Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:41:25 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9013
#KOTW9013
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012
நகரில் குடிநீர் வினியோகக் குறைபாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2954 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நிலவும் குடிநீர் வினியோகக் குறைபாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் ஊழியர் கூட்டம் 18.08.2012 சனிக்கிழமை மதியம் 03.00 மணியளவில் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.



கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்று வரும் வன்முறை நிகழ்வுகள், இது தொடர்பான உண்மைச் செய்திகள் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் நிலை உள்ளிட்டவை குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.

பின்னர், காயல்பட்டினத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நிறைவில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - அஸ்ஸாம் நிவாரண நிதி:
அஸ்ஸாம் மாநிலத்தில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, ஏராளமான நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு, பெரும் பொருட்சேதம் ஆகியன காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவது என்ற கட்சித் தலைமையின் முடிவின்படீ. காயல்பட்டினத்திலும் பொதுமக்கள் கூடுமிடங்களில் நிதி சேகரித்து, கட்சித் தலைமை மூலம் அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி செய்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2 - குடிநீர் வினியோகக் குறைபாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்:
காயல்பட்டினத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறையும், சில நேரங்களில் அதை விட கூடுதலான நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இக்குடிநீர் வினியோகத்திலுள்ள குறைபாடுகளைக் கண்டித்து 25.08.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3 - தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணி:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நிலுவையிலுள்ள மேம்பாட்டுப் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதில் அலட்சியம் காண்பிக்கும் தொடர்வண்டித் துறையைக் கண்டித்து, விரைவில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டத்தை நடத்திடவும், இது தொடர்பான அனைத்துக் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்தி இதுகுறித்து இறுதி முடிவு செய்திடுவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின்போது, நகரில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, முஸ்லிம் லீக் மகளிரணியின் முன்னாள் தலைவரும், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் அவர்களின் மனைவியுமான ஹாஜ்ஜா ஏ.எச்.எம்.ஜைனப் அவர்களின் முயற்சியால் நிதி சேகரிக்கப்பட்டு, முதல் தவணையாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது.

அத்தொகையை ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வழங்க, பயனாளியின் சார்பில் காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் அதனைப் பெற்றுக்கொண்டார்.



நன்றியுரைக்குப் பின், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்காவின் துஆ - ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட - நகர நிர்வாகிகளான ஹாஜி மொகுதூம் கண் ஸாஹிப், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி ஏ.கே.மஹ்மூத் சுலைமான், பெத்தப்பா சுல்தான், ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஹாஜி அரபி ஷாஹுல் ஹமீத், ஹாஜி எஸ்.டி.கமால், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், எம்.எச்.அப்துல் வாஹித் ஆகியோர் கலந்துகொண்டனர்.




இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...குடிநீர்
posted by mackie noohuthambi (kayalpatnam) [24 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21452

குடிநீர் விநியோகம் சீராக நடைபெறுவதற்கு தடையாக இருப்பது மோட்டார் வைத்து நீரை பலர் உறிஞ்சுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பலமாக எழுந்துள்ளது.

இந்த மார்க்க விரோத செயலை சுட்டிக்காட்டி பொது மக்களை இந்த ஹராமான செயலை கைவிடும்படியும் வேண்டுகோள் விடுக்கவேண்டியது. நகர்மன்றதுடன் இனைந்து இந்த மோடோர்களை அப்புறப்படுத்துவதற்கு முஸ்லிம் லீக் ஒத்துழைப்பு நல்குவதும் ,சர்வகட்சி முஹல்லாஹ் கூட்டத்தை கூட்டி இதனை முற்றாக ஒழிப்பதற்கும் வியூகம் வகுக்குமாறு முஸ்லிம் லீக் தலைவர்களை வேண்டிக்கொள்கிறோம்.

ஒவ்வொரு ஜும்மாவிலும் இந்த மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் ஹராமான செயலைப்பற்றி கதீப்கள் பகிரங்கமாக பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்..

தண்ணீர் சீராக விநியோகம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை நகர்மன்றம் போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் எடுத்து ஆவன செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்

உங்கள் முயற்சியால் அல்லாஹ் கிருபையால் நல்ல மனமாற்றம் ஏற்பட்டு சீரான வான் நிலை மாற்றமும் ஏற்பட்டு நல்ல மலை பொழிந்து நமதூரில் தண்ணீர் தட்டுப்பாடு அறவே நீங்கவேண்டும் என்று எல்லோரும் து ஆ செய்வோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack SMA (kayalpatnam) [24 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21453

" சீரான குடிநீர் விநியோகம் " இந்த பெயரில் ஆர்பாட்டம் பண்ணுவதைவிட , " குடிநீர் விநியோகிக்கும்போது மின்சாரத்தை நிறுத்து " என்று ஆர்பாட்டம் பண்ணினால் நல்லது .

ஏனெனில் மற்ற கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டமெல்லாம் பண்ணினால், இந்த நகர்மன்றத்தை பொறுத்தவரை அது , "செவிடன் காதில் ஊதிய சங்கு" கதைதான்.

தண்ணீர் திருடர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள் . தண்ணீர் வரும்போது மின்சாரத்தை நிறுத்துவதுதான் ஒரே வழி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தண்ணீர் திருடர்கள் ஜாக்கிரதை !
posted by M.S.Kaja Mahlari (Singapore.) [24 August 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21454

தண்ணீர் திருடர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள் . தண்ணீர் வரும்போது மின்சாரத்தை நிறுத்துவதுதான் ஒரே வழி. ஆமாம் ! இந்த முறையை ஒரு முறை பரீட்சித்து பார்ப்பது நல்லது. இதுவும் சரியாகாவிட்டால் பிறகு "இந்த தண்ணீர் திருடர்களை " ஒழிப்பதற்கு என்ன வழி என்பதை பிறகு பார்ப்போம்.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...கவுன்சிலர் வீட்டில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதக உண்மை தகவல்
posted by buhari (chennai) [24 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21455

முதலில் தண்ணீரை மோட்டார் மூலம், உறிஞ்சு எடுப்பதையும் கரண்ட் இல்லை என்றால் genarator மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுப்ப தையும், நாம் அவர்களை கண்டு இது தப்பு எண்டு சொன்னால் நீங்களும் எடுத்து கொள்ளுகள் எண்டு ஒரு கவுன்சிலர் சொல்வதாக அந்த ஏரியா மக்கள் என்னிடம் குறை சொனார்கள் எனபது உண்மை,

புஹாரி
கொசியர் ஸ்ட்ரீட்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Find our the permanent solution
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [24 August 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21461

We have to solve the problem permanently, & we have to thing long term plan. We have to support the strike for bringing the enough water to our native.

Power cutt during the distribution of water is not a wise solution. Already we have lot of hour power cutt again this people inducing to cutt power off.

We have the good suggestion. Our municipality has to apporve the house plan if they have the bouring water. Our punchayaat can make the clear awareness to our people for proper untlization of water not to misuse the municipality water for non dirnking purposes.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (kayalpatnam) [24 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21464

Attn : Mr . kader , Alkobar .

தண்ணீர் விடும் நேரமான சுமார் ஒருமணி நேரம் மின்தடையால் பெரிய அளவில் பாதிப்பில்லை . அடுத்த 10 நாட்களுக்கு , மக்களுக்கு குறைந்தபட்சம் குடிக்கவாவது தண்ணீர் இருக்கும் .

இன்று பெரும்பாலான வீடுகளில் போரிங் உள்ளது . நல்ல தண்ணீரை எப்படி உபயோகப்படுத்துவது என்பது அவர்களுக்கும் தெரியும்தான் . ஆனால் தண்ணீர் திருடர்களுக்கோ அவர்களின் உச்சி முதல் உள்ளங்கால் வரையான அனைத்து தேவைகளுக்கும் , வீட்டில் போரிங் வசதி இருந்தும் நல்ல தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர் . ஆகையால் போரிங் இருந்தால்தான் plan approval என்பது சாத்தியமற்றது . திருடன் எப்படியும் திருடுவான் . திருடிவிட்டு அடுத்த நோன்பு 27 இல் இறைவனிடம் மன்றாடுவான் .

ஆக , இந்த பிரச்சினைக்கு ஒரே வழி , சிறந்த வழி , தண்ணீர் வரும் நேரத்தில் மின்தடை . இந்த நேரத்தில் வசதி உள்ள திருடர்கள் generater பயன்படுத்தினாலும் தெரிந்து விடும் .

என் வீட்டில் இன்று குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை . முடிந்தால் ஒருகுடம் தண்ணீர் அனுப்பி வையுங்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by mohideen (jeddah) [24 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21466

என்ன ஆர்பாட்டம் பண்ணினாலும் ஒன்னும் நடக்காது. மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் pipe line துண்டிக்கப்படுவதாக சொன்னார்கள், ஆனால் அதற்கு உண்டான எந்த முயற்சியும் நடந்ததாக தெரியவில்லை. இதில் நகர்மன்றட்டிற்கும் தொடர்பு இருக்கிரதாவே தெரிகிறது. அதனால் அவர்கள் மின்சாரம் துண்டிக்க மாட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பொது மக்களுக்கு குடிக்க நீர் எடுத்து செல்வதா...? (அல்லது) அருகில் உள்ள D C W தொழிற்சாலைக்கு ரசாயனம் உற்பத்தி செய்ய இந்த போர்வெல் நீரை எடுத்து செல்வதா...?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [24 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21467

அணைத்து உறுப்பினர்களும் தயவு செய்து உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்கு நகராட்சி மாத கூட்டத்தில் வெளி நடப்பு செய்யாமல் உங்களுக்கு வாக்களித்த ஊரின் பல வார்டு மக்களுக்கு குடிநீர் அவசர தேவை சூழ்நிலைகளை வெளிநடப்பு செய்யும் உறுப்பினர்கள் தனது மனதில் வைத்து செயல் பட்டாலே... கொஞ்சமாவது குடிநீர் குறைபாடு குறையும்...!

இந்த ஆர்ப்பாட்டம் நகராட்சி முன்பு நடத்தினால் நல்லதாக இருக்கும்...

குடிநீர் தட்டுப்பாடுக்கு மோட்டார் தான் காரணம் என்று பல ஆண்டுகள் நாம் அனைவரும் ஆதங்கப்பட்டு வருகிறோம் உண்மைதான்... மோட்டார் வைத்து பிறரின் ஹக்கை களவு செய்யும் எவரும் திருந்துவதாக தெரியவில்லை... இதற்க்கு கேள்வி..! விசாரணை..! நாளை மறுமையில் பிறரின் ஹக்கை குடித்தவர்கள் பதில் சொல்லட்டும்..

இப்போது நிலவி வரும் நிலவரம் மிக... மிக.. வேதனையான அதற்சிக்குரிய கால சூழ்நிலை என்னவனில்... தாமிர பரணி ஆற்றில் நீர் வற்றி விட்டது...!

ஆத்தூர் ஆற்றில் இருந்து நமதூருக்கு நீரை பம்பிங்கு செய்து அனுப்பி வந்த ஆத்தூர் ஆற்றில் நீர் வற்றி விட்டது.. மேலும் அங்கு நீரின் சுவை மாறி துவப்பு தன்மையாகி ஆகி வருகிறது...

தற்போது நல்லூர், ஏரல் போன்ற பகுதிகளில் நிலத்தில் போர்வெல் செய்து அதன் மூலம் நீர் ஏற்பாடு செய்ய படுவதாக செய்தி.. அதிலும் போட்டா போட்டி நிலவுகிறது...!

பொது மக்களுக்கு குடிக்க நீர் எடுத்து செல்வதா...? (அல்லது) அருகில் உள்ள தொழிற்சாலைக்கு ரசாயனம் உற்பத்தி செய்ய இந்த போர்வெல் நீரை எடுத்து செல்வதா...? இப்படி குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.. பல பகுதிகளில் நிலத்தடி நீர் உள்வாங்கி கிணறுகள் வறண்டு போய் வருகின்றன... கால போக்கில் நிலத்தின் ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகம் ஆகும் சூழலில் தற்போதைய காலம் மாறி வருகின்றன...

இப்படி எல்லாம் இயற்கை மாறி வர காரணம் மனிதன் தான்... சந்தேகமே அல்ல.. நீரை விரையும் செய்வது... தனக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை வானம் பார்த்த பூமியாக வெப்பத்தில் காய போடுவது..! இருக்கின்ற மரத்தை வெட்டி எடுப்பது...! இப்படி பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்...

சிலரின் அறியாமையால் ஒரு துளி நீரையும் மதிக்கும் நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.. வல்ல இறைவனின் பெரும் கருணையால் நிலத்தடி நீர் பெருக பெற்று குடி நீர் பஞ்சம் இல்லாமல் அணைத்து சமுதாய மக்களும் வாழ நாம் அனைவர்களும் (துவா செய்வோமாக) பிராத்திப்போமாக...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by mohideen (jeddah) [24 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21468

*********தண்ணீர் விடும் நேரமான சுமார் ஒருமணி நேரம் மின்தடையால் பெரிய அளவில் பாதிப்பில்லை**********

மின் தடை உள்ள நேரத்தில் தண்ணீர் விட வேண்டியது தானே? அப்படி விடுவதுனால் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Vilack SMA (kayalpatnam) [25 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21477

எப்போது மின்தடை வரும் என்று யாருக்கும் தெரியாது . அதனால்தான் சொல்கிறோம் , நகர்மன்றம் , மின்வாரியத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று.

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் சிறுமழை!  (24/8/2012) [Views - 2929; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved