Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:24:43 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7953
#KOTW7953
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 2, 2012
கடற்கரைப் பூங்காவில் சிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுவின் குடும்ப சங்கமம்! மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3868 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிங்கப்பூரிலுள்ள கலைநயமிக்க கடற்கரைப் பூங்காவில் சிங்கை காயல் நல மன்றத்தின் பொதுக்குழு குடும்ப சங்கமம் நடைபெற்றது. மார்க்க அறிஞர் மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் (KWAS) பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி, 28.01.2012 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு, சிங்கை காயலர்கள் பலரால் Dream World - கனவுலகம் என்றழைக்கப்படும் சிங்கப்பூர் Labrador Parkஇல் நடைபெற்றது.

உறுப்பினர்கள் வருகை:
17.30 மணி முதல் மன்ற உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் நிகழ்விடத்திற்கு வருகைதந்தவண்ணம் இருந்தனர்.

பிரார்த்தனையுடன் துவங்கிய குடும்ப சங்கமம்:
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வரும், நாடறிந்த நாவலருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இறைப்பிரார்த்தனையாம் இனிய துஆவுடன் இன்பம் பொங்கும் குடும்ப சங்கம நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில், சிங்கை ஜாமிஆ சூலியா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, டன்லப் பள்ளி என்றழைக்கப்படும் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இனிய மாலைப்பொழுதில், இயற்கைக் காட்சிகள் நிறைந்த இன்பமூட்டும் கடற்கரையையும், அதன் மறுபுறத்தில் தெரியும் இந்தோனேஷிய நாட்டின் எல்லைப் புறத்தையும் மன்ற உறுப்பினர்கள் ஒருபுறம் கண்டு ரசிக்க, அங்குள்ள விளையாட்டுத் திடலில் குட்டீஸ் விளையாடி மகிழ, பூங்காவின் தனியிடத்தில் மகளிர் ஒன்றுகூடி - நீண்ட நாட்களுக்குப் பிறகான தமது சந்திப்பை மனமகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி, நகர்நல நடப்புகள் குறித்து கலந்துரையாடினர்.







பொதுக்குழுக் கூட்டம்:
18.45 மணிக்கு மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இறைமறை குர்ஆனின் இனிய வசனங்களுடன் ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் துவக்கி வைத்தார்.



புது வரவுகள் அறிமுகம்:
வேலைவாய்ப்பு தேடி சிங்கப்பூர் வருகை தந்துள்ள சகோதரர் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப், ஸஊத் ஆகியோரை பொதுக்குழு மனமகிழ்வுடன் வரவேற்றதோடு, அவர்களின் தகுதிக்கேற்ற நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்திட வாழ்த்தியது.



செயலர் அறிக்கை:
மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள், முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து மன்றச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசியதோடு, தமது காலாண்டுக்கான சந்தா தொகைகளை மன்ற உறுப்பினர்கள் குறித்த காலத்தில் செலுத்தி ஒத்துழைக்க கேட்டுக்கொண்டார்.

பொருளர் அறிக்கை:
மன்றத்தின் இன்றளவிலான வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.

பின்னர், அண்மையில் விடுமுறையில் தான் தாயகம் சென்றுவந்தபோது, மன்றத்தின் சார்பில் செய்யப்பட்ட செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் அவர் விளக்கிப் பேசினார். மன்ற நடவடிக்கைகளில் - உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் தன்னார்வத்துடன் செயலாற்றி வருவதாகவும், இக்கூட்டத்தைப் பயன்படுத்தி அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

ஒருநாள் ஊதியம் - ஓராண்டிற்கான பங்களிப்பு...
பின்னர், மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கான நிதியாதாரத்தைப் பெருக்கும் நோக்குடன் மன்றத்தின் சார்பில் கடந்த செயற்குழுவில் அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மான முன்வடிவான “ஒருநாள் ஊதியம் - ஓராண்டிற்கான பங்களிப்பு” என்ற செயல்திட்டம் குறித்து மன்ற செயற்குழு இப்பொதுக்குழுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் குறித்த விபரங்கள், இதனால் விளையப்போகும் நன்மைகள் குறித்து, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் விளக்கிப் பேசினார். இது ஒரு விருப்ப அடிப்படையிலான செயல்திட்டம் மட்டுமே என்றும், விரும்பும் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் - நகர்நலப் பணிகளுக்காக தமது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையளிக்க விரும்புவோர், 02.03.2012 வெள்ளிக்கிழமை தினத்தின் தமது ஊதியத்தை, மார்ச் 31ஆம் தேதியன்று (இன்ஷாஅல்லாஹ்) நடைபெறும் மன்ற பொதுக்குழுவின்போது தமது பங்களிப்பாக வழங்கி ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

மருத்துவ உதவி:
பின்னர், மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவ்வகைக்காக ரூ.35,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.

கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்கள் எதுவுமில்லா நிலையில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

தொழுகை மற்றும் இரவுணவு:
பின்னர் மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது. தொழுகையைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி உணவு வழங்கி விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.

இருப்பிடம் திரும்பல்:
இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மாறாத - மறக்கவியலாத நினைவுகளுடன் மன்ற உறுப்பினர்கள் 21.00 மணியளவில் தமதிருப்பிடம் திரும்பினர்.




இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கடற்கரைப் பூங்காவில் சிங்...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [02 February 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16438

" கடற்கரைப் பூங்காவில் " என்ற தலைப்பை பார்த்ததும், சிறு அதிர்ச்சி.. நம்ம ஊர் கடற்கரையில் எங்கு பூங்கா இருக்கின்றது என்று மண்டை குடைச்சல். " சிங்கை கடற்கரை பூங்காவில்" என்று இருந்தால் குடைச்சல் நஹி...

சிங்கை நல மன்றத்திற்கு வாழ்த்துக்கள், கூடுதலாக ஒருநாள் சம்பள திட்டத்திற்கும்.

புதிதாக அங்கு வந்துள்ள சகோதரர்களுக்கு நல்ல, மன நிறைவான வேலை அமைய பிராத்திக்கின்றோம்.

அனைவர்களையும் புகைப்படத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி, என் இதயத்தின் ஒரு பகுதியான என் தங்கை மகளை கண்டத்தில் அதிமகிழ்ச்சி.

தம்பி சிராஜுதீன், ரெம்ப மெலிந்த மாதிரி தெரிகிறாய். நல்ல்ல்..ல சாப்பிடுப்பா.. சவுதி கப்சா/மந்தி சோறு அங்கு கிடைக்கவில்லையோ.அதான் கூட்டத்தில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி என்று கலக்குகிறார்களே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கடற்கரைப் பூங்காவில் சிங்...
posted by Mohamed Salih (Bangalore) [02 February 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 16439

மாஷா அல்லாஹ். மிக அருமயான ஒன்று கூடல் .. என் நண்பர் தைக்கா உமர் எப்படி இருக்க...

புது முகளுங்குக்கு சீக்கரம் வேளை கிடைக்க வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிரேன் .

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மச்சானெப் பார்த்தீங்களா...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [02 February 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 16462

என்ன? இந்த தடவை அரசல் புரசலான ஸாரி...தடல் புடலான விருந்து வைக்கவில்லயா? போன மீட்டிங்க்லெ வெரைட்டி வெரைட்டியா போட்டு அசத்தினீங்களே...?ஓ..ஹோ..அது பொதுக்குழு மீட்டிங்க்லெ மட்டும் தானா?

மச்சான், ஜெக்கரியா, காக்கா, உம்மா, சகோதரி எல்லோரும் நலமா?நான் விசாரிச்சதா சொல்லுங்க! ஓகே!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கடற்கரைப் பூங்காவில் சிங்...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [05 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16543

மம்மாசன்....செய்தியை கொஞ்சம் சுருக்கமாக கொடுக்கக்கூடாதா.....என்ன இம்முறை மட்டன் சிக்கன் அந்த ரோல் இந்தரோல் ..எல்லாம் இல்லையா...மகன் ஜக்கரியாவை வாட விடாதேப்பா...வாடிய மாதிரி தெரிகிறதே...அவனுக்கு மீன்தான் ரெம்ப புடிக்கும்...மீன் மசாலா மீன் ரோஸ்ட் எல்லாம் இலையா.... ?

சரி அடுத்த பொதுக்குழு எப்போ...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved