Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:29:58 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7186
#KOTW7186
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 6, 2011
Flashback: 2006 ஆம் நடந்த நகர்மன்ற தேர்தலுக்கு முன் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு வெளியிட்ட அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3474 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2006 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தமிழகத்தல் நடந்த உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு முன் - காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு (QYSS) அறிக்கை ஒன்று வெளியிட்டது. தேர்தல் குறித்து நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக வெளியிடப்பட்ட அவ்வறிக்கை செப்டம்பர் 24, 2006 இல் செய்தியாக (எண் 654) - Kayalpatnam.com இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஒரு நினைவூட்டல்:-

செப்டம்பர் 24, 2006

மறந்து விடாதீர்கள் மக்களுக்கான அந்நாளில்...?

பேரன்புக்குரிய காயல் மாநகரப் பெருமக்களே! இறையருள் நம்மீதும் நம் நகர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! நமது காயல் நகரின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல் மக்களின் மேலான நலன்களுக்காகவும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான முறையில் சேவைகளையும் பல்வேறு உதவிகளையும் நமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு ஆற்றி வருவதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். கடந்த காலங்களில் ஊரில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நல்ல காரியங்களுக்கு எங்களின் முயற்சிகளும், தூண்டுதல்களும் காரணமாக அமைந்து வெற்றிகள் கிடைத்ததே நல்லதோர் உதாரணம். இதோ! தற்போது நமது காயல்நகரின் நலனை கவனத்திற் கொண்டு மிகவும் முக்கியமானதோர் விஷயத்திற்கு உங்கள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த முயன்றுள்ளோம். ஆம்! எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலைப் பற்றிய கருத்துக்கள்தான் அது!

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! நமது காயல்மாநகரம் ஒழுக்கத்திலும், கலாச்சார மேம்பாடு விஷயங்களிலும் மற்ற பகுதிகளுக்கு முன்னுதாரனமாக தொன்று தொட்டு திகழ்ந்து வந்ததை நாம் யாவரும் அறிவோம். இதற்காக நமது முன்னோர்கள் ஆற்றிய சேவைகள், அதற்காக எடுத்த முயற்சிகள், பட்ட துயரங்கள் எதுவும் சொல்லி மாளாது எனும் அளவுக்கு அளப்பரியவை என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அனைத்து சமுதாய மக்களும் உறவுமுறை சொல்லிப் பழகிக் கொள்ளும் அளவுக்கு நமது, எண்ணங்கள் பரந்து விரிந்தவை. ஆனால் சமீப காலமாக நமதூரில் உள்ள அனைத்து மக்களுக்கிடையிலும் இனம் புரியாத சில கசப்புணர்வுகளும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இது களையப்படுவதற்கு பதிலாக அதிகரிக்கப்படுவதை காண்கிறோம். காரணம் சிலரின் சுயநலப் போக்குகள்தான்.

அது மட்டுமல்ல நமதூருக்குள் பல மதங்களைப் பின்பற்றுவோர், பல அரசியல் கட்சிகள் இருக்கின்ற போதிலும், நமக்கிடையே இருந்து வந்த பொதுவான கருத்து ஒற்றுமை இன்று கொஞ்சம் ஆட்டம் காணத்துவங்கியுள்ளதை இங்கே வேதனையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இதன் காரணமாக இதுகாலம் வரை நமக்கு உடமையாயிருந்த பல்வேறு உரிமைகள் இன்று நம்மை அறியாமலேயே பறிக்கப்பட்டு வரும் கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

உதாரணமாக கடந்த காலங்களில் நமதூர் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நமக்கிடையேயுள்ள உட்பூசல் எதையும் பாராது, ஊர் நலனில் உளத்தூய்மையான அக்கறை கொண்டு நமக்கு முன் சென்றவர்கள் எடுத்த முடிவுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியவை.

ஆனால் இன்று அந்நிலை மாறிவருகிறது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் வழமைக்கு மாற்றமாக மக்கள் நலனில் ஆர்வமில்லாதவர்களும், அரசியல் கட்சிகளும் வரும் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண உள்ளதாக அறியப்படுகிறது. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் இனி வருங்காலங்களில் நமதூருக்குத் தேவைப்படும் அடிப்படை விஷயங்களுக்காக சமூக நல ஆர்வலர்கள் கூடி முடிவெடுக்க முடியாமல் எல்லாவற்றிக்கும் அரசியல் கட்சிகளின் முக்கிய பொறுப்பாளர்களே முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும். இதில் மக்கள் நலனைவிட அவரவர்களின் கட்சி நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். இது இன்று பல ஊர்களில் கண்கூடாக நடைபெறுவதைக் காண்கிறோம். இதனால் நமதூர் கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையை பெரிதும் பறித்துவிடும் என்பது மட்டுமல்ல நமது தேவைகள், உரிமைகள் கிடைக்கப் பெறாமல் தடைபட்டுப் போகும் அபாயமும் உள்ளது என்பதை நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

இன்றுவரை பஞ்சாயத்து மூலம் பெறப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், தேவைகள் ஏராளம் உள்ளன. இவையெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் திருப்திகரமாக செயல்படுத்தப்பட்டதா என்பதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். இது மட்டுமல்ல இலட்சக்கணக்கான மக்கள் கூடும் தலைநகர் சென்னை மெரீனா கடற்கரையிலேயே கட்டணம் வசூலிக்காத போது நமதூர் கடற்கரையிலே "கடற்கரை பூங்கா" என்று மக்கள் கேட்காத ஒன்றை கட்டாயமாகத் திணித்து, கலாச்சார சீரழிவுகளையும் உருவாக்கி அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை. ஆண்கள் பகுதி, பெண்கள் பகுதி என்று கூட பிரிக்கப்படாமல் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு வித்திட்டுள்ளதைக் கண்டுகொள்ளாத நமது பஞ்சாயத்து மக்கள் பிரதிநிதிகள் பற்றியும் குடிதண்ணீர் சரியான முறையில் தேவைக்கேற்ப கிடைக்கச் செய்யாமல் குடிநீர் கட்டணத்தை மட்டும் அதிகரிக்கச் செய்தபோது எதிர்ததுக் குரல் கொடுக்காத நமது பஞ்சாயத்து மக்கள் பிரதிநிதிகளைப் பற்றியும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நமது தேவைகள் நிறைவேற்றப்படுமானால், அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெற வேண்டுமானால் பஞ்சாத்துக்காக தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் (கவுன்சிலர்கள்) மக்கள் நலன் நாடுபவர்களாக, சமூக நல ஆர்வலர்களாக, நேர்மையானவர்களாக, லஞ்ச லாவண்யங்களுக்கு அப்பாற்பட்ட அப்பழுக்கற்றவர்களாக, "மனிதருக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை" எனும் சிந்தனையுடையவராக இருக்க வேண்டும். இத்தகைய நல்ல பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இதோ இன்னொரு வாய்ப்பு நம்மைத் தேடி வருகிறது, உள்ளாட்சித் தேர்தல் என்ற பெயரிலே!

ஆம். எதிர்வரும் அக்டோபர் மாதம் 13ந் தேதி உள்ளாட்சி (பஞ்சாயத்து) தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இத்தேர்தலில் நிற்க ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். பொதுமக்கள் எதனை அடிப்படையாக வைத்து தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்? இதோ உங்கள் சிந்தனைக்காக சில :

மீண்டும் உள்ளாட்சித் தேர்தலில் நிற்பவர் என்றால் இவர் கடந்த ஐந்தாண்டில் ஊருக்கு அல்லது தன் பகுதி(வார்டு) மக்களுக்கு செய்தது என்ன?

தங்கள் பகுதியிலுள்ள ஜமாஅத் மற்றும் அமைப்புகளின் நன்மதிப்பைப் பெற்றவரா?

சேவை மனப்பான்மை உள்ளவரா? அல்லது தன்னுடைய தேவையை பூர்த்தி செய்பவரா?

பணப்பெட்டிக்கு அடிமையாகாதவரா? அல்லது பணத்தையே குறிக்கோளாக கொண்டவரா?

பொது வாழ்வில் தூய்மை உள்ளவரா? அல்லது தீமைகளுக்கு துணை செல்பவரா?

உங்கள் பகுதியிலுள்ள குறைகளை உடனே தீர்ப்பவரா?

வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர்களில் யாருக்கு வாக்களிப்பார் என்று தேர்தல் முடிவு வருமுன்னரே அறிவிப்பாரா?

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தண்ணீர் கட்டணத்தை குறைப்பாரா? (அல்லது) தட்டுப்பாடின்றி தேவைக்கேற்ப குடிதண்ணீர் கிடைத்திட முயற்சிப்பாரா?

பொதுமக்களில் ஏழை-எளியோர்களும் இலவசமாக சென்றுவந்த கடற்கரை இன்று காசு வசூலிக்கும் கடற்கரையாகவும், கலாச்சாரத்தை சீரழிக்கும் கலாச்சாலையாகவும் மாறி உள்ளதே! அதனை மாற்றுவாரா?

பதவி கிடைக்கும் வரை பணிவு காட்டி பதவி பெற்றபிறகு பகட்டு (திமிரு) காட்டுபவரா?

காயல் நகரப் பெருமக்களே! சமுதாய நலனில் ஆர்வமுள்ள ஜமாஅத்தார்களே! சமூக நல அமைப்புகளின் அங்கத்தினர்களே! நன்றாக சிந்தியுங்கள்! மக்களின் ஊர் நலனில் கவனம் செலுத்தும் சமூக சேவகர்களை, சமூக சேவகிகளை இத்தேர்தலில் போட்டியிடச் செய்து அவர்களை தேர்ந்தெடுக்கச் செய்யுங்கள். இத்தேர்தலில் போட்டியிடும் சுயநலவாதிகளை புறக்கணிப்பதோடு அவர்களைப் பற்றி பிறருக்கும் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அது மட்டுமல்ல இத்தேர்தலில் போட்டியிடுபவர் சேவையுணர்வு கொண்டவர் அல்ல என்றாலும் தனது உறவினர், நண்பர், நெருக்கமானவர் என்பதற்காக அவருக்கு வாக்களித்து சமுதாய நலனுக்கு துரோகமிழைத்துவிடாதீர்கள். காரணம் நல்ல பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தால் தான் அவர்கள் மூலம் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். நல்ல தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் அவர் மூலம் நல்ல பல காரியங்கள் மக்களுக்காக நிறைவேற்ற முடியும். எனவே மேலே கூறப்பட்டவைகளை சிந்தித்து, சீர்தூக்கிப்பார்த்து செயலாற்றுங்கள். வாக்குரிமை பெற்ற அனைவரும் இத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுங்கள். இதன் மூலம் நமதூர் பலன்பெறட்டும், கட்சி, ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையும், மனித நேயமும் வளரட்டும். இறைவன் அதற்கருள்புரியட்டும். நன்றி.

இவண்,

ஊர் நலன் நாடும்,

காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு,
நெய்னார் தெரு, காயல்பட்டணம்.

அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
சதுக்கைத்தெரு, காயல்பட்டணம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:Flashback: 2006 ஆம் நடந்த...
posted by abdulrahman (singapore) [06 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 7735

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் எல்லா காலத்திற்கும் ஏற்ப உள்ளது,நல்ல கருத்து,இதனை அனைத்து jamattum பின்பற்டலஆம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:Flashback: 2006 ஆம் நடந்த...
posted by B.M.LUKMAN MOULANA (chennai ( camp )) [06 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7738

அஸ்ஸலாமு அழைக்கும்.

நல்ல கருத்து. ஐய்ந்து வருடங்களுக்கு முன்சொன்ன காரணங்களும் கருத்துக்களும் அப்படியே இன்றும் ஏற்புடையதாக இருப்பது நிதர்சனம்.

என்ன ஒரு பிரச்சனை என்றால் பதவிக்கு வரக்கூடியவர்கள் வெறும் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப bold ஆகவும், மக்களை சேர்த்து ஒருங்கிணைத்து நம் நகர தேவைகளை கேட்டு போராடவும்-- துணிவும் அர்ப்பணிப்பும் உள்ளவராகவும் அமைவது அவசியம்.

ஒரு நீண்ட நாள் தேவையை அரசு புறக்கணிக்கிறது என்றால் மக்களை இழுத்துக்கொண்டு ரோட்டுக்கு போராடவும் இறங்க தயங்காதவராக இருக்க வேண்டும்.(மக்களை ஒருங்கிணைத்து போராடினால் அரசும் பணியும் என்பது அண்ணா ஹசாரே மூலம் நாம் உணர்ந்த உதாரணம். ) இதில் மேலும் ஒன்று கவனிக்க வேண்டிய ஒன்று - நமக்குள் இருக்கும் சிம் - சுன்னத் ஜமாஅத் இன்னும் பிற பிரிவுகள் இடையே ஏற்படும் சண்டைகள் எதுவும் ஊர் நலனில் பிளவு ஏற்படுத்திவிடாமல் ( அது தனி கச்சேரி ) இன்னும் சொல்ல போனால் இஸ்லாமியர் அல்லாத நண்பர்களையும் சேர்த்து இணைத்துக்கொண்டு செயல்படக்கூடியவரே இன்றைய காலத்தின் அவசியமும் தேவையும்.

அல்லாஹ் அருள் பாலிப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பெயருக்கேற்ற என்னம்கள்..... என்னதிற்கேர்ப்ப நடைமுறைகள்.
posted by zubair (riyadh) [07 September 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7749

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் சகோதரர்களே..... 2006 ஆம் நடந்த நகர்மன்ற தேர்தலுக்கு முன் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு வெளியிட்ட அறிக்கையை நாம் சிந்தையில் ஏற்று இருந்தால் இன்று நாம் நகர்மன்றதால் முடியாமல் போன... தவற விட்ட பல,பல நல்லகாரியம்களை நடைமுறை படுத்தி இருக்க முடியும், ஊருக்கும், ஊர் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பல,பல திட்டம்களை தீர்த்து கட்டி இருக்க முடியும்.

கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யிக்கு அலையும் வெண்ணைகள் என்றே..... நம்மை நான் நினைக்கிறேன். ஒன்று நமக்கு சுய புத்தி இருக்கணும். இல்லை நல்லது சொல்பவர்களின் புத்தியையாவது கேக்கணும். இரண்டுமே... இல்லை என்றால் கஷ்ட்டம். ஆகையால் ஊர் நலனையும், நம் நாளைய சந்ததிகளை, நம் இரத்த பந்தம்களை... நிம்மதியாக வாழ விடவும் "மெகா" அமைப்போடு கைகோர்த்து நல்லதோர் நகர்மன்றத்தை அமைக்க உதவிடுங்கள்.

நமது இந்த இரண்டு அமைப்புமே...(காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,) பெயருக்கேற்ற என்னம்கள்..... என்னதிற்கேர்ப்ப நடைமுறைகள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் பொதுசேவை புரியும் புன்னயவாங்களுக்கு நீண்ட ஆயுளையும், திடமான ஆரோக்கியத்தையும், உறுதியான என்னத்தையும் கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. STRONGLY ALERTED
posted by EassaZakkariya (Jeddah) [07 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7752

Dears;

Assalamu Alaikum

It is my pleasure to submit my thanks and gratfeul for "Qaiyede Millath Youth Socitey of Welfare" Overall Summary which strongly has recurrently taught us to alert and findout an Opt and Correct Social Individual Person who truly will render his Valuable timely support on this society under Humanitarian Consideration.We Hope and Pray for attaining Our goal Predictably.

Our Persistent Refusal to pay attention in this session will defenlty lead our communityto the agitation,being worried future and will make us upset mindset throughout 05 Years Again

We shall be much obliged and Remarkably gratful if Our all Jamath will make a special care on this and to make an alert everyone to select an Opt Individual Personality for this electroal process is to be 100% Correct and as what we expect- Ameen

Moreover, I'm very happy about the content which was suggestd before five years by Our Society " Qaide- Millath"

But One thing we should keep in mind always that " Our Prolonged Silence will defenlty pave a way to Discredited Personality who Govn us.

In Our Mother Tongue we can say that " NAM THALAYIL NAME MANNAI ALLI PODUTHALUKU" SAMAM

May Almighty Show us right and Perfect path in all aspect Especially this Current Sparkling Session to Wipping out, Voiding by Seleting DISCREDITED Personality for forthcomig Schedule -Ameen

May Allah Be With Us (Always) -Ameen

Wassalam

Tks & Best Regards
Eassa Zakkariya


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அன்றைய MEGA !..
posted by kavimagan (dubai) [07 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7756

இந்த பிரசுரத்தைக் காணும்போது ஆச்சரியமும்,ஆனந்தமும் ஒருங்குற அடைகின்றேன்.இததான் MEGA என்று அடையாளம் காட்ட,இந்தப்பிரசுரமே சிறந்த எடுத்துக்காட்டு.ஐந்து ஆண்டுகள் முன்பே,இதனை ஏற்று நமது மக்கள் செயல்படுத்தி இருந்தால்,நமது வேதனைகள் என்றோ மறைந்திருக்கும். வல்ல இறைவனே எல்லாவற்றையும் நாடுகிறான். அவனது அருளோடு,வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில்,இந்தப் பிரசுரத்தை மக்கள் பின்பற்றி நடந்தால் போதும். தீமைகள் மறைந்து, நல்லது சிறக்க இலகுவான வழிகாட்டி இந்தப் பிரசுரம். இதனை வடிவமைத்து வெளிட்ட நல்லவர்களுக்கும், எங்கள் பார்வையில் மலரச் செய்த நமது வலைதளத்திற்கும் வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. செவிடன் காதில் சங்கு போல...
posted by M. Sajith (DUBAI) [07 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7767

ஒரு வேலை அப்போது வெப் புழக்கம் இல்லாததால் இது சரியாக போய்ச்சேரவில்லையோ என்னவோ..

சொல்வது என்ன என்பதை பார்பதைவிட சொல்வது யார் என்ன என பார்க்கும் நமதூர் வழக்கம் மாறும் வரை இவை அனைத்தும் செவிடன் காதில் சங்குதான்..

பார்போம் இந்த தேர்தலிலாவது மாற்றம் வருமா என்று..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:Flashback: 2006 ஆம் நடந்த...
posted by hasbullah (dubai) [08 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7784

இறை அச்சம் உள்ளவர்களா என்ற நம்பிக்கை இருந்தால் அவர்களை தேர்ந்தெடுங்கள் ...பொய் சொல்லுபவராக இருந்தால் தேர்ந்தெடுக்காதீர்கள் .கவுரவத்தை எதிர் பார்பவரை தேர்ந்தெடுக்காதீர்கள். கழிந்த election - இல் தேர்ந்து எடுத்து நல்ல சேவைகள் செய்தவராக இருந்தால் அவருக்கு வாக்கு அளியுங்கள்

பணத்திற்கு ஆசை வைப்போரே மறந்து விடுங்கள்....... வாக்குறுதி கொடுப்பவரை நம்பக்கூடியவராக இருந்தால் அவர்களை தேர்ந்தெடுங்கள்.

சகோதரர்களே நினைவில் கொள்ளுங்கள்

ஒவ்வொரு முஸ்லிமும் மரணித்த பிறகு செய்த விஷயங்க்ளுக்குரிய கேள்வி கணக்கு இறைவனிடத்தில் மஹ்ஷரில் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved