Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:26:26 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14470
#KOTW14470
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 8, 2014
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 28 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 9 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5888 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐம்பெரும் விழாக்கள்:

காயல்பட்டினம் தீவுத்தெருவில் அமைந்துள்ள அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா, ஹிஜ்ரீ 1435, துல்கஃதா மாதம் 09, 10, 11 (05.09.2014 முதல் 07.09.2014 வரை,) வெள்ளி - சனி - ஞாயிறு கிழமைகளில்,
உலகம் போற்றும் உத்தம நபியின் உதயதின விழா,
மாமறையை மனதிலேற்றிய மகளிருக்கு ‘ஹாஃபிழா‘ பட்டமளிப்பு விழா,
தீன் ஞானம் கற்றோருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா‘ ஸனது வழங்கும் விழா,
தஃப்ஸீருல் குர்ஆன் - அருள்மறை விளக்கவுரை குறுந்தகடு வெளியீட்டு விழா,
கல்லூரியின் 32ஆம் ஆண்டு துவக்க விழா
ஆகியவற்றை உள்ளடக்கி ஐம்பெரும் விழாவாக, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் நடைபெற்றது.

மகளிர் நிகழ்ச்சிகள்:

முதல் இரு நாட்களில், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை உட்பகுதியில் பெண்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் சன்மார்க்க நிகழ்ச்சிகள், திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு), தஃப்ஸீருல் குர்ஆன், வினாடி-வினா (Aroos Quiz), பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

நிறைவு நாள் நிகழ்ச்சி:

நிறைவு நாளான 07.09.2014 ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்ச்சிகள், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் முன்பகுதி சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆண்கள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

காலை நிகழ்ச்சிகள்:

காலை அமர்வு 10.30 மணிக்குத் துவங்கியது. காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ இவ்வமர்விற்குத் தலைமை தாங்கினார்.

காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், அதன் செயலாளர் எஸ்.எம்.கபீர், நகரப் பிரமுகர்களான என்.எஸ்.நூஹ் ஹமீத், எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ், சொளுக்கு முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, எஸ்.ஏ.பீர் முஹம்மத், எஸ்.ஏ.முஹம்மத் அலீ, கே.எஸ்.முஹம்மத் நூஹ், எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், பாளையம் முஸ்தஃபா, வாவு எஸ்.அப்துல் காதிர், எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, மவ்லவீ ஹாஃபிழ் பந்தே நவாஸ் மிஸ்பாஹீ, எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம், பிரபு சுல்தான், எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.





ஹாஃபிழ் என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ‘லுத்பில் இலாஹி‘ என்ற இறைவேண்டற்பாவை அனைவரும் நின்று ஓதினர். குருவித்துறைப் பள்ளி செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ,முஹம்மத் இஸ்மாஈல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நிறுவனர் உரை:

நிகழ்ச்சி தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, மத்ரஸாவின் வரலாற்றுச் சுருக்கவுரையை அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ் வழங்கினார்.



வாழ்த்துரை:

காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வரும், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, பன்னூலாசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்‘ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவையின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.







காயல்பட்டினம் ஷெய்கு ஹுஸைன் பள்ளி இமாம் ஹாஃபிழ் என்.டீ.ஷெய்கு சுலைமான் துஆவுடன் காலை அமர்வு நிறைவுற்றது. காலை நிகழ்ச்சிகளனைத்தையும் ஹாஜி ஏ.எல்.முஹம்மத் நிஜார் நெறிப்படுத்தினார்.



மாலை நிகழ்ச்சிகள்:

அடுத்த அமர்வு 17.00 மணிக்குத் துவங்கியது. நகரப் பிரமுகர்களான ஏ.கே.பீர் முஹம்மத், முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், எஸ்.எம்.உஸைர், எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, எஸ்.ஏ.ஸாலிஹ், மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, கே.எம்.செய்யித் அஹ்மத், வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஃபிழ் காரீ எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.



தலைமையுரை:

அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ ஃகலீஃபத்துஷ் ஷாதுலீ மாலை அமர்விற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.



வாழ்த்துரை:

மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ, மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.





இரவு நிகழ்ச்சிகள்:

மஃரிப் தொழுகைக்குப் பின் தொடர்ந்த நிகழ்ச்சியில், எம்.என்.ஷாஹுல் ஹமீத் இஸ்லாமிய தமிழ்ப் பாடல் பாடினார். தொடர்ந்து, ‘யா ஸெய்யிதீ யா ரஸூலல்லாஹ்‘ என்ற நபிகளார் புகழ்பா அனைவராலும நின்றோதப்பட்டது.



குறுந்தகடு வெளியீடு:

அதனைத் தொடர்ந்து, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியில் - குடும்பப் பெண்களுக்காக, அக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ நடத்தி வரும் தஃப்ஸீருல் குர்ஆன் விளக்கவுரை வகுப்புகளின் ஒலிப்பதிவுகளடங்கிய குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார் குறுந்தகட்டின் துவக்கப் பிரதிகளை வெளியிட, நகரப் பிரமுகர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ், பிரபு எம்.என்.ஜெய்னுல் ஆபிதீன், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அடுத்த பிரதியை, வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் வெளியிட, பிரபு சுல்தான் அதனைப் பெற்றுக்கொண்டார்.





வெளியிடப்பட்ட குறுந்தகடு தொடர்பான அறிமுகவுரையை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ வழங்கினார்.



சிறப்பு விருந்தினர் உரை:

இந்நிகழ்ச்சியில், சென்னை பாலவாக்கம் மஸ்ஜிதே மஹ்மூத் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.யு.அபூபக்கர் உஸ்மானீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



மார்க்க அறிஞர்களின் கடமை, மார்க்கச் சேவைகளில் மகளிரின் கடமைகள் - பங்களிப்புகள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கி அவரது விரிவான உரை அமைந்திருந்தது.

பட்டமளிப்பு:

ஸனது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டம் பெறும் மாணவியரின் பெயர் பட்டியலை ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ வாசிக்க, பெண்கள் பகுதியிலிருந்து கல்லூரியின் கண்காணிப்பாளர்கள் (ரக்கீபாக்கள்) மாணவியருக்கு ஸனது – பட்டச் சான்றிதழ்களை வழங்கினர்.



கல்லூரியில் திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு, ஹாஃபிழா ஸனது - பட்டம் பெற்ற 9 மாணவியரின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-



கல்லூரியில் மூன்றாண்டு கற்றுத் தேர்ந்து, ‘ஆலிமா அரூஸிய்யா‘ ஸனது - பட்டம் பெற்ற 28 மாணவியர் பெயர் பட்டியல் பின்வருமாறு:-







‘ஆலிமா அரூஸிய்யா‘ ஸனது - சான்றிதழில் இடம்பெற்றிருந்த அரபி மொழியிலான வாசகங்களை, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி, ஜாவியா அரபிக்கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஐ.முஹம்மத் அப்பாஸ் காஷிஃபீ தமிழாக்கம் செய்து விளக்கிப் பேசினார்.



காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகிய நிறுவனங்களின் துணை முதல்வரும், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ - பட்டம் பெற்ற மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.



ஹாஃபிழ் மாணவியருக்கு சிங்கை கா.ந.மன்றம் பரிசு:

பின்னர், காயல்பட்டினத்தைச் சார்ந்த - திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு) செய்து முடிக்கும் மாணவ-மாணவியருக்கு ஊக்கப் பரிசு வழங்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், இக்கல்லூரியில் பயின்று ‘ஹாஃபிழா‘ பட்டம் பெற்ற 9 மாணவியருக்கு தலா ரூ.2,500 பணப்பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் பணப்பரிசுகளை வழங்க, மாணவியரின் சார்பில் - கே.எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் அவற்றைப் பெற்றுக்கொண்டார்.



அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர் பிரபு எம்.என்.ரியாஸுத்தீன் நன்றி கூற, ஜாவியா அரபிக்கல்லூரி, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகிய நிறுவனங்களின் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் துஆவுக்குப் பின் ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. மாலை நிகழ்ச்சிகளனைத்தையும், என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நெறிப்படுத்தினார்.









பங்கேற்றோர்:

அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரப் பிரமுகர்கள், ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட நகரின் பல பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்கள், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை உட்புறத்திலிருந்தவாறு நிகழ்ச்சிகளை அவதானித்தனர்.









நிறைவு நாள் நிகழ்ச்சிகளனைத்தும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டது.

தகவல் உதவி:
பிரபு M.N.ரியாஸுத்தீன்


அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் முந்தைய பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [08 September 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 37101

மாஷா அல்லாஹ்....சுப்பரா இருக்கு பார்பதற்கு..."

ஒரு மாநாடு போல அருமையாக இருந்துள்ளது..."

இதில் உழைத்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த துஆ உடன் கூடிய வாழ்த்துக்கள்..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. أللهم أحينا علي أهل السنة والجماعة
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore ) [08 September 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 37104

அஸ்ஸலாமு அலைக்கும்! வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு பட்டம் பெற்ற ஆலிமா அரூசிய்யா , ஹாபிளா அரூசிய்யா அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

நீங்கள் பெற்ற கல்வியைக் கொண்டு முதலில் நீங்களும் , உங்களின் உற்றார் , உறவினர் , குடும்பத்தினர்கள் அனைவரும் பயன் பெற்று , நல்லமல்கள் புரிந்து பிறகு நீங்கள் கற்ற கல்வியை பிறருக்கு போதிக்க வேண்டும் .

உங்களின் சன்மார்க்க தஃவா பணிகள் அனைத்தும் இந்த கலாசாலையின் பெயர் தாங்கிய சங்கைக்குரிய மஹான் காயலில் உதித்து, கீழக்கரையில் மறைந்து வாழும் அல்லாமா அஸ் –செய்கு இமாமுல் அரூஸ் செய்யிது முஹம்மது மாப்பிளை லெப்பை ஆலிம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி ) அவர்கள் போதித்த “அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்து “ கொள்கை ஒன்றை மாத்திரமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு சன்மார்க்க சேவை புரியுங்கள் !

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் எங்கள் கண்மணி நாயகம் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் பரக்கத்தால், அன்னாரின் பொருட்டால் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வதையும் , அழகிய வாழ்க்கைத் துணையையும், சாலிஹான குழந்தை செல்வத்தையும் தந்தருளி , நாம் கற்ற சன்மார்க்க அறிவின் மூலம் , நாமும் , நம்மை சார்ந்த அனைவரும் பயன்பெற்று ஈருலக சகல சவ்பாக்கியங்கள் அனைத்தையும் பெற்றேக பேரருள் புரிவானாக ! ஆமீன் !!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [08 September 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37106

பட்டம் பெற்ற ஆலிமா ஹாபிழாக்களுக்கு வாழ்த்துக்கள்!

தாங்கள் கற்ற அறிவின் படி அமல் செய்யவும் தங்களது மக்களையும் தீனிய்யாத் கல்வியில் மேலோங்க செய்யவும் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக - ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...ALHAMDHULILLAAH
posted by Naseem Shihabudeen (Srilanka) [08 September 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 37109

அஸ்ஸலாமு அலைக்கும்!

அரூஸுல் ஜன்னஹ் மத்ரஸாவில் ஸனது பெற்ற அனைத்து ஆலிமாக்களுக்கும் ஹாஃபிழாக்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.உலகத்திலேயே உயர்ந்த பட்டத்தினை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.உங்கள் கல்வி எப்போதும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

தீனுக்கும் துன்யாவுக்கும் உதவியாக இருக்கவேண்டும்.நீங்கள் கற்ற கல்வியைக்கொண்டு தஃவத் பணியை மேற்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் மத்ரஸாவிற்கும் உஸ்தாத்மார்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உங்களை வளர்த்தவர்களான பெற்றோர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரும் சேவையும் நன்றியுமாகும்.எக்காலத்திலும் தீனுக்கு சோதனை வரும்போது ஹக்கை மட்டுமே எடுத்துச்சொல்லவேண்டும்.

ஹாஃபிழாக்களும் உங்கள் மத்ரஸாவிற்கும் உஸ்தாத்மார்களுக்கும் நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும். திருமறையை மனனம் செய்துவிட்டு அதை மறப்பது மிகப்பெரும் பாவம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எனவே மீண்டும் மீண்டும் அதை ஓதிக்கொண்டிருந்தால் மனதைவிட்டு சென்றுவிடாமல் இருக்கும்.

எனவே நம்முடைய ஹிப்ழைக்கொண்டும் இல்மைக்கொண்டும் வாழ்க்கையில் பிரயோஜனம் அடைவதற்க்கு எல்லாம்வல்ல இறைவன் தௌஃபீக் செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [09 September 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37127

மனமுவந்து வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இவ்வளவு அழகிய முன்மாதிரியா/
posted by mackie noohuthambi (kayalpattinam) [10 September 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 37146

நபிகள் நாயகம் அவர்களின் வாக்கும் வாழ்வும் எப்படி அமைந்திருந்தன என்பதை உலமா பெருமக்கள் பல கோணங்களில் எடுத்து பேசி இருக்கிறார்கள். விட்டுக் கொடுப்பது, தட்டிக் கொடுப்பது, திருத்திக் கொடுப்பது, கடிந்து கொள்வது, அணைத்துக் கொள்வது எல்லா வற்றிற்கும் நபிகள் நாயகம் ஒரு அழகிய முன்மாதி. LA QADHKAANA LAKUM FEE RASOOLILLAAHI USWATHUN HASANAA என்று ஒரு சிறிய வரியில் அந்த நபிகள் நாயகத்தின் புகழை அல்லாஹ் சொல்லி விட்டான்.

இந்த மாதிரி அரபிக் கல்லூரிகள் வெளியூகளில் திறக்க வேண்டும் என்று பலரும் ஏங்கிக் கொண்டிருப்பதாக நிறுவன தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி சொன்னார்கள். 100 விழுக்காடு சரியான செய்தி. அதற்கு இந்த மதரசாவில் கற்று அறிந்து வெளியேறும் உலமாப் பெண்மணிகள் தயாராக வேண்டும். அல்லாஹ் அவர்களை கபூல் செய்வானாக. திருமறை செல்விகள் 9 பேரும் நவரதினங்களாக ஒளி வீச அல்லாஹ் அருள் புரிவானாக.

எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்கள், வீட்டுக்கு ஒரு ஹாபில் இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். அப்படியே அவர்கள் குடும்பத்திலும் உருவாக்கி காட்டினார்கள். அவர்களின் நினைவாக மக்கி ஆலிம் நினைவு பரிசாக "இவ்வளவு அழகிய முன்மாதிரியா?" என்ற சிறப்பான நூல் ஹாபிலாக்களுக்கு வழங்கப் பட்டுள்ளது .

அல்லாஹ்வின் திருமறை நபிகள் நாயகம் அவர்களின் வழிமுறை இவை இரண்டில்தான் ஈருலக வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. அல்லாஹ் எல்லோருக்கும் ரஹ்மத் செய்வானாக.

RABBI ZIDHNEE ILMAA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இஸ்லாமிய மாநாடு
posted by NIZAR (kayalpatnam) [10 September 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 37148

வல்லமை சால் இறைவனின் பேரருளால் காயல்பட்டிணம் அரூசுள் ஜன்னஹ் இஸ்லாமிய மகளிர் கல்லூரின் பத்தாவது பட்டமளிப்புவிழா மிக சிறப்பாக நடந்தது.28 ஆலிமாக்களும்.9 ஹாபிலாக்களும் சனது பெற்றார்கள்.

நிறைவு நாள் நிகழ்சிகளில் உலமாக்களின் வாழ்த்து ரைகளும்,கூட்ட அமைப்பும் ஒரு இஸ்லாமிய மாநாடு போல பிரம்மித்து இருந்தது. சென்னை பாலவாக்கம் பள்ளிவாசல் இமாம் மௌலவி அபூபக்கர் உஸ்மானி அவர்களின் சிறப்புரை அனைவரையும் எங்கும் அசையவிடாமல் கட்டிபோட்டது.

இந்த கல்லூரி சம்பந்தட்ட பதிவில் கல்லூரியை வாழ்த்தியும், துஆவும் செய்து கருத்துக்கள் பதிந்த முகநூல் சொந்தங்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நன்றியினை தெர்வித்து கொள்கிறேன்

எல்லா வல்ல இறைவன் இந்த அரூசுள்ஜன்னஹ் மகளிர் கல்லூரி தொடர்ந்து மார்க்க சேவையாற்றிட அருள்புரிவானாக,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved