Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:31:24 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6054
#KOTW6054
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 30, 2011
தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் கோடை விடுமுறையில் ஸ்பெஷல் க்ளாஸ் நடத்தினால் நடவடிக்கை! முதன்மை கல்வி அதிகாரி கடும் எச்சரிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3122 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறையில் பள்ளிகளில் ஸ்பெஷல் வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது துறை வாரியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிமளா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சில கோடை விடுமுறையை மாணவ, மாணவிகள் ஜாலியாக கழிக்க வழியில்லாத வகையில் விடுமுறை மாதங்களிலும் ஸ்பெஷல் வகுப்பு நடத்தி மாணவர்களின் மன நிலையை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஷ்வரன் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பரிமளா இது குறித்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இது குறித்து நேற்று சி.இ.ஓ பரிமளா நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆகியவை கட்டாயம் மே ஒரு மாதம் மாணவர்களை கோடை விடுமுறையை கொண்டாட அனுமதிக்க வேண்டும். கோடை விடுமுறை காலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பிற்கு பள்ளியில் ஸ்பெஷல் வகுப்புகள் நடத்தி மாணவர்களின் ஜாலி பொழுதுபோக்கிற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

இதுபோன்ற செயல்களால் மாணவர்களின் சீரான மனநிலை கட்டாயம் பாதிக்கப்படும். இதனை பள்ளி நிர்வாகம் உணர வேண்டும். கோடை விடுமுறை மாணவர்களின் சந்தோஷத்திற்காகவும், பொழுது போக்கிற்கும், அவர்கள் மனது ரிலாக்ஸ் ஆக்குவதற்கும்தான் விடப்படுகிறது. அந்த நேரத்தில் பள்ளிகளில் ஸ்பெஷல் வகுப்பு நடத்தி மாணவர்களின் நலனை பாதிக்க வைக்கக் கூடாது. இதன் மூலம் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 போன்றவற்றிற்காக பள்ளிகளில் ஸ்பெஷல் வகுப்புகளை மே மாதத்தில் பள்ளிகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்துவது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து புகார் வந்தால் அந்த பள்ளிகள் மீது கல்வித்துறை மூலம் துறை ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


இவ்வாறு பரிமளா தெரிவித்தார். நேர்முக உதவியாளர்கள் குமாரதாஸ், ரத்தினம், உமரிக்கோட்டை பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். மே மாதம் 30ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாகவும் சி.இ.ஓ தெரிவித்தார்.

நன்றி:
தினமலர் நாளிதழ் (நெல்லை பதிப்பு - 30.04.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஓடி விளையாடு பாப்பா...?எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கில்லே..?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [30 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4163

டண்டனக்க... டண்டனக்கா... அப்படி போடுன்ணானாம்! வருஷம் முழுவதும் பள்ளி, பள்ளிக்கூடம், ஸ்பெஷல் க்ளாஸ், நாலு மணிக்கு வீட்டுக்கு வந்ததும் பேக்கை கீழே வைக்கிறதுக்குள்ளெ ஓடு, ஓடு, டிடூஷனுக்கு, அலைத்துக் களைத்து மீண்டும் வந்தா எடு பலகையை(கிதாபை)அதுக்கு மேலே ஹோம் ஒர்க்கு, கை ஒடிய எழுதித்தள்ளி சடவு முறிச்சா சனியன் சனியன்ணு திட்டு வேறே!

பத்து மணிக்கெல்லாம் லைட்ஸ் ஆஃப், அவங்க மட்டும் சவுண்டைக் குறைத்து வைத்து நாசமாப் போன சீரியல் பார்த்தா தான் உண்ட சோறு செமிக்கும்! அதிகாலையில் அசந்து தூங்கிட்டா போதும் அன்றைக்கு வீடெ கலவர பூமிதான்!படி, படி, படி, குழந்தையின் காதுகளில் இடியாய் விழுந்து தொலைக்கும்! தன் பிள்ளை படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆவலில் தவறில்லை! அனால், அரை மார்க் குறந்து விட்டால் நரம்புத்த்ளச்சிக்கு ஆளாகின்றனரே அதுதான் கொடுமை!

நீங்க உங்க வயசுலெ இந்த பாடத்தைப் படிக்கவுமில்லை! ஃபஸ்ட் மார்க் எடுக்கவுமில்லை! அப்புறம் ஏன் இந்த வெறி? மழலைகளின் மனநிலையைப் பற்றி என்றைக்காவது சிந்தித்ததுண்டா? மாலை முழுதும் விளையாட்டுண்ணு படித்துவிட்டு வரும் பிள்ளைகளுக்கு பாடச் சுமையைத் திணிக்கும் பள்ளிகள் ஒழிந்து போகட்டும்!

பசுமரத்தாணிக்கு பதிலாக கடப்பாரையைக் கொண்டு மழலைகளின் மனதைக் குத்திக்கிழிக்கும் பெற்றோர்களே... வேண்டாம். திருந்திக் கொள்ளுங்கள்!!! உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் அவர்தம் மதிப்பெண்கள் உயரும்! வெறும் பொதி சுமக்கும் கழுதைகள் அல்ல அவர்கள்! உங்கள் கண்மணிகள்!கல்விப் பாலை புட்டியில் புகட்டினால் போதும். தயவுசெய்து பீப்பாக்களில் அடைத்துப் புகட்டாதீர்கள்! இச்சட்டத்தை இயற்றிய கல்வித்துறைக்கு என் இருகரம் நெற்றியில் வைத்து ஓர் ஸ்ல்யூட்!!! வெல்டன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கருணை காட்டுங்கள்!
posted by கவிமகன் (துபாய் ) [30 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4168

என்ஜீனியர் ஆக்குவேன்
டாக்டர் ஆக்குவேன்
நீங்கள் நினைத்தபடி
ஆக்குதற்கு
நாங்கள் என்ன களிமண்ணா?

பொதிசுமக்கும் கழுதைக்கு
ஞாயிறன்று விடுமுறை.
பொதிசுமக்கும் எங்களுக்கு?

உணர்ச்சிகள் இல்லாத
கணிப்பொறியா நாங்கள்?
அறியா வயதில்
ஆங்கிலக் கல்வியெனும்
எலிப்பொறிக்குள்.

பட்டம்விடும் வயதில்
பட்டதாரி ஆக்கிவிட
படாதபாடு படும்
பெற்றோரே!
உங்கள் ஆசைக்காக
பட்டாம்பூச்சி
பருந்தாகி விடுமா?

கிளைகளை பூக்களை
காய்களை கனிகளை
கனவுகாணும் உரிமை
உங்களுக்குண்டு!
வேருக்குள் வெந்நீர்
ஊற்றாத வரையில்!

அவனாக இவனாக
அதுவாக இதுவாக
நாங்கள் ஏன் மாறவேண்டும்?
கருணை காட்டுங்கள்!
கொஞ்சகாலமேனும் நாங்கள்
குழந்தைகளாய் வாழ்வதற்கு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஸ்பெஷல் class
posted by abdul (kayalpatnam) [01 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4175

நண்பரே, இந்த நவீன காலத்தில் நீங்கள் கூறுவது போல எந்த குழந்தை படிக்கிறது பள்ளிக்கூடம் நடைபெறும் நாட்களில் கூட?இப்பொது கல்வியின் தரம் குறைந்து கொண்டுதான் வருகிறது, வரும் காலம் நம் சமுதாய பிள்ளைகளுக்கு ஒரு கஷ்டமான காலம் என்று தான் நினைகிறேன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நான் முற்றிலும் மாறுபடுகிறேன்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [01 May 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4182

அன்பு சகோ. அப்துல் அவர்களே (முழுப்பெயரை போடலாமே, அப்து என்றால் அடிமை என்று பொருள்), தாங்கள் எழுதிய கருத்துக்கு நான் முற்றிலும் மாறுபடுகிறேன். கோபம் இல்லைதானே.

தற்போது உள்ள குழந்தைகள் எங்கு விளையாடுகிறார்கள் என்று இருந்து இருக்க வேண்டும் உங்களுடைய கருத்தில்.. எப்போது பார்த்தாலும் படிப்பு, டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், அப்பாப்பள்ளி தெருவில் ஒரு டியூஷன், அதை முடித்துவிட்டு நெய்னா தெருவில் டியூஷன், சைக்கிளில் மாங்கு மாங்கு என்று செல்வதை பார்த்தால் பாவம்.

நம் காலம் மாதிரி யார் விளையாடுகிறார்கள். எத்தனை பிள்ளைகளுக்கு பம்பரம், கீச்சிக்கம்பு, கிரியாச்சி, போலா, கபடி போன்ற விளையாட்டுகள் தெரியும்.

மிஞ்சிப் போனால் இரண்டு மூன்று காட்டுக் கம்புகளை கையில் வைத்து காடு, மேடுகளை சுத்துகிறான்கள்.

என்னாங்கடா ஒருமணி நேரமாக இப்படி சுத்திகொண்டு இருக்கிறீர்கள், யாரைடா அடிக்கப்போகிறீர்கள்..

இல்லை காக்கா.. கிரிக்கெட் விளையாடப் போகிறோம், யாரும் அவங்க வீட்டுக்கிட்டே விளையாட விடமாட்டீன்கிறார்கள், காலி மனைகளும் கிடையாது, விளையாட்டு கிரௌண்டுக்கு போனால் அங்கு பெரிவர்கள் விரட்டுகிறார்கள், நாங்க எங்கு போவது..

சரியா கேள்விதான்.

அப்புறம், கல்வின் தரம் குறைந்து வருகிறது என்று யார் சொன்னார்கள், சும்மா எல்லாம் அடித்து விடக்கூடாது.

சென்ற வருடம் அமெரிக்க அதிபர் ஒபமா அவர்கள் அமெரிக்க பல்கலைகழக விழாவில், அமெரிக்க மாணவர்களைப் பார்த்து "நன்கு படியுங்கள், இல்லை என்றால் உங்களுடைய வேலை ஒரு இந்தியனுக்கு சென்று விடும்" என்று.

தற்போது வெளிநாடுகளில் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் நம் நாட்டில், நம் கிராமத்தில், நம் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள்தான். இப்போ சொல்லுங்க நம் கல்வியின் தரம் குறைந்து கொண்டு வருகிறதா?

இன்றைய காலகட்டத்தில் அதுவும் போட்டி நிறைந்த உலகத்தில் இப்படி கஷ்டப்பட்டு படித்தால்தான் நிலைக்க முடியும். ஒரு மார்க் வித்தியாசத்தில் ஒருவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரி இல் சீட் கிடைக்கின்றது, மற்றவருக்கு ஒரு வசதியும் இல்லாத தேனி மருத்துவக் கல்லூரி.

ஆதலால் பிள்ளைகளை நன்கு படிக்க சொல்லுங்க, நல்ல தட்டிக்கொடுத்து, ஊக்கம் கொடுத்து, நல்லது கேட்டது எடுத்து சொல்லுங்கள்,

முதல் ரேங்க், FIRST RANK என்று கசக்கிப் பிழியாதீர்கள் (இருப்பதோ ஒரு FIRST ரேங்க், நாற்பது௦ பெற்றோர்களும் தன் பிள்ளை மட்டும் FIRST RANK வாங்கணும் என்றால் எப்புடி...)

ஆகவே குழந்தைகள் முருங்கை மரம் மாதிரி, தேவைக்கு கீரைகளை ஒடித்து ஒடித்து வளர்த்தால்தான் பயன் தரும். மரத்தில் அதிக அழுத்தம் கொடுத்தாலோ, அதிகமாக காற்று அடித்தாலோ, கீரைபறிக்கின்றேன் என்று மரத்தின் மேல் ஏறினால் என்ன ஆகும் தெரியும்லே... பார்த்து நடந்துக்கோங்க...

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Well said !
posted by Raiz (Sydney) [02 May 2011]
IP: 156.*.*.* Australia | Comment Reference Number: 4194

Dear Brothers ,

Assalamu alaikum!

Well said! All the three comments are very deep and thought provoking. The poem written by brother Kavi mahan is wonderful! Masha Allah! I think this poem should be distributed to all of our Kayal parents.

I 100% agree with you all! What should be aim of the parents? Is not bringing up the child as a healthy, wealthy and HAPPY human being? They don’t realize the consequences of pressurizing the children beyond their limits. The consequences may be shocking at times. They may become wealthy but not happy and healthy! They may become successful in their exams but not in their lives!

Brothers do you think our parents try to impose their wishes into their children? We know, lot of our parents despite being intelligent, did not complete their school or college because of the pressure of starting the family businesses. We understand that it is natural to try to make your children achieve a lot in education and we appreciate your concern and dedication in this regard. BUT, have your ever put yourself in his/her shoes? Did you ever imagine how the life would be without playing sports? What did you do in your summer holidays 25 years ago? Please think wise!

I think it is great if you try to bring up your child as a very good human being rather than a machine which scores JUST marks!

Raiz


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Stop In Other Dists too
posted by Mohamed Hussain (Chennai) [02 May 2011]
IP: 65.*.*.* United States | Comment Reference Number: 4201

Assalamu Alaikum

In 70% of chennai based private schools and other salem & namakkal based schools started +2 subjects in +1 itself and completed the +2 syllabus by quarter yearly exams then later they started their focus on preparing examination but at the time we are crawling to complete syllabus and then how our students get time enough time to score more as other toppers do and students from that schools, scores well and get through to all top colleges.

I thought our dist schools are also following the footsteps of them. So it is better to stop this in all over TN to provide equal platform to compete.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved