Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:28:08 PM
புதன் | 8 மே 2024 | துல்ஹஜ் 1742, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:52
மறைவு18:28மறைவு18:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
அமாவசை @ 04:29
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4819
#KOTW4819
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 25, 2010
காயல்பட்டினத்தை முழு சுகாதார நகராக்குவோம்! ஜித்தா கா.ந.மன்ற பொதுக்குழுவில் சூளுரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3791 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரை சுகாதாரமான நகராக்க ஆவன செய்ய வேண்டுமென 17.09.2010 அன்று நடைபெற்ற ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பாலா ஹோட்டல் கூட்ட அரங்கில், 17.09.2010 அன்று நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

எஸ்.எச்.ஹுமாயூன் கபீர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மக்கா எஸ்.ஐ.சிராஜுத்தீன், டாக்டர் முஹம்மத் ஜியாத், குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹாஃபிழ் குளம் எஸ்.எம்.முஹம்மத் இர்ஷாத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். எஸ்.ஐ.அப்துல் பாஸித் வரவேற்றுப் பேசினார்.

துவக்கமாக உரையாற்றிய கூட்டத் தலைவர் எஸ்.எச்.ஹுமாயூன் கபீர், நகர்நலத்திற்காக இதுவரை ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆற்றியுள்ள பணிகள், அதற்காக மன்ற உறுப்பினர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து பேசிய கூட்டத் தலைவர், சமூகத்தை முன்னேற்றும் மன்றத்தின் இவ்வறப்பணிகளில், உறுப்பினர்கள் அனைவரும் தமது முழு பங்களிப்பை மனமுவந்து தொடர்ச்சியாக வழங்க வேண்டுமென தனக்கே உரிய பாணியில் கூட்டத்தில் கலந்துகொண்டோரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றினார்.

பின்னர் மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து மன்றச் செயலர் சட்னி செய்யித் மீரான் விளக்கிப் பேசினார். கடந்த மூன்று கூட்டங்களில் மன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் மற்றும் அவை செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.

அடுத்து உரையாற்றிய மன்றச் செயலர் மக்கா எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், இதுபோன்ற மன்றங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து இறைமறை குர்ஆனிலிருந்தும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும் மேற்கோள் காட்டி உரையாற்றினார்.



மன்றத்தின் கடந்த ஏழு ஆண்டு கால நகர்நலப் பணிகள் குறித்து விவரித்துப் பேசிய அவர், நம் முன்னோர்கள் நம் நகருக்காக செய்த நற்சேவைகளை நினைவுகூர்ந்ததோடு, அந்த நல்வழிமுறை தொடர்ந்து நம்மால் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். அவரது உரை, கூட்டத்தில் இருந்தோரை நற்செயல்களின்பால் தூண்டிச் செல்வதாக அமைந்தது.

அடுத்து, மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை மக்கா ஒய்.எம்.முஹம்மத் ஸாலிஹ் சமர்ப்பித்தார். மருத்துவம், கல்வி, சிறுதொழில் வகைக்காக தேவையுடையோருக்கு நகரில் உதவித்தொகைகள் வினியோகிக்கப்பட்ட விதம் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.

பின்னர் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம் பின்வருமாறு நடைபெற்றது:-

எஸ்.ஷேக் அப்துல்லாஹ்:
சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை ஒரு சிறு கதை மூலம் விளக்கிப் பேசிய அவர், படித்து முடித்த பட்டதாரிகள் தம் படிப்புக்கேற்ற வேலையைத் தேடுகையில், சஊதியில் - குறிப்பாக ஜித்தாவில் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர மன்றம் ஆவன செய்ய வேண்டும் என்றார்.

சிங்கப்பூர் காயல் நல மன்றம், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் பொருட்டு, அவர்களுக்கு சகல வசதிகளுடன் தங்குவதற்கும் ஏற்பாடு செய்துதவுவதை அவர் மேற்கோள் காட்டி, இதுபோன்றதொரு நடைமுறையை ஜித்தா காயல் நற்பணி மன்றமும் செயல்படுத்தலாம் என்று பேசினார்.

கே.வி.கே.ஷாஹ் மீரான்:
சச்சார் கமிஷன் பரிந்துரையில் காணப்படும் முஸ்லிம் சமூகத்தை கல்வித்துறையில் முன்னேற்றுவதற்கான ஆலோனைகள், இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.

எஸ்.எச்.அப்துல் காதிர்:
காயல்பட்டினம் நகரில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவது குறித்து கவலைப்பட்டுப் பேசிய அவர், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பேணிப்பாதுகாத்திடும் பொருட்டு, சுற்றச்சூழல் விஷயத்தில் அவர்களை கூடுதல் விழிப்புணர்வு கொள்ளச் செய்திட, இன்னும் நிறைய குறும்படங்களை (documentary) தயாரித்து வெளியிட வேண்டும் என்றார். இக்குறிக்கோள் குறித்து அனைவரின் சிந்தனையையும் தூண்டும் வகையில், குறுந்தகவல்களை அவர் கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார்.

டாக்டர் ஜியாத்:
ஈத் முபாரக் என்று இனிய பெருநாள் வாழ்த்துக்களுடன் தனதுரையைத் துவக்கிய அவர், இந்த ரமழானில் நாம் செய்த நல் அமல்கள், ரமழானில் நாம் பெற்ற படிப்பினைகள் நம் வருங்கால வாழ்விலும் தொடர வேண்டும் என்றார். வரும் ஆண்டுகளில் நாம் ரமழானை அடைவோமாயின், ரமழானுக்கு முன்னரே அந்த மாதத்தை எங்ஙனம் நல்வழியில் பயன்படுத்துவது என்பது குறித்து திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில், மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு குறித்து அவர் விவரித்துப் பேசியதை கூட்டத்திலிருந்தோர் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்தனர். அந்நிகழ்ச்சியின்போது, அவ்விடத்தில் முழுமையாக துணை நின்ற மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களை அவர் பாராட்டிப் பேசினார்.

குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன்:
இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையில் நம் குழந்தைகளை நாம் வளர்த்திட வேண்டியது அவசியம்... அவ்வாறில்லையேல், அது நம் குடும்பத்தின் நற்சூழலைப் பாதிக்கும் காரணியாகி விடுவதோடு, சமுதாயத்தில் வேற்றுமை உருவாவதற்கும் காரணியாகிவிடும் என்றார்.

சமீப காலமாக காயல்பட்டினத்தில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து மிகுந்த கவலையுடன் அவர் ஆற்றிய உரை, மிகவும் பயனுள்ளதாகவும், இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து அனைவரையும் பாதுகாக்கத் தூண்டும் வகையிலும் அமைந்திருந்தது.



பக்வா தலைவர் மஹ்மூத் நெய்னா:
உம்றா செய்து முடித்துவிட்டு வந்திருந்த பஹ்ரைன் காயல் நல மன்ற (பக்வா) தலைவர் மஹ்மூத் நெய்னா, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிற்றுரையாற்றினார்.

மன்றத்தின் நகர்நலப் பணிகள் குறித்து பாராட்டிப் பேசிய அவர், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வுப் பிரச்சார செயல்திட்டத்தில், தமது பஹ்ரைன் காயல் நல மன்றமும் இணைந்து செயல்பட தாம் பெரிதும் விரும்புவதாக தெரிவித்தார்.

எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக்:
இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்வுகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகத் தெரிவித்த அவர், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்த சில அம்சங்களை தனதுரையில் பகிர்ந்துகொண்டார். வேகமும், வெடிப்பும், வேடிக்கையும் கலந்த அவரது உரை அனைவரையும் ஆர்வத்துடன் கவனிக்கச் செய்தது.

எம்.எம்.அஹ்மத் லெப்பை:
உம்றா செய்வதற்காக வந்திருந்த அவர், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் நகர்நலப் பணிகளைப் பாராட்டிப் பேசியதோடு, அனைவருடனும் தனது பெருநாள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதாகத் தெரிவித்தார்.

விளக்கு எஸ்.ஏ.கே.காதர் ஷாம் (காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்):
இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்வது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த அவர், நமது வாழ்வை அதன் அடிமட்டத்திலிருந்தே சீர் செய்திடும் பொருட்டு, நிறைய நல்லொழுக்கப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.





இக்கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் அதிரை ஜைனுல் ஆபிதீன் உரையாற்றினார்.

அல்லாஹ் திருமறையில் சுட்டிக்காட்டும் சிறந்த சமுதாயம் யார்? என்பது குறித்து தனதுரையில் விளக்கிப் பேசிய அவர், அதுகுறித்த ஏராளமான உதாரணங்களை திருமறை குர்ஆனிலிருந்தும், திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும் எடுத்துக்காட்டி உரையாற்றினார்.

ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் நகர்நலப்பணிகள் மிகுந்த பாராட்டுக்குரியவை என்று பேசிய அவர், இந்தப் பெருநாள் ஒன்றுகூடலில் அனைவரோடும் தானும் கலந்திருப்பது மிகுந்த மனமகிழ்வைத் தருவதாகத் தெரிவித்தார். இம்மன்றம் இன்னும் பல நல்ல செயல்திட்டங்களை ஆர்வத்துடன் செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இக்கூட்டத்தில் தன்னை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்தமைக்காக மனமுவந்த நன்றியைத் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

மன்றத்தின் உறுப்பினரும், காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவருமான ஹாஃபிழ் முஜாஹித் அலீ இயற்றி, அதே தெருவைச் சார்ந்த சிறுமி ஸஃபீரா தன் இனிய மழலைக் குரலால் பாடிய மன்றத்தின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பாடல் பதிவு இக்கூட்டத்தின்போது அனைவரும் கேட்கும் வகையில் ஒலிபரப்பப்பட்டது.

கூட்ட ஏற்பாடுகளை எம்.ஐ.முஹம்மத் ஷுஅய்ப், எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம், எஸ்.ஏ.உமர் அலீ ஆகியோர் செய்திருந்தனர். கூட்ட ஏற்பாடுகளுக்கு பொறியாளர் பஷீர் அனுசரணை செய்திருந்தார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். கூட்டத்தில், மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் தம்மை அனைவருக்கும் அறிமுகம் செய்துகொண்டனர்.

பின்வரும் தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை விரிவுபடுத்தல்:
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மன்றத்தால் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரக் கருத்தரங்கம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு. நகரின் இதர அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் இப்பிரச்சார செயல்திட்டத்தை விரிவுபடுத்தி, நகரை முழு சுகாதார (LITTER FREE) நகரமாக்கிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 2 - அடுத்த செயற்குழு:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் 15.10.2010 அன்று சகோ.ஷமீம் இல்லத்தில் நடைபெறும்.


மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறியாளர் ஜி.எம்.சுலைமான் நன்றி கூற, ஹாஃபிழ் குளம் எஸ்.எம்.முஹம்மத் இர்ஷாத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.





கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு விருந்துபசாரம் செய்யப்பட்டது.



இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல்:
Y.M.முஹம்மத் ஸாலிஹ் மூலமாக,
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ,
ஜித்தா, சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Well said
posted by shaik abbul cader (kayalpatnam) [26 September 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 300

It will be a good task if everything goes well and it is well said and thanks to jkwa


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. DCW
posted by Hussain (Abudhabi) [26 September 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 305

To make kayalpatnam as a healthy place, a through scientific study should be conducted on the waste management of DCW and its impact on our environment. DCW is a major polluter on our shores.

A collective approach is required to address this. Not only government agencies, we should try to involve NGOs like Green Peace in this task. Without addressing this issue making kayal as a health place will remain as a distant dream.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. maash allah
posted by abdul haq (chennai) [26 September 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 311

fine..... ungalin payanam thodara intha adiyaanin vaalthukal.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. My sincere Requests to JKWA
posted by Salai Sheikh Saleem (Dubai) [27 September 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 317

On behaf of kayalites around the globe, I would like to thank Jeddah KWA for their wonderful resolutions and activities that have been rendered to our Native by them.

My sincere requests to JKWA are as follows:

1. If you want to see a healthy environment all over kayal, please invite other KWAs also to cooperate financially and physically which may enable you to do it in a grand manner - which is logically fit also. Prepare a plan and actions and budget, invite other KWAs, who ever wishes to join this noble cause, they should be welcomed without any Ego issue and vice versa, if any other KWAs require your assistance, you may do so. This may help our people benefit more than you do it alone. Please exercise this and atleast in some way we will UNITE.

2. I have been writing in this website and emphasizing in all our KWA-UAE EC Meetings that we should have a full fledged "Career Guidance Center" in Kayal. We have to build a permanent building equipped with state of the art office equipments and a conference hall, computers etc..

By giving small small assistance to our youth may guide them to addict to a habbit of begging all the way. To avoid this, if you give them with proper guidance with financial help, this may lead them to prosperity. Someone should take an initiative to plan and build such facility in Kayal which may keep on helping generations ahead. Hope In your capacity, if KWA Jeddah may initiate this Himalayan task which if we do it unitedly, is Nothing.

Jazakkallah Khairan..Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Take an oath for our clean Kayal
posted by Sheikh Mohammed (Jeddah) [27 September 2010]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 326

S.H.kaka, explain the current situation of our Kayal Kuppai / Koolam is absolutely correct. Me too have seen so many places in our native very bad, no body care about it. They are simply throwing on the street pala thanni. Hence KWA should take a necessary awareness to our people thru media and notice.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. jeddah kwagb meeting eid gatherings
posted by hyder (colombo) [27 September 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 329

bismillah ,very good work.this work will improve the health and environment of our home town.allah make successfully in all your future projects.ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. About Hygiene song
posted by shameem (Chennai) [28 September 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 331

We are much enjoyed KWA Jeddah Hygine song sing by Girl Safeera thru link. Lyrics and vision of the songs is highly appreciated. KWA Jeddah Hygiene campaign will be successes in future. Will support this campaign in all aspects Inshallah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Song Lyrics
posted by Mohamed (UAE) [28 September 2010]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 338

It is very good effort by Jeddah KWA to make Kayal a clean city. The song lyrics written by Br. Mujahid is really very good and meaningful. He had taken his best effort and Safeera sang the song very well. Keep up the good works.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Wonderful Project
posted by Mohamed Irfan (chennai) [29 September 2010]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 357

Assalamu Alaikum..very happy to see u people gathering in regard of eid..

Jeddah Kwa s one of the most effective in taking care of kayal people in different ways.. lets pray for them whom involved in this good project..

wonderful project took by jeddah kwa to hygiene the city MASHA ALLAH.very very smart lyrics and voice of Shafeera motivating in the way of hygienic life..

May Allah shower his blessings to her..our kayal s the role model of tamilnadu to do dis king of things..govt also nedd to help us to finish dis project.
with regards,
irfan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved