Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:32:48 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6777
#KOTW6777
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 22, 2011
‘சேவைச் செம்மல்‘ விருது பெற்ற ஹாமிதிய்யா முதல்வருக்கு முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் ஜூலை 25இல் பாராட்டு விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6522 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (44) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் இம்மாதம் 08, 09, 10 தேதிகளில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15ஆவது மாநாடு காயல்பட்டினத்தில் நடத்தப்பட்டது.

10.07.2011 அன்று நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவுவிழாவின்போது, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கும், இன்னும் பலருக்கும் அவர்களின் சமுதயாச் சேவையைப் பாராட்டி ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கப்பட்டது.



தங்கள் மத்ரஸா முதல்வருக்கு இந்த விருதை வழங்கியமைக்காக, மத்ரஸா நிர்வாகம் சார்பில் மாநாட்டுக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, ‘சேவைச் செம்மல்‘ விருது பெற்றமைக்காக அவரைப் பாராட்டி, அந்த மத்ரஸாவின் முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் இம்மாதம் 25ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க, ஆலிம்கள் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர் மன்ற ஒருங்கிணைப்புக் குழுவினரான ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் ஒருங்கிணைப்பில், மன்ற அங்கத்தினர் செய்து வருகின்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by ABDUL WADOOD FASI (JAIPUR) [22 July 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 6264

தகுதியான மனிதற்கு தகுதியான் நேரத்தில் வழங்கப்பட்ட சிறப்பு. எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு தாலா அவர்களின் ஆயுளை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீடித்து மேன்மேலும் தீன் சேவை செய்ய நல தௌபீக் புரிவானாக ஆமீன் நிகழவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன். நல வாழ்த்துக்கள் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by MAK.JAINULABDEEN(president,kakkum karangal narpanimandrum) (kayalpatnam) [22 July 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 6265

அஸ்ஸலாமு அலைக்கும். இந்த விருது கிடைக்க மிகவும் தகுதியானவர் எமது முதல்வர் அவர்கள். இந்த விருது அவர்களுக்கு கிடைத்து இருப்பது விருதுக்குத்தான் பெருமை. மிகவும் தாமதமாக கிடைத்து இருக்கிறது. அல்லாஹ் அவர்களுடைய ஆயுளை நீடித்து சரீர சுகத்தையும் தந்து மென்மேலும் சேவை செய்யகூடிய பாக்கியத்தை கொடுத்தருள்வானாக.ஆமீன்.
=======================================
MAK.ஜெய்னுல்ஆப்தீன்,
முன்னாள்மாணவன்,
ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனம்.

தலைவர்,
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்.

துணை செயலாளர்,
தேசிய முற்போக்கு திராவிட கழகம்(DMDK).
காயல் பட்டணம் நகரம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Mannar Seyed Abdur Rahman (bangalore) [22 July 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 6266

மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக ஆகே மாட்டான். அவர்கள் இந்தே பாராட்டு எல்லாம் விரும்பேமாட்டார்கள் இருப்பினும் நம் மீது கடமை ஆகியுள்ளது. மேற்கொண்டே ஹதீதிற்கு இணங்கே. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்த்துக்கள்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [22 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 6273

congratulation to Nahvi Noorul Haq, the principle of Hamidhiyya religious educational institute.. i had gone through, school, college both PG and UG..and come across somany teachers and professors.. I have high regards and exteem for only few in my hearts.. One among is Haji Noorul Haq.. He was teacher me for while i was studying in hamidhiyyaa in 1979 to 1987.. He was such a dedicated personality to Hamidhiyya and spent most of his time to uplift and welfare of the Hamidhiyya stiudents..

One point here to highlight, all teachers of Hamidhiyya are all working without anyh salary or wages.. Inspite, he worked not just like that, but full involvement and dedication.. He is the apt and much suitable person to receive this awards.. the selection committee of the award, rightly chosen him for this award..he never projected him any forum nor he gained either financially or spcially any return out of this.. May Allah give all peace and prosperous him in his futute.. I am proud to be the student of Nahvi Noorul and i would like to point now that i was many time punished , even beaten by him during my student days for my misconduct, which changed me a lot...

once again congratulation to NAHVI NOORUL HAQ,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by S.M.KADIR MOOSA NAINA (Chennai) [22 July 2011]
IP: 82.*.*.* Iceland | Comment Reference Number: 6274

Masha allah I'm very happy to see this my respective teacher is getting award from public. All the best to him. Allah has to give him valuable place in heaven. He is special and unforgettable person in my life to make myself to thorough the holy qur'aan.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by hassanul bassry (dubai) [22 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6276

என் அன்பின் நூருல் ஹாக் மாமா அவர்கள் இந்த விருதுக்கு தஹுதியனவர்கள் .இன்னும் உங்கள் சேவை தொடர வேண்டும் .இன்னும் பல விருதுகள் இன்மைளும் ,மறுமைலும் பெற பிராத்தனை உடன் வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இணையதளம் மூலம் நேரடி ஒலிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும்
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore. ) [22 July 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 6277

ஹாமிதியாவின் முதல்வர் அல்ஹாஜ் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி அவர்களுக்கு "சேவை செம்மல்" விருதின் பாராட்டு விழா நனிசிறப்புடன் நடந்தேற நாயன் நல்லருள் புரிவானாக! இவர்களை போன்று பல்வேறு "சேவை செம்மல்கள் " நமது சமுதாயத்தில் உருவாக வேண்டும். நமது சேவை செம்மலின் தொடர் சேவை நமக்கு அவசியம் தேவை. இந்த சிறப்பான பாராட்டு விழாவில் எனக்கு கலந்து கொள்ள முடியவில்லையே என நினைத்து வருத்தப்படுகிறேன். இன்ஷா அல்லாஹ் இங்கிருந்து வாழ்துகிறேன். இந்நிகழ்ச்சியை இணையதளம் மூலம் நேரடி ஒலிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் என ஆசை படுகிறேன். எல்லாம் வல்ல இறைவன் நமது சேவை செம்மல் அவர்களுக்கும், இந்த சேவையில் அவர்களுக்கு உதவியாக ,ஒத்தாசையாக இருக்கும் அனைவர்களுக்கும் எல்லா இகபர சகல சௌபாக்கியங்களையும் வழங்கி அருள்புரிவானாக ! ஆமீன்.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Syed Ahmed (HK) [23 July 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 6280

உலகத்தின் மிஹப்பெரிய Encylocopedia வான குரானை பல பேர் நெஞ்சில் ஏற்றிய பெருமை இவருக்கு உண்டு. இறைவன் கல்வியாளர்கள் நெஞ்சில் காப்பாற்றுவதாக வாக்களித்த வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு சிறந்த மனிதர்.

சிறுவர்களுக்கு கூட முந்தி சலாம் சொள்ளக்கண்ட ஒரு சிறந்த பண்பாளர். ஆலிம்களுக்கு கூட இவரிடம் படிக்க நிறைய இருக்கிறது.

கொள்கை மாறுபாடு கொண்டவர்களிடமும் (என் போன்ற) பண்பாக பழகும் பண்பாளர். விமர்சனகளை புன்னகையால் உடைத்து எறியும் ஆற்றல் கொண்டவர்.

இந்த விருதுக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. பாசக்கார மாணவர்கள்.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [23 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6293

முன்னாள் மாணவர்கள் அனைவர்களும் ஒருங்கினைந்து அவர்களது ஆசான் மரியாதைக்குரிய ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கு பாராட்டு விழா எடுப்பதை நினைத்து பெருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள்.

பாசக்கார மாணவர்கள்.

========================================================

இந்த "சேவைச் செம்மல்" விருதைக் கூட இவர்கள் விருப்பப்படாமல், அனைவர்களுடைய தொடர் வற்புறுத்தலாலும், மற்றவர்களுடைய அன்பு வேண்டுகோள் காரணமாகவும் தான் பெற்றுக்கொள்ள இசைந்தார்கள் என்பது அனைவர்களும் அறிந்தது.

அப்படிப்பட்ட நன்மனிதர், இந்த மாதிரி பாராட்டு விழா நடத்துவதற்கு அனுமதி கொடுத்து இருப்பார்களா? புரியவில்லை.

40 ஆண்டு காலமாக சேவை செய்த இந்த நல்லவருக்கு, இதுவரை யாராவது பாராட்டி, ஒரு விழா எடுக்காதது ஏன்? இந்த "சேவைச் செம்மல்" விருதுக்குப் பின்பு தான் உங்களுக்கு இவர்களின் அருமை புரிந்ததோ!!

இதே ஹாமிதிய்யா குர்ஆன் மனனப் பிரிவின் (ஹிஃப்ழு மத்ரஸா) துவக்க ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ யூஸுஃப், அவர்களின் மரணத்திற்கு சென்று வந்தீர்களே...அவர்களின் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது? அவர்களின் வீடு மாட்டு தொழுவதை விட கீழான நிலைமையில் தானே இருந்தது. அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்தோம்? இன்னும் அவர்களின் குடும்பம் கஷ்டத்தில் தானே உள்ளது.. இவர்களின் வீட்டைப்பார்த்து நமக்கு கண்ணீர் வர தானே செய்தது.

இது மாதிரி எத்தனை, எத்தனை ஆசிரியர்கள் வறுமையில் வாடுகிறார்கள். இந்த லிங்கை மீண்டும் ஒருமுறை பாருங்கள்..

http://www.kayalpatnam.com/shownews.asp?id=5767

___________________________________________
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்)

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.

அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.

(அல்குர்ஆன் 25: 72,73,74,75,76) ___________________________________________
என்னுடைய துஆ எல்லாம் மறுமை நாளில் இவர்களைப் போல நல்லவர்களை வல்ல ரஹ்மான் "வாழ்த்தும், சலாமும் கூறி வரவேற்று, சுவனத்தில் உன்னத மாளிகையை கொடுக்கட்டும்" என்பது தானே அல்லாமல் மனிதர்களின் வாழ்த்தையோ, பாராட்டையோ அல்ல.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by HAFIL AMEER. A (Dubai) [23 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6295

எங்கலன்பின் முதல்வருக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எங்களை அவர்களின் மாணவர்கள் என்று சொல்லுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னவர்கள் வாழ்வை அதிகமாக்கி எங்களை மென்மேலும் முன்னின்று வழிநடத்திட அருள் புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அல்ஹம்துலில்லாஹ்
posted by ibnu nahvi (abudhabi) [23 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6297

இந்த பாராட்டு முன்னாள் மாணவர்களால் வழங்க படகூடிய ஒரு சிரிய அன்பளிப்பு. ஒரு குழந்தயை பெற்று எடுக்கும் தாய் அந்த குழந்தயை பெற்று எடுக்கும் நேரதிருக்கு அந்த குழந்தயை தாய்க்கு எவ்வளோ பெரிய உபஹாரம் செய்தாலும் அந்த பெற்று எடுக்க கூடிய நேரத்திருக்கு ஈடு செய்ய முடியாதோ அதுப்போன்று இவர்கள் எங்களை ஹாபிலாக,ஒழுக்கமானவர்களாக, உருவாக்கியத்துக்கு இதுப்போன்ற எத்தனை பாராட்டு விழாக்கள் நடத்தினாலும் ஈடு செய்ய முடியாது. வஸ்ஸலாம் இப்படிக்கு

அவர்களால் உருவாகிய மாணவன்

இஸ்ஹாக் இப்னு நஹ்வி ஆலிம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Syed Mohamed Sahib M.H (Kowloon) [23 July 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 6298

இறையருள் நிறைக! இறையன்பு பெருக!

சேவையே தேவையென வாழும் முதல்வர் நஹ்வி I.L. நூருல் ஹக் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

தொட்டில் பழக்கம் இடுகாடு வரை என்ற பழமொழிக்கு ஏற்ப இளம் சிறார்களை சன் மார்க்க கல்வியும், நல்லொழுக்கமும் கற்பித்த பாசமிக்க உடன்பிறப்பை வாழ்த்தி வரவேற்போம்.

ஹாமிதிய்யாவிற்கு ஆலமரமாக இருக்கும் முதல்வருக்கு நாம் விழுதுகளாக இருந்து தாங்கி நிற்போம்.

ஹாபிழ்களை உருவாக்க பக்க பலமாக இருந்த சகோதரர் தமிழ் மாமணி R.S. அப்துல் லத்தீப் ஹாஜி அவர்களின் நல் வாழ்வுக்கும் துஆ செய்வோமாக!

வஸ்ஸலாம்.

M.H. Syed Mohamed Sahib
Hong Kong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. ‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah) [23 July 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 6301

உரியவருக்கு வழங்கப்படிருக்க வேண்டிய இதுபோன்ற அங்கீகாரங்கள் மிக காலந்தாமதாக வளங்கபட்டிருந்தாலும் நல்ல அழகான முறையில் பாராட்டு விழா நடக்க இருப்பது நல்ல செய்தி, எல்லாம் சிறப்பாக நடந்தேறுவதற்கு இறைவன் அருள் புரிவானாக.

ஒருமுறை சுல்தான் காக்கா, தமீம் காக்கா ஆகியோருடன் நானும் பொறுப்பேற்று சபையிலிருந்து சுற்றுலாவை ஏற்ப்பாடு செய்தபோது சிறுவர்களை அழைத்து செல்வதால் முறையான ஏற்ப்பாடுகள் இல்லாமல் அனுமதி தரமாட்டேன் என்று கண்டிப்புகாட்டியவர்களிடம் எங்களிடம் திட்டத்தை கேட்டு தெளிந்தபிரகுதான் அனுமதி தந்தார்கள், அப்படி ஒவ்வொரு வினயதிலும் மாணவர்களின் நலம் பார்த்துதான் முடிவெடுக்கும் பொறுப்பானவர்கள்.

எந்த பலனையும் எதிர்பாராது தனது நேரத்தை எல்லாம் இல்லை வாழ்நாளையே மார்க்கமும் சமுதாயமும் சேர்ந்த சிந்தனையோடே வாழ்பவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு வாழ்நாளை நீட்டிக்கொடுத்து நல்ல சௌபாக்கிய வாழ்வை தந்தருள்வானாக ஆமீன். விழா நன்றாக நடந்தேற அல்லா அருள்பாலிப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by seyed ahmed buhary (dubai) [23 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6302

எல்லா புகழும் இறைவனுக்கே. எங்கள் தகுதியான முதல்வருக்கு தகுதியான விருது கிடைத்தது மாணவர்களான எங்களை பெரும் மகிழ்ச்சியும் மன நிறைவும் அளித்துள்ளது. மாநாட்டு குழுவினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

நாங்கள் செல்லும் இடங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும் நன் மதிப்பு பெற காரனமாய் இருந்தவர்கள். எங்கள் வாழ்வில் ஒழுக்கமும் மார்க்க அறிவும் கற்று தந்தவர்.

தன் வாழ்வின் பெரும் பகுதியை மார்கத்திர்காக செலவு செய்தவர்கள். அல்லாஹ்விடத்திலும், ரசூலிடதிலும் உயர்வான அந்தஸ்தை தக்க வைத்தவர்.

ஆயிரகணக்கான ஒழுக்கமுள்ள மாணவர்களையும் நூற்றுகணக்கான ஹபிழ்களை உருவாக்கியவர்கள்.

அவர்களின் சேவையை அல்லாஹ பொருந்தி கொள்வானாக. மேலும் அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற மனமார வாழ்த்துகிறேன்.

தங்கள் மாணவன்
செய்யத் அஹ்மத் புஹாரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Abu Thahir SMM (Kuwait) [23 July 2011]
IP: 31.*.*.* Kuwait | Comment Reference Number: 6303

Our hearty congratulations to Nurul Haq Kakka..

Very glad to see that the award is lucky and deserves to be in the hands of our beloved founder & principal of Hamidhiyya

Everyone knows that he is very gentle, simple, friendly, caring to others, down to earth attitude, 100% PURE (with no hidden selfishness) social welfare oriented personality ..

At this juncture, may we feel all the difficulties he faced and all the sacrifices he made in his personal life throughout his tenure untildate (and even in future), in order to establish, maintain and succeed in his great social responsbility, through which, he keyed in producing many Haafilul Quran, well disciplined & developed students, etc..

May Allah give full strength and longlife to Nurul Haq kakka and to all his family members (who supports him in this social goodsake), Aameen..!!

Thanks to the committee to give him this award, which I am definitely sure that our Nurul Haq Kakka would not have felt it as great (as usual he never likes publicity) to receive it..!!

His ever remembering & obedient student,

Abu Thahir SMM, Kuwait


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. One Man Army..
posted by AHMED RILWAN NONA (kayalpatnam) [23 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6315

If he is not suitable for this award, then who is ??
Dedicated person..
congratz...

with tears,
Ahmed Rilwan.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by yahya mohiadeen (dubai) [23 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6321

"இதே ஹாமிதிய்யா குர்ஆன் மனனப் பிரிவின் (ஹிஃப்ழு மத்ரஸா) துவக்க ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ யூஸுஃப், அவர்களின் மரணத்திற்கு சென்று வந்தீர்களே... அவர்களின் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது? அவர்களின் வீடு மாட்டு தொழுவதை விட கீழான நிலைமையில் தானே இருந்தது. அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்தோம்? இன்னும் அவர்களின் குடும்பம் கஷ்டத்தில் தானே உள்ளது.. இவர்களின் வீட்டைப்பார்த்து நமக்கு கண்ணீர் வர தானே செய்தது"

சாளை S.I.ஜியாவுதீன் அவர்களின் மனக்குறை நியாயமானதே. அதேசமயம், இதுபோன்ற பொது இடங்களில் கருதுப்பதிவை தவிர்த்து, நேரடியாக மதராசா நிர்வாகத்தை அணுகினால் உங்களுக்கான தகுந்த/உகந்த விளக்கம் கிடைத்திருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Mahmoodh Hasan (Guangzhou) [24 July 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 6329

சகோதரர் சாளை ஜியாவுதீன் அவர்களுக்கு

பொது நலமே தன்னலம் என்ற கோட்பாற்றில் இருக்கும் எங்கள் முதல்வர் அவர்கள் தன்னிறைவு பெற்றவர்கள். மனதளவில் மிக பெரியவர். மக்கள் செல்வமிக்கவர். என் போன்ற மாணவர்களை பாரபட்சமின்றி தன் பிள்ளை போன்று பார்ப்பவர். நாங்கள் ஓதி முடித்ததற்காக அவர்களுக்கு சிறிய அன்பளிப்பு ஏதும் வழங்கினால் அதை வாங்க மறுத்து விடுவார்கள். நாங்கள் அவர்களுக்கு இந்த துனியாவில் எப்படி நன்றி கடன் செலுத்துவது என்ற ஏக்கமும் உண்டு.

இந்த பாராட்டு விழா எப்போதோ நடத்தி இருக்க வேண்டும் என்றாலும் நாங்கள் அவர்களுக்கு இந்த துன்யாவில் செலுத்த வேண்டிய நன்றி கடனில் சிறியதாக இப்பொழுது வழங்க பட்ட விருதை காரணமாக கொண்டு அவர்களை மிகவும் வற்புறுத்தி சம்மதம் பெற்று இந்த விழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களை நாங்கள் வாழ்த்துவதற்கு தகுதி இல்லை என்றாலும் வல்ல இறையோனை இரு கரம் வேண்டி அவர்களின் நீண்ட நோயற்ற வாழ்விற்காக பிரதிற்போம். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். வஸ்ஸலாம்.

தாங்கள் குறைகளாக சொன்னவற்றை எம்மிடம் ஒரு மின்னஞ்சல் மூலம் கேட்டால் தேவையான விளக்கங்கள் தர ஆயத்தமாக உள்ளோம். இதுபோன்ற பொது தளங்களில் கருத்துப்பதிவு செய்வது உங்களைப் பொருத்த வரை சரியெனப்பட்டால், அதற்கான விளக்கத்தையும் இதே தளத்தில் தரும் நிலையில் நாங்கள் இப்போது இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மஹ்மூத் ஹசன் S.M.S
Guangzhou - China.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. மற்றவர்களை புண் படுத்துவது நோக்கம் அல்ல.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [24 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6332

அன்பு சகோ. யஹ்யா முஹியதீன் அவர்களின் கருத்துக்கு நன்றிகள்.

நாம் நம் ஆலிம்களையும், முஅத்தின்களையும், பள்ளி இமாம்களையும் எந்த நிலைமையில் வைத்து உள்ளோம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்

Moderator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Eassa Zakkariya (Jeddah) [24 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6335

சாளை S.I.ஜியாவுதீன் அவர்களின் மனக்குறை நியாயமானதே. அதேசமயம், இதுபோன்ற பொது இடங்களில் கருதுப்பதிவை தவிர்த்து, நேரடியாக மதராசா நிர்வாகத்தை அணுகினால் உங்களுக்கான தகுந்த/உகந்த விளக்கம் கிடைத்திருக்கும்.

Dear Ziauddin Kaka- Assalamu Alaikum; I too Accepted that what written by Mr Yahya Mohideen- In this Regard what was happend & to know what behind in this matter - Plz visit Our Madrasa

Plz dont take me mistake (or Starting Arguments)
May Almighty be With Us - Ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. யானைக்கும் அடி சறுக்கும்
posted by Sarjoon (London) [26 July 2011]
IP: 109.*.*.* United Kingdom | Comment Reference Number: 6427

அன்புள்ள ஜியாவுதீன் காக்கா அவகளுக்கு, நகைச்சுவையாக பல நல்லக் கருத்துக்களை பல செய்திகளில் பதிவு செய்த நீங்கள், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல எங்கள் முதல்வர் அவர்களைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் பதிவு செய்து அதல பாதாளத்தில் தலை குப்புற விழுந்து இருக்குறீர்கள்.

முதல்வர் அவர்களின் பாராட்டு விழாவிற்கும் எங்கள் மதரசாவில் பதினைந்து வருடங்களுக்கு முன் விட்டு விலகி சென்ற ஆசிரியர் அவர்களையும் சம்பந்தப்படுத்துவது அப்துல்லாவிற்கும் அமாவாசைக்கும் உள்ள ஒற்றுமையே. தாங்கள் எங்கள் அன்பு ஆசிரியர் மர்ஹூம் யூசுப் முனீரி அவர்களுக்கு சமுதாயம் என்ன செய்தது என்று இணையதள கருத்துப் பதிவில் கேட்குமுன் எங்களைப் போன்ற முன்னாள் மாணவர்களிடம் கேட்டிருக்கலாம்.

உண்மையைச் சொல்லப் போனால் எங்கள் ஆசிரியர் குடும்பத்தின் எல்லா வித சுக துக்கங்களிலும் நாங்கள் பங்கு எடுத்து இருக்கிறோம், இன்னும் நாங்கள் உதவ முனைகிறோம் என்பதே உண்மை. செய்த எல்லா உதவிகளையும் உங்களிடம் பரிமாறி எங்களின் நன்மைகளை இழக்க விரும்பவில்லை. ஆக இத்துடன் இது சம்பந்தமான விவாதங்களை விட்டுவிடுங்கள். முடிந்தால் உங்களால் இயன்ற உதவிகளை செய்ய முனையுங்கள்.

அடுத்து உங்களின் ஆதங்கம் சேவை செம்மலுக்கு பின் தான் பாராட்டு விழா நடத்த தோன்றியதா என்று? இப்படி ஒரு நிகழ்வு நடத்தவேண்டும் என்பது எங்களின் பல ஆண்டு கனவு. அது நடத்துவதற்கு காரண காரியமாக அமைந்ததே இந்த சேவை செம்மல் விருது. காரண காரியங்கள் எதுவும் இல்லாமல் ஒரு விழாவை ஒரு மதராவைச் சார்ந்தவர்கள் அதன் முதல்வருக்கு நடத்தினால் அதை ஊர் மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது உங்களைப் போன்ற புத்திசாலிகளுக்கு புரியாமல் போனது எப்படி?

(இது எனது தனிப்பட்ட கருத்து. மதரசாவிற்க்கும் அதன் முதல்வருக்கும் இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை)

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah) [27 July 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 6444

சோத்துக்கு ஊறுகாயை தொட்டு உண்ணலாம் ஆனால் ஊருகாயையே உணவாக உண்ண முடியுமா? அப்படிதான் எல்லாவற்றிலும் எல்லா கருத்துபதிவிலும் ஹாசியத்தை காட்ட முயற்சித்து ஜியாயுதீன் அவர்கள் தன்னை வெளிக்காட்ட ஆசை பட்டிருக்கும் அவர் தனது முயற்சியில் விஜயம் பெறவில்லை.

பொதுவாக ஒரு நபரை அவரது நல்ல காரியத்திற்காக பாராட்டி துஆ செய்யும் நேரத்தில் வேறொரு முரண்பாடான ஒரு கருத்தை பதிவு செய்வது என்பது நாகரிகமாகாது. இந்த நாகரிகதில் நபருக்கு நபர் மாறுபட்டிருப்பர், சிலர் தனக்கென்று ஒரு நாகரிகத்தை வைத்திருப்பார், மற்றவர்கள் அவரது தவறை சுட்டிக்காட்டினாலும் இல்லை நான் செய்வதுதான் சரி என்பர் அவருடைய தரத்தின் படி.

எல்லோரும் ஒரு பாதையில் செல்லும்போது சிலர் அதிலிருந்து விலகி சென்று தன்னை வேறுபட்டவன் என்று காட்ட முயல்வர், அப்படியான முயற்சியில்தான் இவர் வெற்றிபெறவில்லை, இனியாவது எந்த இடத்தில் எதை தெரிவிக்க வேண்டும், எப்படி சொல்வது நாகரிகம் என்றறிந்து எல்லோரும் செயல்பட்டால் யாரையும் முகம் கோன செய்யாது வாழலாம். எல்லோருக்கும் அப்படியான பொறுமையையும் சிந்தனையையும் அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [29 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6487

அஸ்ஸலாமு அலைக்கும்... முதலில் நான் என்னுடைய மறுப்பையும், மன்னிப்பையும் பதிவு செய்கிறேன்.

சகோ. S.K.Salih அவர்களின் மிக நீண்ட விபரமான மெயிலில் சொன்ன விளக்கம், மிகவும் மனதை வருடியது. (மறைந்த ஹஸ்ரத் யூஸுஃப் முனீரி அவர்களின் மரணத்தையொட்டிய செய்தி..). இவ்வளவு வேலை பளுவுக்கும் இடையில் இப்படி ஒரு மெயில் அனுப்பிய தங்களுக்கு நன்றிகள்.

ஹஸ்ரத் யூஸுஃப் முனீரி அவர்களின் குடும்பத்திற்கு அனைவர்களும் பல வழிகளில் உதவி வருவதை நினைத்து மிக்க மிக்க மகிழ்ச்சி. பல கோடி நன்றிகள். தொடரட்டும்..

நான் கருத்து பதிவு செய்த அன்றே யாராவது ஒரு சகோதரர் பதில் கருத்தோ, ஒரு மெயிலோ அனுப்பி இருந்தால் இவ்வளவு மனக்கசப்பு வந்து இருக்காது. அப்படி உதவி செய்ததை எழுதினால் இறைவனிடம் நன்மை கிடைக்காது என்ற உங்களின் கருத்தும் சரிதான். ஆனால் அது செய்த உதவியை சொல்லிக்காட்டி தம்பட்டம் அடிப்பவனுக்குதான். வல்ல ரஹ்மான் மனதில் இருப்பதை மிகவும் அறிந்தவன்.... கொடையாளன்.. கஞ்சன் அல்ல..

அனைத்து சகோதரர்களுடைய மனக்குறை, இந்த செய்தியை மரியாதைக்குரிய முதல்வர் அவர்களின் பாராட்டு நிகழ்வு செய்தியில் நான் பதித்ததுதான் என்று. இப்படி பலரின் மனதை புண்படுத்தியதற்கு தான் இந்த மன்னிப்பு பதிவு..

இதற்காகாக பல பல கண்டன மெயில்கள்.. வங்காள எழுத்தாளர் தாஸ்லீமா நஷ்ரீன் ரேஞ்சுக்கு கண்டன, கசப்பான வார்த்தைகள். அப்பப்பா..

இனியும் கருத்துக்கள் எழுதணுமா என்று மனதில் தோண்டுகிறது.

நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல வாழ்க்கை..(அல்ஹம்து லில்லாஹ்) இப்படியே வாழ்ந்துவிட்டு போகாமல், எதற்கு இத்தனை தடித்த வார்த்தைகளை கேட்கனும்..

சமுதாயம் எப்படி போனால் உனக்கு என்ன, எந்த மார்க்க அறிஞ்சர், எந்த முஅத்தின் கஷ்டப்பட்டால் உனக்கு என்ன.. நீயும் மற்றவர்கள் மாதிரி பொத்திக்கொண்டு இருக்கவேண்டியது தானே என்று மனதும், என் நண்பர்கள் பலரும் சொல்லுவதிலும் அர்த்தம் உண்டுதான்.. அப்படி இருக்க முடியவில்லையே..

இருந்தாலும் இத்துடன் என் கருத்துக்களை பதிவு செய்வதை நிறுத்திக்கொள்கிறேன்.. சந்தோசம் தானே..

அன்புடன்,
சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. யார் எப்படியோ, நான் மிகவும் வருந்துவேன்!
posted by SK Salih (Kayalpatnam) [29 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6489

அன்பின் ஜியாவுத்தீன் காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தாங்கள் கருத்துப்பதிவு செய்வதை நிறுத்தும் எண்ணத்தை தயவுசெய்து கைவிடவும். தங்களது நகைச்சுவையுடன் கூடிய கருத்துப்பதிவுகள் இத்தளத்திற்கு மெருகேற்றுபவை. தாங்கள் குறைபட்டுக் கொள்ளும் நபர்கள் கூட தங்களின் இதர கருத்துக்களை ரசிக்கவும், அவை பற்றி சிரித்தவாறு கதைக்கவும் தவறவில்லை என்பதற்கு நானே நேரடி சாட்சி.

இந்த குறிப்பிட்ட செய்தியில் தங்களின் நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கு முன், கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம் என்பதே எனதும், மற்றவர்களதும் ஆதங்கம். தாங்கள் தனியாக எதுவும் கேட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான விளக்கத்தை இன்முகத்தோடு தர அனைவரும் ஆயத்தமாகவே உள்ளனர்.

தயவுசெய்து தாங்கள் கருத்து எழுத வேண்டும். சிறப்புக் கட்டுரைகளும் இத்தளத்தில் எழுத வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட பேரவா!

தங்களது தகுதியை நான் நன்கறிவேன். எனவே, இந்நிகழ்வை ஒரு பாரதூரமான ஒன்றாகக் கருதாமல், சிறு சறுக்கலாக எடுத்துக்கொண்டு, தொடர்ந்து எழுத வேண்டும் என தங்கள் சகோதரனாக மட்டுமின்றி, ஒரு செய்தி வெளியிடப்பட்டதும் “ஜியாவுத்தீன் காக்காவின் கருத்து வந்திருக்கிறதா?” என்று ஆவலுடன் அனுதினமும் எதிர்பார்க்கும் நான் உரிமையுடன் கோருகிறேன். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு
posted by முத்துவாப்பா (அல்-கோபர் ) [29 July 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6491

அன்பின் ஜியாவுதீன் காக்கா அவர்களுக்கு, தங்களின் மீதும் நம் அனைவரின் மீதும் ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக...

தங்களுடைய முடிவை பார்த்து நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நான் ஏதோ ஓரளவு கருத்து எழுதுகிறேன் என்றால் அதற்கு 100% காரணம் தங்களுடைய கருத்துக்கள்தான். உங்கள் கருத்துக்கள்தான் என் எழுத்துக்கு தூண்டுகோள்.

பாராட்டுகளை விட ஒரு எழுத்தாளனுக்கு விமர்சனங்கள்தான் பெரிய வெற்றி. ஆனால் தாங்கள் பாரட்டுக்காகவும் விமர்சனத்தையும் எதிர்பார்த்து எழுதுபவர் இல்லை என்பது தங்களின் அருகில் இருப்பதால் எனக்கு அதை உணர முடிந்தது.

மற்றவர்கள் தொலைவில் இருப்பதால் அவரவர்கள் எண்ணம் போல் எழுதிவிட்டார்கள். புதிய உணர்ச்சியோடு புறப்படுங்கள்....

உங்கள் கருத்து ரசிகன்
அன்பு தம்பி முத்துவாப்பா

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah.) [29 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6492

அன்பின் ஜியாயுதீன் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சலாம். உங்களது கருத்துப்பதிவு பதிவுபோல் வரவேண்டும், முரண்பட்ட இருவேறு கருத்தை ஒரேபதிவில் தந்ததுதான் இப்படியாகிவிட்டது. நாம் சமுதாயத்தை விமர்சிக்கும்போது நம்மையும் சமுதாயம் விமர்சிக்கும் என்று சகஜமாக எடுத்துக்கொண்டு விமர்சனகள் நம்மை வளர்க்கும் என்ற முற்போக்கு சிந்தனையில், வழக்கம்போல் சமுதாயதிற்கு தொடரட்டும் உங்களின் நளினமான சேவை.

இதுதொடர்பாக வந்த பதிவுகள் யாரையும் புண்பட செய்திருந்தால் நானும் இதில் பங்குகொண்டவன் என்ற வகையில் வருத்தம் தெரிவிப்பதால் எந்த குறைவும் வந்துவிடபோவதில்லை... எல்லோருக்கும் எல்லா நலத்தையும் இறைவன் தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. நம்ம மக்கள் தானே !!!
posted by சாளை நவாஸ் (sg) [29 July 2011]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 6493

அன்பின் ஜியாவுத்தீன் காக்கா, தவறிழைப்பவன் தானே மனிதன். பெருந்தன்மையோடு மன்னிப்பையும் பதிந்து விட்டீர்களே!!! சொன்னவர்கள் யார்? நம்ம காக்காமார்களும் தம்பிமார்களும் தானே.. நாளை உங்களை பார்த்தால் நெஞ்சோடு ஆரத்தழுவி கொள்கிறவர்கள்தானே!! உரிமை இல்லையா? எல்லோரும் இரத்ததின் ரத்தங்கள். இதற்கெல்லாம் நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அவ்வளவு ரசிகர் கூட்டத்தை கூட்டி விட்டு முடிவுரை எழுதாதீர்கள். நாளை விடியலின்போது புதிய முகவுரை எழுந்துகள். வாருங்கள் எல்லோரும் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடிப்போம்.

எதிர்பார்ப்புடன் சாளை நவாஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by NOWSHAD (SALEM) [29 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6494

எனதன்பு ஜியா தங்களின் முதல் ரசிகன் நான்தான் என் மகன் தங்களிடம் தமாசாக கேட்டபோதுகூட நான் உங்களின் கருத்துகளின் விசிறி என குறிப்பிட்டேன். இப்போது நடந்த வாதங்களில் நான் பார்வையாளர்களாக இருந்து நிறைய தெரிந்துகொண்டேன் தங்களின் மேலான கருத்துகளை நம் காயல் வெப்சைட்டில் நிறைய எதிர்பார்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Continue
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [29 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6495

And by the way, everything in life is writable about if you have the outgoing guts to do it, and the imagination to improvise. The worst enemy to creativity is self-doubt. ~Sylvia பலத்

What I like in a good author is not what he says, but what he whispers. ~Logan Pearsall Smith, "All Trivia," Afterthoughts, 1931


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Shaik Dawood Idrees (Riyadh, KSA) [29 July 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6496

அன்பின் ஜியாவுத்தீன் காக்காவிற்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

தங்களின் நற்பணிகளும் எழுத்துப்பணியும் தொய்வின்றி தொடர எமது இதயங்கணிந்த நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. சகோதரர் ஜியாவிற்கு!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [29 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6497

அன்பிற்கினிய சகோதரர் ஜியாவுதீன் அவர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்!

நமக்குள் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், பல்வேறு பதிவுகளில் பலமான கருத்துமோதல் எழுந்தபோதும், தங்களது சமூக அக்கறை மற்றும் தமிழைக் கையாளும் முறை ஆகியன குறித்து, அடிமனதில் எப்போதும் தனித்த ஒரு மரியாதை, அன்பு எனக்குள் உண்டு.

எத்தனையோ வேலைகளுக்கு மத்தியில் தங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள், சிரமங்களுக்கு மத்தியில் எழுதும் கருத்துக்கள் பலநேரங்களில் காயங்களுக்கு மருந்தாகவும், சிலவேளைகளில் அதுவே காயங்களுக்கு காரணியாகவும் அமைந்துவிடுவது தவிர்க்க முடியாதது.

தாங்கள் வலைதளத்தில் அதிகம் கருத்து எழுதுவதற்கு முன்பே அமீர மலருக்கு தாங்கள் அனுப்பிய ஆக்கங்களை, மலர்க்குழுவில் ஒருவன் என்ற அடிப்படையில் பார்த்து இரசிக்கும் வாய்ப்பை பெற்று இருந்தேன். ஏராளமான வாசகர்களைக் கவர்ந்த தங்களது கருத்துக்கள் எழுத்துக்கள் தொடரவேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் ஆவலும் வேண்டுகோளும்.

எல்லாம் வல்ல இறைவன், நமக்கு தந்திருக்கும் இந்த ஆற்றலை நமது ஊர் மற்றும், சமூக வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். தொடர்ந்து சாளை நவாஸ் காக்கா அவர்கள் எழுதிய கருத்தினை இத்தோடு இணைத்து மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள்.

என்றும் அன்புடன்,
கவிமகன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Review
posted by Eassa Zakkariya (Jeddah) [29 July 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6498

Dear Ziauddin Kaka Assalamu Alaikum

Those who asked "Sorry" for their Misunderstood views; He is a "GentleMan" in the Society; But Those who Forgive them (For applied; Sorry); This Man is a "Perfect Human Being" (Which pave a way to Almightys Knowledge " Self Realization")

Error is Human; Human is error

May Allah Englighten Our Qalb with Noor e Hakiki - Ameen The Whole Mankind is Accountable Themselves (Himself) We shall be much Obliged and Gratful for your contineous Reviews and pointouts

Awaiting your Response in this platform as usual

May Almighty Be with Us - Ameen

Wassalam. Tks

Zakkariya


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Habeeb Mohamed (Qatar) [29 July 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 6499

அன்புள்ள ஜியாவுதீன் காக்கா அவகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் உங்களது நகைச்சுவையோடு கலந்த கருத்துகளை மிகவும் ரசித்து படிப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்த செய்தியில் உங்களது சம்பந்தமில்லாத கருதுப்பதிவு எங்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது சில மாதங்களுக்கு முன்னர் இதே வலைதளதில் காயல்பட்டினத்தில் சிறந்த மனிதர் என்ற விருது வழங்கப்பட இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது, அப்படி ஒரு விருது வழங்கப்பட்டு இருந்தால் அதற்க்கு மிகவும் தகுதியான முதல் மனிதர் எங்கள் முதல்வர்தான். அவர்கள் மட்டுமே அதற்க்கு மிகவும் பொருத்தமானவர்கள்.

தனக்கு சொந்தமான மாணவர்களிடம் காட்டும் பாசத்தை விட மற்ற மாணவர்களிடம் அதிக பாசம் காட்டி அவர்களை அவர்களின் படிப்பிலும் ஓதுவதிலும் அதிக கவனம் செலுத்த செய்வார்கள். அதில் அனுபவப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். (இது மிகப்பெரிய அளவிலான கடலின் ஒரு துளியான் உதாரணம்தான்)

இந்த விழா கூட எங்களது முன்னாள் மாணவ மன்ற பொறுப்பாளர்கள் பல வருடங்களாக முயற்சி செய்ததுதான் ஆனால் எங்கள் முதல்வர் அவர்களுக்கு நடத்தப்படும் பாராட்டுவிழா அவர்களின் விருப்பம் இல்லாமல் எப்படி நடத்துவது? விழா நடத்துவதற்கு காரண காரியமாக அமைந்ததே இந்த சேவை செம்மல் விருதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [30 July 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6502

அஸ்ஸலாமு அழைக்கும்,
தவறு என்பது மனித இயல்பு,
ஆனால் செய்த தவறை பிறர் சுற்றி காட்டும் பொழுது அதற்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் அது நம்மை உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்கிறது.

ஜியாவுதீன் காகா தாங்கள் கூறியது போல், சில இடங்களில் அமைதிகாப்பதே மேல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. நாட்டாமை தீர்ப்பை மாற்றுங்க
posted by Salai Sheikh Saleem (Dubai) [30 July 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6505

தம்பி ஜியாவுதீன் அஸ்ஸலாமு அலைக்கும்..

எல்லோரும் அவரவர் பங்கிற்கு உனது முடிவை மாற்ற வேண்டுகோள்கள் வைத்தாலும் என் பங்கிற்கு நானும் உன்னை கேட்டுக்கொள்கிறேன். உன் நகைச்சுவை கலந்த கருத்தாளம் மிக்க பதிப்புகள் வாசகர்கள் எல்லோரின் மதிப்பை பெற்றபோது நீ எப்படி புளகாங்கிதம் அடைந்தயோ, அதே போலே தவறுகள் சுற்றிக்கட்டப்படும் போது நீ அந்த விமரிசனகளுக்கு உன் தலை சாய்த்த பண்பே நீ ஒரு பொதுவாழ்வில் வெற்றி கொண்டவனாய் ஆகிவிட்டாய் என்று பறை சாட்டும். நானும் உன் எளுதார்ற்றளிக்கு ரசிகன் தான் என்பைதை இதன் மூலம் பதிவு செய்கிறேன்.

என்னைக்கு உன் சமூக சிந்தனை கருத்துக்கள் பலராலும் பாரட்டப்பட்டதோ அன்றே நீ பொது சொத்தாய் ஆகி விட்டாய். பழுத்த மரம் தான் நிறைய கல்லடிகள் படும். கருத்துக்கள் உன்னுடையது என்றலும் அவைகளை பதிவு செய்யும் போது கொஞ்சம் சிரத்தை எடுதுக்கொண்டாலே போதும். உன் ஆதங்கங்கள் எல்லாம் சரிதான் ஆனால் அதை பதிவு செய்த இடம் விதம் மற்றவர்கள் மனதை புண் படுத்தியிருக்கிறது. இவை எல்லாம் நமக்கு இலவச கொள்முதல்கள் தானே.

என்ன தம்பி, உன் மடி கணினியை திற, கருத்துக்கள் பதிக்க வேண்டும் பிற, அதை படித்து வாசகர்கள் சிற, ( ஐயையோ இப்படி ஒரு சிறப்பான புதுக்கவிதையின் சூடு தாங்காமல் என் மடி கணினி யில் இருந்து நர நர என்று சத்தம் வருகிறதே..வஸ்ஸலாம்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. ஜியாவை வழுக்கிய இரண்டு லிங்குகள்.....
posted by zubair (riyadh) [30 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6514

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பின் ஜியா சகோதரர் அவர்களுக்கு...... தாங்கள் தங்களின் சொந்த ஸ்டைலை மாற்றி இரண்டு லிங்குகள்தான் உங்களை வளைத்து கொண்டது... சரி எல்லாம் நடந்து முடித்தவை.... ஹைர்.

மேலும்.. தாங்கள் சமுதாயம் எப்படி போனால் உனக்கு என்ன, எந்த மார்க்க அறிஞர், எந்த முஅத்தின் கஷ்டப்பட்டால் உனக்கு என்ன.. நீயும் மற்றவர்கள் மாதிரி பொத்திக்கொண்டு இருக்கவேண்டியது தானே என்று மனதும், என் நண்பர்கள் பலரும் சொல்லுவதிலும் அர்த்தம் உண்டுதான்.. என்று எழுதி இருந்தீர்கள் இது தவறானது.... பல நண்பர்கள் சொன்னது போன்று... நீங்கள் பதித்த இடம்தான் தவறானது.

லிங்குகள் கொடுக்கும் போது (மார்க்க விசயத்தில்) அதில் உள்ளவை தவறாகும் பட்சத்தில் நீங்களும் அந்த தவறுகளுக்கு அங்கீகாரம் வழங்குவது போலானது. உங்களின் பாணியிலேயே..... சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆகையால் நம் சகோதரர்கள் விருப்பத்திற்கு இணங்க தாங்களின் முடிவை மாற்றி நம் சைட்டை குதூகல படுத்தவும். நம் மக்கள் சுன்னத்தில் அடி,பிடி பண்ணுவதை மாற்றி ஊர் ஒற்றுமைக்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. பொழப்புல கைவைக்காதீங்க!
posted by kavimagan (dubai) [30 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6515

சலீமாக்கா! ஜியாவுதீன் காக்காவை சமாதானப் படுத்துற சாக்குல கவித எழுதுற வேலையெல்லாம் வேணாம்! அப்புறம் நான் அழுதுடுவேன்! ஏற்கனவே எங்கள மாதிரி ஆட்களோட பொழப்பு கவிதைய நம்பித்தான் போய்க்கிட்டுருக்கு! அதுல புள்ளி குத்தி கோலம் போட்டுறாதீங்க!

சகோ.ஜியா! இத்தனை அன்பு உள்ளங்கள் வேண்டுகோள் விடுத்த பிறகும் எதற்காக இந்த மௌனம்? தயவுசெய்து இதே பதிவில், எங்களை ஆனந்தப்படுத்துங்கள்.செய்வீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Cnash (MAKKAH) [30 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6517

அப்புறம் என்ன ஜியா காக்கா! எத்தனை கருத்து மோதல் வந்தாலும், நாம் எல்லாரும் ஒண்ணுதான் என்று உங்களை சமாதான படுத்துற விஷயத்தில் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து நிக்குறோம்லே அப்புறம் என்ன வேணும்.. வழக்கம் போல எழுத ஆரம்பிக்க வேண்டியதுதானே..... இதுக்குலாம் கோவிச்சிக்கிரலாம!! அப்டி பார்த்தா எல்லோரும் இங்கே கேட்டகேள்விக்கு கருணாநிதி, ஜெயலலிதாவில் இருந்து ஊரில் இருக்கிற கவுன்சிலர் வரை உலகத்தை விட்டே ஓடி இருக்குனனுமே!!!

பாருங்க உங்களுக்காக கவிமகன் கவிதை விட்டு விட்டு வேறு பொழப்ப தேடனும்து புலம்புறார்.. சலீம் காக்கா கவிதை எழுத ஆரம்பிச்சிட்டோ.. நவாஸ் என்கிட்டே நேத்து போன்லே போலம்புனான்..... இன்ஷா அல்லாஹ் நோன்புலே உம்ராக்கு வரும் போது கண்டிப்பா வீட்டுக்கு வரணும்.. உங்களை மீட் பண்ண ஆவலாய் இருக்கிறேன்!!

Carry On My Dear!!! Beautify the comment page in your own style!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. கோழைகள்
posted by பாளையம் M.S. சதக்கத்துல்லா (Dammam, Saudi Arabia) [30 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6518

அன்பு தம்பி ஜியா,

அஸ்ஸலாமு அலைக்கும். ஹாமிதிய்யா முதல்வர் சம்மந்தமான கருத்து பறிமாற்றங்கள் பார்த்து வருகிறேன். அதில் முதல்வர் அவர்களின் சேவையை பாராட்டித்தான் எழுதி இருக்கிறாய். ஆலிம்களின் பொருளாதார நிலையை கூறி மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் எழுதியதற்காக ஏன் பலருடைய ஆவேச விமர்சனங்களுக்கு ஆளாகிறாய் என்று புரியவில்லை.

ஆலிம்கள், பள்ளி இமாம்கள் மற்றும் முஅத்தின்களின் பொருளாதார நிலையை மற்றவர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த வலைதளத்தில் பள்ளிவாரியாக அவர்களின் சம்பள விபரங்களை வெளியிட்டார்கள். அது நல்ல நோக்த்தில் வெளியிடப்பட்டது. அது போல் நீயும் நல்ல நோக்கத்தில் எழுதியதுதான் என்பதை உன் விமர்சனங்களை வாசிக்கும் பலர் அறிவார்கள்.

'சேவைச் செம்மல்' தொடர்பான விஷயத்திற்காக சிலர் உனக்கு நேரடியாக அனுப்பிய சில மெயில்களை எனக்கு அனுப்பி இருந்தாய். அவைகள் மிகவும் கீழ்தரமானவை. கெட்டவார்தைகளும், தாக்குவோம் என்று மிரட்டுவதும் கோழைகள் செய்யும் ஈனச் செயல்கள். அவைகள் விமர்சனங்கள் அல்ல. நிச்சயமாக உன் மனதை அது காயப்படுத்தி இருக்கும். எந்த அளவிற்கு நீ மனக் கஷ்டப்பட்டால், இப்பொழுது அமைதியாய் இருக்கிறாய் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துக்களை நீ தொடர்ந்து எழுத வேண்டும். வஸ்ஸலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. பாசக்காரங்கப்பா...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [31 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6525

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சொந்தங்களே.

இவ்வளவு நல்ல இதயங்களையா நான் சம்பாதித்து வைத்து உள்ளேன். கண்டன மெயில்கள் சில தான் வந்தன..ஆனால் ஆறுதல் மெயில்கள் பல...அனைத்தும் ஒவ்வொரு மருந்துக்கள். இன்னமும் நான் மௌனம் சாதிப்பது நாகரிகம் அல்லவே.

இன்ஷாஹ் அல்லாஹ் உங்களுடன் கைகோர்த்து மீண்டும் கருத்துக்களை பதிப்பதில் மிக்க மகிழ்வு.

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் என்று சொல்லுவதற்கு பதிலாக அதையே துஆ ஆக வல்லவனிடம் இறைஞ்சுகிறேன்.

பாசக்காரங்கப்பா...

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. சிங்கம் ஒன்று புறப்பட்டது ....
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [31 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6528

இதை இதை இதை தான் எதிர் பார்த்தோம் ஜியாவுதீன் காக்கா ....

எங்களின் வேண்டுகோள்களுக்கு செவி சாய்த்த உங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை வழங்குவானாக .... ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Thasneema Sheikh (Chicago,USA) [31 July 2011]
IP: 67.*.*.* United States | Comment Reference Number: 6529

Marhaba! Brother Jia. ' Winners never quit and quitters never win! '


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [31 July 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6536

கண்டனம் சில இருந்தாலும்.......

அன்பும், ஆறுதலும், அரவணைப்பும் பல பெற்று மீண்டும் கருத்து பகுதிக்கு கலக்க வரும் கருத்து புயல் ஜியாவுதீன் காக்காவை அன்புடன் வரவேற்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:‘சேவைச் செம்மல்‘ விருது ப...
posted by Mohamed Sarjoon (London) [31 July 2011]
IP: 109.*.*.* United Kingdom | Comment Reference Number: 6551

அன்புள்ள ஜியாவுதீன் காக்கா அவர்களுக்கு

சலாம். ஆலிம்கள் மற்றும் முஅத்தீங்கள் பற்றிய தங்களின் அக்கறை சமுதாய மக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட. நீங்கள் இந்த செய்தியில் ஆரம்பமாக பதிவு செய்து இருந்த கருத்தும் கூட அதன் மூலமாக ஏதாவது நல்லது நடந்து விடாதா என்ற எண்ணம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த பரகசியம். ஆனால் அது சரியானச் செய்தியில் பதிக்கப்பட்டு இருக்குமானால் உங்களின் எண்ணம் சரியான முறையில் எல்லோரையும் சென்று சேர்ந்து இருக்கும். எது எப்படியோ நீங்கள் சுட்டிக் காட்டி இருந்த ஆலிமிர்க்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பல காலங்களாக உதவிகள் சேர்ந்த்துக் கொண்டு இருக்குறது என்பதை பலரும் உங்களுக்கு இணைய அஞ்சல் மூலமாக தெரிவித்து இருந்ததை நீங்களும் மறக்காமல் கருத்தாக பதிந்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள். தங்களின் கருத்துப் பணி தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்கள். எனது கருத்துக்கள் உங்களை ஏதும் காயப்படுத்தி இருக்குமானால் அதற்க்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved