Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:08:45 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17307
#KOTW17307
Increase Font Size Decrease Font Size
சனி, பிப்ரவரி 13, 2016
திமுக - காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2288 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கூட்டணி குறித்து பேச்சு நடத்துவதற்காக சென்னை வந்த குலாம்நபி ஆசாத் (இன்று) சனிக்கிழமை காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம்நபி ஆசாத், "வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எதிர்கொள்ளும். திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் இலக்கல்ல. திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் வேறு எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை திமுக தலைவர் முடிவு செய்வார்" என்றார்.

இந்த சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான அகில இந்தியப் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலிம், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானால் திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் திமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என செய்தி வெளியானது.

ஆனால், பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என மு.க.ஸ்டாலினும், திமுகவுடன் கூட்டணி என கற்பனைகூட செய்யவில்லை என பாஜக மூத்த தலைவர் இல.கணேசனும் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்துவதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத், தமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...TIME IS THE BEST HEALER
posted by mackie noohuthambi (kayalpatnam ) [13 February 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43117

TIME IS THE BEST HEALER . காலம் ஒரு அருமையான மருந்து. அது எல்லா புண்களையும் ஆற்றும். சில பிரச்சினைகள் பேசப்படாமல் இருந்தாலே தீரும். சில பிரச்சினைகள் என்னதான் பேசினாலும் சமாதானம் செய்தாலும் அது செல்லுபடியாகாது. ஆனால் காலம் கடந்தபின் ஒரு சந்ததி மறைந்தபின் ஒரு வெள்ளிக் கீற்று தோன்றி அந்த பிரச்சினையை தீர்த்துவிடும்.

குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் ஏற்படும் எல்லை பிரச்சினைகள் எல்லாம் எப்படி தீர்ந்திருக்கின்றன என்பதை நாம் எல்லோரும் மூக்கில் விரல் வைத்து ரசித்திருக்கிறோம். அதிசயித்து இருக்கிறோம் சில நேரம் பிரமிப்பு சில நேரம் எரிச்சல் சில நேரம் மன உளைச்சல். எப்படி இருந்தாலும் அதை ஜீரணித்து ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டிருக்கிறோம்.

மறதி அல்லாஹ்வின் நிஉமதுக்களில் ஒன்று என்று பெரியவர்கள் சொல்வார்கள்.ஒரு விஷயத்தை மறக்காமலே அதையே நினைத்துக் கொண்டு வாழ்பவர்கள் மன நோய்க்கு ஆளாகி விடுகிறார்கள். இரத்தக் கொதிப்பு ஏற்பட்டு திடீர் மரணத்தையும் வரவழைத்துக் கொள்கிறார்கள் என்று அறிவியல் ஆய்வின் அடிப்படையில் மருத்துவர்கள் நமக்கு புத்தி மதி சொல்வார்கள்.

ஆமா இதற்கும் அரசியல் கட்சிகள் அணி மாறுவதற்கும் என்ன சம்பந்தம் அமாவாசைக்கும் அப்துல்லாஹ்வுக்கும் என்ன சம்பந்தம்....இருக்கிறது. அம்மா ஆசைப் பட்டதால்தான் அப்துல்லாஹ் பிறந்தான் என்று அகட விகடம் புகழ் அப்துல் காதர் சொல்வார். ஆட்சி மாற்றங்கள் எப்படி நிகழும். இப்போதுள்ள ஆட்சியை மாற்றுவதற்கு அணிசேராமல் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்பதை எல்லா கட்சிகளுமே தெரிந்து வைத்திருக்கின்றன...அவ்வளவு பேர் மீதும் ஏதோ ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. ஏதோ ஒரு வகையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்ற விலாவாரியான தகவல் இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியாகி இருக்கிறது. தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்து வாக்கை பெறுவதை தடுப்பது எப்படி என்ற கேள்விக்கு பெரும்பான்மையானவர்கள் மக்கள்தான் அதை வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்கள். மக்கள் இலவசங்களுக்கு சோரம் போய் விட்ட பிறகு, அரசியல் கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி தவிக்கும்போது, எப்படி கொள்கை ரீதியாக தேர்தலை எதிர் கொள்ள முடியும்.

எனவே கூட்டிக் கழித்து பார்த்தால், இப்படி கூட்டணிகள் சேர்வதும் பிரிவதும் ஒரு சைக்கிள் போன்று சுற்றி வந்து கொண்டே இருக்கும். தமிழ் நாடு அல்ல இந்த பாரத தேசத்தின் தலை எழுத்தே இதுதான்.

மாற்றம் வராதா...வரும் ஆனால் இளைஞர்கள் இந்த இழி நிலையை மாற்ற முற்படவேண்டும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த இளைஞர்கள்தான் விலையில்லா பொருள்கள் - இலவசங்கள் இவற்றை மக்களுக்கு வாங்கி கொடுக்க - தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய பகீரத பிரயத்தனப் பட்டு இரவு பகல் பார்க்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்...SORRY உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். .

கலைஞர் வாழ்க என்போம் அம்மா வாழ்க என்போம் காங்கிரஸ் ஒழிக என்போம். அடுத்த தேர்தலில் அதே நாவால் அப்படியே மாற்றி பேசுவோம்.

நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சு சா. நாக்கின் அடுத்த வேலை என்ன?
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [13 February 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43119

மு.க.ஸ்டாலின் திமுக தலைவரானால் திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் திமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என செய்தி வெளியானது.(c &p )

"கேனயனின் கிறுக்குத்தன புலம்பல் கடுகளவு நேரம் கூட நிலைக்காது" என்ற பழமொழி இப்போது நினைவுக்கு வருகிறது,

இவனின் புலம்பல்களின் சாம்பிள்கள்: சென்னை வெள்ளத்திற்கு ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்ககூடாது என்ற குமறிய இந்த கல்நேஞ்சமுடைய வனின் மற்றொரு மலம் தோய்ந்த வார்த்தை இந்திய முஸ்லிம் இன மக்களை நாடுகடத்தவேண்டும் அவர்களுக்கு வாக்குறுமையும் வழங்க கூடாது என்று ஓலமிட்டவன்தான் இந்த நச்சுப்பாம்பு விஷமுடைய நயவஞ்சக நாதாரி.

ஆகவே இவனின் ஓலத்தை எப்படி ஒரு பொருட்டாக எவரும் எடுக்கவில்லையோ அதுபோல் தான் அவர் வாந்தி எடுத்த தேர்தல் கூட்டணி பற்றிய பிதற்றளையையும். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! .

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [14 February 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43122

காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே இருவரும் போவோம்...

என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved