Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:56:30 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8616
#KOTW8616
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 14, 2012
வளைந்து கொடுக்கனும்னா இப்படித்தானோ?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6188 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் பல பணிகள் நிலுவையில் இருப்பதற்கு முக்கிய காரணமாக - நகர்மன்றத் தலைவர், அலுவலர்களுக்கு வளைந்து கொடுக்காததுதான் என சிலரால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. பல பணிகள் நிலுவையில் இருப்பதால், உறுப்பினர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நேர்மையானவர்கள் என கருதப்பட்ட ஒரு சில உறுப்பினர்களும் கூட, “காரியம் ஆக வேண்டும் என்றால் சில விஷயங்களை கண்டுக்கொள்ளக் கூடாது” என்று கூறத் துவங்கியுள்ளனர். காயல்பட்டணம்.காம் உடன் பேசிய ஓர் உறுப்பினர், “வெளியில் இருந்து திருத்த நினைப்பது எளிது; உள்ளே வந்து பார்த்தால்தான் தெரியும்” என்றார். ஆகவே சில விஷயங்களை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என மேலும் கூறினார்.

காயல்பட்டணம்.காமிடம் ஓர் ஒலிப்பதிவு தற்போது உள்ளது. அதில் காயல்பட்டினம் நகராட்சியின் சில உறுப்பினர்களின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. நடப்பு நிலைமையை தெளிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ள அந்த ஆதாரத்தில் - சில நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

அந்த ஒலிப்பதிவை கேட்க இங்கு அழுத்தவும்.

ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் - கீழே தரப்பட்டுள்ளது:

... அந்த சங்கரே சொல்லிட்டு போறான், கவுன்சிலரையெல்லாம் ஃப்ரீயா உடுங்க. சொன்னானா இல்லையா? ஒங்க முன்னாலதானே? ஆங்...?

நா நிக்கிறேன்... ஆனா வரல்லே... நீங்க கேட்டீங்களே ஏன் வரலேன்னு சொல்லி... அப்பல்லாம் அங்க நிக்கிறேன்... அவங்களையெல்லாம் ஃப்ரீயா உடுங்க... ஏதாவது கெடச்சாதான் அவங்க வந்து ஐக்கியத்துக்கு ஒங்களோட போவாங்க... அதிகாரிகள வந்து... கமிஷனர் அதிகாரிகள வந்து கண்டுக்காதீங்க...

ஸ்பீடு பிரேக்தானே...? நாளைக்கு வரச்சொல்றா... போடுறா ஸ்பீடு பிரேக்க... அதுல ஒரு ஐம்பதினாயிரம் ரூவா செலவழிச்சிட்டு, ஐம்பதினாயிரம் ரூபாய் பாக்கெட்ல வச்சிட்டு போவோம்...

செயல்படும்... செயல்படுற வேலைய பாப்போம்... நம்ம ஒன்னு நடக்கனும். இல்லேன்னு வச்சுக்குங்க ... நம்மளுக்கு கெடைக்கனும், அதுலேர்ந்து நம்ம சின்னச்சின்ன வேலைய பாத்துக்கிட்டா போதும்.

ரெண்டாவது... ஈ டெண்டர்னு ஒன்னு கொண்டு வந்திருக்காங்க... தெரியுமா? அவன் போட்டிருக்கான் நெட்வொர்க்ல...

ஈ டெண்டர்னா என்னா?

ஈ டெண்டர்னா இது எப்டீன்னா.... மொத்தம் - அதாவது இந்தியா ஃபுல்லா எவன் வேணும்னாலும் எடுத்துக்கலாம்... நெட்டு மூலமா

யாருமே துட்ட வாங்காத அளவுக்கு பண்ணனும்னு நெனைக்கிறது பெரிய தப்பு! நீங்க வாங்கலேங்கறது வேறு விஷயம். வாங்கவே கூடாதுன்னு சொல்லி ஈ - டெண்டர் அதுமாதிரி எல்லாம் கொண்டுவரீல. செகண்ட் பைப்லைன் திட்டத்துக்காக வேண்டியே அத கொண்டு வர்றாங்க...

செகண்ட் பைப்லைன் திட்டத்துல ஒரு கவுன்சிலருக்கு இரண்டரை லட்சம் ரூவா... ******

“நாலு லட்ச ரூவாப்பா, போப்பா...”.

இல்லை, அதிகாரி, கீழே இருக்கிற லோக்கல் டிக்கெட் எல்லாம் போனா - பைப் லைனுக்கு மட்டும் - எந்த குறையும் இல்லாம - இரண்டரை லட்ச ரூவா கெடைக்கும். ஆனா அவங்க அதையெல்லாம் ஓய்க்கனும்னு நினைக்கிறாங்க ...

“அதையெல்லாம் அவங்க ஓய்ச்சுருவாங்களா? ...”

இல்லே... அவங்க ஓய்சுடுவாங்க... அவங்க நீ நெனைக்கிற மாதிரி இல்ல... அவங்க வந்து பம்மி பம்மி பேசுவாங்க... நீங்களே பார்த்திருப்பீங்க அனுபவத்துல... ஆறு மாசத்துல...

ஒன்னு சொல்றேன் கேளுங்க... ------... நீ ரெடியா... நான் ஓபனா பேசுறேன் கேளுங்க... அவங்க எல்லா ப்ளானும் பண்ணிட்டு இருக்காங்க... மேல... ஒங்களுக்கு ஒன்னும் தெரியாது ______ அண்ணன் ... ஒன்னும் தெரியாது...

ஒங்களுக்கு ஃபுல்லா டீடெய்ல் ஃபுல்லா எறங்கி நாங்க வந்து... நான் டெண்டர்ல இருக்கிறேன்... ரெண்டாவது இதுவுடைய ஃபுல் டீடெய்ல எடுத்துட்டு இருக்கோம்... இதுவந்து கெடைக்காத அளவுக்கு கொண்டுவறதுக்குதான் இந்த ஈ டெண்டரை எடுத்திருக்கிறாங்க...

பாப்போம்... சாயந்திரம் வரசொல்வோம் ... இதுக்கு என்னான்னு பேசி ஒரு முடிவெடுப்போம்டா மொதல்லே... நம்ம ஏதாவது பார்ப்போம்டா... வருமானம்

அதாவது நாம இப்ப வந்து ... சும்மா சுவர் எண்ணிட்டு இருக்கோம் …. ஆமா... கவுரவம் தடுக்குதுல்லே...?

அதாவது ஃபர்ஸ்டு ******* ******* பூரா நம்மள விட்டு போயிட்டான்... அவரு கவுன்சிலராயிட்டாரு... நமக்கு சாத்தியப்படாது...

அதெல்லாம் இல்ல... நா என்ன தெரியுமா செய்வேன்...? ஆள் வரலேன்னா நானே கச்சை கெட்டிட்டு பாலம் போட்டுறுவேன்... ஆள் வரலேன்னு வச்சிக்கோங்க... கச்சை கெட்டி பாலம் போடுறதுக்கு கவுரவம் தடுக்குது... போயி அவன் வீட்டுல போயி கெஞ்சி கூத்தாடி... “நல்லா இருப்பா... வா ... கூட ஒரு நூறு ரூபாயாவது தர்றேன்னு கூட்டிட்டு வந்து போடுறா ******* ******* அதனால என்ன நடக்கும்? நஷ்டம்... புரிதா? தொழில இருக்கிறதால தொழிலும் பாதிப்பு நமக்கு...

ஏண்டா இதுக்குள்ள வந்தோம்னு ஆயிட்டுது மக்கா இப்போ...?

இப்ப எனக்கு அதெல்லாம் தெரியாது...

நான் நெனைக்கிறேன்... கவுன்சிலர்லாம் ஒத்துமையா இருந்து செயல்பட்டு, எதையாவது சாதிப்போம்... எதையாவது கிடைக்குதான்னு பார்ப்போம் ...


ஒலிப்பதிவை கேட்க இங்கு அழுத்தவும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [14 June 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19324

பதவியேற்பு விழாவில், பிஸ்மி சொல்லி ஆரம்பித்தார்களாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் சொன்னார்களாம்.

“கடவுளை முன்னிறுத்தி” என்ற பதவியேற்பு வாசகத்தைக் கூட, “அல்லாஹ்வை முன்னிறுத்தி” என்றெல்லாம் சொன்னார்களாம்.

இதையெல்லாம் இதே காயல்பட்டணம்.காம் தான் புல்லரிக்கச் செய்யும் வார்த்தைகளால் செய்தியாகத் தந்தது. அப்போது நாங்கள் நினைத்தோம், ஆகா, நம்ம நகராட்சிக்கு நல்ல காலம் பொறந்திடுச்சின்னு!

அந்த ஸலாமும், பிஸ்மியும், “அல்லாஹ்வை முன்னிறுத்தி”யும் லட்சங்களைக் கணக்குப் போட்டு லட்சியங்களை குழிதோண்டிப் புதைப்பதற்குத்தான் என்பதை அறியும்போது இவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களும், இவர்களுக்குத் துணை நிற்பவர்களையும், இயக்குபவர்களையும் பெரியவர்கள் - மனித நேயர்கள் என்று கருதியதற்கும் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும். (அட்மின் அவர்களின் கத்தரியைக் கருத்தில் கொண்டே நான் அடக்கி வாசிக்கிறேன்.)

“யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் தலைவி”. இது பெரும்பாலான உறுப்பினர் புண்ணியவான்கள் ஓயாமல் செய்யும் ஒப்பாரி.

தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும், சந்திக்கும் ஒவ்வொரு அதிகாரி குறித்தும், நடத்தும் ஒவ்வொரு கூட்டம் குறித்தும் அனைத்து உறுப்பினர்களின் மொபைல் ஃபோனுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி - இதற்கு முன்னிருந்த எந்தத் தலைவரும் செய்யாத (யாரையும் குறை சொல்வதற்காக நான் சொல்லவில்லை) வழிமுறைகளையெல்லாம் கையாண்டுள்ளார் தலைவி அவர்கள் என்றுதான் நாங்கள் கேட்டறிந்துள்ளோம்.

அழைத்த அழைப்பிற்கு பதிலும் அளிக்காமல், தான் செய்ய வேண்டிய பணிகளையும் செய்யாமல், தனித்தனியே ரகசிய கூட்டம் போடும் - ஊரைக்காக்க வந்த உத்தமர்களே...! நீங்கள்

உங்கள் கூட்டத்தில் நகரின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க என்ன பேசினீர்கள்?

தெரு விளக்கு பராமரிப்பை சரிசெய்ய என்ன முயற்சி எடுத்தீர்கள்??

குப்பைகளை அகற்ற என்ன முயற்சி எடுத்தீர்கள்???

இந்த ஊரின் மனித வளத்தை பயனுள்ள வகையில் அமைத்திட நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

“நாங்கள்லாம் கவுன்சிலர்கள்தான், தலைவிதான் செய்ய வேண்டும்” என்று அப்போது மட்டும் வாய் கிழிய கூறும் நீங்கள், இதற்கெல்லாம் இந்தத் தலைவி முயற்சி எடுத்தபோது ஊர் நலனுக்காக ஒத்துழைக்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை????

எடுத்ததற்கெல்லாம் “மனிதநேயர்”களிடமிருந்து உத்தரவை எதிர்பார்க்கும் கவுன்சிலர் கனவான்களே! ஊர் மக்களின் உத்தரவை மதிக்கப்போவது எப்போ?

தொழிற்சாலையில் போய் மதிய உணவு அருந்திவிட்டு வரவே உங்களுக்கு நேரம் போதவில்லையே? பின்னே மக்கள் நலனாவது மண்ணாங்கட்டியாவது!

அட்மின் அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்: வழமைபோல இதையும் கத்தரி வைத்து விடாதீர்கள்! நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. ஓட்டுப்போட்டதன் மூலம் என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டவனாக மாறிவிடக் கூடாதே என்ற மன விரக்தியில்தான் இதனை எழுதியுள்ளேன். என்னைப் போல எத்தனை பேர் உள்ளனரோ அல்லாஹ் அறிவான்.

ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். நாங்கள் இருப்பதுதான் வெளிநாட்டிலேயே தவிர, பிறந்த மண்ணின் தினசரி நடவடிக்கைகளை அவ்வப்போது கேட்டறிந்துகொள்ளத் தவறுவதில்லை.

எனவே, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதையும், ஒத்துழைக்காமலேயே குறை சொல்வதையும் இனியும் சிலர் வழமையாகக் கொள்வார்களானால், அதை இந்தத் தளம் அவர்களின் கருத்துச் சுதந்திரம் என்று வெளியிடுமானால், ஒவ்வொரு உறுப்பினரும் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன? அவற்றை நிறைவேற்றாத நிலை என அனைத்தையும் ஆதாரத்துடன் பட்டியலிட தயாராக உள்ளேன். தயவுசெய்து அதற்கு இடமளிக்க வேண்டும் என உங்களை அன்போடு வேண்டுகிறேன்.

மக்கள் நலனுக்காக இதனைச் செய்வீர்கள் என்று நம்பி காத்திருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by HASAN JAFFER (Khobar) [14 June 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19325

இது ஒரு சரியான முன்னுதாரமாக இல்லா விட்டாலும் காயல்பட்டணம்.காம் க்கு தைரியம். நல்லவர்களும் ஊர் ஒற்றுமை, எதாவது நடக்க வேண்டும் , தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்க்காக சோடை போய் விடிகிறார்கள்.

அல்லாஹ் நம் அனைவரயும் இது போல தருணத்தில் பாதுகாக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by P.S.ABDUL KADER (jeddah) [14 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19328

நமது நகரமன்ற ஆண் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கல்உப்பு, வாய்மொழி, பதவி ஏற்பின்போது லஞ்சமே வாங்க மாட்டேன் (இறைவன்/அல்லாஹ்) மீது சத்தியம் என்று பொய் வாய்மொழி ஏட்டு இருக்கிறார்கள். உருபடாமல் போக.

நகர மன்ற தலைவி பெண் ஆக இருப்பதால் இந்த கொள்ளையர் எல்லாம் (ஆண் உறுப்பினர்கள் அனைவர்களும்) வளைத்து போட வழிதெரியாமல் 6 மாத காலமாகியும் ஒன்றுமே சம்பாதிக்க முடியவில்லையே என்ற புலம்பலில் இரு வார்டு உறுப்பினர் கலந்து உரையாடி இருக்கிறார்.

பொதுவாழ்வு,சமூக சேவை என்று பகுதி மக்களிடம் வாக்குகள் வாங்கி விட்டு,மக்களின் பணத்தை தவறுதலாக சூறையாட நினைபதைவிட புத்திசாலித்தனமாக உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்துவிட்டு ஒதுங்குவது நல்லது. லஞ்சத்தை எதிர்பார்த்து நகரமன்ற பதவியில் நீடிக்க நினைத்தாள்,வாக்களித்த மக்களைவைத்து அடையலாம் கண்டு உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்ய வைப்போம்.

தமிழகத்தில் முந்தைய ஆட்சி போல இருக்காது, மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மக்களளுக்கு எதிராக வளைதுபோட நினைக்கும் கயவர்களை அடையலாம் கண்டு கம்பி என்ன கூண்டில் அடைக்க காத்துஇருக்கிறார்கள் என்பதை உறுப்பினர்கள் நன்கு உணறும்படி வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கேள்க்கிறவன் கேணயனா இருந்தால்...... கேள்விரகிலும் நெய்வடியுமாம்..!!!
posted by s.s.md meerasahib. (riyadh) [14 June 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19330

காயல் என் அன்பு சகோதரர்களே.......... பழைய காமெடிகளை அரங்கேற்றுகிறார்கள். ஆறுமாத காலமாக அடிப்படையே........ இல்லாமல் நடக்கும் நகர்மன்றத்தை விமர்சிக்க தெரியாத்த இந்த இணையதளம். உறுப்பினர்கள் சரியில்லை என்பதை சூசகமாக சொல்கிறார்களாம். இனி ஒரு கிளிப்பை போட்டு அதிகாரிகள் சரியில்லை என்பார்கள்...... மேலும் ஒரு கிளிப்பை போட்டு நகர் மக்களே...... சரியில்லை என்பார்கள். ஆக மொத்தத்தில் விமர்சிக்கத்தான் காலம்கள் செல்லுமே தவிர காயலுக்கு காரியம் ஆகப்போவது இல்லை என்பது உறுதியாகின்றன. என்னை பொறுத்தவரை இந்த இணையதளம் நகர்மன்ற செய்தியை சிறிதுகாலம் தவிர்த்தாலே............ நகர்மன்றம் சீராக நடக்கும் என்பது உறுதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எட்டப்பர்கள் இருக்கும் வரை இப்படித்தான் கெட்டுக்குட்டிச் சுவராகும் நகர்மன்றம்...! வச்சுடாங்கய்யா...ஆப்பு...!!!
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [15 June 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19331

இந்த உரையாடலின் இரு குரல்களும் யாரென்று தெரிந்து விட்டது. இவங்களுக்கு ஓட்டுப்போட்ட அத்தனைபேருக்கும் லாலிபாப் கொடுத்துட்டானுங்க.

இப்படி பட்ட உத்தமர்கள் உள்ளே இருக்கும் போது பரிசுத்தமனதுடன் ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் தலைவிக்கு அனுபவம் போதாதுன்னு சொல்லும் கருத்தாளர்களே இப்ப என்ன பதில் சொல்லுறீங்க?

போறவங்கெல்லாம் புதையல் எடுக்குறீங்க! இதுக்குத் தானா தேர்தல்லெ அடிச்சிக்கிட்டு செத்தீங்க? தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்னு கேள்விப் பட்டிருக்கோம். இவர்கள் தேன் அடையையே ஆட்டையைப் போடுற கூட்டம்.

இப்ப தெரியுதா? மீடியான்ன வெளக்கெண்ணெய் இல்லைன்னு! கண்னில் என்ணெய்யை ஊத்திக்கிட்டு சுத்துறாங்க! நிம்மதியா நீங்க தூங்கக் கூட மாட்டீங்க! இப்படி ஈனங்கெட்டப் பொழப்பு நடத்துறதை விட கையேந்தி பிச்சை எடுத்தால் கூட அதில் ஒரு கவுரவம் இருக்கு!

இதை விடத் தரக்குரைவாக விமர்சித்தால் கருத்துப்பேழையின் கன்னியம் கெட்டுவிடும். எப்படியும் தொலைஞ்சு போங்க! அல்லாஹ் அனைத்தையும் நன்கு அறிந்தவன். தப்பு செஞ்ச யாரும் தப்ப முடியாது.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வீடியோவாக இருந்திருந்தால் திருமுகத்தை (?) பார்த்திருக்கலாமே!!
posted by Salai. Mohamed Mohideen (USA) [15 June 2012]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 19333

"சிறிதும் வளைந்து கொடுக்காத காரணத்தால் தான் நம் நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெரும்பாலும் செயல்வடிவம் பெறாதமைக்குக் காரணம்" என்று ஹக்கை உரைத்த அந்த சகோதரரின் மனக்குமுறல்கள் 'ஆடியோ'வாய் ஆதாரத்துடன் இங்கே ஒலிக்கிறது. பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்பார்கள்... அதற்க்கு இவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன???.

'வல்ல இறைவனை' துணைக்கு அழைத்து அவனையே சாட்சியாக கொண்டு 'லஞ்சமே வாங்க மாட்டேன்' என்று தன் நாவினால் சொன்னவர்கள்... அதை சொல்லும்போது 'ஈமான்' மனதளவில் இல்லாமல் வெறும் வாயளவில் சொல்லிவிட்டார்களோ என்றே நினைக்க தோணுகின்றது.

மாற்று மத கவுன்சிலர்களுக்கு ஒரு முன் உதாரணமாய் இருக்க வேண்டிய தீனுல் இஸ்லாத்தின் சொந்தக்காரர்களாகிய இவர்களே இப்படி இருந்தால்??? தவறான வழியில் பணம் தேடும் இப்பேராசை... ஈமானை கூட திண்டுவிடும் என்பது இவர்கள் விசயத்தில் தெள்ள தெளிவாக தெரிகிறது. பெரும்பாலானோர் 'விலை' போய்விட்டார்கள் என்பதனை தெள்ளத் தெளிவாக உணர முடிகின்றது. ஒன்றிரண்டு பேர் கூட தேறுவார்களா என்று கூட சந்தேகம். இவர்கள் நேர்வழி பெறவேண்டுமெனில்... இவர்களின் தாய் / மனைவி / மக்கள் தான் சொல்லி திருத்த வேண்டும். இறைவன் தான் இவர்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க வேண்டும்.

விவேகமும் வேகமும் நிறைந்த நகரமன்ற தலைவர் கிடைத்தும் காயலுக்கு விமோச்சனம் இல்லையா?. நமதூர் மக்கள் எல்லா வளமுடனும் நலமுடனும் வாழ வேண்டும் என்று வெளியூரில் / வெளிநாட்டில் வாழும் நாம்... அல்லும் பகலும் அதே சிந்தனையிலும் காயல் நல மன்றங்களை தோற்றுவித்து நம்மால் முடிந்த அளவுக்கு உதவியையும் செய்து வருகின்றோம். ஆனால் இவர்கள் 'நோகாமல் நொங்கு தின்பதோடு' நில்லாமல் நமதூருக்கு கிடைக்க வேண்டிய நல்ல பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாய் ... சுரண்டி கொழுக்க நினைக்கிறார்கள்.

தலைவியின் செயலை முடக்க 'பண பலம் கொண்ட முதலைகளின்' அசூர பலத்தை (துணை) கொண்டு முறி அடிக்க பெரிய சதியே நடக்கின்றது என்று பல கமன்ட்களை படித்த பொது உணர முடிகின்றது. பெண் என்பதினால் மிக இளக்காரமாக கூட இவர்கள் நினைக்கலாம். நேரடியாகவும் மறை முகமாகவும் இதனை காட்ட முயற்சிக்கலாம். ஊரை அடித்து உலையில் போட நினைக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் ஊரில் உள்ள நல்லவர்கள், சமூக ஆர்வலர்கள், ஒட்டு போட்ட பொது மக்கள் ...ஏன் ஒட்டு மொத்த காயலுமே (உள் நாடு / வெளி நாட்டு காயர்கள் என ) அநியாயக்காரர்களுக்கு பாடம் கற்பிக்க தவற மாட்டார்கள் மற்றும் அதற்காக நமது இணையதளமும் துணையாக நின்று போராடும் என்ற நம்பிக்கை உள்ளது.

இது போன்ற விசயத்தில் தேர்தலின் போது ஏற்பட்ட ஒரு சில சம்பவங்களை மனதில் வைத்து கொண்டு தலைவியின் மீது உள்ள அதிருப்தியை மனதில் வைத்து கொண்டு இது போன்றவர்களுக்கு நம் சகோதரர்கள் யாவரும் ஒரு காலும் துணை போக மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

காயலுக்கு விடியலே நமது ஒற்றுமையிலும் சகோதரத்துவத்திலும் தான் இருக்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by MAK.JAINULABDEEN (kayalpatnam) [15 June 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 19334

அஸ்ஸலாமுஅலைக்கும். ஆமாமா, நகர்மன்றத்துல தலைவியை தவிர எல்லாருமே கெட்டவங்கதான். தலைவிக்கு ஒத்துழைப்பே கொடுக்க மாட்டிகிறார்கள். என்ன செய்ய? நாம் கண்ணாடியைப் போன்ற பளிச் என்று தெரியக்கூடிய தெளிவான நகர்மன்றதை கொடுப்போம். ஊரில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டும்போதும், ஆடியோ கிளிப்பை வெளியிடும்போதும் மட்டும் நாம் நமக்கு தேவையானதை மட்டும் வெளியிட்டு, நமக்கு பாதகமானதை வெளியிடாமல் மறைத்து வைப்போம். இதுதான் tranferencykku அர்த்தம். பார்க்கக்கூடியவன், கேட்கக்கூடியவன்லாம் முட்டாள்கள். நாம்தான் அறிவாளிகள்.

அட்மின் அவர்களே, வழமை போல் இதையும் செய்திக்கு தொடர்பில்லை என்று தானே சொல்லப்போகிறீர்கள். சூழ்ச்சியாளனுக்கேல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ் ஒருவனே.அதை நீங்கள் எப்போதே மறந்து விட்டிருப்பீர்கள்.அதுதான் நான் நினைவுபடுத்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இந்த நிலை நம்மூரின் சாபக்கேடு
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) [15 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19335

இந்த நிலைக்குதானா நாம் இவ்வளவு பாடுபட்டு தேர்தல் களத்தில் உழைத்தோம்.ஒரு மாற்றம் அது ஊழலற்ற நிர்வாகமாக இருக்கவேண்டும் என்று நம் உடல், பொருள் , ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய முன் வந்து பெரிய பெரிய சக்திகளையும் எதிர்கொண்டு, பலபேர்களின் பகமைக்குகூட பலியாகி, இனி காயலுக்கு ஒரு விடிவு காலத்தை உருவாக்குவோம் என்ற முயற்சி, இனிமையான கனவு இவ்வளவு சீக்ரத்தில் கானல் நீராய் கரைபுரண்டு ஓடுகின்ற வேதனையான நிலையை நினைக்கும் பொழுது.

இந்த நகராட்சியை எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர வேறு எவராலையும் திருத்தவும் முடியாது செம்மையாக நிர்வக்கிக்கவும் முடியாது!

தயவு செய்து எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் சாடி அவர்தான் அதற்கு மூலகாரணம் என்ற பழிசொல்லை நிறுத்திகொள்ளுங்கள். சாக்கடையில் எத்தனைகள் புரண்டு சுகம் காண துடிக்கிறது என்பதுதான் இப்போதைய நிலைமை.

இந்த இழிவானவர்கையும் தாண்டி ஏதாவது ஒரு நன்மை நகராட்சியின் மூலமாக நமக்கு கிடைத்தால் அது நாம் செய்த புண்ணியமே.

இதை தவிர வேறு விசேசமாக எதையும் எதிர் பார்க்காதீர்கள் என்ணருமை காயல் கண்மணிகளே !

இந்த நிலை நம்மூரின் சாபக்கேடு இந்த கேடுகட்ட நிலையை இறைவனை தவிர வேறு யாராலும் மாற்றமுடியாது.

அல்லாஹ அனைத்தையும் அறிந்தவன்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by hylee (kayalpatnam) [15 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19337

வீடு வரை உறவு,
வீதிவரை மனைவி,
காடு வரை லஞ்சம்,
கடைசி வரை யாரோ?

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by Nafeela (Bangkok) [15 June 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 19338

இவங்கள மாதிரி இன்னும் யார்லாம் இருக்காங்களோ ?

இதையெல்லாம் ஊர்டிவி சேனல் ல போடுங்க அப்பதான் இவங்களுக்கு ஓட்டு போட்டவங்களுக்கு தெரியும்.

அந்த பணத்துல சாப்பிட்டா எப்படி தான் செரிக்கிதோ தெரில.

பதவி ஏற்பு விழா CD மறுபடி போட்டு காமிங்க அப்பவாச்சும் திருந்துவாங்களா தெரில திருந்தலேன இவங்கள என்னனு சொல்றது ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [15 June 2012]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19339

அஸ்ஸலாமு அலைக்கும்.

'''''''''''''''''''''''' வளைந்து கொடுக்கனும்னா இப்படித்தானோ? என்பது தங்கள் ஒலிப்பதிவின் மூலம் நாங்கள் முழுமையாக அறிந்து கொண்டோம். எப்படி இந்த இரு உறுப்பினர்கள் தைரியமாக உரையாடுகிறார்கள். கேட்கவே மனதுக்கு சங்கடமாகவும் / வெட்கமாகவும்.... இருக்கிறது.

நாம் எப்படி இவர்களை மலை போல் முழுமையாகவே நம்பி கொண்டு இருகிறோம். ஒன்றுமே நமக்கு புரியவில்லை.நாம் நம் நம்பிகையை இழந்து விடுவோமோ .....

நம்மை பழைய 5 வருடத்தை போலவா இவர்கள் ( உறுப்பினர்கள் ) கொண்டு செல்ல நாம் தேர்தல் நேரதில் கஷ்ட பட்டோம். பழைய 5 வருடத்தை நாம் நினைத்து பார்க்கவே மனசு கூசுகிறது அப்பா....அப்பப்பா ......

இந்த தலைவி நம் ஊருக்கும் & நம் மக்களுக்கும் இந்த 5 வருடதில் நல்லதை செய்யணும் ( சாதிக்கணும் ) என்று துடிப்போடு உள்ளார் .தயவு செய்து சக உறுப்பினர்களும் சரி / நிர்வாகத்தில் உள்ளவர்களும் சரி தலைவியை தொந்தரவு பண்ணாமல் ..... PLZ தலைவிக்கு முழு ஒத்துளைப்பு கொடுத்தால் நல்லது .

மாண்புமிகு நம் உறுப்பினர்கள் நம் மக்களையும் சரி / மக்கள் வரி பணத்தையும் சரி ...... சீண்டாதீர்கள். PLZ நீங்கள் மக்களோடு விளையாடாமல் செயல் ஆற்றிகொள்ளுகள். மக்கள்ளாகிய நாங்கள் தலைவி & உறுப்பினர்கள் ஆகிய உங்களைதான் முழுமையாக நம்பி உள்ளோம். எங்களுக்கு நீங்கள் துரோகம் பண்ணாதிர்கள். அப்புறம் மக்கள் ஆகிய நாங்கள் ஆயுளுக்கும் உங்களை மறக்கவும் மாட்டோம் /மன்னிக்கவும் மாட்டோம் .

ஓர் உறுப்பினர் கூறியது போன்று நாம் “வெளியில் இருந்து திருத்த நினைப்பது எளிது அல்ல ... உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும்” என்பதும் சரியானதுதான்.

ஆனால் ஓரு பல மொழி சொல்வார்களே ..... கிணறு வெட்ட போய் .... பூதம் ..... கிளம்பிய கதையாகி விட கூடாதே.... என்று தான் மக்களுக்கு கவலையாக ( பயமாக ) உள்ளது.

அந்த ஒலிப்பதிவில் உரையாடிய அந்த உறுப்பினர்கள் யார் ???? என்று நமக்கு தெரியாமல் இருப்பதுதான் நம் யாவர்களுகும் ரொம்ப நல்லது . வஸ்ஸலாம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by sulaiman (abudhabi) [15 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19340

அஸ்ஸலாமு அழைக்கும், இப்பொழுது இந்த எலிக்கு வச்சபொறி, பெரிசாளிக்கு வைத்தால். பெரிசாளியும் சிக்கும்.

பதவியை வைத்து தவறாக பணம் சம்பாதிக்க முயற்சி செய்பவர்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. நகராச்சி மாற்றத்தினால் ஊரில் தேனாரும், பாலர்ரும் (உதாரணம்) ஓடும் என்ற ஒரு மாயை ஏற்படுத்தினார்கள்,

நான் சமிபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன், ஒரு மாற்றமும் இல்லை. தண்ணீர் பிரச்னை, தெருவிளக்கு பிரச்னை ,குப்பை,கூலம் பிரச்னை, இவைகள் அப்படியேதான் இருக்கிறது,

ஊரில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இப்பொழுது பணம் சம்பாதிக்கிற முடிவுக்கு வந்திருகிறார்கள். நகராச்சி தேர்தல் களத்தில் வலைதளமும், தேர்தல்காக முளைத்த அமைப்புகளும் போடுற ஆட்டங்களையல்லாம் போட்டுவிட்டு. இபொழுது மக்களின் முன்னால் தலைகுனிந்து நிக்கவேண்டியது வரும் என்பதை உணர்ந்து ஒதுங்க நினைகிறார்கள்.

"இதுதான் சாத்தான் வேதம் ஒதுகிறதோ?"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by A.Lukman (kayalpatnam) [15 June 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 19345

அஸ்ஸலாமு அழைக்கும்

சில கவுன்சிலர்களின் உரையாடல் கேட்டேன். மிகவும் அருவருக்ககூடிய அநாகரீகமான செயல். அவர்கள் யார் என்பதை தைரியத்துடன் வெளிப்படுத்துங்கள். கமண்ட்ஸ் எழுதுபவர்கள் அப்போது தான் அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வார்கள். இல்லைஎன்றால் தங்கள் மனதுக்கு தோண்டுபர்களை எல்லாம் சந்தேகககன்கொண்டு பார்த்து பாவத்துக்கு ஆலக நேரிடும் .

என்னை பொறுத்தவரை இப்போதும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன் பதவியேட்ட நாள் முதல் இன்று வரை நான் லஞ்சம் வாங்கியதும் இல்லை. அல்லாஹ்வின் ஆணையக இனி வாங்கப்போவதும் இல்லை. என் மீது யாரவது பஹிரங்க குற்றச்சாட்டு சுமத்துவதற்கு தயாராக இருந்தால் அவர்களுடன் முபாஹல செய்ய தயாராகே இருக்கிறேன். என்னை பற்றி வல்ல அல்லாஹ் நன்கறிந்தவன் .

லுக்மான்
1வது வார்டு கவுன்சிலர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நெஞ்சு பொறுக்குதில்லையே.............
posted by musthak ahamed (goa) [15 June 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 19354

யு டூ .................

நான் கணித்தது சரியாக இருந்தால் ...........
பெரியவர்களை எல்லாம் எதிர்த்து ஆதரித்தது
....................அருவெறுப்பாக இருக்கிறது..........
உன் குரலை கேட்டுக்கொண்டுதான் கண்ணீரோடு இதனை எழுதுகிறேன்.

ஹக்கு சுடும் என்று கேள்விபட்டிருக்கிறேன்.............
ஆனால் இங்கு ஹக்கே ........தன்னை தானே சுட்டுகொண்டிருக்கிறது.......

வெரி சாரி சுல்தான் காக்கா.( ஆதம் சுல்தான் காக்கா)

வெரி சாரி செய்யத் காக்கா (மாஷா அலலாஹ்)

வெட்கத்துடன்,
முஸ்தாக் அஹ்மத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by Firdous (Colombo) [15 June 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19357

என்றைக்கு துணைத்தலைவர் தேர்தலில் கைஎந்தினர்களோ அன்றைக்கே செய்த சத்தியத்தை, அல்லாஹிவின் மீது ஆணையிற்று கூறியதை தோண்டி புதைத்துவிட்டார்கள்! போன நகர்மன்றத்தில் மனிக்கவும் நாறிய மன்றத்தில் மீடியாவின் தலையீடு இல்லாததால் நாற்றம் காற்றோடு கலந்தது. அதுவும் சகோ. திருதுவராஜ் என்ற புண்ணியவனால் சில வெளிவந்தது (டெர்ம் முடிந்த தருவாயில்) . இப்பொழுது மீடியாவின் ஆதிக்கம் இருப்பதால் விஷயங்கள் உடனுக்குடன் வெளிகொணரபடுகிறது.

என்னதான் உண்மையை வெளிகொனர்ந்தாலும், கவுன்சிலரே இலஞ்சம் வாங்கியதை ஒத்துக்கொண்டாலும், இன்னும் கண்களை மூடிகொண்டிருக்கும் பூனைகள் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றன. இன்னும் அதே பழைய பல்லவி "ஊர் பெரியவர்களை மதிக்கவில்லை" என்பது கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

காயல் அட்மினுக்கு: என்னதான் நீங்கள் ஆதாரத்தோடு வெளியிட்டாலும் நாங்கள் நம்புவதும், நம்பாததும் எங்கள் உரிமை. நீங்கள் என்ன பெரிய அப்படக்கர் விக்கிலீக்சா? Tehelka வீடியோ ஆதாரத்தை கொண்டே பெரிசா சாதிக்க முடியலே! உங்களுடைய ஆடியோ ஆதரத்தையா ஏற்றுக்கொள்வார்கள்!

லுக்மான் காக்கா, இதை கேட்டவர்கள் பெரும்பான்மையோருக்கு யார் என்பது தெரிந்திருக்க கூடும். உங்களுக்கும் கூட. நீங்கள் சத்தியம் செய்தது போல் மற்றவர்களும் சத்தியம் செய்யட்டும். குட்டு வெளிப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இதயத்தில் ஈரம் வேண்டும்!
posted by kavimagan kader (qatar) [16 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19360

இந்த ஒலிநாடா எனக்குள் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை! காரணம், இவர்களை எப்படியும் வழிகேட்டில் ஆக்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள், ஒரு சில பணக்காரர்களும், அரசியல் வாதிகளும்தான். இப்படிப்பட்டவர்களை, பொதுமக்களே கிளர்ந்து முற்றுகை இடப்போகும் காலம், இறையருளால் வெகுவிரைவில் ஏற்படும்.

நான் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைவது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று கருத்து விதைக்கும் அபுதாபி சகோதரர் சுலைமான் போன்றவர்களை எண்ணும்போதுதான்.

யார் வெட்கப்பட வேண்டும்? பல்வேறு இழப்புகளுக்கு மத்தியில் நகருக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக இயக்கம் ஆரம்பித்து, தேர்தல் காலத்தில் ஊருக்கு உழைத்து, உண்மையை நிலைநிறுத்தப் பாடுபட்டவர்களா? அல்லது எனது ஊரும், ஊர்மக்களும் எப்படிப்போனால் எனக்கென்ன என்று தன்னலமாய் வாளாவிருந்தவர்களா? சிந்தித்து எழுதுங்கள் தோழர்களே!

சில பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் போடும் கூத்துக்களை ஊடகங்களும், நல்லவர்களும் ஆதாரங்களுடன் பகிரங்கமாக வெளிப்படுத்தியபோது வாய் மூடி மௌனியாக இருந்து விட்டு, இப்போது மட்டும் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய காலம் விரைவில் வரும்.

பணக்காரர்கள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடும் சகோதரி ஆபிதா மற்றும் அவருக்குத் துணைநிற்கும் ஹாஜி.லுக்மான் காக்கா, சகோதரி முத்து ஹாஜரா போன்றவர்களுக்கு வல்ல இறைவன் வலிமையைத் தருவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. எவனும் யோக்கியன் அல்ல.என்ன பாடுபட்டு ஜெய்ச்சிருக்கேன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam) [16 June 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 19361

நான் தவறிலைத்ததை நிரூபித்தால் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லவில்லை, "முபாலா" செய்கிறேன் என்று சொல்லும் உண்மையான ஈமானுள்ள முஸ்லிம் லுக்மான் அவர்களைப்போல் மற்றைய உறுப்பினர்களும் முன் வருவார்களா?

ஊர்வீதிஎங்கும் ஒவ்வொருவரின் வாயில் இருந்தும் வரும் வார்த்தைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறது!

நாமும் லுக்மான் மாதிரி சொல்லி நம்மை தூய்மைபடுத்த முன்வருவோமா? என்று சிலர் வந்தாலும் வருவார்கள் என்று என் நண்பன் சொல்கிறான். அவன் நம்பிக்கை எத்தனை நாள், மாதம், வருடம் என்று எதிர்பார்போமாக!

தம்பி முஸ்தாக்கே, நான் 10 வது வார்டில் மாஷா அல்லாஹ் செய்து காக்கா அவர்களுக்காக அவர்களின் கொடைத்தன்மை, இபாதத்து, நேர்மை, எந்த பிர எதிர்பார்ப்புக்கும் ஆசைக்கும் அவசியமில்லா வசதி வாய்ப்பு, தன் சொந்த இடத்தில் சொந்தமாக பள்ளிவாசல் கட்டி தன் சொந்த செலவிலேயே பரிமாரிக்கும் மார்க்க பற்றுள்ள ஒருவரை தேர்தெடுங்கள் என்றுதான் சொன்னேனே தவிர எதிர்த்து நின்ற எவரைப்பற்றியும் சொல்லவில்லை.10 வது வார்டு மக்களை அல்லாஹ் காப்பாற்றுவானாக!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by Samu (Dxb) [16 June 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19365

இந்த ஆடியோ ஆதாரத்தை வைத்து சம்பதபட்டவர்க்கள் மேல் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியுமா அல்லது PIL ஏதும் போட முடியுமா என்று யோசிப்பது நல்லது. இவர்களுக்கு கிடைய்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by sulaiman (abudhabi) [16 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19374

அஸ்ஸலாமு அழைக்கும், சகோதரர் கவிமகன் காதர் அவர்களே!

நான் ஒன்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துசொல்லவில்லை. நகராச்சி மாற்றம் ஏற்பட்டு எட்டு மாதகாலம் ஆகிறது. இந்த எட்டு மாதத்தில் நகராச்சி பணியென்று எடுத்துகொன்றால் ஊரில் ஒரு மாற்றமோ ,முன்னேற்றமோ இல்லை.எல்லா பிரச்சனைகளும் அப்படியேதான் இருக்கிறது.

நான் ஊருக்கு சென்று இருக்கும்போது இவைகளை கவனித்தேன். நகராச்சி தலைவி சகோதரி ஆபிதா அவர்களின் நிர்வாக முறையை கவனித்தால் நம்மக்கு முகசுழிப்பும், பெரும் எமற்றமும்மே ஏற்படுகிறது

ஆக யார் ஊர்நலன்னில் அக்கறை இல்லாதவர். சகோதரி ஆபிதா அவர்களை வெற்றி பெறவைப்பதுக்காக நீங்களும் இந்த இணையதளமும் எத்துணை முனைப்புடனும், வீரியத்துடனும் பிரசாரம் செய்தீர்கள். இபொழுது நகராச்சி பணியை எதிர்த்தோ, சகோதரி ஆபிதா அவர்களின் நிர்வாக குளறுபடிகள், இவரால் நகராசிக்கு ஏற்பட்ட பண இழப்பை பற்றியோ, இன்னும் இவரால் ஏற்பட்ட இழப்புகளை பற்றியோ ,இவரின் பகட்டு எண்ணத்தை பற்றியோ ,நீங்களும், இந்த இணையதளமும் கண்டித்து மக்கள் முன்பு எடுத்து சொன்னீர்கலா? ஆதரித்து பிரசாரம் செயும்போது இருந்த்த அந்த முனைப்பும் ,வீரியமும் தவறை சுட்டிக்காட்ட முன்வரவில்லையே ஏன்?

தான் போகிற இடமெல்லாம் போட்டோக்கு போஸ் கொடுத்து அதை இணையதளத்தில் போட்டு அழகுபார்பதா வெளிபடையான நிர்வாகம்? பக்குவம், ஆழ்ந்த நிர்வாக சிந்தனை ,சக உறுபினர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பது இவைகள் வெளிப்படையான நிர்வாகமா? நம்முடைய பிள்ளைதானே என்று செய்கிற தவறையெல்லாம் கண்டிக்காமல் கண்டும் காணாததுபோல இருந்தால் .நாளடைவில் அந்த பிள்ளை தறுதலை பிள்ளையாகி விடும் சகோதரர்களே.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by Salai S Nawas (singapore) [17 June 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 19375

அட பாவி, நீயா நீயா நீயா?

நீ தோண்டிய குழியில் நீயே புதைந்து போகணும்னா லஞ்சம் வாங்கு.....

வரும் பொது நிறைய வருகிற மாதிரி இருக்கும், ஆனா போகும் பொது சுனாமி மாதிரி இருக்கிறதையும் எடுத்துட்டு போய்டும்.

இது ஒரு புறம் இருக்க, ஒரு கூட்டம் திரி ஏற்றி விடுவதற்கென்றே அலைகிறது. புனைப்பெயர்களில் கட்டுரை எழுதவும் துவங்கியுள்ளது.

இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்காமல், என் கடமை பனி செய்து கிடப்பதே என்று வீறு நடை போட்டு வருகிறார் நகராட்சி தலைவி.

மற்றவர்கள் நமக்கு கெட்டது செய்தாலும் நாம் நன்மையே நல்குவோம்.

- மண்ணின் மைந்தன்

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. குறைந்தபட்ச நாணயம் வேண்டும்!
posted by kavimagan kader (qatar) [17 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19394

சகோதரர் சுலைமான் அவர்களே!

எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எழுதுகின்றீர்கள் என்ற எனது குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக, நகர் மன்றத் தேர்தலில், ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்ததாக ஒரு பச்சைப் பொய்யை எழுதியுள்ள நீங்கள், அதனை நிரூபித்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். தவறினால், இந்த தளத்தின் மூலம் வருத்தம் தெரிவிக்கும் குறைந்த பட்ச நாணயமாவது உங்களிடம் உண்டா என்பதனை உங்கள் பதில் மூலம் கூறவேண்டும்.

சுனாமி குடியிருப்பு பிரச்சனையில் துரோகம், பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் துணைத்தலைவரின் செக் மோசடி, இல்லாத கட்டிடத்திற்கு வாடகை, வேலையே செய்யாத பலருக்கு சம்பளம், நகராட்சியின் பணத்தை வட்டிக்கு விட்டது, இன்றைய துணைத் தலைவர் தேர்தலில் லட்சக்கணக்கில் பணம் கைமாறிய மனிதநேயம், ஆண்டுக்கு நான்குமுறை கூட நகராட்சிக்கு வராத நல்ல தலைவர்கள், ஊடகங்களும் அறிந்து கொள்ள முடியாத பலவித ஊழல்கள் என்று மெகா ஆதாரத்துடன் நிரூபித்த பல்வேறு குற்ற்ச்சட்டுகளின் அணிவகுப்பினைக் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் வாய்மூடியிருந்த நீங்கள்,எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இலாத ஒரு தலைவரை அப்பட்டமாக விமர்சிப்பது,உங்களது காழ்ப்புணர்ச்சியே அல்லாது வேறென்ன?

சென்னையில் துவங்கி உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு கும்பல்,தங்களது பண பலத்தாலும்,அரசியல் செல்வாக்காலும் நகரமன்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நினைப்பது இறைவன் மீது ஆணையாக உங்களுக்குத் தெரியாதா?

நகர்மன்றத் தலைவராக ஆசைப்பட்டு பின்னர் அது நடக்காது என்று தெரிந்ததும் இயக்கம் கண்டு,குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரித்து ஆதாயமும் அடைந்து,ஆறு மாதம் கழித்து அவதூறுக் கட்டுரை எழுதுவது நாங்களா?

நேர்மையோடும்,நெஞ்சுரத்தோடும் நீதிக்காகப் போராடும் ஒரு தலைவரை,செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்ற பாசிசக் கும்பலை இறைவன் அடையாளம் காட்டி,தவறு செய்தவர்களை தலை குனிய வைக்கின்ற நாள் வெகு தூரத்தில் இல்லை.

உங்களது அணைத்து அபாண்டங்களுக்கும் பதில் கூற காத்திருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [18 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19426

வெல்டன்... இன்னொரு தெஹல்கா. பாராட்டுக்கள். லஞ்சம் வாங்கிய பங்காருலட்சுமணன் இன்று உள்ளே....! இந்த பங்காளிகள் இன்னும் வெளியே...

எல்லோரும் விரிவாக எழுதிய பிறகு என்னத்தபோட்டு எழுத...? தொடரட்டும் உங்கள் சேவை....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by sulaiman (abudhabi) [18 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19438

அஸ்ஸலாமு அழைக்கும், சகோதரர் கவிமகன் காதர் அவர்கள் சவால் விடுகிறார், நிருபிக்க சொல்லுகிறார். ஊரும் ,உலகமும் அறிந்த ஒன்றை நிருபிகனுமாம். நீங்கள் ஒரு அமைப்பை துவங்குநீர்கள். ஒரு அஜண்டாவை முன்னிறுத்தி துவங்கிய அந்த அமைப்பை சில நாட்களில் நேர் முரணாக கொள்கையை மாற்றுநீர்கள். நகராச்சி தேர்தல் களத்தில் தலைமை பதவிக்கு போட்டிட்ட வேட்பாளர்களில் இருவர் மட்டுமே வெற்றிவாய்ப்பு உள்ளவர் என்று நீங்கலாக முடிவு எடுதீர்கள், அந்த இரு வேட்பாளர்களையும் நீங்கள் ஏற்படுத்திய பொதுகூட்டத்தில் கலந்துகொள்வதுக்கு அழைத்தீர்கள். ஒருவர் மறுத்தார், இன்னொருவர் ஏற்றுகொண்டார், பொதுகூட்டத்தில் பேசினார். இதையே நீங்கள் அடிபடையாக ஏற்று இந்த வேட்பாளருக்காக தீவிர பிரசாரம் செய்தீர்கள், இவரின் வெற்றிக்காக முனைப்புடன் அரும்பாடுபட்டீர்கள். வேற்றிகுபிறகு வால்த்துநீர்கள். இன்றைய தேதி வரை புகழ்ந்துகொண்டே இருக்கிறீர்கள். அந்த தலைவி எட்டு மாத காலத்தில் செய்த நிர்வாக குளறுபடிகளையும்,அவரின் பக்குவமின்மையும். நீங்கள் முந்திய பதிப்பில் நல்சான்றிதல் வழங்கிய சகோதரர் லுக்மான் அவர்கள் போட்டு உடைத்த பிறகும் அந்த தலைவியை கண்டிக்க மனம் இல்லாமல் ,திராணி இல்லாமல் மவுனம் சதிகிரீர்கள்.

இப்பொழுது நீங்கள் முடிவு எடுங்கள் யார் மன்னிபுகேட்கனும் என்பதை. அப்பொழுது பணக்காரர்கள், அரசியல் வாதிகளின் ஆதிக்கம் என்றால். இப்பொழுது நடப்பது ஒரு குறிப்பிட்ட கும்பல்களின் ஆதிக்கம். என்னைபோன்ற சாதாரண காயல்வாசிகள் இந்த முடிவுக்குத்தான் வரவேண்டியது உள்ளது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by Kader K.M (Dubai) [19 June 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19455

இது 10 வது வார்டுக்கு வந்த சாபமா?

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

செய் அல்லது செத்துமடி!

உன்னால் முடியவில்லை என்றால் ஒதுங்கி போ!

இப்பணியை செய்ய அல்லாஹ் வேறொருவனை தருவான்!

இந்த பதவி மூலம் உனக்கு அல்லாஹ் ஒரு வாழ்வை தருவான் என்று எண்ணித்தான் உனக்கு வாக்கு அளித்தோமே தவிர உனது புத்திசாலி தனத்திற்கு அல்ல!

அல்லாஹ்வின் தண்டனை கடுமையானது! மரணத்திற்கு முன் பாவமன்னிப்பு தேடிக்கொள்!

உன்னை நீ மாற்றிக்கொள்! இல்லையேல் மாற்றப்படுவாய்! அல்லாஹ் முற்றும் அறிந்தவன்!

இவண்
10 வது வார்டு அபலை பையன்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:வளைந்து கொடுக்கனும்னா இப்...
posted by Meera Sahib (Kayalpatnam) [20 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19467

உண்மையை வெளி கொண்டு வந்தவர்களுக்கு மிக்க நன்றி . இது மற்றும் போதாது . இவர்களது நிர்வாகத்தின் தன்மையை நம் ஊர் மக்களிடம் ஒரு referrendum நடத்த வேண்டும் . தலைவி அவர்களே தனது நிர்வாகம் நேர்மையானது என்பதை நிரூபிக்கட்டும் . இந்த வலை தளத்தில் வெளி நாட்டில் வசிப்பவர்கள்தான் அதிகமாக கருத்து கூறுகின்றனர் . அனால் உள்ளூர் வாசிகள்தான் இந்த சிரமங்களை தினமும் உணர்கின்றனர் . தலைவிக்கும் அலுவலகர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே சுமுக சூழ்நிலை இல்லை என்பது உண்மை !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேற்றைய மழை காட்சிகள்!  (16/6/2012) [Views - 3614; Comments - 4]
இன்று மாலையில் கனமழை!  (15/6/2012) [Views - 3616; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved