன்று வந்தது. அப்போது - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) வழக்கறிஞர்
டி.நாகசைலா - சுமார் 1.5 மணி நேரம் - வாதங்களை முன் வைத்தார். மூன்றாம் நாள் வாதங்களின்
நிறைவில், நவம்பர் 16 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நவம்பர் 16 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. சென்னையில் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக, இவ்வழக்கின் அனைத்து தரப்பு
வழக்கறிஞர்களும் தீர்ப்பாயம் வரமுடியாத காரணத்தால், வழக்கு - டிசம்பர் 10 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டிசம்பர் 10 அன்று, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் வழக்கறிஞர் டி.நாகசைலா தனது வாதங்களை தொடருவார்.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி
மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம்
மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு,
CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர். |