Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:38:52 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7554
#KOTW7554
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 13, 2011
11.11.11. அன்று 11.11 மணிக்கு, துளிர் பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3242 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டிணம் ஏ.கே.எம் நகர் இரத்தினபுரியில் அமைந்துள்ள மனவளர்ச்சி குன்றிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கிவரும், துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் 11.11.2011 வெள்ளிக்கிழமையன்று 11 மணி 11 நிமிட நேரத்தில் உலகெங்கும் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களும் நலம் பெறவேண்டி துளிர் குழந்தைகளும், பயிற்றுநர்களும் சிறப்புப் பிராத்தனை பாடலை சேர்ந்திசைத்தனர்.



பின்னர், தேசிய தலைவர் மௌலான அபுல்கலாம் ஆஸாத் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய கல்வி தினமான இன்று “கற்போம் கற்பிப்போம்” என்ற உறுதி மொழியினை துளிர் குழந்தைகளும் பயிற்றுநர்களும் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு துளிர் பெற்றோர் மன்ற தலைவியும் துளிர் அறங்காவலருமான ஆயிஷா சாகிப்தம்பி அவர்கள் தலைமை ஏற்றார். துளிர் பள்ளி செயலாரும், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க மாவட்ட செயலருமான எம்.எல்.சேக்னா லெப்பை முன்னிலை வகித்தார். துளிர் தனவந்தர் குழுவின் பிரதிநிதி எஸ்.ஆஷிகா ஹுமாயுன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.



துளிர் நிறுவனர் வழக்கறிஞர் எச்.எம்.அஹமது அப்துல் காதர் ஆலோசனையின் பேரில், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட ஓருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான் செய்திருந்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:11.11.11. அன்று 11.11 மணி...
posted by Umar Rizwan Jamali (Singapore) [13 November 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 13289

எல்லாம் வல்ல அல்லாஹ்

இந்த குழந்தைகளுக்கும், இவர்களை ஈன்றேடுத்த பெற்றோர்களுக்கும் உளறீதியான மகிழ்வையும், உயர்ந்த வாழ்வையும் வழங்கி அருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:11.11.11. அன்று 11.11 மணி...
posted by M.Fauz (AlAin UAE) [13 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13298

யா அல்லா இந்த குழந்தைகளை மூளை வளர்ச்சி கொடுத்து சராசரி குழந்தைகளை போல் ஆக்குவாயாக. ஆமின் தாய், தந்தைகளுக்கு உதவியாக்கி வைப்பாயாக. ஆமின்

இதை பார்பவர்கள் என் மகளுக்கும், இதில் உள்ள பிள்ளைகளுக்கும் துவா செயும் மாறு வேண்டிகொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:11.11.11. அன்று 11.11 மணி...
posted by Sayna (Bangkok ) [13 November 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 13302

அஸ்ஸலாமு அழைக்கும்

Comment Reference Number: 13298

அன்பு சகோதரர் துஆ செய்து விட்டு , என்மகளுகும் என்று குறிப்பிட்ட வார்த்தையை பார்த்த உடன் என்கண்ணில் கண்ணீர் பெருகடுது ஓடுகிறது, யா அல்லாஹ் இப்படி பட்ட குழந்தைகளுக்கு மன வளர்ச்சியையும் நல்ல ஆரோகியத்தையும் குடுத்து அருள் வயகா ,

இவர்கள் பெற்ற தாய் தந்தைக்கு நல்ல பக்குவத்தையும் , மனதில் வல்ல மையும் குடுத்து அவர்களுக்கு சுவன பதி இல் அவர்களுக்கு இடம் கொடுத்து அருள்வாயாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:11.11.11. அன்று 11.11 மணி...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [13 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13307

இங்கு பயிலும், பயிற்சிபெறும், மற்றும் உலகிலுள்ள இதுபோன்ற எல்லா குழந்தைகளும், குழந்தை மனதுள்ளவர்களும் மற்றவர்களை போல் எல்லா நலனும் பெற்று வாழ நாம் அனைவரும் எல்லா நேரமும் வல்ல நாயனை பிரார்த்திப்போமாக!

வல்ல நாயன் நம் யாவரின் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [13 November 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13322

மென்மையான இப் பூக்களின் இதழ்களில் பதிந்துருப்பது பனித்துளிகள் அல்ல! பெற்றோர்களின் கண்ணீர்த்துளிகளே..!!!.இச் சின்னஞ்சிறிய செடிகளுக்கு நீர் ஊற்றி வேர் பிடிக்கப் பாடு படும் துளிரின் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அதற்குரிய நற்கூலியை இம்மையிலும்,நாளை மறுமையிலும் வழங்கியருள்வானாக! ஆமீன்!!!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பெற்றோர்கள் கவனமாக இருந்தால்
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [14 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13351

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

உலகமெங்கிலும் உள்ள மனவளர்ச்சி குன்றிய மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலம் பெறவேண்டி சிறப்புப் பிரார்த்தனைகள் செய்தது நன்று.

இந்த பிரார்த்தனையை துளிர் குழந்தைகளும், பயிற்றுநர்களும் செய்தால் மட்டும் போதாது - நாம் ஒவ்வொருவரும் அவசியம் செய்தல் வேண்டும்.
-------------------------------------------
விதியே என்று மதியை மறந்தால் :

துளிரானாலும் சரி வேறு எந்த பள்ளியானாலும் சரி இந்த மாதிரி மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்க்கும்போது நமது மனங்கள் மிக ,மிக வேதனையை அடைகின்றன.

இந்த மாதிரி குழந்தைகள் உருவாகுவதற்கு காரணம் இறைவனின் சோதனை என்கிறோம் - ஆனால் உண்மையாகவே காரணத்தை அறிந்தால் வேதனைதான் மிஞ்சும்.

பெற்றோர்கள் கவனமாக இருந்தால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாகுவதை தடுக்கலாம் - விதியே என்று மதியை மறந்தால் விதி விளையாடத்தான் செய்யும்.
---------------------------------------------
பிரார்த்தனை செய்ய வேண்டியது :

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றோர்கள் வளர்ப்பது என்பது ஒருபுறமிருக்க - அவர்களை துளிர் போன்ற பள்ளிகளில் பராமரித்து - பயிற்சியளித்து - வளர்க்கிறார்களே! அதுதான் மிகவும் சிரமமானதும் - சிறப்பானதும் - போற்றக்கூடியதுமாகும்.

உண்மையாகவே அந்த குழந்தைகளை பராமரிக்க கூடியவர்கள் மிகவும் நல்ல உள்ளம் படைத்தவர்களாக இருப்பார்கள் - அந்த நல்ல உள்ளம் படைத்தவர்களுக்காகவும் - துளிர் பள்ளி போன்ற நிருவனங்களை நடத்துபவர்களுக்காகவும் நாம் எப்போதும் பிரார்த்தனை செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
---------------------------------------------
வாழ்வை வளமாக்குங்கள் :

மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனம் உள்ள குழந்தைகளை உடைய சில பெற்றோர்கள் அந்த குழந்தைகளுக்கு வைத்தியம் செய்வதற்காக வேண்டி உள்ளூர் வெளியூர் என்று பாராமல் பல டாக்டர்களிடம் சென்று முயற்சிகளை செய்கிறார்கள் மேலும் அதற்காக இலட்சக்கணக்கில் பணமும் செலவு செய்கிறார்கள்.

இருந்த போதிலும் சில குழந்தைகள் முழுவதுமாக குணமாகிறது - சில குழந்தைகள் பெற்றோர்களுடைய முறையான / சரியான பராமரிப்பின்றி அரைகுறையாக குணமாகிறார்கள்.

துளிர் போன்ற பள்ளிகளில் அந்த குழந்தைகளை சேர்த்து - அவர்களுக்கு முறையான பயிற்சியை அளித்தால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாகும்.

எனவே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை உடைய பெற்றோர்கள் அந்த குழந்தைகளுக்கு வைத்தியம் மட்டும் பார்த்து, விட்டு விடாமல் - தயவு செய்து துளிர் போன்ற பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை பயிர்ச்சி பெற செய்து அவர்களின் வாழ்வை வளமாக்குங்கள்.
-----------------------------------------
மக்களே!

எல்லாம் வல்ல அல்லாஹ் ! யாருக்கும் இந்த மாதிரி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தராமல் காப்பதோடு - துளிர் மற்றும் உலகில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் குணம் பெற செய்வானாக.

மேலும் இவர்களுக்காக மனிதாபிமானத்தோடு சேவை செய்கின்ற அனைவருக்கும் வாழ்வில் வசந்தத்தை கொடுக்க பிரார்த்திப்போமாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved