Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:15:12 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7552
#KOTW7552
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 13, 2011
அதிமுக 40ஆவது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம்! தூத்துக்குடி மேயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்!! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2992 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அதிமுக 40ஆவது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கி 39 ஆண்டுகள் நிறைவுற்று, 40ஆவது ஆண்டு துவங்குவதையொட்டி, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 04.11.2011 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்ட நிகழ்வுகள்:
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தலைமை தாங்கினார். எல்.எஸ்.அன்வர், என்.எம்.அகமது, எஸ்.எம்.ஜின்னா, பி.கணேசன், எம்.எஸ்.எம்.ஷாபி, எஸ்.எம்.ஸலீம், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் தைக்கா சாமு, சி.பி.முத்தையா, கே.ஏ.எஸ்.அப்துல் காதர், கலீபா செய்யது முகமது, எம்.எல்.இல்யாஸ், என்.எஸ்.நெய்னா, எஸ்.புரட்சி சங்கர், எஸ்.ஏ.முகைதீன், எம்.எஸ்.சதக்கத்துல்லா, டெய்லர் முத்து, எஸ்.ஏ.ஷேக்னா, கப்பல் சேக் சுலைமான், ஜி.சேகர், பி.அந்தோணி, ஜி.ஆனந்த், என்.டி.இஸ்ஹாக், எஸ்.எச்.காதர், நகர்மன்ற உறுப்பினர் அந்தோணி, எம்.ஐ.புகாரி ஆகிய நகர கிளை நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் முன்னிலை வகித்தனர். அதிமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.



ஒன்றிய செயலாளர் உரை:
அதிமுக ஒன்றிய செயலாளர் மு.இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.



காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் போட்டியிட்டு வென்ற நகர்மன்றத் தலைவர் ஆபிதாவின் நடவடிக்கைகளுக்கு எந்த முட்டுக்கட்டை ஏற்பட்டாலும், அதனை எதிர்த்து தம் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

தலைமைக் கழக பேச்சாளர் உரை:
அடுத்து, அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் காந்திமதி நாதன் உரையாற்றினார்.



அதிமுக துவங்கப்பட்ட வரலாறு, அதற்கான காரணம், அதிமுக துவங்கியதன் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், எம்.ஜி.ஆர்.இன் அரசியல் நடவடிக்கை சரித்திரங்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.

பாலப்பா உரை:
அதனைத் தொடர்ந்து, திமுக கட்சியில் பல ஆண்டுகள் பரப்புரையாளராக இருந்த பாலப்பா அப்துல் காதர், இக்கூட்ட மேடையில் அதிமுகவில் இணைந்தார்.



அவரை, தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் பாலப்பா உரையாற்றினார்.



காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத்தலைவர் வெற்றியை திமுகவின் வெற்றியாகக் கருத அக்கட்சிக்கு எந்தத் தகுதியுமில்லை என்று தெரிவித்த அவர், இத்தேர்தலில் பல பேரங்கள் நடைபெற்றதாகக் கூறி, அதை நடத்தியதாக தொழிலதிபர் ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டு உரையாற்றினார். பி.ஆர்.மனோகரன் உரை:
பின்னர், அக்கட்சியின் இளைஞர் - இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளரும், அண்மையில் நடைபெற்ற திருச்செந்தூர் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.மனோகரன் உரையாற்றினார்.



நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ள போதிலும், காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 7,500 வாக்குகள் பெற்றிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும், இது இந்த ஊரில் அதிமுகவின் வளர்ச்சியையே காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், தான் சட்டமன்ற உறுப்பினராக இல்லாதபோதிலும், ஓர் உறுப்பினர் செய்து தர வேண்டிய அனைத்துப் பணிகளையும் தன்னிடத்தில் உரிமையுடன் கோரலாமெனவும், அதை மேலிடத்தில் சொல்லிப் பெற்றுத் தர தான் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மேயர் உரை:
பின்னர், தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், அதிமுக இளைஞர் - இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான சசிகலா புஷ்பா உரையாற்றினார்.



திமுகவிலிருந்து விடைபெற்று, அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பாலப்பாவை வரவேற்றுப் பேசிய அவர், இந்த ஊர் நலனுக்காகவும், இந்த தொகுதி நலனுக்காகவும் அதிமுக என்றும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை நகர அதிமுக செயலாளர் எஸ்.எம்.செய்யது காசிம் செய்திருந்தார்.





படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அதிமுக 40ஆவது ஆண்டு துவக்...
posted by M.S.ABDULAZEEZ (Guanzhou) [13 November 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 13284

பாலப்பா....???????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அதிமுக 40ஆவது ஆண்டு துவக்...
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13287

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப்பாருங்கள். அல்லாஹ் ரசூல் சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்.

இந்த சமுதாயத்துக்கு, இந்த ஊருக்கு உதவி செய்ய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் அதன் செயல் வீரர்களும் உறுதி மொழி கொடுத்து அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தால் நாளை நமதே என்று புரட்சி தலைவர் அன்று பாடியது, அடுத்த தேர்தலில் நிஜமாகலாம்.. குறிப்பாக இரண்டாவது பைப் லைன் அம்மாமார்களின் - புரட்சி தலைவி ஜெயலலிதா, நகரமன்ற தலைவி ஆபிதா ஆகியோரின் ஆட்சிகாலத்தில் நிறைவேற்றி தந்தால், எழுதி வைத்துக்கொள்ளுங்கள், மக்கள் உங்களை அடுத்த சட்டமன்ற உறுப்பினராக்கி கோட்டையிலே அமர செய்வார்கள்.

இது காயல்பட்டணம் கலைஞர் பட்டினமுமல்ல, அம்மா பட்டினமுமல்ல. இது எங்கள் முன்னோர்கள் எங்களிடம் விட்டுசென்ற அன்புபட்டினம், சிறந்த பண்புபட்டினம். வந்தாரை வாழ வைக்கும் உயர்ந்தபட்டினம். இங்கே உள்ளவர்களின் இதயத்தில் இடம்பிடிக்க இதயதெய்வங்கள் தேவை இல்லை, மனித நேயங்கள் தேவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:அதிமுக 40ஆவது ஆண்டு துவக்...
posted by seyed mohamed (KSA) [13 November 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13291

நண்பன் பாலப்பா.. ஹி.ஹி.ஹி..அரசியலில் இதுவெல்லாம் சஜகமப்பா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:அதிமுக வில் பாலப்பா
posted by P.S.ABDUL KASER (jeddah) [13 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13297

தம்பி பாலப்பா முஹம்மது அப்துல் காதர் அ.தி.மு.க வில் இணைய வந்தமைக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பாலப்பா மனித நேய தொழிலதிபர் அவர்களை தரம் தாழ்ந்து பேசியது கண்டனத்திற்குரியது.
posted by saburudeen (dubai) [13 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13299

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது நகராட்சி தலைவி சகோதரி ஆபிதா அவர்களுக்கு ஆளும் அம்மாவின் அரசு பக்கபலமாக இருக்கும் என உரையாற்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் மு.இராமச்சந்திரன் பாராட்டுக்குரியவர்.

திமுக கட்சியில் பல ஆண்டுகள் பரப்புரையாளராக இருந்த பாலப்பா அப்துல் காதர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டது வரவேற்புகுரியது. பாலப்பா போன்றவர்களின் பரப்புரை பணி அதிமுகவிற்கு தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே நேரத்தில் பாலப்பா அந்த மனித நேய தொழிலதிபர் அவர்களை தரம் தாழ்ந்து பேசியது கண்டனத்திற்குரியது.

என்னுடைய முந்தைய வறுமை காலத்தில் அந்த தொழிலதிபரின் நிறுவனத்தில் பணி செய்தபோது, என் தாய் மிகுந்த உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில். வறுமையின் காரணமாக என் குடும்பம் சிகிச்சை அளிக்க திணறியபோது, அல்லாஹ் இந்த மனித நேய தொழிலதிபர் முலமாக பொருளாதார உதவியை அளித்து சிகிச்சை பெற்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் என் தாய் இன்று நலமுடன் உள்ளார். என் தாய் மற்றும் பல தாய்மார்கள் மட்டும் பல வறுமை குடும்பங்களின் துவா உடன் வாழ்பவர் இந்த மனித நேய தொழிலதிபர் என்பதை உருக்கத்துடனும் நன்றியுடனும் அறிய தருகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அதிமுக 40ஆவது ஆண்டு துவக்...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [13 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13300

அ. தி. மு.க வின் இந்த வளர்ச்சி சாதாரனமானதல்ல. கல்லடி சொல்லடி சமூகபுறக்கணிப்பு தங்களது தலைவரே (எம் .ஜி. ஆர்) அவமானப்படுத்தப்பட்ட நிலை இப்படி எல்லா துன்பங்களையும் தாங்கித்தான் அந்த கட்சி இன்று விசுவரூபம் எடுத்திருகிறது.

என்றாலும் அந்த கட்சி எல்லா காலங்களிலும் இவ்வூரை பொருத்தமட்டில் தனக்கென ஒரு நிலையான வாக்கு வங்கியையும் வைத்திருக்கிறது. மூடத்தனமான தி.மு.க ஆதரவு மிதமிஞ்சிய கருணாநிதி பற்று எதையும் புரிந்துகொள்ளாத முரட்டு சுபாவமிக்க (மன்னிக்கவும்) ஒரு மக்கள் கூட்டத்தின இடையேதான் அக்கட்சி இன்றி வேர் விட்டு வளர்ந்துள்ளது.

தி.மு.க வுக்கு எதிரான ஓர் மாற்றுக்கட்சியும் உண்டு. அதவும் மக்களுக்கு சில நன்மைகளை செய்ய முடியும் என்பதை சமீப காலமாக இவ்வூர் மக்கள் உணர்ந்துள்ளனர். இது வரவேற்க்கத்தகுந்த மாற்றம். இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டு அக்கட்சியும் (அ.தி.மு.க) நல்லபடி மக்கள்பணி செய்தால் இனி எந்நாளும் அக்கட்சிக்கு ஏற்றமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved