Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:39:35 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7537
#KOTW7537
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 9, 2011
ஹஜ் பெருநாள் 1432: சிங்கை கா.ந.மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி! பஃபே முறை உணவுடன் நிறைவுற்றது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3593 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பஃபே முறை உணவுபசரிப்புடன், சிங்கை காயல் நல மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.

இதுகுறித்து, அம்மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

சிங்கப்பூரில் 06.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூர் காயலர்களை ஒன்றுகூடச் செய்யும் நோக்கில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி 06.11.2011 அன்று மாலையில், மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில், அவரது தலைமையிலும், மன்றத்தின் மூத்த உறுப்பினர் எம்.அஹ்மத் ஃபுஆத், சிங்கை ஜாமிஆ சூலியா பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மன்ற உறுப்பினர்கள் மாலை 06.30 மணியிலிருந்து நிகழ்விடத்திற்கு வரத் துவங்கினர்.

நிகழ்வுகள்:
மஃரிப், இஷா தொழுகைகளை சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ வழிநடத்தினார். பின்னர் துவங்கிய ஒன்றுகூடல் நிகழ்ச்சியை ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.



வாழ்த்துரை:
பின்னர் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ வாழ்த்துரை வழங்கினார்.



சிங்கை காயல் நல மன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையை பெரிதும் புகழ்ந்துரைத்த அவர், மன்ற உறுப்பினர்கள் ஒருவர் தேவையின்போது மற்றவர் விரைந்து வந்து உதவி செய்வது பெரிதும் பாராட்டத்தக்கதாக உள்ளது என்றார். இந்த ஒற்றுமை என்றென்றும் நீடிக்க வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டுமென அவர் பிரார்த்தித்தார்.

அண்டை நாடான மலேசியாவிலிருந்து, இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே வந்திருந்த ஷாஹுல் ஹமீத் அவர்களும், சிங்கை காயல் நல மன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் கூடிய நகர்நலப் பணிகளை பெரிதும் புகழ்ந்துரைத்தார்.



வந்தோருக்கு நன்றி:
இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தனதழைப்பை ஏற்று பல்வேறு இடங்களிலிருந்து வருகை தந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றி தெரிவித்தார்.



பஃபே முறையில் உணவுபசரிப்பு:
ஹாஃபிழ் அஹ்மத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. பின்னர், பஃபே முறையில் கடல் உணவு வகைகள், கரை உணவு வகைகள் என பல்வேறு உணவுப் பதார்த்தங்கள் பெருநாள் விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் அவற்றை ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர்.



பின்னர் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.







சிறப்பு அழைப்பாளர்கள்:
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக,
கொழும்பிலிருந்து ஹாஜி இஸ்மத் ஷாஜஹான்,
காயல்பட்டினத்திலிருந்து ஹாஜி எம்.ஏ.மெஹர் அலீ,
சிங்கப்பூர் பென்கூலன் பள்ளி இமாம்களான மவ்லவீ அப்துல் கய்யூம், மவ்லவீ ஜாஹிர் ஹுஸைன்,
சிங்கப்பூர் EduQuest International நிறுவனத்தைச் சார்ந்த ஜனாப் ரஃபீக் ஹமீத் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. (09.11.2011 - 11:30hrs)

கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (09.11.2011 - 12:15hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஹஜ் பெருநாள் 1432: சிங்கை...
posted by M.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்) [09 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13132

அஸ்ஸலாமு அழைக்கும்...

எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே! சாந்தியும், சமாதானமும் எங்கும் நிலவட்டுமாக!!

சிங்கை கா.ந.மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல் மற்றும் பஃபே முறை உணவு நிகழ்ச்சி புகை படம் பார்த்து எங்களுக்கும் நிகழ்ச்சியாக இருந்தது மாஷா அல்லாஹ்.. உங்கள் அனைவர்களின் ஒற்றுமையான நல் துவா பிராத்தனைகள் மூலம் எல்லா நல்ல காரியங்களும் நன்மையாக (இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டம்) நமதூருக்கு விரைவில் நடக்க அல்லாஹ் நம் ஊருக்கும் எல்லோருக்கும் எப்பொழுதும் அருள் செய்வானாக.. ஆமீன்..

உங்கள் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன் - M.S.M சம்சுதீன்.
13வது வார்டு உறுப்பினர் - சுயேச்சை
(காயல்பட்டிணம் நகர்மன்றம்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஹஜ் பெருநாள் 1432: சிங்கை...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [09 November 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13134

வெரி குட்...வெரி நைஸ்..

இது மாதிரியான ஒன்று கூடல் தான் உண்மையான சந்தோசம். அனைவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுவதை பார்க்க பார்க்க எங்களுக்கும் மகிழ்ச்சி. மாஷாஹ் அல்லாஹ்.

மதிப்புக்குரிய எம்.அஹ்மத் ஃபுஆத் மாமா அவர்களை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதே இளமை,அதே அழகு.. நான் திருச்சி கல்லூரியில் படித்த காலத்தில் அவர்களை எப்படி பார்த்தேனோ, அதே மாதிரி தான் ஃபுஆத் மாமா அவர்கள்...சாரி..சாரி..ஃபுஆத் காக்கா அவர்கள் இருக்கின்றார்கள்.( மூத்த உறுப்பினர் என்ற உங்களின் வாசகத்திற்கு என் கண்டனம்).

உங்களின் ஒன்று கூடலில் கண்டிப்பாக ஒரு ரோஜா இருக்குமே..எஸ்..எஸ்..எஸ்.. இந்த ஒன்று கூடலிலும் ஒரு ரோஜாப்பூ இருக்கின்றது..கண்ணுக்கு குளிர்ச்சி..வங்காளம் உமர் காக்காவின் பேத்தியா.

வழமை போல பாளையம் ஹசன் காக்காவிற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள். (தாங்கள் அங்கு இருக்கும் பாச்சிலர்களுக்கு தனியாக பெருநாள் விருந்து கொடுப்பீர்களே அது தான் இதுவா...இல்லை.. இதுதான் அதுவா..

அனைவர்களும் எல்லா வளமும் பெற்று, நலமாக வாழ துஆ செய்யும் அன்பு நெஞ்சம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஹஜ் பெருநாள் 1432: சிங்கை...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [09 November 2011]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 13138

மாஷாஅல்லாஹ். ஒரு அருமையான ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல்.

ஊரில் கூட இப்படியான ஒருவர், இன்னொருவரை ஒரே இடத்தில் சந்திப்பது என்றால் மிகவும் சிரமமே! இங்கு சிங்கையில் காயலர்களை சந்திக்க வைத்த வல்லோன் அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.

புதுமையாக எதையாவது செய்து பிறரை மகிழ்விக்க வேண்டும் என்பதில் வித்தியாசமாக செய்து சிறப்பிப்பதில் பாளையம் ஹசன் ஹாஜி அவர்களுக்கு ஒரு அலாதி பிரியம்தான். அந்த அடிப்படையில் இங்கு பஃபே முறையில் கடல் உணவு வகைகள், கரை உணவு வகைகள் என பல்வேறு உணவுப் பதார்த்தங்கள் பெருநாள் விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் அவற்றை ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர். நானும்தான்.

இருந்தாலும் நமதூர் காயல் கலரி உணவு கலாச்சாரம் கண்டிப்பாக இடம்பெற்றே இருந்தது. சஹன் வடிவில் இல்லையே தவிர சகல ஐட்டமும், சரியாகவே சரித்திரம் படைத்தது. சட்டிலாப்பம் உட்பட! சாரி ! வட்டிலாப்பம் உட்பட!

சுருக்கமாக சொன்னால் ஒரு அழகான ,அமைதியான ,மகிழ்ச்சியான ,அருமையான ஒரு பெருநாள் சந்திப்பு.

வல்ல அல்லாஹ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் ,இந்த செய்தியை அறிந்து கொண்டவர்களுக்கும், நம் யாவர்களுக்கும் ஈருலக சகல நர்பெருகளையும் வழங்கி அருள்வானாக ! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஹஜ் பெருநாள் 1432: சிங்கை...
posted by SHAIK ABDULLAH MUHAJIR (bangalore ) [09 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13145

அஸ்ஸலாமு அழைக்கும்,

யீத் முபாரக்

வெரி nice டு சி உ mr சூபி வித் யுவர் kid மாஷா அல்லா & EId முபாரக் டு ஆல் (EId ul அல்ஹா)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஹஜ் பெருநாள் 1432: சிங்கை...
posted by OMER ANAS (DOHA QATAR.) [09 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 13159

அஸ்ஸலாமு அழைக்கும்.! பொதுவாக பூச்சைக்கு இரவில் கூட கண் தெரியும் என்பார்கள். ஆனாலும் பூதக் கண்ணாடி ஜியாவுக்கு, அப்படி ஒரு கண் இருப்பது இப்பத்தான் எனக்கு தெரியும்! எவ்வளவு தெளிவா கண்டு பிடித்துள்ளார்! வாழ்த்துக்கள் தம்பி!

P H M மகனாரே தொப்பி வந்தாச்சு எப்ப பச்சை துண்டு தோலில் வரும்? எப்ப நினைத்தாலும் உங்கள் உணவு வகைகள் எங்கள் நாவில் எச்சில் ஊறாமல் விட்டதில்லை!

தரையிலே நடக்கின்ற ஒட்டகத்துக்கும் மாட்டுக்கும் ஏழு பங்கு! தண்ணியிலே தவழ்கின்ற திமிங்கலத்துக்கு எத்தனை பங்கு? யாராவது சொல்லுங்களேன்! பார்ப்போம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved