Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:20:07 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14469
#KOTW14469
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 8, 2014
வஜீஹா கல்லூரி மாணவியர் DCW ஆலைக்கு தொழிற்சாலை பயணம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6122 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர், DCW தொழிற்சாலைக்கு தொழிற்சாலை பயணமாக (INDUSTRIAL VISIT) சென்றனர். ஆகஸ்ட் 16 அன்று நடந்த இந்நிகழ்வில், கல்லூரியின் பி.பி.ஏ., பி.காம்., எம்.காம். உள்ளிட்ட வணிகவியல் (Commerce) பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் தனித்தனி குழுக்களாக கல்லூரியால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் - கல்லூரியின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியை, துறைத் தலைமை ஆசிரியையர், வகுப்பாசிரியையர் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

தொழிற்சாலைக்குச் சென்ற மாணவியருக்கு, அதன் உற்பத்தி குறித்தும், துவங்கப்படவுள்ள புதிய தொழிற்சாலை குறித்தும் - அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கங்கள் வழங்கியுள்ளனர். மேலும், நகரில் இத்தொழிற்சாலை குறித்து நடக்கும் போராட்டம் அவசியமற்றது என்றும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

மேலும், வாவு வாஜீஹா வனிதையர் கல்லூரியின் பி.பி.ஏ., (வணிக நிர்வாகவியல்) துறையின் BUSY BEE ASSOCIATION ஏற்பாட்டில் ஆகஸ்ட் 20 அன்று நடந்த நிகழ்ச்சியில், DCW தொழிற்சாலையின் துணைத் தலைவர்களுள் ஒருவரான சுபாஷ் தண்டன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு, Inter-Personal Communication என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியதாகவும் தெரிகிறது.



இதற்கு முன்னர் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாளன்று, இதே துறையின் நிகழ்ச்சியொன்றில், DCW நிறுவனத்தின் துணை மேலாளர் (பயிற்சி) டாக்டர் ஏ.விஜய் கலந்துகொண்டு, Time Management என்ற தலைப்பில் உரை நிகழ்த்திச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் 2013-14 ஆண்டறிக்கையில் இருந்து...


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Restrain from these activities to make KEPA and all kayalites efforts to succeed
posted by Syed Hasan (Kayalpatnam) [08 September 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 37095

Dear People of Kayal Patnam,

Please refrain from these activities of encouraging dcw in any form. Then only collective efforts of many Kayalites some open like what KEPA is doing. And many good efforts that are undergoing to stop DCW will succeed.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. PLEASE DO STOP ENCOURAGING DCW IN ALL ASPECT
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [08 September 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 37096

DEAR BROTHERS, ASSALAMU ALAIKUM.

WE ALL SHOULD UNITE AND STOP ENCOURAGING DCW IN ALL ASPECTS - AS COMMON EVERYONE FROM OUR KAYALITES KNOWS DCW IS DOING A LOT AND LOT OF HARM FOR OUR HOME TOWN PEOPLE AND WHY OUR KAYALITES RUNNING MANAGEMENT GIVE PRIORITY AND GIVE PREFERENCE TO DCW MANAGEMENT (OR) STAFF. WE SHOULD AVOID THEM AND IGNORE THEM.

INSHA ALLAH WE ALL UNITE AND WE WILL WIN.

WE SUPPORT ALL ACITIVITIES OF KEPA....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by ahmed meera thamby (makkah) [08 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37097

DCW க்கு எதிராக பல போராட்டம் நடக்கும் இந்த நேரத்தில் இது போன்ற பயற்சி தேவையா இந்த தொளிட்ட்சாலையில்? வேறு நிறுவனம் இல்லையா? தயுவு செய்து உங்கள் சொந்த நலனுக்காக ஊரையும் ஊர் மக்களையும் பலிகிடா ஆக்க வேண்டாம். இது என் பணிவான வேண்டு கோல்

நன்றி
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. குள்ள நரி தனமாக கையாளும் யுக்தியாகும்.. இது இந்த ஆலையின் ராஜதந்திரம்.
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [08 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37099

1) வாவு வஜீஹா கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது!

2) வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் இலக்கிய இன்பம் - சிறப்புக்கூட்டம்!

3) வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் மாணவ பேரவையின் தொடக்க விழா நடைபெற்றது!

4) வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாண்புயர் ரமலான் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள்!

5) வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி!

6) வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட கூட்டம் நடைபெற்றது!

7) வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் பொருளியியல் துறையின் சிறப்பு மன்றக் கூட்டம் நடைபெற்றது!

8) வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத் தொடக்க விழா நடைபெற்றது!

9) வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் பெண்கள் மையத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது!

10) வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட கூட்டம் நடைபெற்றது!

மேற்கண்ட பல தலைப்புக்களில் மட்டுமே இக்கல்லூரி தொடர்ப்பான நிகழ்ச்சிகள் / செய்திகள் படித்து வரும் வேளையில் வாவு வஜீஹா கல்லூரி மாணவியர் DCW ஆலைக்கு தொழிற்சாலை பயணம் குறித்த செய்தி படித்ததும் வெந்த புண்ணில் வேல் பாய்வது போல் ஒரு வித வலியை உணருகிறேன்...!

தூத்துக்குடி மாவட்டத்தில் எத்தனயோ பல தொழிற்சாலைகள் இருக்கும் பட்சத்தில் நமது ஊரின் ஒட்டுமொத்த சமுதாய மக்களும் சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த உயிர்கொல்லி இராசயன ஆலையை மட்டும் தேர்ந்துடுத்து தொழிற்சாலை பயணமாக (INDUSTRIAL VISIT) இக்கல்லூரி நிர்வாகம் நமது மாணவிகளை அழைத்து சென்றது சரியில்லை என்பது என் கருத்து.

இந்த DCW உயிர்கொல்லி தொழிற்சாலைக்கு (INDUSTRIAL VISIT) க்காக மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அழைத்து செல்லாவிட்டால் இக்கல்லூரியின் அங்கீகாரத்தை அரசு ரத்து ஏதும் செய்து விடுமா...! என்ன..?

மேலும், நகரில் இத்தொழிற்சாலை குறித்து நடக்கும் போராட்டம் அவசியமற்றது என்றும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. COPY - PASTE

நமது ஊரில் உள்ள செல்வந்தர் / பெரியவர் எவர் மூலமாகவாவது தனது DCW உயிர்கொல்லி ஆலைக்கு எதிராக நம் நகரில் வீரியம் பெற்றிருக்கும் போராட்டம் / வழக்கு இவைகளை சமரசம் / வாபஸ் செய்ய வைக்கும் குள்ள நரி தனமாக கையாளும் யுக்தியாகும்.. இது இந்த ஆலையின் ராஜதந்திரம்.

DCW நிர்வாகமே...! எம்மக்கள் ஊரில் உள்ள செல்வந்தர்களுக்கும் - அவர்களின் சொல்லுக்கும் கட்டுபடுபவர்கள் அல்ல..! நியாயத்திற்கும், நீதிக்கும் மட்டுமே கட்டுபடுபவர்கள் ஆவார்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை பஷீர் (சென்னை) [08 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37100

இந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கின்றது.

வாவு வஜீஹா கல்லூரியின் நிர்வாகிகள் பொது வாழ்விற்கு புதியவர்கள் அல்ல.

நமதூர் மக்கள் புற்று நோய்க்கு எதிராக வாழ்வா சாவா போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

ஊரே ஒன்று திரண்டு பசுமை தீர்ப்பாயத்தில் DCW விற்கு எதிராக வழக்கு தொடுத்து அதுவும் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் வாவு வஜீஹா கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயல் எம்மாதிரியான சமிக்ஞைகளை வெளி உலகுக்கு அனுப்பும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் ஊர் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...Its really painful
posted by R.Aboobucker (Chennai) [08 September 2014]
IP: 192.*.*.* United States | Comment Reference Number: 37102

Its really painful to hear that Wajeeha college students had gone to DCW for an industrial visit. How did the Management allow their students to perform this visit inspite of numerous protests from the public? I request humbly to the management not to allow such kind of activities in any form in future. This will really sustain our protest against DCW.

Salam

Aboobucker


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...Why the management of wavoo wajeeha college prefer DCW?
posted by Mohamed Iqbal (Chennai) [08 September 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 37103

The Industrial visit is essential for college students . The college Management should choose a firm and ask permission to them for IV (Industrial Visit).

Many factories soorrunded near by kayalpatnam like BMC , Spic , Thermal Power Plant

Why the wavoo wajeeha college management prefer DCW? it is not fair, it will harm the heart of kayalties .

Also they are brain washing our kayal sisters like the protest which we doing is unnecassary.

Ther is lot of issues going about DCW in kayalpatnam. Why the kayal based management who is running this college prefer this.

Finally my question is
"Why the management of wavoo wajeeha college prefer DCW?"

Expecting Answer ..............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.AC.Salih (Chennai) [08 September 2014]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 37105

நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இந்த முரண்பாடு? கல்லூரி நிர்வாகம் காயல் மக்களுக்கு விளக்கம் தர கடமை பட்டுள்ளது. என் அருமை தாயையும் புற்றுக்கு பழி கொடுத்திருக்கிறேன்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வேதனையின் விளிம்புக்கு பயணமாகிற உணர்வு!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [08 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37107

கொடிய உயிர்க்கொல்லி புற்றுநோய் தாக்கத்தால் பல நமதூர்மக்களை இழப்பதற்கு DCW ஆலை தான் முக்கிய காரணம் ஏன் முதன்மைக் காரணமாககக்கூட இருக்க பல முகாந்தீரமிருக்கிறது என்ற ஆதரங்களை மக்கள் முன் விளக்கி மனித சங்கிலி போராட்டத்தை ஊர்மக்கள் ஒட்டுமொத்த ஒற்றுமையுடன் செய்து முடித்தோம்!

அந்த நேரத்தில் என் மனதில் பட்டது,இந்த போராட்டத்தில் வஜீஹா கல்லூரி கலந்திருக்கலாமே என்று எண்ணினாலும், ஏற்கனவே நாம் தெரிவித்த "வைகோ" வரவேற்ப்பு எதிர்ப்பின் எதிரொலியால் அந்த நிர்வாகம் இதை செய்ய முன்வந்திருக்காது என்று எண்ணி என் மனதினுள் பாராட்டி மகிழ்ந்தேன்.

ஆனால் அந்த மகிழ்ச்சி புலுபூச்சிபோல நசுங்கி நாசமாகி விட்டது.இந்த செய்தியைப்படிக்கும் பொழுது,

உயிர்க்கொல்லி நோயால் எத்தனை நம் இனமக்களை, உறவுகளை,உற்ற நண்பர்களை பதக்கத் துடிக்க பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்,இதற்கு மூல காரணங்களில் ஒன்று அந்த ஆலையிலிருந்து வரும் கழிவு நீர்க்கிருமிகளின் தாக்கம்தான் என்று நாம் மட்டுமல்ல பல இணையதளங்களும் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்திகளும் சொல்லியவண்ணமாக இருக்கும்பொழுது அந்த ஆலையை அப்படியே தனிமைப்படுத்தி எவரும் எற்றுகூடப்பார்க்காமல் இருக்ககூடிய நிலைக்கு தள்ளி அது தன தவறை உணர்ந்து திருந்தவேண்டும் அல்லது திருத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு காயல் குடிமக்களுக்கும் இருந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில்,

அந்த நச்சுஆலையை உற்சாகப்படுத்தும் முகமாக நமதூரின் ஒரே ஒரு பெண்கள் கல்லூரியின் நிர்வாகம் அனைத்து மாணவி களையும் அந்த ஆலைக்கு அழைத்து செல்வது,அந்த ஆலை நிவாக தலைவருக்கு தமது கல்லூரியில் தங்கப்போர்வை போர்த்தி பாராட்டுதலை தெரிவிப்பதுமாகிய இச் செயலைப் பார்க்கும் ஏனைய ஊர்க்காரர்கள் நம் முகத்தில் காரி உமிழ மாட்டார்களா? எத்தரப்பினர் செய்வது உண்மை என்று குழம்பிப்போக மாட்டார்களா?

ஒரு கல்லூரியை நடத்தும் நிர்வாகமே அதன் பொருப்பாசிரியர்களே உங்களுக்குமா ஒன்றும் தெரியவில்லை?. அல்லது போக்கதவர்கள் போராட்டம் செய்வார்கள் அதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற இறுமாப்பா?

ஊர்மக்கள் மந்தைகள்போல் மதிமறந்து முச்சந்தி முதல் முதன்மை சாலைவரை மனிதசங்கிலியால் சங்கமித்தவர் களுக்கு அக்கல்லூரி நிர்வாகம் பதில் சொல்லியே ஆக வேண்டும்!

அன்பு மாணவிகளே உங்கள் அக்கம்பக்கத்து சகோதர சகோதரிகள் பலபேர்கள் இக்கொடிய நோயால் உங்களை விட்டு சென்றிருக்கிறார்கள். வாழ வேண்டிய வயதினரையும் வாரிக்கொடுத்து விட்டு இருக்கிறோமே இதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று அந்த ஆலையின் கழிவு நீர் கிருமிகளின் தாக்கம் தான் என்று ஆதாரத்தோடு அவர்களுக்கு அளித்து அவ்வாலையை எதிர்த்து போராடிக்கொண்டிருகின்ற உண்மை உங்களுக்கு தெரியாதா?

அப்படித்தெரிந்திருந்தும் அவ்வாலை க்கு ஆதரவு தரும் வகையில் முகாம் என்ற பெயரால் அங்கு செல்லலாமா?அல்லது அங்கு செல்லத்தான் வேண்டும் என்று நிர்வாகம் நிர்பந்தித்ததா? பகுத்துணர்வும் பாவையர்களே,நீங்கள் நமது மக்களின் நோய்த்துயரத்தை நுகரத் தெரிந்த உங்களுக்கு இந்த நிர்வாக ஆணையிலிருந்து நகரத்தெரியவில்லையா?

நாங்கள் நமதூர் மக்களுக்காக பாடுபடுபவர்கள் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு பலர்,அரசியல் வாதிகள் முதல் ஆட்சிமன்ற தலைவர் உட்ப்பட,பல வார்டு உறுப்பினர்கள், வார்டு தேர்தல் கள வேட்பாளர் வரை DCW வை நேரிடியாகவும், மறைமுகமாகவும் ஆதரித்து வருகிறார்கள் என்ற வேதனை செய்தி வந்து கொண்டிருக்கிறது, அச் செய்திகள் அனைத்தும் உண்மையானால்அல்லாஹ்விற்குஅஞ்சிக்கொள்ளுங்கள், அந்த ஆட்க்கொல்லி நோய் ஆட்களை அடையாளம் கண்டு அணுகாது,நாளைக்கு யாருக்கும் எவருக்கும் வரலாம். கேவலம் தற்காலிக பொருளுக்காகவும்,பதவிக்காகவும் நம் மக்களை வாழ்வாங்கு வாழக்கூடியவர்களை வாரிக்கொடுத்து அந்த நச்சு ஆலையை வாழ வைக்க முயலாதீர்கள்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

ஆதங்கத்துடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்) [08 September 2014]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 37108

உயிருக்கு உலை வைக்கும் DCW ஆலையை எதிர்த்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் வாவு வஜிஹா கல்லூரியின் இச்செயல் எமது மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல் உள்ளது.

சமீபத்தில் நடந்த உங்கள் வீட்டு சொந்தப் பிரச்சனைக்கு ஊரே ஒன்று திரண்டு வந்து போராடியதால்தான் அந்தப் பிரச்சனை சுலபமாகவும் சுமூகமாகவும் முடிந்தது என்பதை நினைவில் கொள்க!

கடந்த ரமலான் மாதத்தில் நமதூரில் ஏற்பட்ட மரணம் 22 இதில் கேன்ஸர் பாதிப்பால் இறந்தவர் எண்ணிக்கை 19 இப்படி ஊர் மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் இந்த நாசக்கார ஆலைக்கு என்ன இழவிற்கு மாணவியர்களை அழைத்துச் செல்ல வேண்டும்? வேறு ஒரு கல்லூரி இவ்வாறு நடந்து கொண்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை!

முழுக்க முழுக்க நமதூரைச் சார்ந்த ஓர் நிர்வாகம் இவ்வாறு ஊர் நலனில் அக்கரை இல்லாமல் நடந்து கொண்டதில்தான் மிகுந்த மன வருத்தம். இனியேனும் பொறுப்புடன் நடந்துகொள்வது அவசியம்

_ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [09 September 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 37110

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரகாத்துஹு.

DCW தொழிற்சாலைக்கு தொழிற்சாலை பயணம் மேற்கொண்ட மாணவிகள் ஒரு கட்டுரை வடிவில் அதன் செயல்திட்டதினை கொடுத்தால் DCW க்கு எதிராக போராடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இறைவனின் ஏற்பாடு, வாழ்கையை POSITIVE ஆக எடுக்க பழகிகொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. 'அபலைகளின் அழுகுரல்' கேட்கிறதா?
posted by Salai.MohamedMohideen (USA) [09 September 2014]
IP: 50.*.*.* United States | Comment Reference Number: 37111

எங்கிருந்தோ வந்த எழுத்தாளரான சமஸ் -க்கு கேட்ட 'அபலைகளின் அழுகுரல்' நமதூர் கல்லூரி நிர்வாகத்துக்கு கேட்காமல் போனது விந்தையிலும் விந்தை.

காசே கடவுளடா என்று எண்ணும் 'கார்பரேட் உலகத்தினர்' மற்றும் பணம்படைத்த அதிகார வர்க்கத்தினர்....

கடையக்குடியில் நலத்திட்ட உதவிகள், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மரக்கன்று, விளையாட்டு போட்டிகள் அனுசரணை... இவயனைற்றும் எதற்காக? தங்களுடைய தகிடு தத்தங்களை வரம்பு மீறல்களை மறைத்து... உள்ளூர் மக்களிடம் நல்லதொரு இணக்கம் சமூக சேவை என்று அரசாங்கத்தை பொது மகாஜனத்தை ஏமாற்று வதற்காக. இதற்கு அழையா (?) விருந்தாளியாக 'பொறியில் சிக்கிய எலிகள்' போல நம்மவர்கள்.

கலியுகத்தில்.... ஒவ்வொரு பொது நலத்திலும் சுயநலம் ஒழியாமல் இல்லை.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...no respect in kayalptnam people
posted by thanga thamby kadersahib (Saudi Arabia. Riyadh) [09 September 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37112

Manasu vathanai. ...This people not respect in kayalptnam people


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Mohamed Younus K.S (KAYALPATNAM) [09 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37115

வீட்டிற்கு அருகில் இருந்த அம்மன் கோயில் பிரச்னையை வீதி பிரச்சனையாக ஆக்கி அவர்களுக்கு விடியல் வாங்கி கொடுத்தவர்கள் தான் இந்த ஊர் மக்கள்,பொதுநல அமைப்புகள்.

காலம் காலமாக சட்டத்தினால் கூட தீர்க்கமுடியாத இந்த பிரச்னையை தங்கள் சாத்வீக போராட்டத்தினால் சமாளித்து தீர்த்துகொடுத்ததற்காக இந்த ஊரு மக்களுக்கு இவர்கள் அளித்த நன்றி நவிலல்தான்,....

உங்கள் ஊர் ஒற்றுமை எல்லாம் உங்கள் உலை வேகும் வரைதான்.

மடிந்த புற்று நோயாளிக்கு நீங்கள் பதில் கூற தேவை இல்லை. மனித சங்கிலியில் கால் கடுக்க நின்றவர்களுக்கும், ஆலைக்கு எதிராக வழக்காடும் கெபாவிற்கும் (KEPA) பதில் கூறுங்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Benefit of Doubt & Guest Lectures
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [09 September 2014]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 37123

The concerns expressed by the people here are all genuine. At the same time, i think we should hear the Management side too. THERE ARE TWO SIDES TO A COIN. It is possible that the trip had been arranged without the knowledge of the family that runs this.

Request the Principal and Board to explain what really happened. It's not a private academic affair. A College, or any institution, CANT BE DETACHED FROM THE SOCIETY it operates in.

* Guest Lectures *:

There are plenty of organizations / people who could do that professionally. And, there are people who are ready to do it for free.

I have done a one-day session (PPTs, Video, Group Exercises)on ATTITUDE at a College , and have spoken to my alma mater Muhyideen Matric School Students recently too.

My good friend Prof. Dr. Thameem Ansari would be happy to do so while at Kayal. And, we have Global experience. For sure, there are some more Kayalites who'd be happy to share their knowledge & expertise.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Mohideen (Jeddah) [09 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37124

அட்மின், இந்த மாதிரி சர்சைக்குரிய செய்தியை வெளியிடும் பொழுது தயவு செய்து சம்பந்தத பட்டவரிடம் கருத்தை கேட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும். இதனால் சில சகோதரரின் வீண் கருத்துக்களை தவிர்க்கலாம்.

(///////வீட்டிற்கு அருகில் இருந்த அம்மன் கோயில் பிரச்னையை வீதி பிரச்சனையாக ஆக்கி அவர்களுக்கு விடியல் வாங்கி கொடுத்தவர்கள் தான் இந்த ஊர் மக்கள்,பொதுநல அமைப்புகள். //////////)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [09 September 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37128

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் மக்கள் வெறியுடன் இந்த நாசமாப்போன >>>> DCW <<<< தொழிற்சாலையை எதிர்த்து போராடும் இந்த வேலையில் ........ நமது ஊர் கல்லூரி நிர்வாகத்தினர்கள் நம் மக்களை அங்கு அழைத்து போவது சுத்த முட்டாள் தனமான செயல் என்றே கூறலாம்.......

ஏன் இப்படி ஒரு செயலை கல்லூரி நிர்வாகத்தினர்கள் செய்ய நாடினார்கள் .....

நம் ஊர் மாவட்டத்தில் வேறு எங்குமா இது போன்ற மற்ற தொழிற்சாலைகள் இல்லையா ......

மேலைக்கு கல்லூரி நிர்வாகதினார்கள் இது போன்ற செயலை செய்யாமல் இருப்பது நன்றே ....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ஆகஸ்ட் 16 அன்று நடந்த நிகழ்வை செப்டம்பர் 08 பிரசுரிக்கும் உள் நோக்கம் என்ன? Re:...
posted by Muthu Magdoom VSH (Jeddah) [10 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37142

ஆகஸ்ட் 16 அன்று நடந்த நிகழ்வை செப்டம்பர் 08 பிரசுரிக்கும் உள் நோக்கம் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. எல்லாம் GUESS தானா? Re:...
posted by Muthu Magdoom VSH (Jeddah) [10 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37144

நகரில் இத்தொழிற்சாலை குறித்து நடக்கும் போராட்டம் அவசியமற்றது என்றும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது. கூறியதாகத் தெரிகிறது. கூறியதாகத் தெரிகிறது. கூறியதாகத் தெரிகிறது.(C&P)

எல்லாம் GUESS தானா?

ஊர்ஜிதமற்ற தகவல்???????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Wavoo Arts Students Industrial Visit to DCW...Reg
posted by S HAMEEDULLAH SHERIEF (KAYALPATNAM) [16 September 2014]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 37276

I deeply Share my condolence to the Principal and College Management who arrange the visit in the name of Industrial Visit. They should understand the pain of kayalpatnam people.

I heard from the Students & Staffs that the Concern Departments and College Management has get a willingness in the form of written permission from the BBA., BCom., MCom., Students as well as from their parents too. I think if the people of kayalpatnam deny permission to their daughters to visit the company means the departments as well as college management may avoid the visit.

So In this point the collective responsibility is there. Kindly think and respond before doing anything.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved