Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:00:59 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11673
#KOTW11673
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 26, 2013
இ.யூ.முஸ்லிம் லீக், தமிழ்நாட்டில் 15 எம்.எல்.ஏ.க்கள்; 2 எம்.பி.க்களை பெற வேண்டும்! காயல்பட்டினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3555 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 15 எம்.எல்.ஏ. தொகுதிகளிலும், 2 எம்.பி. தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களைப் பெற வேண்டும்; அதுவரை எங்களின் லட்சியப் பயணம் வீறு கொண்டு எழும் என காயல்பட்டினத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

இம்மாதம் 25ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க காயல்பட்டினம் வந்திருந்த அவர், சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
>> தேசிய ஒருமைப்பாடு
>> சமய நல்லிணக்கம்
>> சிறுபான்மையினரின் தனித்தன்மைகளைக் காத்தல்
என்ற மூன்று லட்சியங்களை முன்வைத்து செயல்படுகிறது.

பள்ளிவாசல், கபரஸ்தான், ஷரீஅத் அடிப்படையில் திருமணம், வக்ஃபு, தாடி, தொப்பி இவைகளெல்லாம் எங்களுடைய கலாச்சார தனித்தன்மைகளை அடையாளப்படுத்திக் காட்டுகின்றன.

பள்ளிவாசலை மையமாகக் கொண்டு மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொருத்த வரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத்துகள் உள்ளன. ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்தும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்டிருக்கின்றன.

3 நாட்கள் பெருநாளைக்கு முடிவு கட்டுங்கள்!

இந்த மஹல்லா ஜமாஅத்கள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கொள்கை. தமிழ்நாட்டில் இன்று முஸ்லிம்களிடையே 58 இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அதில் நாங்கள் மட்டும்தான் மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டில் கவலைப்படுகிறோம். அக்கறை காட்டுகிறோம்.

சில இயக்கங்கள் பள்ளிவாசலைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து, போட்டி பள்ளியை ஏற்படுத்துகிறார்கள். தங்கள் இயக்கத்தின் பெயரால் தனி ஜமாஅத்தை உருவாக்குகிறார்கள். திருமணப் பதிவேட்டைக் கூட தங்கள் இயக்கத்தின் பெயரால் அமைத்துக் கொள்கிறார்கள். இதன் விளைவு நோன்புப் பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளும் மூன்று நாட்களும், நான்கு நாட்களும் நடைபெறுகின்றன.

இந்துக்கள் தீபாவளியையும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸையும் ஒரே நாளில்தான் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இதில் குழப்பம் செய்வதில்லை. முஸ்லிம்கள் ஒரே நாளில் கொண்டாடாமல் இப்படி அடுத்தடுத்த நாளில் கொண்டாடுவது சமுதாயத்தை மற்றவர்களுக்கு மத்தியில் கேலிப் பொருளாகக் காட்டுகிறது. ஊடகங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மஹல்லா ஜமாஅத்துகள் அனைத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அங்கீகரித்து அதன் வழிகாட்டுதலை ஏற்கின்றன. ஆனால், அவர்கள் ரோட்டிலே வந்து போராடுவதில்லை. சில இயக்கங்கள் தங்களை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காகவே வீதிகளில் இறங்குகின்றனர்.

அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்!

ஐம்பது பேர், நூறு பேர், ஏன் ஆயிரம் பேர் கூடிவிட்டால் இது அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் பெரிய கூட்டமாகத் தெரிகிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான் அப்படித் தெரியும். ஆனால், உள்ளே வந்து பார்த்தால்தான் உண்மை புரியும்.

ஆர்ப்பாட்டம் செய்வதை வைத்து முஸ்லிம் சமுதாயத்தை எடை போடக்கூடாது. அவர்களை மஹல்லா ஜமாஅத்துகள் அங்கீகரிக்கிறதா என்று பாருங்கள். இதுதான் அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள்.

பள்ளிவாசல் என்பது இறைவனின் சொத்து. மஹல்லா ஜமாஅத் பள்ளிவாசல்கள் இறைவனுக்காக வக்ஃபு செய்யப்பட்டிருக்கும். ஆனால், போட்டி பள்ளியை ஏற்படுத்துகிறவர்கள் அந்த இயக்கத்தின் பெயராலேயே அவற்றைப் பதிவு செய்கிறார்கள்.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படிதான் முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்ள முடியும். இன்று காதல் திருமணங்கள் சமூகப் பிரச்சினையாக மாறி, மோதல் உருவாகி வருகிறது. திருமணம் என்பதற்கு சில முறைகள் உண்டு. பெற்றோரின் சம்மதம் இல்லாமல் உறவினர்களுக்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்வது என்பது ஏற்க முடியாது.

இஸ்லாமிய திருமணங்களில் பெண்ணின் சார்பாக அவரது தந்தை அல்லது தாத்தா, தாய்மாமன் அல்லது சகோதரர்கள் வக்கீலாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். அப் பெண் ணுக்கு கணவன் இல்லாத நிலை ஏற்பட்டால் இவர்கள்தான் பாதுகாவலர்கள். இப்பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டு என்பது 1500 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கித்தந்த ஒன்று. ஆனால், இன்றைக்கு ஒரு இந்துப் பெண்ணுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பு சொல்கிறது. இதை நாங்கள் ஆண்டாண்டு காலமாக நடைமுறைப்படுத்துகிறோம்.

இந்த உண்மைகளையெல்லாம் விளக்கிச் சொல்வதற்காகத்தான் இஸ்லாமிய திருமண சட்ட விளக்க கருத்தரங்குகளை ஒவ்வோர் ஊரிலும் நடத்தி வருகிறோம். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும் இக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளன. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்!

திருமண கட்டாய பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதில் சில மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி கடந்த ஆட்சியின்போது அதற்கென உத்தரவைப் பெற்றோம். இதன்படி, படிவம் 1ஏ முஸ்லிம்களுக்கென உருவாக்கப்பட்டது. இந்த படிவத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணங்களை சார்பதிவாளர் அலுவலகங்களில் அப்படியே பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால் இப்போது நடைமுறை என்னவென்றால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கணவன் வர வேண்டும்; மனைவி வர வேண்டும்; சாட்சிகள் வர வேண்டும் என சொல்லுவது ஏன் என்று புரியவில்லை. இதை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். தமிழக முதல்வர் இதில் தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பணியில் இருப்போர் திருமணம் முடிந்தும் பதிவு செய்ய முடியாமல் தங்கள் வாழ்க்கை துணையை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, தமிழக அரசு இதில் தகுந்த உத்தரவை பிறப்பிப்பது அவசியம்.

இ.யூ.முஸ்லிம் லீக் யாருக்கும் விரோதி அல்ல!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய அளவில் செயல்படும் அரசியல் கட்சி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோம். கேரளாவில் கூட்டணி அமைச்சரவையில் எங்களுடைய அமைச்சர்கள் உள்ளனர். மத்தியிலும், கேரளாவிலும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோம். தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் பாரம்பரிய உறவு உள்ளது. ஜனநாயக - சமய சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு எந்த கட்சியுடனும் விரோதம் கிடையாது. பாரதீய ஜனதா கட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்லுகின்றதோ அதன்படி செயல்பட்டால் பிரச்சினை இல்லை. மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என நமது நாடு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விரும்புகின்ற மதத்தைப் பின்பற்றவும், மதக் கலாச்சார தனித்தன்மைகளைக் காப்பாற்றவும் அரசியல் சாசனம் உறுதி வழங்கியுள்ளது.

ஆனால், பாரதீய ஜனதா கட்சி இந்து ராஷ்டிரம் என சொல்கிறது. தனியார் சட்டங்களுக்கு பதிலாக பொது சிவில் சட்டத்தை முன்னிலைப்படுத்துகிறது. பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளருக்காக சொல்லப்படக்கூடிய நரேந்திரமோடி தன்னை இந்து தேசியவாதி என்கிறார். அவர் தன்னை தேசியவாதி என்று சொல்லவில்லை. இந்து தேசியவாதம் என்றால் முஸ்லிம்கள் தேசியவாதிகள் இல்லையா?

குஜராத்தில் அவரது ஆட்சியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எண்ணற்ற கிராமங்களில் இன்று முஸ்லிம்களே இல்லை. 600க்கும் மேற்பட்ட பள்ளிவாசல், மதரஸா. தர்காகள் தரைமட்டமாக்கப்பட்டன.

நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து இனி இப்படி நடக்காது என உறுதி கூறுவதற்கு பதிலாக, காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்லும்போது நாய்க்குட்டி சிக்கியது போன்ற உணர்வு எனக்கும் இருந்தது என கேலி பேசுகிறார் என்றால் அவரை எப்படி ஏற்பது? அப்படிப்பட்ட உணர்வு உள்ளவர்களோடு தி.மு.க. கூட்டணி வைக்காது.

ராமகோபாலன் அவதூறுக்கு கண்டனம்!

இந்து முன்னணித் தலைவர் இராமகோபாலன் காயல்பட்டின முஸ்லிம்கள் இரவு 11 மணிக்கு மேல் ப்ரவ்சிங் சென்டரில் அமர்ந்து கொண்டு வெளிநாட்டு தீவிரவாதிகளோடு தகவல் பரிமாற்றம் செய்கிறார்கள் என்ற அபாண்டத்தை சுமத்தியிருக்கிறார். அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இங்குள்ள இரவு 11 மணிக்கு மேல்தான் அங்கு உரையாடுவது வசதியாக இருக்கும். இந்த நேர இடைவெளியைப் புரிந்து கொள்ளாமல் நச்சுக் கருத்துக்களைப் பரப்பி மோதலை உருவாக்கத் தூண்டுவது கண்டிக்கத்தக்கது.

15 எம்.எல்.ஏ.க்கள்; 2 எம்.பி.க்கள்:

தமிழ்நாட்டைப் பொருத்த வரை, 234 சட்டமன்ற தொகுதிகளும், 39 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன. 7 கோடியே 30 லட்சம் மக்கள் உள்ளனர். அதில் ஐந்தரை கோடி பேர் வாக்காளர்கள். முஸ்லிம்கள் 55 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். நாங்கள் விரும்புகிற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் 25 முஸ்லிம்கள் சட்டமன்றத்தில் இடம் பெற வேண்டும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் குறிக்கோள் 15 சட்டமன்ற தொகுதிகளிலும், 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாங்கள் உறுப்பினர்களாக வர வேண்டும். அது வரையிலும் எங்கள் அரசியல் பயணத்தில் நாங்கள் முனைப்புடன் செயலாற்றுவோம்.


இவ்வாறு, காயல்பட்டினத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர கவுரவ ஆலோசகர் ஹாஜி வாவு சித்தீக், மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாவட்ட அமைப்பாளர் ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், மாவட்ட நிர்வாகி ஏ.கே.மஹ்மூது சுலைமான், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயிதேமில்லத் பேரவை காயல்பட்டினம் நகர கிளை அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக், பெத்தப்பா சுல்தான், ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், ஹாஜி எஸ்.டி.கமால், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், அரபி ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



செய்தியாளர் சந்திப்பின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக!

கள உதவி:
A.R.ஷேக் முஹம்மத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அடுத்து வரும் நகர்மன்ற தேர்தலில் கண்டிப்பாக முஸ்லிம் லீக் கட்சி சார்பாக தலைவர் - துணை தலைவர் - உறுப்பினர்கள் பொறுப்புக்கு வரவேண்டும்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [26 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29724

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் குறிக்கோள் 15 சட்டமன்ற தொகுதிகளும், 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாங்கள் உறுப்பினர்களாக வர வேண்டும். அது வரையிலும் எங்கள் அரசியல் பயணத்தில் நாங்கள் வீறு கொண்டு எழுவோம்..! நாங்கள் முனைப்புடன் செயலாற்றுவோம் என்று கூறும் நீங்கள்...!

இது போல் வீறு கொண்டு முனைப்புடன் காயல்பட்டினத்தில் நகராட்சி தலைவர் - உறுப்பினராக முஸ்லிம் லீக் கட்சி சார்பாக இனி போட்டியிட்டு குறைந்தது 5 நபர்களாவது நகரமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று வர எழுச்சி பெறுங்கள்...!

அடுத்து வரும் நகர்மன்ற தேர்தலில் கண்டிப்பாக முஸ்லிம் லீக் கட்சி சார்பாக தலைவர் - துணை தலைவர் - உறுப்பினர்கள் பொறுப்புக்கு சமுதாய கட்சியான முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பாதையை அடைய முயற்சி செய்ய வேண்டும்...! நகர மக்கள் இதை எதிர் பார்க்கிறார்கள்...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [26 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29725

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் 15 எம்.எல்.ஏ. தொகுதிகளிலும், 2 எம்.பி. தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாமானதே. எனினும்

1967ஆம் ஆண்டு பொது தேர்தலில் அப்போதைய காயிதேமில்லத் அவர்கள் தலைமையில் இயங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்க்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் 15 எம்.எல்.ஏ. தொகுதியை வழங்கினார்கள். இதில் கணிசமாக வெற்றியும் பெற்றனர். இப்போதைய சூழலில் எந்த முஸ்லிம் கட்சிக்கும் அதன் திராவிட கூட்டணி கட்சிகள் 15 தொகுதிகள் ஒதுக்க முன்வருவதில்லை. அதற்க்கு திராவிட கட்சிகள் கூறும் காரணம், முன்பு முஸ்லிம்கள் ஒரே இயக்கமாக இருந்தனர் .இப்போதோ முஸ்லிம்கள் பல இயக்கங்களாக பிரிந்து நிற்கின்றனர். இதனால் அவர்களின் ஓட்டு பிரிகிறது, வெற்றி வாய்ப்பு குறைகிறது என காரணம் கூறுகின்றனர்.

எனவே இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டால் , நீங்கள் நினைக்கும் இந்த 15 எம்.எல்.ஏ. தொகுதிகளிலும், 2 எம்.பி. தொகுதி என்கின்ற லட்சியத்தை அடைய முடியும். இந்த (15 எம்.எல்.ஏ. மற்றும் 2 எம்.பி) தொகுதிகளை இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவேண்டியதுதான். எனவே இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் .இதன் மூலமே முஸ்லிம்கள் அதிக அளவில் பயனடைய முடியும்.

நம் சமுதாய முன்னேற்றத்திற்க்காக , நம் அரசியல் கட்சிகள் , இவ்விதம் சிந்திப்பார்களா? ஒன்று சேர்வார்களா? உடன்படுவார்களா? சிந்திப்பீர்! செயல்படுவீர்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நிறைவேறாத ஆசைகள்..
posted by Mackie Noohuthambi (kayalpatnam) [26 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29727

பெருநாள் மட்டுமா மூன்று தினங்களாக கொனடாடுகிறோம். நோன்பு தலை பிறை மூன்று, 1000 வருடங்களை விட சிறந்த நாள் என்று சொல்லப்படும் லைலதுல் கதர் இரவும் மூன்று, அரபா நோன்பு, ஹஜ்ஜு பெருநாள் எல்லாமே நமக்கு வேறு வேறு நாள்தான். நேற்றுதான் ஒரு இறை ஒரு மறை ஒரு பிறை என்று ஒரு கருத்தரங்கமே நடத்தி முடிவு காணாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. அதை விடுங்கள் அது பழகி போய் விட்டது.

அரசியலுக்கு வாருங்கள். நீங்கள் தலைமை தாங்கும் முஸ்லிம் லீக்காவது முஸ்லிம்களுக்கு கைகொடுக்குமா?

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, நோன்பு வைத்த ஏழைகளுக்கு நோன்பு திறக்க உதவினால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்க நீங்கள் மூன்று வேளை உணவருந்தி கொண்டு சாப்பிட்டது செமிக்க கொக்க கோலா குடித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் அழைத்து நோன்பு திறக்க உணவளிக்கிறீர்கள். அவர்கள் அவற்றை நிரப்பமாக சாப்பிட்டு விட்டு உங்களை புகழக் கூட வேண்டாம். உங்களை எள்ளி நகையாடாமல் இருந்திருக்க வேண்டாமா? கூட்டணி நாயகன் சொல்கிறார்,

"பேராசிரியார் அவர்கள் நான் அதிகம் பேச வேண்டும் என்பதற்காக அவர் பேசுவதை குறைத்துக் கொண்டார், இதேபோல் வருகின்ற தேர்தலிலும் அதிகம் சீட் கேட்பதை குறைத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்".

இதை கேட்டுக் கொண்டு எல்லோரும் மௌனிகளாக இருக்கிறார்கள். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா அல்லது கூட்டணி தர்மமே கலைஞர் பேசுவதை அப்படியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற எழுதாத சட்டமா? இவரிடம் நீங்கள் எப்படி சட்டமன்றத்துக்கு 15 சீட்டும் நாடாளுமன்றத்துக்கு 2 சீட்டும் கேட்கப்போகிறீர்கள்? ஒன்றும் புரியவில்லை.

பேரறிஞர் அண்ணா அவர்கள் பெருந்தன்மை வேறு, தமிழறிஞர் கருணாநிதி அவர்கள் பெருந்தன்மை வேறு. என்ன நடக்கபோகிறதோ அல்லாஹ் மிக அறிந்தவன்.

பேராசிரியரின் நிறைவேறாத ஆசைகளை அல்லாஹ் நிறைவேற்றி வைப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இயக்க வெறிகள் தொலையவேண்டும் !!!!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [27 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29731

நமக்கு மத்தியில் சமூக சமுதாய ஒற்றுமை இருந்தால் பேராசிரியர் அவர்களின் உயர்ந்த எண்ணத்தின் படி தமிழ்நாட்டில் 15 எம்.எல்.ஏ.க்கள்; 2 எம்.பி.க்களை பெற சாத்தியக் கூறுகள் ஏற்படும்! ஆனால் இஸ்லாத்தின் பெயரால் நாளுக்கொரு கொள்கை, பொழுதுக்கொரு இயக்கம் என வைத்துக்கொண்டு, எல்லோரும் ஒற்றுமை, ஒற்றுமை என கோசம் போடுவது என்ன? என புரியவில்லை! முதலில் மார்க்கத்தின் பெயரால் தோன்றும், இயக்கங்கள், பிரிவினைவாதங்கள் ஒழிய வேண்டும்! தொலையவேண்டும்!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தாய்ச்சபை அழைக்கிறது!
posted by kavimagan m.s.abdul kader (kayalpatnam) [27 August 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29734

நூற்றாண்டு வரலாறு கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம் முஸ்லிம் லீக்..... இந்த இயக்கம் நமது சமுதாயத்திற்குச் சப்தமின்றி செய்த சாதனைகள், வரலாற்றுச் சிறப்பு மிக்கவை... இந்த இயக்கத்தை வழிநடத்தும் தலைவர்கள் எளிமையும், வலிமையையும் இணைந்த சாமானியர்கள்..... எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கு பெறுகின்ற கூட்டணி எதுவானாலும், அதற்கு வாக்களிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

மரியாதைக்குரிய மக்கி நூஹுத் தம்பி காக்கா அவர்களது விமர்சனங்கள், பலமுறை பதில் அளிக்கப்பட்ட ஒன்று.. ஆதலால் நான் அதற்குள் செல்லாமல், அவர்களிடம் வைக்கும் வேண்டுகோள், ' நேர்மையும், நெஞ்சுரமும் மிக்க உங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் இருக்க வேண்டிய இடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காகும்... உங்களைப் போன்ற நல்லவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் போது, அல்லாஹ்வின் உதவியால் சமுதாயம் மிகப் பெரிய நன்மைகளை அடையும்.... தாங்கள் அதனை செய்ய வேண்டும்"........ அந்த நம்பிக்கை எனக்குண்டு..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:... ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும்
posted by Ismail Sufi (Muscat) [27 August 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 29736

இந்துக்கள் தீபாவளியையும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸையும் ஒரே நாளில்தான் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இதில் குழப்பம் செய்வதில்லை. முஸ்லிம்கள் ஒரே நாளில் கொண்டாடாமல் இப்படி அடுத்தடுத்த நாளில் கொண்டாடுவது சமுதாயத்தை மற்றவர்களுக்கு மத்தியில் கேலிப் பொருளாகக் காட்டுகிறது. ஊடகங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்அவர்கள் நமதூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலே குறிப்பிட்ட செய்தியை, நமதூர் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். இனி வரும் காலத்தில் நமதூரில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட ஊர் பெரியவர்களும் உலமாக்களும் ஒன்று கூடி ஊரின் ஒற்றுமை கருதி நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவான்.

தகவல்
இஸ்மாயில் சூபி
மஸ்கட், ஓமன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [27 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29750

பேராசிரியர் அவர்களின் சொல்படி, தமிழ்நாட்டில் 15 எம்.எல்.ஏகள், 2 எம்.பி சீட் பெற வேண்டும் என்றால் இப்பம் இருக்கும் கூட்டணியில் இருந்து விலாகி, புதிய கூட்டணி உருவாக பட வேண்டும். இல்லையனில் சாத்தியம் ஆகாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வாழ்த்துக்கள்
posted by NIZAR (KAYALPATNAM) [28 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29789

பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் முஸ்லீம் உறுப்பினர்கள் அதிகம் பங்கு பெறவேண்டும் என்பது பேராசியர் போன்று தமிழகத்தில் உள்ள அணைத்து இஸ்லாமியர்களின் என்ன ஓட்டமாக இருக்கிறது எனலாம். அனால் துரதவஷ்டமாக தமிழ்நாட்டில் தலை கீழாக உள்ளது.

பக்கத்தில் உள்ள கேரளாவில் முஸ்லீம் லீக் ஆட்சியாளர்களாக உள்ளது. மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக மத்தியிலும் மாநிலத்திலும் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் முஸ்லீம் லீக் பல வருடங்களாக ஒரு பலமற்ற முதியோர் கட்சியாக வளம் வந்ததும், முஸ்லீம்களுக்கு எதிரான விசயங்களில் மிக சாதுவாக நடந்துகொள்வது சாமர்த்தியம் என்ற தப்பு கணக்கு போட்டதால் முஸ்லீம் மக்களிடையே பலவீனம் அடைந்தது எனலாம்.

அனால் இப்பொழுது இளைஞ்சர்களுக்கு நல்ல பொறுப்புகளும், முக்கியத்துவம் அளிப்பதால் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதைப்போல முஸ்லீம் எதிரான விசயங்களில் தலையிடுவதும் நல்ல நிலைமைக்கு கட்சியை முன்னேற்றி உள்ளது. வரும் தேர்தலில் அடுத்தவர் சின்னத்தில் சவாரி செய்யாமல் ஏணியில் ஏறி வெற்றி வாகை சூட வளமான வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்….


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தொல்லை எக்ஸ்ப்ரஸ்...? (?!)  (27/8/2013) [Views - 3233; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved