Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:49:08 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5869
#KOTW5869
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 25, 2011
சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! (பாகம் - 6)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2893 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி நீதிமன்றத்தின் பிப்ரவரி 21 இடைக்கால தீர்ப்பினை தொடர்ந்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் மார்ச் முதல் வாரத்தில் குடியிருப்பு கட்டுமானங்கள் கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் கட்டப்படுகிறது என கண்டறிய வந்ததாக தெரிகிறது.

இது குறித்து - நகர சமூக ஆர்வலர்கள் சிலர் மார்ச் 4 அன்று இத்தூரத்தை கணக்கிட்டனர். அப்போது CRZ விதிகளுக்கு மீறலாக கட்டுமானம் கடலில் இருந்து (High Tide Line) 142 மீட்டரில் துவங்குவதாக அறியப்பட்டது. CRZ விதிகள்படி 200 மீட்டர் வரை கட்டுமானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற அலுவலர் தனது அறிக்கையை எப்போது தாக்கல் செய்வார் என்றும், அடுத்து இவ்வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்றும் தெரியவில்லை. இவ்வழக்கு தேர்தலுக்கு முன்போ, அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ விசாரணைக்கு மீண்டும் வரலாம். அவ்வேளையில் இவ்வழக்கு எந்த திசையில் செல்லும் என்பது பெரிய கேள்விக்குறியே. தேர்தலுக்கு பின் புது ஆட்சி வந்தால் இவ்வழக்கினை முற்றிலும் புது கோணத்தில் தான் காணவேண்டி இருக்கும்.

இக்குடியிருப்பு குறித்து அரசின் பல துறைகள் விதிகளை மீறி உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. இச்சூழலில் காயல்பட்டின நகர மக்களின் தேர்தல் புறக்கணிப்பு மாநில மக்களின் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் இத்திட்டத்தில் அதிகாரிகள் சிலர் ஏன் பல விதிமுறைகளை மீறினார்கள் என்பதும் வெளிவரலாம்.

ஜனவரியிலும், பிப்ரவரியிலும் தேர்தலை புறக்கணிப்போம் என கூறிய ஐக்கிய பேரவை, மார்ச் மாதத்தில் இதுவரை அமைதியாக இருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கலாம்.

(i) குடியிருப்பு பிரச்சனையில் அனிதா காயல்பட்டின நகர மக்களுக்கு ஆதாரவாக இருந்தார் (அல்லது அவரால் ஒன்றும் செய்திருக்க இயலாது). அரசின் சில துறையினர் தான் விதிமுறைகளை மீறினர். ஆகவே தேர்தல் புறக்கணிப்பு மூலம் அனிதாவை தண்டிக்கவேண்டாம்

(ii) வழக்கு நமக்கு சாதகமாக உள்ளது. ஆகவே தேர்தல் புறக்கணிப்பு அவசியம் இல்லை

இதில் முதல் காரணம் (குடியிருப்பு பிரச்சனையில் அனிதா காயல்பட்டின நகர மக்களுக்கு ஆதாரவாக இருந்தார் என்பது) உண்மையா என்று - இப்பிரச்சனையை நகரில் வழி நடத்தியவர்கள் தான் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். குடியிருப்பு பிரச்சனை நகரில் பிரதானமாக இருந்த போது அனிதா உட்பட தி.மு.க.வின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் - மீனவர்கள் வாக்கு என்ற அடிப்படையில் - இத்திட்டத்திற்கு ஆதரவாகவே இருப்பதாக கூறப்பட்டது.

பிப்ரவரி 9 அன்று நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் இதனை காயல் அமானுல்லாவும் ஊர்ஜிதம் செய்தார். அப்போது அக்கூட்டத்தில் இது குறித்து அவர் பேசியதாவது:-

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடமும் பேரவை முறையிட்டது. தொகுப்பு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் முன் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நடப்பு உறுப்பினர்களால் 2006ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலேயே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவர்களுக்கு அரசு நாடு முழுவதும் வீடுகளைக் கட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகளின் கட்டிடப் பணிகளை நிறுத்தச் சொல்வது அரசின் கண்ணோட்டத்தில் இயலாத ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், காயல் மாநகர முஸ்லிம்களுக்கு வீடுகள் தேவைப்பட்டால், அதே கடற்கரையில் கட்டித்தர அமைச்சர் (சுப.தங்கவேலன்) வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்திற்குத் தொடர்புகொண்டு பேசிய மாநில அமைச்சர் சுப.தங்கவேலனும், இக்கருத்தை வழிமொழிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதில் இரண்டாவது காரணத்தில் (வழக்கு நமக்கு சாதகமாக உள்ளது) எவ்வளவு வலு உள்ளது என காண்போம்.

(பாகம் - 1) | (பாகம் - 2) | (பாகம் - 3) | (பாகம் - 4) | (பாகம் - 5)

[தொடரும்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. TSUNAMIS ^ & ELECTION
posted by SEYED AHAMED (HONG KONG, CHINA) [25 March 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 3546

as per Mr.Amanullah's speech at KMUF, the sitting MLA, Mr.Anita has told that he could not do anything further in this regards. Why should Kayalites goes behind Mr.Anita? If he assures that he will allot the all houses to Kayalites, then it may reasonable to go behind him. So KMUF has to declare that what to do next immediately, whether to UNITE or do as anyone's wish.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்.....
posted by IBRAHIM (CHENNAI) [25 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3548

நீங்கள் சுனாமி குடியிருப்பு மற்றும் தேர்தல் புறகணிப்பு பற்றி தினமும் செய்திகள் வெளிய்டுவத்தின் நோக்கம் என்ன என்று புரியவில்லை.....

நீங்கள் DMK கட்சிக்கு எதிராக ஒட்டு போட வேண்டும் என்று நேராக சொல்லிவிட வேண்டியது......

நரேந்திர மோடி , அத்வானி போன்ற இஸ்லாமிய எதிரிகளுக்கு நண்பனாக விளங்கும் ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்ய உங்கள் பிரசாரம் வெற்றி பெறட்டும்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Tsunami Housing project and boycot election
posted by Meera Sahib (Kayalpatnam) [26 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3551

If the present government and the MLA is reluctatnt to interfere in this matter and cannot fulfill our aspirations and come to our rescue what's wrong in boycotting the election. If the Officers did the mistake its the governing people to correct them. Pls. keep in mind Anita can do nothing against the party he belongs to. It is crystal clear that DMK is not for us.At the same time we cannot trust ADMK too.The only solution is to boycot the election and register our objections before the so called JANANAYAGAM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எனதருமைக் காயலர்களே!
posted by kavimagan kader (dubai) [26 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3556

சகோதரர் சட்னி செய்யத் மீரான் அவர்களது வேண்டுகோளை ஏற்று, தேர்தல் முடியும் வரை அரசியல் கருத்துக்கள் எதையும் பதிவு செய்வதில்லை என்ற முடிவோடு இருந்தேன். ஆனால், இங்கு ஒரு சகோதரர், என்ன நடக்கிறது, தான் என்ன எழுதுகிறோம் என்பதனை அறியாமலேயே கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்.

எந்தவித சட்டத்தையும் பின்பற்றாமல், அநியாயமான முறையில், தொகுப்பு வீடுகள் என்ற பெயரில், அந்நியர்களை குடியேற்றி,நம் தலைமுறைக்கே கேடு விளைவிக்கும் ஒரு பாரதூரமான சம்பவத்தை, தடுத்து நிறுத்த, தேர்தல் புறக்கணிப்பு என்ற ஓரங்க நாடகத்தை நடத்திய ஐக்கியப்பேரவை, பின்னர் வழக்கம்போல் அர்த்தமற்ற பேரவையாகி, நகரத்தின் நலனை நட்ட நடுவீதியில் நட்டி விட்டுப் போன கதையை, காயல்.காம் ஒவ்வொரு காயலனுக்கும் புரியும் வகையில், பாகம் பாகமாக வெளியிட்டு வருகிறது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், இதைப் படித்து விட்டு அரசியல் அக்கிரமவாதிகளுக்கு எதிராக பொங்கி எழுவதற்குப் பதிலாக, உண்மையை வெளிக்கொணரும் ஊடகத்தின் மீது பாய்ந்திருப்பது வெட்கக்கேடானதும், வேதனை மிக்கதுமாகும். ஊழல் அரசியல்வாதிகளுள் யார்தான் யாருக்கு நண்பர் இல்லை? எமர்ஜென்சி என்ற போர்வையில், இயக்கத்தின் ஒன்றரை லட்சம் வாலிபர்கள் ஊனமுறக் காரணமாக இருந்த இந்திரா அவர்களை, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!! என்று கருணா அழைக்கவில்லையா?
அவ்வளவு ஏன்? கொலைகாரன் மோடியுடன், கயவன் கருணா கொஞ்சி மகிழ்ந்ததை இந்த நாடு பார்க்கவில்லையா?
நேற்றுவரை துரோகி என்று வர்ணித்த வைகோவை, இந்திரஜித் என்று கூறி, வரிப்புலி வரிசையே வா! என்று தேர்தல் சுயலாபத்திற்காக கருனாநிநிதி அழைப்பு விடுத்து ஆறு நாட்களே ஆகிறது.

குடிகாரன் விஜயகாந்தும் ஊற்றிக்கொடுத்த ஜெயாவும்(அவர்களே பரஸ்பரம் சொல்லிக்கொண்டது)ஒரே கூட்டணியில் கொஞ்சிக் குலவ வில்லையா? அ.தி.மு.க.வும், மு.லீக்கும் ஒரே அணியில், அதுவும் ஜெயா முன்னிலையில், வாய்பொத்தி கைகட்டி நின்றதை நாம் பார்க்க வில்லையா?

இவையனைத்தும் அரசியல் குப்பைகள். இவற்றுக்காக, அரசியல் லாபங்களுக்காக மரம் விட்டு மரம் தாவும் அனிதாக்களுக்காக, ஐக்கியப் பேரவை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில், நாம் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை ஆக்கபூர்வமாக கருத்துரையுங்கள் நண்பர்களே!

அதை விடுத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அறிவுரை தராதீர்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Boycott is not a wise decision
posted by Mohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar) [26 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3565

Dears,

Firs of all, we have to unite all together strongly we can putforth our demand to the concern candidate of DMK or ADMK that our whole Kayalites vote to you but you have to fulfill our demands.

The election is not going to stop, if we boycott the election. Any one of the candidate will come as MLA.

The election is the powerful instrument to bring the political parties to our path.

We have to utlize well not to boycott.

The important issue is for live long escape the kayalites from the cancer disease (how to tackle the issue of DCW Factory drinage mixing with the sea & Air pollution) rather than other issue such as water, tsunami housing etc.

Allah will give us unity & strengthen to our native peoples to make a wise decission.

Wasalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
DCW 53வது கால்கோள் தின விழா!  (24/3/2011) [Views - 3049; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved