Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:38:07 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6658
#KOTW6658
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 6, 2011
தரம் குறைந்தவை சமச்சீர் பாட நூல்கள்: உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2302 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமச்சீர் கல்வி முறையிலான பாடத் திட்டமும், பாடப் புத்தகங்களும் தரம் குறைந்தவைகளாக உள்ளன. எனவே, இந்தக் கல்வியாண்டில் அவற்றைப் பயன்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2010 - 2011-ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 10-ம் வகுப்பு வரையிலான பிற வகுப்புகளுக்கு 2011 - 2012-ம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக சுமார் ரூ.200 கோடி செலவில், 9 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில், சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டு நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்த புதிய அரசு, அதற்காக சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மனோன்மணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. பிற வகுப்புகளைப் பொருத்தவரை, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் மற்றும் பாட நூல்களை நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், நிபுணர் குழுவின் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன்பின் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜூன் 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையை தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்விடம் பதிவாளர் அளித்தார்.

அதன் பின், இந்த விவகாரம் தொடர்பாக வரும் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நிபுணர் குழுவின் அறிக்கை விவரம்: சமச்சீர் கல்வி பாடத் திட்டம் மாணவர்களின் வயதுக்கு ஏற்றார்போல் தயாரிக்கப்படவில்லை. 2005-ம் ஆண்டின் தேசிய கல்வித் திட்ட பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை. சில பாடங்கள் மாணவர்களுக்கு சுமையைத் தருவதாகவும், வேறு சில பாடங்கள் மாணவர்களின் கற்றல் திறனைவிட தாழ்ந்த நிலையிலும் உள்ளன. மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்தப் பாடத் திட்டம் இல்லை.

இன்று உலகம் முழுவதும் மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன்களை பயிற்றுவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் இல்லை.

அதேபோல் வாழ்வின் எதார்த்தத்தை மாணவர்களுக்கு உணர்த்தக் கூடியதும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிகமாக வலியுறுத்தப்படுவதுமான பகுப்பாயும் திறனை வளர்க்கக் கூடியதாக இந்தப் பாடத் திட்டம் இல்லை.

மெட்ரிகுலேஷன் போன்ற கல்வி வாரியங்களின் பாடத் திட்டத்தை மாதிரியாகக் கொண்டு சமச்சீர் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த பாடத் திட்டத்துக்கு மாற போதுமான கால அவகாசம் தரப்பட வேண்டும். மாறாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை உடனடியாக மெட்ரிகுலேஷன் தரத்துக்கு மாற்றுவதால், மாணவர்களின் சுமை அதிகரிப்பதோடு, மாணவர்களிடம் குழப்பமும் அதிகமாகும்.

சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களில், ஒரு பாடத்துக்கும் அடுத்த பாடத்துக்கும் தொடர்பு இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும், இந்தப் பாடத் திட்டம் மாணவர்களிடம் மனப்பாடத் திறனை மட்டும் வளர்ப்பதாக உள்ளது.

மொத்தத்தில், சமச்சீர் கல்விப் பாடத் திட்டம் மிகவும் குறுகிய காலத்துக்குள், அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கவும், பாட நூல்களுக்கு வெளியே மாணவர்களின் அறிவை விரிவுபடுத்தும் நோக்கிலும் எதுவும் இல்லை. 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு மொழி மற்றும் கணிதப் பாடம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் கல்விப் பாடத்தை வைக்கலாம் என்றும் தேசிய கல்வித் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தில் 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு நான்கு பாடங்களும், 3 முதல் 5-ம் வகுப்பு வரை ஐந்து பாடங்களும் வைக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு கடும் சுமையைத் தரக் கூடியவை.

பாட நூல்களில் ஏராளமான தகவல் பிழைகள் உள்ளன. இவை மாணவர்களுக்கு புரிதலில் பிரச்னையை ஏற்படுத்தும். புரிய வைக்கக் கூடிய உதாரணங்களுடன் ஆசிரியர்கள் பயிற்றுவித்தால் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்ற வகையில் ஏராளமான வாக்கியங்கள் பாட நூல்களில் உள்ளன.

சிந்தனைத் திறன், தீர்வு கண்டறியும் திறன், தகவல் பரிமாற்று திறன், உத்திகள் வகுக்கும் திறன் போன்றவற்றை மாணவர்களிடம் வளர்க்க பாட நூல்களில் எதுவும் இல்லை. ஒரு குறிப்பிட்ட பாடத்தின் கருப்பொருளை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனரா என்பதை சோதித்துப் பார்க்க போதுமான பயிற்சிப் பகுதிகள் இல்லை.

மாணவர்கள் பயிலக் கூடிய பாட நூல்களில் சர்ச்சைக்குரிய மற்றும் ஆட்சேபகரமான பகுதிகள் எதுவும் இருக்கக் கூடாது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாட நூல்களில் சர்ச்சைக்குரிய மற்றும் ஆட்சேபகரமான பல பகுதிகள் உள்ளன. சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களை கற்பிப்பதற்கான பயிற்சிகள் எதுவும் ஆசிரியர்களுக்கு இல்லை. பாட நூல்களிலும் ஆசிரியர்களுக்குரிய குறிப்பு பகுதிகள் எதுவும் இல்லை.

சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் அளித்த ஆட்சேபனைகள் குறித்து குழு பரிசீலித்தது. கடந்த கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்ட 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வித் திட்ட பாடங்கள் மிகவும் தரம் குறைந்தவைகளாக உள்ளன என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குழுவிடம் முறையிட்டன. பொதுவாக, தரம் குறைந்த பாடத் திட்டத்தையும், பாட நூல்களையும் கொண்ட சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு எதிராகவே பலரும் நிபுணர் குழுவிடம் மனு அளித்தனர்.

ஆகவே, தரமான கல்வியை அளிக்கும் வகையில் சமச்சீர் கல்வி பாடத் திட்டம் மற்றும் பாட நூல்களில் ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. எனவே, 2011 - 2012-ம் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி பாட நூல்களைப் பயன்படுத்த முடியாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல்:
தினமணி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாணவர்கள் பாவம்...!
posted by B.M.LUKMAN MOULANA (JAIPUR) [06 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 5788

K கொண்டு வந்தால் J வெறுப்பார், ஜெ செய்ய நினைத்ததை K தடுப்பார்...இது அவர்கள் நடுவில் நடக்கும் அரசியல்..!இன்னும் சொல்லபோனால் அவர்களுடைய வியாபாரம் அது.

ஆனால் இவர்களுக்கு மத்தியில் பொது மக்கள் தான் இது நாள் வரை மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி முழித்தார்கள்.இப்பொழுது மாணவர்கள் அல்லவா மாட்டிக்கொண்டார்கள்...

ஜெ வெறுக்கும் ஒரு கல்வி திட்டத்தை ஜெவே நியமித்த ஒரு (ஜால்ரா) நிபுணர் குழு " தரம் உயர்ந்தவையாக உள்ளது " என்று சான்றா அளிக்க முடியும்.இது சண்டை காரனிடமே போய் சாட்சி சொல்ல கேட்பது போலல்லவா இருக்கிறது.இப்படி ஒரு நிபுணர் குழு அமையுங்கள் என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசை கேட்டதே புரியாத புதிர்.

என்ன செய்ய ....? ஜனநாயகத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா ...!தமிழர்களுக்கு "க" வை விட்டால் "ஜெ" அல்லது மாற்றமாக.... இதுதான் தலைவிதி போலும்.,இவர்கள் இரண்டு பேரும் வேண்டாம் என்று புதுசை ( வி ) தேடினால் அது இப்போதே பயமுறுத்துகிறது.

மொத்தத்தில் மக்கள் பாவம்.( ஆனால் இது நமக்கு புதிசில்லே.இதெல்லாம் நமக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்டற மாதிரி )

நம் வேதனையெல்லாம் மாணவர்கள் பாவம்.துவா செய்வோம்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தரம் குறைந்த முதல்வரும்.... தகுதி இல்லாத நிபுணர் குழுவும்.
posted by zubair (riyadh) [06 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5790

சமச்சீர் கல்வி பரிசோதனையை...... தகுதி இல்லாத நிபுணர் குழு அமைத்ததுமே பல,பல நிபுணர்கள் தெரிவித்த, நாம் எல்லாம் எதிர் பார்த்ததை தான் இந்த அம்மாவின் குழு சொல்லியுள்ளது. இதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. கழுதைக்கு தெரியுமா..... கற்பூரத்தின் வாசனை என்பது பழ மொழி. அதற்கேற்ப...... பல,பல நாடகம்கள் அரங்கேறுகின்றன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தரம் குறைந்த முதல்வரும்..... தகுதி இல்லாத நிபுணர் குழுவும்.
posted by zubair (riyadh) [06 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5791

சமச்சீர் கல்வி ஆய்வில்...... தகுதி இல்லாத நிபுணர் குழுவை அமைத்ததுமே... பல,பல நிபுணர்கள், கல்வி மேதைகள் சொன்ன, எதிர்பார்த்த முடிவுதான் கிடைத்துள்ளது. இதில் நாம் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. உரை கல்லே...... மாத்து குறைவா இருக்கும் போது..... உருப்படியின் தரம் எப்படி அறிய முடியும்.....? கழுதைக்கு தெரியுமா..... கற்பூரத்தின் வாசனை என்ற பழ மொழிதான் காதில் ஒலித்துகொண்டே இருக்கின்றன. இயற்கையே.... தன் போக்கை மாத்தி இருக்கும் இந்த காலத்தில்..... அம்மா தன் பழைய போக்கை மாத்தாதது ஆச்சரியத்தை தருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
தயாநிதி மாறன் ராஜினாமா!  (7/7/2011) [Views - 3001; Comments - 11]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved