Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:04:50 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6774
#KOTW6774
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 22, 2011
சமச்சீர் கல்வி வழக்கு! இடைக்கால தடை வழங்க உச்சநீதி மன்றம் மறுப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2416 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அத்துடன், ஆகஸ்டு 2-ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இறுதி விசாரணை ஜூலை 26-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்.

சமச்சீர் கல்வித் திட்டம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதில் இடம்பெற்ற பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது என்றும் நடப்பு கல்வி ஆண்டில் பழைய பாடத் திட்டமே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு கோரியிருந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பிஎஸ் செüகான் ஆகியோர் கொண்ட அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ், முகுல் ரோத்தகி ஆகியோர் வாதாடினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும்போது தங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரி "கேவியட்' மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கங்குலி வாதாடினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர்கள், மாணவர்களின் எதிர்கால நலன், கல்வி அறிவு, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டி மிகுந்துள்ள நிலையில் திறமையான மாணவர்களாக அவர்கள் வர வேண்டும் என்பனவற்றைக் கருத்தில் கொண்டும், அரசியல் கலப்புள்ள, தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததைச் சுட்டிக் காட்டினர்.

சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவும், கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டம் தரமற்றது என்று ஒருமித்த கருத்து அளித்துள்ளது. ஆனால் அதன் அறிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது என்று அவர்கள் கூறினர். அவ்வாறு ஏற்க மறுத்தது தவறு என்று அவர்கள் வாதிட்டனர்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று தமிழக அரசு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. தரமான கல்வியை அளிக்கும் வகையில் நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரைப்படி செயல்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.

தனியார் மெட்ரிகுலேஷேன் பள்ளிகளின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தனியார் மெட்ரிகுலேஷேன் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்தவுடன் கடந்த ஆண்டு பாடத்திட்டங்களைக் கொண்ட புத்தகங்கள் நடப்பு ஆண்டில் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டி, மீண்டும் புதிய புத்தகங்களை வழங்க அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.

"கேவியட்' மனு செய்தவர்களின் சார்பில் ஆஜரான கங்குலி, சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகே தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழக அரசின் மேல் முறையீட்டை ஏற்கக் கூடாது என வாதிட்டார். தமிழகத்தில் உள்ள 4 விதமான கல்விமுறையைச் சுட்டிக் காட்டி, கடந்த ஆட்சியின்போது 4 ஆண்டுகள் ஆய்வு நடத்தி, நிபுணர்களுடன் ஆலோசித்தும், வெளிமாநிலங்களில் ஆய்வு செய்தும் அதன் அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டதை சுட்டிக் காட்டினார்.

மேலும் 200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்களும் தயார் செய்யப்படுள்ளதாகவும், இந்தாண்டு இந்தப் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு அளிக்கப் படாத நிலையில் பட்சத்தில் மக்களின் வரிப்பணம் 200 கோடி ரூபாய் வீணாகி விடும் என வாதாடினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சமச்சீர் கல்வித் திட்டத்துக்காக 200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்கள். மேலும், தேவைப்படும் திருத்தங்களைச் செய்துகொள்ள சட்டத்தில் இடம் உண்டு என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கூறியுள்ள நிலையில் அதைச் செய்யாமல் தமிழக அரசு ஏன் பிடிவாதத்துடன் இருக்கிறது என்று கேட்டனர். மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தனர். அத்துடன், இந்த மனு மீதான இறுதி விசாரணை வரும் ஜூலை 26 ம் தேதி நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆகஸ்டு 2-ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் ஜூலை 26-ம் தேதி வழக்கின் இறுதி விசாரணை முடிந்து வெளியாகும் தீர்ப்பைப் பொறுத்து ஆகஸ்ட் 2-ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகம் வழங்குவதா அல்லது திருத்தப்பட்ட பாட நூல்கள் வழங்கப்படுமா என்பது தெரியவரும். சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றதைப் பார்ப்பதற்காக தமிழக அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம், பள்ளிக் கல்விச் செயலர் சபிதா, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ. அசோகன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

தகவல்:
தினமணி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சமச்சீர் கல்வி வழக்கு! இட...
posted by Zubair Rahman (Bengaluru) [22 July 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 6256

"உச்சநீதி மன்றத்தின் இடைக்கால தடை அரசுக்கு கிடைத்த ஒரு அவமானக்குட்டு"

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"

ஒரு வருடம் பொறுத்து, தனக்கு பிடிக்காத உடன் பிறவா அண்ணன் கலைஞரின் சமச்சீர் பாடத்திட்டத்தை நீக்கிவிட்டு, மாணவ சமுதாயத்திற்கு பயன் அளிக்ககூடிய நல்ல அழகான நடைமுறை பாட திட்டத்தை வகுத்து செயல்படுத்தி இருந்தால் எல்லோரும் வரவேற்ப்பார்கள். அதை விடுத்து விட்டு இப்போது மக்கள் (ஆளும் கட்சி, கூட்டணி ஆதரவாளர்களை தவிர்த்து ) எரிச்சல் படும் அளவு அரசு நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கும் விளக்கம் கொடுக்க ஆளும் ஆதரவாளர்கள் தயாராக இருப்பார்கள். ஏன் என்றால் இவர்கள் " முகம் குப்புற கீழே விழுந்தாலும் மீசையில் (முகத்தில் ) மண் ஒட்டாதவர்கள்"

இவர்கள் மட்டுமில்லை ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் எப்போதும் இப்படித்தான். அவர்கள் கட்சி தர்மம்??? ,கூட்டணி தர்மம் காக்க வேண்டுமல்லவா???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சும்மா.... இருந்த சங்கை ஊதி கெடுத்தா(ளாம்)னாம் ஆண்டி(ஆன்ட்டி)....
posted by zubair (riyadh) [22 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6259

கருணாநிதி வச்ச ஆப்பு..! பாதாளம் வரை பாய்கிறது.... பெண்புத்தி பின் புத்தி என்பது நிரூபணம். எல்லாவிசயதிலும் பிடிவாதம் காட்டினால் இதுதான் நடக்கும். நல்லாட்சியை தருவதை விட்டு விட்டு.... தேவை இல்லாததில் விரலை விட்டால் விரல் நாறும் என்பதுக்கு எடுத்துக்காட்டு. திமுக என்னதான் தோற்று போனாலும்.... இந்த ஒருவிசயம் உலகளாவில் பேச அவர்களுக்கு ஊட்ட சத்து. அம்மாக்கோ இந்த ஒன்றே நொந்து வேதனைப்பட போதுமானது. "நாயே ஏன் அடிப்பேனே பீயே ஏன் சுமப்பேனே" என்ற பழம்சொல்லு ஞாபகத்தில் வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved