Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:05:49 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6061
#KOTW6061
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 1, 2011
காயல்பட்டின பயணிகளை ஏற்றிசெல்லாமல் சென்ற பேரூந்தின் நடத்துனர் மீது நடவடிக்கை: மக்கள் சேவாக் கரங்கள் தகவல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4013 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருசெந்தூரிலிருந்து திருப்பூர் செல்லும் பேரூந்தில், காயல்பட்டின பயணிகளை ஏற்றாமால் சென்ற பேரூந்தின் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு பேரூந்து கழகம் (கோவை) பிரிவு - ஈரோடு மண்டல துணை மேலாளர் (வணிகம்) கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 8 அன்று திருசெந்தூரிலிருந்து திருப்பூர் செல்லும் பேரூந்தில், காயல்பட்டின பயணிகள் 8 பேர், திருச்செந்தூர் பேரூந்து நிலையத்திலிருந்து பயணம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்களை பேரூந்தின் நடத்துனர் ஏற்றவில்லை. இது குறித்து தமிழ்நாடு அரசு பேரூந்து கழகம் (கோவை) பிரிவுக்கு மக்கள் சேவாக் கரங்கள் நிறுவனர் பா.மு. ஜலாலி புகார் மனு ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:-

நேற்று 8.4.2011 அன்று இரவு 7:20 மணியளவில் திருச்செந்தூர் பேரூந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் புறப்பட்டு சென்ற தங்கள் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காயல்பட்டினம் வழியே செல்லும் பேரூந்தில் காயல்பட்டினம் செல்வதற்கு நான் ஏறினேன். பேரூந்து நடத்துனர் ஏற்றமறுத்து, இறக்கி விட்டார். மேலும் ஏழு, எட்டு நபர்களையும் ஏற்றவில்லை. இதென்ன டவுன் பஸ்ஸா எல்லோரையும் காயல்பட்டினம் ஏற்றி செல்ல. புறப்படும் போது ஏறுங்கள் என்று படிக்கட்டில் நின்று கொண்டே நடத்துனர் கூறிவிட்டு எங்களை ஏற்றாமல் பேரூந்து புறப்பட்டு சென்று விட்டது.

பெருத்த அவமதிப்புடன் நாங்கள் நான்கு நபர்கள் இன்னொரு தமிழ்நாடு அரசு பேரூந்து கழகம் பேரூந்தில் ஏறி காயல்பட்டினம் சென்றோம். அதே நேரத்தில் தங்கள் தமிழ்நாடு அரசு பேரூந்து கழகம் (கோவை) பேரூந்து எங்கள் காயல்பட்டினம் வழியாகவே சென்றது. ஆனால் எங்களை ஏற்றவில்லை. இதை பெருத்த அவமதிப்பாகவே கருதிகின்றோம்.

என்னுடன் (1) ஜான்சன் (த/பெ சூசா நாயகம்), கொம்புத்துறை, காயல்பட்டினம்) (2) மகபூப் ஜான் (த/பெ அமீர் ஜான், பைபாஸ் ரோடு, காயல்பட்டினம்), (3) முஹம்மது மொய்தீன் (த/பெ பூசரி, பைபாஸ் ரோடு, காயல்பட்டினம்) ஆகிய 3 பேர்களும் உடன் பிரயாணித்தனர். மீதி 4, 5 நபர்கள் வேறொரு பேரூந்தில் பிரயாணித்து காயல்பட்டினம் வந்தனர்.

தங்கள் நடத்துனர் போக்குவரத்து விதிகளை மீறியது மட்டுமன்றி, பயணிகளிடம் மனித நேயம் இன்றி நடந்து கொண்டதற்குமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படியாக மெத்த பணிவுடன் வேண்டுகின்றோம். எங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டுதான் இந்த புகாரை எழுதுகின்றோம். உரிய நடவடிக்கை எடுத்து, தெரியப்படுத்த வேண்டுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடர அனுமதிக்க வேண்டாம் எனவும் வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
பா.மு.ஜலாலி.


இது குறித்து நேரடி விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு பேரூந்து கழகம் (கோவை) பிரிவு - ஈரோடு மண்டல துணை மேலாளர் (வணிகம்) கணேசன் கடந்த ஏப்ரல் 21 அன்று காயல்பட்டினம் வந்தார்.

அவ்வேளையில் மக்கள் சேவா கரங்கள் நிறுவனர் பா.மு. ஜலாலியுடன் நகர பிரமுகர்கள் - எஸ்.ஹெச்.முஹம்மது முஹைதீன், பீ.ஏ. சேக், கொமந்தார் இஸ்மாயில் ஆகியோர் இருந்தனர்.

சம்பவம் குறித்து விளக்கம் கேட்ட துணை மேலாளர் (வணிகம்) கணேசன் - நடத்துனர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறி அதற்க்கான விளக்க பதிலை நேரடியாக வழங்கினார்.



தகவல்:
பா.மு.ஜலாலி,
நிறுவனர், மக்கள் சேவாக் கரங்கள்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பாராட்டுக்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [01 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4183

நமக்கு தெரியாத பல விஷயங்களில் தம்பி பாலப்பா ஜலாலி அவர்கள் செய்து வரும் புரட்சிகரமான சமுதாயப்பணிகளும் ஓன்று. எனக்கு தெரிந்து இதுபோலே பல நல்ல விஷயங்களை நமதூருக்கு செய்துகொண்டு இருக்கிறார். நம் ஒட்டுமொத்த அனைவரின் பாராட்டுக்கு உரியவர்.

இப்படி ஊருக்காக பணிபுரியும் நல்ல உள்ளங்களை நாம் ஏனோ கண்டுகொள்வதில்லை. தம்பி ஜலாலி உங்களின் சீரிய சமுதாய பணி தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. WELDONE ONCE AGAIN
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [01 May 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4184

WELDONE and highly congragulation to MR.JALALI B.S.C., We hope to see your fantastic social works with possitve result many more in future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சமுதாய பணி தொடரட்டும்
posted by SUBHAN (abu dhabi) [01 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4185

தம்பி ஜலாலி உங்களின் சீரிய சமுதாய பணி தொடரட்டும் valthukkal


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நல்ல செய்தி - வாழ்த்துக்கள்
posted by Seyed M Sahib SMI (Jeddah.) [01 May 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4188

நண்பர் நல்லவழியில் செயல்பட்டிருக்கிரார், வாழ்த்துக்கள்.

இப்படி பொறுப்பிலிருப்பவர்கள் அதனிலிருந்து தவறும்போது அல்லது துஷ்பிரயோகம் செய்யும்போது அதை தகுந்த முறையில் சுட்டிக்காட்டியும் அது பயணளிக்காமல் போகும்பொது இப்படி முறையாக அதனைச்சார்ந்த துறைக்கு கண்ணியமாக தொpவிப்பதால் அதன் பெயாpல் நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றது நமது கண்ணியமும் காக்கப்படுகின்றது. இப்படியே எல்லா துறையிலும் மக்களுக்கு வழிப்புணர்வு வந்திடவேண்டும்.

இது நண்பர் ஜலாலிக்கு மட்டுமல்ல அவருடன் சேர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் சேவை…


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
posted by தைக்கா சாஹிப் (ரியாத்) [01 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4190

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை அறியலாமா? தெரிந்தவர்கள் விபரம் கூறவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. போப்பா..
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [01 May 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4191

பாலப்பா ஜலாலி காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சென்ற பதிவில் நானும், சகோ.கவின்மகனும் ஜலாலி காக்காவிற்கு பாராட்டு தெரிவித்து இருந்தோம். இந்த மாதிரி விபரம் தெரிந்தவர்களை நாம் உபயோகப்படுத்தாமல் இருப்பது நம் துரதிஷ்டமே.

எனக்கு அரசாங்கத்தில் வேலை வேண்டும் என்றால், அதாங்க ரேஷன் கார்டு பிரச்சனை, பாஸ்போர்ட் பிரச்சனை, காஸ் பிரச்சனை போன்ற வேலைகளுக்கு இவர்களைதான் நாடுவேன்.

ஒருமுறை ஜலாலி காக்காவை நேரில் பாராட்டி, உங்களின் இந்த 'மக்கள் சேவாக் கரங்கள்' என்ற சங்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள், யார் யார் எல்லாம் பதவியில் இருக்கிறார்கள் என்றதும்,

போப்பா.. நான் மட்டும் தான் உள்ளேன் என்று சொன்னதும், எனக்கு அதிர்ச்சி.

தனி மனிதனுக்கு இருக்கும் அக்கறை,ஒரு ..

.....வேண்டாம்..அப்புறம் இந்த பதிவு வேறு மாதிரியாக சென்று விடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. keep it up
posted by s.e.m. Abdul cader (bahrain) [01 May 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 4192

dear brother jalali, assalamu allaikum,

well done dear, wish you all the best, I am really proud of you behalf of all kayalites, keep it up.

your class mate
s.e.m. abdul cader.
wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஜலாலி மச்சானுக்கு ஒரு... ஓ...போடுங்கோ!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [02 May 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4193

பாலப்பா ஜலாலி மச்சானுக்கு ஒரு... ஓ...போடுங்கோ!!!பொதுவாக அரசு சம்பந்தப்பட்ட எந்த ஒரு வேலையானாலும் பாமரமக்கள் படும் அவஸ்த்தையைச் சொல்லி மாளாது,

பஞ்சாயத்து போர்டில் புள்ளி மாற்றுவது முதல் குடிநீர் இணைப்பு, குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பது, காஸ் சிலிண்டர்க்கு அப்ளை, இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மாற்றம், இண்ஷீயல் குழப்பம் சரிசெய்வது, பாஸ்போர்ட் எடுக்க பதினாறு முறை அது சரியில்லை இது சரியில்லை என அலையாய் அலைவது, இப்படி ஏகப்பட்டப் பிரச்சனைகள்!

என் மனைவி வீட்டு குடும்ப அட்டையில் நான் எனது பெயரைச் சேர்க்க நான் வட்டாட்சியர்(தாலுகா ஆபீஸ்)க்குப் போய் எனக்குத் தலை சுற்றி மயக்கம் வந்ததுதான் மிச்சம்!

இதுக்குத் தான் ஒரு ஜலாலி காக்கா வேண்டும் என்பது. சரி ஆளாளுக்கு அவரைப் புகழ்ந்து அப்புறமா அவர் ரேட்டை ஏத்திவிடப்போகிறார்?

குசும்பு: ஜலாலி மச்சான் இன்னும் நீங்க என் பெயரை ரேஷன் கார்ட்லெ சேர்த்து தரல்லே! ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டுங்களேன்!!! உம்மாவுக்கு பாஸ்போர்ட் ஓக்கே! பட், ஒய்ஃபுக்கு இன்னும் நஹீஹே.....!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஜலாலி காகா
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [02 May 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 4198

அடுத்த தேர்தலில் ஜலாலி காகா நின்றால் என் ஓட்டு ஜலாலி காகா அவர்களுக்கு தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. WELL DONE
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [02 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4199

I am really appreciated my elder brother social service.

I read my our native gentlemen comments, everyone appreciated my elder, really very happy.

My thanks and dua for their continues social service.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வாழ்த்துக்கள்.
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [02 May 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4203

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள பாலப்பா kakka suhama?

Munbu oru neram chennai periamettil maberum viyabariyaha irundirhal, annal ippoluthu oorukaha Sevai sethaithu varuvathu meehavum mahilchiyaha ullathu.

Thodaratum ungal pani vehamaha!!! (Uncle mama Hayathudan irrunthal indrum santhosapaduvarhal nichayam).

All the best!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. முழு ஆதரவை என்றும் கொடுக்க வேண்டும்.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [02 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4207

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மக்கள் சேவாக் கரங்கள் நிறுவனர் பா.மு. ஜலாலி அவர்கள் கொடுத்த புகார் மனுவை ஏற்று, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு பேருந்து கழகம் ஈரோடு மண்டல துணை மேலாளர் (வணிகம்) கணேசன் அவர்கள் நன்றிக்குரியவர்.

இந்த மாதிரி ஒரு சில அதிகாரிகளே நேரிடையான விசாரணையை மேற்கொள்கிறார்கள் அதன் மூலம் மக்களுக்கு ஏற்படுகிற அசௌகரியங்கள் களையப்படுவதுடன், தவறு செய்தவர்கள் மீது நேர்மையான நடவடிக்கையும் எடுக்க முடிகிறது.
---------------------------------------
சகோதரர் பாலப்பா ஜலாலி போன்றோர் இந்த மாதிரியான புகார்களை முறையாக, ஆதாரத்தோடு, சாட்சியோடு மேலிடத்திற்கு தெரியப்படுத்தினதால் அந்த புகார் முறையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

இப்படியான பொது தொண்டுகளை செய்யும் சகோதரர் பாலப்பா ஜலாலி அவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு நன்றி மட்டும் சொல்லி விட்டிடாமல் அவர்களுக்கு, அவர்களுடைய தொண்டுகளுக்கு நமது முழு ஆதரவை என்றும் கொடுக்க வேண்டும்.
--------------------------------------
மேலும் சகோதரர் சாளை. ஜியாவுதீன் அவர்கள் கருத்து பதிப்பின் மூலம் 'மக்கள் சேவாக் கரங்கள்' சங்கத்தில் உறுப்பினர்கள் அதிகம் இல்லை என்பதாக தெரிகிறது.

சகோதரர் பாலப்பா ஜலாலி அவர்கள் முயற்சித்து உறுப்பினர்களை சேர்க்கலாமே? அதற்கு நாமும் ஆதரவு கொடுத்து அதன் மூலம் பொது தொண்டுகளை விரிவடையச்செய்து, மக்கள் பயனடையலாம்.
--------------------------------------
அவர்களின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டிய தேவை இல்லை, காரணம் இது கிரிமினல் குற்றமில்லை. மேலும் சகோதரர் பாலப்பா ஜலாலி அவர்கள் கொடுத்த புகாரில் நடத்துனர் மீதே புகார் கொடுத்திருக்கிறார்.

ஆனால் பேருந்து கழக மேலாளர் முறையான செயலாக, பேருந்தில் பணி புரிந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதாக அவருக்கு பதிலளித்திருக்கிறார். அதுவும் எழுத்துப்பூர்வமாக இதுவே நமக்கு பெரிய ஆவணமாகும்.
--------------------------------------
மக்களே!

இது போன்ற அசௌகரியங்கள் ஏற்படும்போது சும்மா இருந்துவிடாமல் அவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையாக எழுதி போட்டு நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.

அப்படி செய்வதற்கு உங்களுக்கு வழிமுறைகள் தெரியவில்லை என்றால் சகோதரர் பாலப்பா ஜலாலி போன்றோரை அணுகுங்கள்.

அவர் தரும் ஆலோசனைபடி விவரங்களை உண்மையாக கூடுதல், குறைவின்றி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினால் இன்ஷா அல்லாஹ்! அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

சகோதரர் பாலப்பா ஜலாலி அவர்களின் பொதுப்பணி சிறக்கவும், மேலும் அவர் போன்று பலரும் உருவாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved