Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:56:11 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7958
#KOTW7958
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 3, 2012
பட்டைய கௌப்புறாங்கப்பா... (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3896 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டத்தில் மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பயிலரங்கங்கள் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் பிறகு, மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து பெறப்பட்ட வழிகாட்டு செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்வது குறித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியமை...

நகராட்சி நிர்வாகத்தின் மூலம் இரண்டு முறை இதற்காக பேரணி நடத்தியமை...

நகராட்சியின் சார்பில் வணிக நிறுவனங்களுக்கு நேரில் சென்று இதுகுறித்த விழிப்புணர்வூட்டும் சுற்றறிக்கைகளை அளித்தமை...

வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களை நகராட்சி கூட்டரங்கில் கூட்டி, இதுகுறித்து அறிவுறுத்தியமை...

இப்படி பல்வேறு நடவடிக்கைகள் நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தற்போது காயல்பட்டினத்தில் பெரும்பாலும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் ப்ளாஸ்டிக் கேரி பைகள் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பலசரக்கு மளிகைகளிலும், உணவகங்களிலும் காகிதத்தில் பொதிந்தோ, துணிப்பைகளிலோ, பாத்திரங்களிலோ பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.





உணவகங்களில் தட்டில் வாழையிலை, அலுமினியத் தாள் ஆகியவற்றில் வைத்து உணவுகள் பரிமாறப்பட்டு வருகிறது...



இறைச்சிக் கடைகளில் காகிதத்தின் மேல் வாழையிலையை வைத்து, அதன் மீது இறைச்சியை வைத்து பொதிந்து கொடுக்கப்படுகிறது. ஓரிரு கடைகளில் மட்டும் பழைய முறைப்படி பனையோலைப் பட்டையைக் கொண்டு இறைச்சி பொதிந்து கொடுக்கப்பட்டு வருகிறது.









இதுகுறித்து வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைக்காரர்களிடம் வினவியபோது,

நாங்களாக இந்த ப்ளாஸ்டிக் பைகளை விரும்பவில்லை... வாடிக்கையாளர்கள்தான் தமது வேலைக்கு இலகுவாக இருப்பதாகக் கருதி அவற்றை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கினர்... அவர்களின் தேவையைக் கருத்திற்கொண்டு நாங்களும் ப்ளாஸ்டிக் கேரி பைகளை வாங்கியளிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது...

இதனால், பொருட்கள் வாங்குவதற்காக தம் கைகளில் துணிப்பையையும, பாத்திரங்களையும் கொண்டு வந்த வாடிக்கையாளர்கள் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அப்பழக்கத்தை மாற்றி, இறுதியில் முற்றிலும் மறந்துபோயினர்...

இன்று ப்ளாஸ்டிக் கேரி பைகளுக்கு நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது வணிகர்களாகிய எங்களைப் பொருத்த வரை மகிழ்சியே! என்றாலும், இந்த ப்ளாஸ்டிக் கேரி பைகளை வாங்கிய அதே விலையில் துணிப் பைகளை நாங்கள் வாங்கினால்தான் எங்களால் எதிர்பார்க்கும் இலாபத்தை சம்பாதிக்க இயலும்... இல்லையெனில் வாடிக்கையாளர்களிடம் துணிப்பைக்கும சேர்த்து கட்டணம் வசூலிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்...

எனவே, அரசுத் துறைகள் இந்த துணிப்பை உற்பத்தியை விரிவாக்கி, மிகவும் மலிவாக அவற்றை அளித்தால் இக்குறை நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டு, சுகாதாரமான முறையில் பொருட்களை வாங்க - விற்க வழியேற்படும்...
என்று தெரிவித்தனர்.

வாடிக்கையாளர்களிடம் இதுகுறித்து வினவியபோது,

ப்ளாஸ்டிக் பொருட்களால் சுகாதாரத்திற்கு பெரும் கேடு உள்ளது என்பதை பொதுநல அமைப்புகளும், அரசுத் துறைகளும் எங்களுக்கு போதிய அளவில் அறிவூட்டியிருக்கின்றன... அந்த அறிவுரைகளை நாங்கள் மதித்து செயல்பட ஆயத்தமாக இருக்கிறோம்...

அதே நேரத்தில், இந்த அவசர உலகத்தில் எங்களால் ஒவ்வொரு தேவைக்கும் வீட்டிலிருந்து பாத்திரங்களைக் கொண்டு வந்தோ, துணிப்பைகளைக் கொண்டு வந்தோ பொருட்களை வாங்குவதென்பது சாத்தியமற்றது என்பதால், கடைகளில் ப்ளாஸ்டிக் கேரி பைகளை எவ்வாறு இலகுவாகப் பெற்றோமோ அதே போன்று இந்த துணிப்பைகளையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழியிருந்தால் எங்கள் சிரமங்கள் போக்கப்படும்...
என்று தெரிவித்தனர்.

தற்காலங்களில், இறைச்சிக் கடைகளிலும் பலசரக்கு மளிகைகளிலும் பெரும்பாலும் அரை கிலோவுக்கு மேல் பொருட்கள் வாங்கினால்தான் துணிப்பையில் வைத்து வழங்கப்பட்டு வருகிறது. அரை கிலோ, கால் கிலோ எடையில் பொருட்களை வாங்கினால் காகிதத்தில்தான் பொதிந்தளிக்கப்பட்டு வருகிறது.

இதனால், வாடிக்கையாளர்கள் சிறிது பாதுகாப்பின்றியும், வானத்தில் சுற்றித் திரியும் பருந்து, காக வகையறாக்கள் பூரிப்புடனும் உள்ளனர். பயத்தையுணர்ந்த பெண்களில் சிலர் மட்டும் தம் கைகளில் கூடைப் பைகளை ஏந்திச் செல்வது வழமையாகியுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பட்டைய கௌப்புறாங்கப்பா......
posted by PS ABDUL KADER (JEDDAH,KSA) [03 February 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16468

நகரை சுற்றி வளர்ந்துவந்த பனைமரத்தினை, வீட்டுமனை விற்பனை செய்வதற்காக வேண்டி வெட்டி சாய்த்து விட்டு இப்பம்வந்து பட்டைய கௌப்புறாங்கப்பா...... என்றல் எப்படி ?

இதற்காகவே கடந்த மாதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சிறுநெசவாளர்களை ஊக்கபடுத்த கைதறி (துணி பை) செய்ய நிதிஉதவி வழங்கி இருக்கிறார்கள். நாளடைவில் பட்டைக்கு பதிலாக கதிர்துணிபைதான் நகரில் வலம்வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பட்டைய கௌப்புறாங்கப்பா......
posted by M.S.ABDULAZEEZ (G Z ) [03 February 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 16474

இனி கல்யாணவீட்டில் மண் சிட்டியா வாவ் சூப்பர் ஆமா..... அப்ப அந்த பிளாஸ்டிக் விற்பனை கடைகள் ????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பட்டைய கௌப்புறாங்கப்பா......
posted by Abdul Cader S.H. (Jeddah) [03 February 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16476

வரவேற்க்க வேண்டிய விசயம்! பிளாஸ்டிக் பைகளை தவிர்த்துவிட்டு இன்று செய்தி தாள்களில் பொதிந்து கொடுத்தாலும், புரோட்டா, சமூசா போன்ற எண்ணெய் வஸ்துகளால் அந்த செய்தி தாளின் மை புரோட்டவின் மேல் பதிந்து விடுவதால் அதை கொண்டும் வைற்றுபோக்கு மற்றும் பல உபாதைகள் வரக்கூடும். எனவே இதிலும் சற்று மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு தேவை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பட்டைய கௌப்புறாங்கப்பா......
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [03 February 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 16489

Please avoid News Paper. It has Zinc in printing.

And nice to see palm leaves. Hotels can use same also for rice and other like petti soru. Gravy can be get from vessel (Thookkusatti) from home itself.

Shopkeepers collect seperate amount for big shopper bags in Metro Cities along with purchase bill.

Handicraft materials are much welcome.

Then, What about the Plastic Stores in Koolakkadai Bajar?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பட்டைய கௌப்புறாங்கப்பா......
posted by Vilack SMA (kayalpatnam) [03 February 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16493

நமதூரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

அதுபோல செய்தித்தாளில் வடை போன்ற பொருட்களை கட்டிக்கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும் . தம்பி nowshad சொன்னதுபோல Zinc problem . மேலும் , பலபேர் புரட்டிப்பார்த்த செய்தித்தாள் , அனைவரது கையில் உள்ள கிருமிகளும் அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் . இதில் ஒருசிலர் நோயாளிகளாக கூட இருக்கலாம் .

இதற்கு மாற்றாக , பொட்டலம் கட்டுவதர்க்கென்றே தனியாக உள்ள தாளில் பொட்டலம் கட்டலாம் ( brown sheet )

திருமண விருந்துகளில் , மண் சிட்டி , கழைய தண்ணீர் கலாச்சாரம் மீண்டும் வந்தால் வரவேற்கத்தக்கது .

பனைமரங்கள் குறைந்து வரும் இந்த காலத்தில் , பனை ஓலையில் கறி கட்டி கொடுப்பது சற்று சிரமம்தான் . மாற்று வழி , வீட்டில் இருந்தே ' தூக்குச்சட்டியை " எடுத்து செல்வது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:பட்டைய கௌப்புறாங்கப்பா......
posted by velli muhaideen (chennai) [06 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16583

அருமை அருமை காயல்பட்டிணம் இனி பிலாஸ்டிக் இல்லா நகரம். கல்யான் வீடுகலிலும் பலைய முரையான மண் சிட்டியும், கலையமும் வருமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved