Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:04:33 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20023
#KOTW20023
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 19, 2017
காயல் குப்பை அரசியல் (பாகம் 22): “கொம்புத்துறை வடபகுதியில் குப்பைக்கிடங்கு அமைய எதிர்ப்பு தெரிவித்து கொம்புத்துறை, அருணாச்சலபுரம் மக்களால் வழங்கப்பட்ட மனு!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1730 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. “கொம்புத்துறை வடபகுதியில் குப்பைக்கிடங்கு அமைய எதிர்ப்பு தெரிவித்து கொம்புத்துறை, அருணாச்சலபுரம் மக்களால் வழங்கப்பட்ட மனு!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 22ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தர முன்வந்த சர்வே எண் 278 இடத்தில - குப்பைக்கிடங்கு / பயோ காஸ் திட்டங்கள் கொண்டு வர, அக்டோபர் 11, 2013 அன்று ஆதரவு தெரிவித்து - நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் முந்தைய பாகங்களில் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து - டிசம்பர் 6, 2013 இல் - கொம்புத்துறை (கடையக்குடி), அருணாச்சலபுரம் பொது மக்கள் சார்பாக - அத்திட்டங்களை அப்பகுதிகளில் கொண்டு வர, எதிர்ப்பு தெரிவித்து கடிதங்கள் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையரிடமும் கொடுக்கப்பட்டது.





அந்த கடித்ததில் - நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து குப்பைகளையும், கழிவுகளையும் நாங்கள் வாழக்கூடிய பகுதியில் கொட்டும்போது, அதை தேங்கி வைக்கும் போது, அதில் இருந்து வரும் துர்நாற்றமும், நோய்கிருமிகளும், எங்களது, எங்களது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் சுகாதார வாழ்வுக்கும், கேடு விளைவிக்கும், காரணிகளாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏற்கனவே DCW தொழிற்சாலை எங்கள் பகுதிக்கு அருகில் இருப்பதால், அந்த ஆலையின் இரசாயனக்கழிவுகளால் பெரிதும் பாதிப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அந்த ஆலையில் இருந்து நச்சுக்கழிவுகள் கடலில் வந்து கலக்கும் போது, கடல் தண்ணீர் குறிப்பாக கடற்கரையோர மணல்திட்டுக்களும், கடற்கரையோர கடல் பகுதியும், சிவப்பு நிறமாக மாறிவிடுகின்றது.

இந்த இரசாயன கழிவுகள், சிறு நீர் பிரச்சனை, புற்றுநோய், தோல் அரிப்பு, பல ஒவ்வாத தன்மை (allergical) நோய்களை ஏற்படுத்துகிறது.

எனவே, ஏற்கனவே உடல்நோய்களோடு, சுகாதார சீர்க்கேட்டோடு, வாழுகின்ற எங்களுக்கு, நகராட்சியின் இந்த குப்பைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் எங்களது, எங்களது குழந்தைகளது, எம் எதிர்கால தலைமுறையின் சுகாதார வாழ்வுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, எங்கள் பகுதியில் நிறைவேற்ற நகராட்சியின் குப்பைகள் மற்றும் கழிவுகள் மறுசுழற்சி திட்டத்திற்கான இடத்தை மாற்றி, எந்த மக்களும் பாதிக்காத ஒரு இடத்தில் செயல்படுத்த ஆவன செய்ய தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கொம்புத்துறை (கடையக்குடி), அருணாச்சலபுரம் மக்கள் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட அந்த கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு, திருச்சி தேசிய கல்லூரியின் நிலவியல் துறை, A STUDY ON THE WATER POLLUTION OF KAYALPATTINAM AREA, TUTICORIN, TAMILNADU என்ற ஒரு தலைப்பில் - ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. JOURNAL OF INDUSTRIAL POLLUTION CONTROL 20(1) (2004) என்ற புத்தகத்தில் பக்கங்கள் 25 - 30 இல் இடம்பெற்ற இந்த ஆய்வறிக்கையை, அத்துறையை சார்ந்த எஸ்.செல்வராஜ், எம்.பெரோஸ் கான், ஆர்.பாஸ்கரன் மற்றும் கே.அன்பரசு ஆகியோர் தயாரித்திருந்தனர்.

அந்த ஆய்வறிக்கை, காயல்பட்டினம் வடபகுதி மற்றும் கடலோர பகுதிகளில் - DCW தொழிற்சாலை கடலுக்குள் கழிவுகளை கலப்பதால், நிலத்து நீருக்கு ஏற்பட்டுள்ள மாசு குறித்து தெரிவிக்கிறது. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கான மாதிரிகள், புன்னக்காயல், அருணாச்சலபுரம், கொம்புத்துறை, சிங்கித்துறை, நகரின் மேற்கு பகுதிகளில் எடுக்கப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.











அந்த ஆய்வறிக்கை - தனது முடிவாக கீழ்க்காணும் கருத்தை வெளியிட்டது.

On the basis of field observations and laboratory study, it has been concluded that the water both surface and subsurface existing in the area is polluted and the levels of pollution are unacceptable. It is one of the effects of the presence of a chemical industry which makes the coastal environment in the area highly vulnerable. The practice of letting the effluents without any pretreatment affects the soil and water of the study area which can not be rectified.

அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகள், ஆய்வுகூட பரிசோதனைகள் அடிப்படையில் - நிலத்தில் உள்ள நீரும், நிலத்திற்கு அடியில் உள்ள நீருக்கும் - ஏற்றுக்கொள்ளமுடியாது அளவிற்கு மாசு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வேதியல் தொழிற்சாலையின் விளைவே இது. இந்த தொழிற்சாலை - கடலோர பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது. சுத்தீகரிப்பு எதுவும் செய்யாமல், கழிவுகளை கடலில் கலப்பது - ஆய்வு பகுதியில் இடம்பெற்றுள்ள நிலத்தையும், மண்ணையும் பாதிக்கிறது. இதற்கு நிவாரணம் கிடையாது. (தமிழாக்கம்)

இந்த ஆய்வறிக்கை - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினால் (KEPA), DCW விரிவாக்கத்திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் - ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டது.

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: டிசம்பர் 11, 2017; 8:30 am]
[#NEPR/2017121101]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved