Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:19:54 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9046
#KOTW9046
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
லட்ச கணக்கில், மாயமாக மறையும் காயல்பட்டினத்திற்கான குடிநீர்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3667 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மேல ஆத்தூரில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்து காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. வழமையாக தினசரி 20 லட்சத்திற்கும் கூடுதலான தண்ணீர் வழங்கப்படுவது உண்டு. தற்போது நிலவும் தட்டுப்பாடு காரணமாக, மேல ஆத்தூர் நீர்தேக்கத்தில் இருந்து தினசரி 11 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது என அந்த நீர் தேக்கத்தை பராமரிக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். வழங்கப்படும் அளவை நிரூபிக்கும் விதமாக - மேல ஆத்தூரில் நவீன மீட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிக்கும் அளவில் குடிநீர் பெறப்படவில்லை என பல ஆண்டுகளாக காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் கூறிவருகின்றனர். ஆனால் இதனை உறுதி செய்யும் விதமாக காயல்பட்டினம் நகர எல்லையில் மீட்டர் பல ஆண்டுகளாக பொருத்தப்படாமல் உள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 21 லட்ச லிட்டர் வழங்குவதாக கூறும்போது 16 - 17 லட்சம் லிட்டர் தான் வருகிறது என கூறிய காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள், தற்போது 11 லட்ச லிட்டர் வழங்கப்படும் போது சில நாட்கள் முன்னர் வரை 9.5 லட்ச அளவில் தான் குடிநீர் பெறப்படுகிறது என தெரிவித்து வந்தனர். ஆனால் கடந்த மூன்று நாட்களாக - அதையும் விட குறைவாகதான் குடிநீர் பெறப்படுவதாக கூறுகின்றனர்.

காயல்பட்டினம் நகராட்சி அலுவலர் - ஆகஸ்ட் 28 இரவு முதல், 29 அதிகாலை வரை 6.2 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். அதுபோல ஆகஸ்ட் 29 இரவு முதல், 30 அதிகாலை வரை 6.2 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். ஆகஸ்ட் 30 இரவு முதல் 31 (இன்று) அதிகாலை வரை 7 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களிடம் விசாரித்ததில் - இவ்வாறு தண்ணீர் அளவு குறைய வாய்ப்பே இல்லையென்றும், தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை காயல்பட்டினத்திற்கு - நிமிடத்திற்கு 2000 லிட்டர் (2000 LPM) அளவில் - 11 லட்ச லிட்டர் அளவு தண்ணீர் - வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனுப்பும் குடிநீர் - தினசரி 4 - 5 லட்சம் லிட்டர் வரை - எவ்வாறு மாயமாக மறைகிறது என்பது வியப்பாக உள்ளது. தினசரி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அனுப்பும் தண்ணீரில் இது ஏறத்தாள 50 சதவீதம் ஆகும்.

காயல்பட்டினம் நகராட்சியில் இது குறித்து ஆய்வு செய்ய தகுந்த பொறியாளர்கள் இல்லை. மாவட்ட - மாநில அளவில், அரசாங்கம் தலையிட்டு இந்த குளறுபடிக்கான காரணத்தை விசாரித்தால் தான், உண்மை நிலை வெளிவரும் என தெரிகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah ) [31 August 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 21618

வீணானா ஆர்பட்டங்களிலும்,. நகராட்சி தலைவியை தொட்டதற்க்கெல்லாம் குறை கொள்ளும் மனபோக்கை மாற்றி கொண்டு.. எல்லோரும் குறிப்பாக நகரில் உள்ள சமூக, அரசியல் இயக்கங்கள், நகராட்சியுடன் ஒன்றிணைந்து.. இந்த திருட்டு எங்கே நடக்கிறது என்பதையும், நகராட்சியில் தகுதி உள்ள பொறியாளர்களை நியமிப்பதிலும் ஊர் நன்மையை கருத்தில் கொண்டு ஒன்றுபட்டு செயல்படுவோம்.

இந்த குளறுபடிகள் கடந்த ஆறுமாதமாக மட்டும் நடப்பது இல்லை ஆண்டாண்டு காலமாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது ..இவர் .. அவர் என்று குறை சொல்லுவதை விட்டு விட்டு ஆக வேண்டிய காரியங்களை பார்ப்போம்... திருடர்களையும் அதற்க்கு துணை போகும் துரோகிகளையும் இனம் கண்டு வேரறுப்போம்.

இது போன்ற பொறியாளர்களை வைத்து கொண்டு, 30 கோடி மதிப்புள்ள இரண்டாம் பைப் லைன் திட்டத்தை நகராட்சி நடத்துவது என்பது முட்டாள்தனம்.. .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அவசியம்
posted by M Sajith (DUBAI) [31 August 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21619

முதலில் கவனிக்கவேண்டிய விசயம் இது... இரண்டாம் பைப்லன் வந்தாலும் அதிலும் இடையில் ஆட்டையை போடுபவர்கள் கைவரிசையை காட்டிவிடலாம்...

ஊர் எல்லையில் மீட்டர் மாட்டினால்தான் இதற்கு விடிவு வரும்... எல்லோருமா சேர்ந்து இதுக்கும் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தலாமே... நகரவையை சாடிய சந்தோசத்தோட ஏதாவது நல்லதும் நடக்கும்...

காயல்பட்ணம்.காம் நீங்களாவது காரணம் தெரிய ஒரு ஆர்.டி.ஐ பைல் பன்னக்கூடாதா..?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஹும்ம்ம்மம்ம்ம்ம்
posted by V D SADAK THAMBY (Guangzhou-China.) [31 August 2012]
IP: 65.*.*.* Anonymous Proxy | Comment Reference Number: 21620

ஹும்ம்ம்மம்ம்ம்ம் .

செய்தி விறுவிறுப்பாக இருந்கிறது. ஆனால் ஊகத்தின் அடிப்படையிலான செய்தி. எதையும் அருதியிட்டு கூறமுடியாத நிலை .

முதலில் தண்ணீர் குறைவாக பெறப்படுகிறது என்பதற்கு போதிய ஆதாரம் நம் நகராட்சியிடம் இல்லை. அதன் பிறகுதான் யார் திருடியிருப்பர்கள் என்பதைப் பற்றிய குற்றச்சாட்டு. மொத்தத்தில் ஊமை கனவு கண்டது போன்றது.

மாவட்ட - மாநில அளவில், அரசாங்கம் இதில் எவ்வாறு தலையிட்டு தீர்த்துவைக்க முடியும்?

receiving end ல் மீட்டர் வைத்து கணக்கிடாமல் எதையும் உறுதியாக சொல்ல முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [31 August 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21621

" மாயமாய் மறையும் தண்ணீர் " ..... எந்த இடத்தில் leak ஆகிறது என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.

நகராட்சி அலுவலர்கள் , நகரமன்ற தலைமை மற்றும் உறுப்பினர்கள் kayalpatnam to athoor " நடை பயணம் " செய்து கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால் இடையில் யாராவது திருடுகிறார்கள் என்றால் , கண்டுபிடிப்பது சற்று கடினம்தான் . திருடர்கள் எத்தனுக்கு எத்தன்கள் . பிறர் உதவியின்றி இதை செய்ய மாட்டார்கள் . யார் அந்த " கருப்பு ஆடு " ? இவரைத்தான் அடையாளம் காண வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [31 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21622

என்ன ஆச்சரியம். பஸ்ஸில் கொண்டு போன 5 கிலோ தங்கம் கொண்டு போனவர் தூங்கும்போது யாரோ அடித்துக்கொண்டு போய்விட்டார் என்பதையே நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும்போது, இப்படி நமதூருக்கு வரும் தண்ணீர் லட்சக்கணக்கான லிட்டர்கள் காணாமல் போனது என்றால் எப்படி நம்ப முடியும்.

காயல்பட்டினம் வாசிகள் உலகில் எல்லா பகுதிகளிலும் வசிக்கிறார்கள். சமீபத்தில் மறைந்த விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் விண்ணில் காலடி வைத்தபோது அங்கே யாரோ டீ வடை என்று கூறி திரிந்தானாம் கூப்பிட்டு கேட்டதில் எனக்கு காயல்பட்டணம் சொந்த ஊர் என்றானாம் என்று கேலியாக கூறுவார்கள். அந்த அளவு பரந்து விரிந்து தொழில் புரியும் நம்மவர்களுக்கு காதில் பூ சுற்றுவது அவ்வளவு லேசான காரியமில்லை.

அமெரிக்காவில் திவாலான ஒரு வங்கியின் செய்தி சஹர் நேரத்தில் நமதூர் மக்களுக்கு முதன்முதலாக கிடைத்து ஐசீசீஐ வங்கியை நம்மவர்கள் முற்றுகையிட்டது ஞாபகம் இருக்கிறதா. இந்த அளவு தொழில் நுட்ப திறமை வாய்ந்த நம்மவர்கள் இப்படி சாதாரண தண்ணீர் விஷயத்தில் அலைக்களிக்கபடுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் சொல்லப்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

ஏதோ சதி நடக்கிறது. இதை ஊரிலுள்ள ஜமாஅத்தார்களும் பொது நல நிறுவனங்களும், ஐக்கிய பேரவை மற்றும் எல்லோரும் தலையிட்டு ஒரு மாபெரும் போராட்டத்துக்கு மக்களை தயார் படுத்த வேண்டும்.

இணையதளங்களும் இதற்கு முழு மூச்சில் இறங்கி வேலை செய்ய வேண்டும். நேற்று காக்கும் கரங்கள் கூட்டிய கூட்டம்போல் ஊர் கூட்டம் ஒன்று அவசரமாக கூட்டப்பட வேண்டும். செய்யுங்களேன். அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு நல்ல வெற்றியை தருவான்.

வீண் விவாதங்கள் செய்துகொண்டு காலம் கடத்துவதை விட ஊருக்கு ஒரு உருப்படியான் வேலை செய்வோம் வாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கண்டம் விட்டு கண்டம் பாயுது....ஆத்தூர் தண்ணீர்...! மக்களின் கண்ணீர்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், ( புனித மக்கா. ) [31 August 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21623

பொதுவாக மின்சாரம், தண்ணீர் போன்றவைகள் ஓரிடத்திலிருந்து மறு இடத்திற்கு கடத்தும் (செலுத்தும்) போது விரயம் என்பதைத் தடுக்கயியலாது. தங்கத்தில் நகை செய்யும் போது சேதாரம் போகின்றதல்லவா? அதேப்போல்தான் இதுவும்! ஆத்தூரிலிருந்து அனுப்பப்படும் தண்ணீர் காடு, மலை, கழனிகளைக் கடந்தது சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து இறுதியில் காயல்பட்டினம் நகராட்சியை வந்தடையும் போது இது போன்ற விரயங்களைத் தவிக்க இயலாது தான்! தரை வழி பைப் லைன் மூலம் கொண்டு வருவதால் தானே இது போன்ற பிரச்சனைகள்? ஆகாய மார்க்கமா அனுப்பினால் ஆட்டையைப் போடுறவங்களை அடையாளம் கண்டு கொள்ளலாமே?

ஆட்டையைப் போடுறவங்க யாருன்னு? கண்டுபிடிச்சு அதற்கான ஆகவேண்டிய வேலையைப் பார்கிறதெ விட்டுப் புட்டு ஆயிரம் குறைகளைச் சொல்லிட்டுத் திரியுறதுலே அர்த்தமே இல்லை!

பெறப்படும் தண்ணீரின் அளவும் குறைவு! விநியோகிக்கும் முறையும் தவறு! ஓர் தீர்கமான தொலை நோக்குப் பார்வையோடு இப் பிரச்சனையை அலசி ஆராய்ந்து தகுந்த முடிவுகளை அவசர கால அடிப்படையில் செயல்படுத்தினால் மட்டுமே ஓரளவு தண்ணீர் பஞ்சத்திலிருந்து நாம் மீள இயலும்! -ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [31 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21625

தண்ணீரை உறிஞ்சும் மாயக்காரர்கள் இருக்கும் வரை லட்ச கணக்கில் தண்ணீர் மாயமாக போய் கொண்டுதான் இருக்கும் என்பதில் சந்தய்கமே இல்லை .அப்படித்தானே !

வரவர மாமியா கழுதை போல போனாவாம் ...என்கிற கதைலே தான் இருக்குது ... என்னபன்னுவது ? யனவே தண்ணீர் கடத்தல் காரர்களை சரியாக இனம் கண்டு தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த தண்ணீர் பிரச்சனை தீருமே தவிர ................இல்லையேல் பஞ்சம் ...பஞ்சம் ...தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆட்டம் போட்டுக்கொண்டுதான் இருக்கும் .

தண்ணீர் திருடர் களே!ஜாக்கிரதை !மறுமையில் இறைவனின் தண்டனையை மறந்து விடாதீர்கள் ...மறந்தும் இருந்துவிடாதீர்கள் ....,

[இன்ன பட்ஷ ரப்பிக ல ஷதீது ] அதாவது ''இறைவன் யாரையும் சீக்கிரம் தண்டிக்க மாட்டன் .தண்டித்து விட்டால் அவனுடைய பிடியில்இருந்து யாரும் தப்பிக்க முடியவே முடியாது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Kader K.M (Dubai) [31 August 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21626

வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்ன கதையாகிவிட்டது! நம் ஊருக்கு வரும் மெயின் லைனில் ' டி' ஜாயின்ட் போட்டு ஆட்டையை போட்டிருப்பார்கள்! இதற்க்கு ஒரே வழி நம் ஊரில் மீட்டர் ரூம் மிக விரைவில் அமைப்பதுதான்! ஒன்றுபடுவோம்! நன்மை அடைவோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [31 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21631

நகராசிக்கு வரக்கூடிய தண்ணீர் வழிநடுவில் எதுவும் திருட்டு போகவில்லை, நகரமன்ற ஊழியர்களே திருட்டுக்கு துணைபோகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை. நகரமன்ற ஊழியர்கள் நல்ல குளிர் விட்டுபோய் விட்டார்கள். இவர்களை தட்டிகேட்க எந்த வார்டு உறுபினர்களும் முன்வரவில்லை.காரணம் மாதம் ஒருமுறை கூட்டம் போடும் முன்னமே உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யும் போது ஊழியர்கள் விசுவாசம் இல்லாமல் நடந்தேர்கிரர்கள். தண்ணீர் வெளியில் இருந்து வரும்போது தண்ணீர் தொட்டி இருக்கும் பகுதி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த பகுதி தொட்டியை ஒருமுறை ஆய்வு செய்தால் திருட்டு எங்கு நடக்கிறது என்ற உண்மை கண்டு அறியலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Nexus between the two
posted by Abdul Wahid S. (Kayalpatnam.) [31 August 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21637

Upon some one's recommendation, sometime back, I had a chance to visit the TWAD (Mela authoor) pumping station along with few people well acquainted to me who are concerned about the well being of our people.

The officer in-charge of the station was kind enough to spend some of his time with us and explained the whole process. Finally he took us to the pumping room and showed us the water meter. He informed us that 2.3 million liters of water being pumped everyday from the reservoir to our town after certain process. It seems to me that everything works out perfectly. When questioned about less water being received, he reproved and recommended us to have a water meter at receiving point to see for ourselves.

We came back reported to the person concern.

I do not know what stops our municipality from installing a water meter at the receiving point ?

But one thing I knew for sure is that there are hundreds of pipeline connections in our beloved town which are neither approved nor applied. These are simply illegal and unofficial connections. Everyone knows that one can not get such water connection(s) without the support from the department staff(s) in our municipality.

It is possible that those staves who abet others to get such connection(s) in order to receive kickbacks, probably taking advantage of the absence of such meter too. Is there any nexus between absence of the meter and the kickbacks.?

Perhaps such meter can reveal the truth. If the meter shows less counting than what we are supposed to receive, our municipality can always drag TWAD to the court for overcharging us all these years. What if the meter shows what TWAD claims?

A Million dollar question. Can we (people) drag the corrupted staves out to the road and ............................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. கருப்பு ஆடுகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை கழுதை நெரித்து கொள்ளவேண்டும்.
posted by M.S.Kaja Mahlari (Singapore) [01 September 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21689

ஏதோ சதி நடக்கிறது. இதை ஊரிலுள்ள ஜமாஅத்தார்களும் பொது நல நிறுவனங்களும், ஐக்கிய பேரவை மற்றும் எல்லோரும் தலையிட்டு ஒரு மாபெரும் போராட்டத்துக்கு மக்களை தயார் படுத்த வேண்டும். கருப்பு ஆடுகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அவற்றின் கழுத்து நெரிக்கப்பட வேண்டும்.

இணையதளங்களும் இதற்கு முழு மூச்சில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு நல்ல வெற்றியை தருவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [01 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21692

விஜயவாடாவில் இருந்து வருகிற கிர்ஷ்ணா (தெலுங்கு கங்கை ) நதி நீரையே வழியில் பலரும் விவசாய காரணத்திற்கு உபயோகப்படுத்தி கொள்வதால் சென்னைக்கு வரவேண்டிய நீரின் அளவு குறைவதாக ஒரு பேச்சு உண்டு. அதாவது திறந்த வெளி கால்வாய். அவ்வாறு நிகழ நூறு சதமானம் வாய்ப்பு உண்டு.

இங்கு பூமிக்கு கீழே ஓடும் குழாய் மூலம்தானே நீர் கொண்டுவரப்படுகிறது. இதையு "ஸ்ட்ரா "போட்டு உறிஞ்சும் கில்லாடி யாரைய்யா ?நகராட்சி நிர்வாகம் உடனே விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by A.m.Seyed ahmed (Kayalpatnam) [02 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21708

ஒரு வேலை பக்கதில் உள்ள தொழிற்சாலையில் irunthu தண்ணியை உறிஞ்சி விட்டு கெட்ட தண்ணியை கடலில் பாச்சிகிரார்களா? என்று பாருங்கள்..........

ஒரு படத்தில் வடிவேலுவிடம் .....இப்படியேன்ன அலடிகொள்கிறாய் தண்ணி தானையா விடுயா என்பார்? அதற்கு வடிவேலு எடுபாட்டவனே.......தண்ணியால் பல கோவேர்மென்ட் சரிந்து,,பல பிரச்னை வந்துள்ளது என்பார்?

அதுபோல் இதை seerious எடுத்து கொள்ளனும்?.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved