Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:32:23 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6685
#KOTW6685
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 9, 2011
இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: துவக்க விழா நிகழ்வுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4960 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாவது மாநாடு காயல்பட்டினத்தில் நேற்று துவங்கியது. இம்மாநாட்டை முன்னிட்டு காயல்பட்டினம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பேராளர் பதிவு:
துவக்கமாக, காலை 10.00 மணிக்கு பேராளர் பதிவும், வரவேற்பும் காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலுள்ள வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



துவக்க விழா:
மாநாட்டு துவக்க விழா ஜூலை 08ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று (நேற்று) மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில், வரகவி காசிம் புலவர் பந்தலில், வள்ளல் சீதக்காதி நுழைவாயிலில், சதக்கத்துல்லாஹ் அப்பா அரங்கத்தில் நடைபெற்றது.



மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ் துவக்க விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், ஹாஜி நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி எஸ்.ஏ,ஷேக் மதார், ஹாஜி எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நிகழச்சிகளை நெறிப்படுத்தினார். காயல்பட்டினம் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.ஜி.நஸீம் காதிர் ஸாஹிப் கிராஅத் ஓதினார்.



அதனைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்கள், மஜ்லிஸில் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் துவங்கி, மாநாட்டுத் திடல் வரை நகர்வலமாக கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி, நகர மக்களுக்கு மாநாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர், ஹாமிதிய்யா பைத் பிரிவினர் அரபீ கீதம் இசைக்க, அதற்கேற்ப அந்த மத்ரஸாவின் தஃப்ஸ் பிரிவு மாணவர்கள் தஃப்ஸ் முழங்கினர்.







தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்புரையாற்றினார்.



மஸ்னவீ ஷரீஃப் தமிழாக்க நூல் வெளியீடு:
அதனைத் தொடர்ந்து, மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் “மஸ்னவீ ஷரீஃப்” தமிழாக்க நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் நூலை வெளியிட, இலங்கை அரசின் நீதித்துறை அமைச்சர் ரஊஃப் ஹகீம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக பொதுச் செயலாளர் மு.சாயபு மரைக்காயர் ஆகியோர் அதனைப் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து, அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் நூல் அறிமுகவுரையாற்றினார்.



பின்னர், குமரி அபூபக்கர் வழங்கும் இஸ்லாமிய பாடல் நிகழ்ச்சி அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து, இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் மாநாட்டைத் துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார்.



அவரைத் தொடர்ந்து வேலூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி வாழ்த்துரை வழங்கினார். அவ்விருவருக்கும் மாநாட்டுக் குழு சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.





கவியரங்கம்:
அன்றிரவு 09.00 மணிக்கு பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் “ஊடகம்”” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. துவக்கமாக, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது வரவேற்புக் கவிதை வழங்கினார்.



பின்னர் நடைபெற்ற கவியரங்கத்தில் தமிழகம் மற்றும் இலங்கையின் புகழ்பெற்ற கவிஞர்கள் கவிதை வழங்கினர். கவியரங்கத் தலைவர் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் நிறைவுரையுடன் அவ்வரங்கம் நிறைவுற்றது.











நிறைவாக, மாநாட்டு விருந்தோம்பல் குழு தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் நன்றி கூற, தூத்துக்குடி மாவட்ட காஜி மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீயின் பிரார்த்தனையுடன் துவக்கவிழா நிறைவுற்றது.



இஸ்லாமிய பாடல் அரங்கம்:
துவக்க விழா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பாவலர் எஸ்.எஸ்.அப்துல் காதிர் அரங்கத்தில், நேற்றிரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை இஸ்லாமிய பாடல் அரங்கம் கவிஞர் ஹாஜி எஸ்.செய்யது அஹ்மது தலைமையில் நடைபெற்றது.

ஆழ்வை எம்.ஏ.உஸ்மான் குழுவினரும், நெல்லை அபூபக்கர் குழுவினரும் இவ்வரங்கில் இஸ்லாமிய பாடல்களை இசைத்தனர். அவர்களுக்கு அரங்கத் தலைவர் சால்வை அணிவித்தார்.



இவ்வரங்கை, ஜே.ஏ.முஹம்மத் லரீஃப், எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, என்.எல்.கலீலுர்ரஹ்மான், எம்.எம்.அக்பர் பாதுஷா, எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஏ.ஜே.சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஏ.எல்.நூருல் அமீன், ஏ.ஏ.கே.நெய்னா முஹம்மத் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். துவக்க விழா நிகழ்ச்சிகளில் வெளியூர்களைச் சார்ந்த மாநாட்டு பேராளர்கள், உள்ளூர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.







மாநாட்டின் அனைத்து களப்பணிகளையும், மாநாட்டு தன்னார்வப் பணிக்குழு தலைவர் ஆசிரியர் அப்துர்ரஸ்ஸாக் தலைமையில், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.







படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by t,m.rahmathullah, (KAYALPATNAM 04639 280852) [10 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5869

அல்லாஹ் நல்லருள் புரிவானாகவும் .மதிப்புக்குரிய kayalonthemob,com ,kayalpatnam.com, kayaltoday.com kayalnews..com ஆகிய வெப்ஸைட் களின் மொடெரேட்டர் களுக்கு மிக்க நன்றி. மாநாஅட்டை பொறுத்த வரையில் மிக்க நன்றாய் முயற்ச்சி செய்து மக்களுக்கு சேவை செய்து வருகிறீர்கள்.இந்த சேவையை அல்லாஹ் கபூல் செய்து நல்லா கூலியை தருவானாக.

மேலும் மாநாட்டின் (க.கா.கு..)கானா காவன்னா கூனா) அதாவது கன் காட்சி குழு மிக சிரமப்பட்டு ஏற்பாடு செய்த அரங்கங்களையும் நீஙகள் மூவரும் கண் குளிர. கண் குளிரப் மனதும் குளிரப் பார்த்து அதன் ஒவ்வொரு விஷயஙளையும் தனித்தனியே குறிப்பாக அறூஸுல் ஜன்னாவின் அரங்கில் சென்று நோட் பன்னி வீடியோ, ஸீ.டீ எடுத்து கமர்சியல் முறையில். ரெபொர்ட் தாருங்கள். அறூஸுல் ஜன்னாஹ் மத்றஸா சார்பாக வேண்டிக்கொள்கிறோம்,

இவ்வளவு தூரம் எழுத க்காரணம், நம்மூர் சரித்திரத்திலேயே இல்லாதவாறு சுமார் ஐம்பதினாயிரம் 50000/= ரூபாய் க்குமேல் எழுபதினாயிரம் 70000/= எஸ்டிமேட்டில் திட்டம்போட்டு செயல் படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமா
நாட்டில் எங்கேயும் எந்த மியூஸியத்திலும் காணாத புதிய புதிய நூதனம் ஆனால் மிகப் பழயவைகளையும் புதியவைகளையும் இணைத்து வைத்த அற்புதங்களையும் காட்டி இருக்கிறோம். அதில் (LAMINATED PALMYRA LEAAF HANDWRITTEN OAALAI SUVADI) லேமினேட்டெட் ஓலைச் சுவடிகளும் ,சந்திரக்கோள், அதாவது பூமி உருண்டை மேப்கள் போல் சந்திர உருண்டை மேப் ,மற்றும் நூதன கம்ப்யூட்டெர் சாம்ப்ரானி குழாய் களையும் காணலாம். பொறுட்கள் அத்தனயும் கூட்டி கழித்துப் பர்த்தாலே கோடிக்கு மேல் பொறும்.

மிஸ் பண்ணி விடாதீர்கள் என வேண்டிக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Nahvi (Singapore) [10 July 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 5894

இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15 வது மாநாட்டின் உயர்வான நிகழ்வுகளை காணும்பொழுது மகிழ்வாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த சாதனை மிக்க விழாவையும் அதன் நிகழ்வுகளையும் குறை காணும் விமர்சனங்களை காணும்பொழுது சங்கடமாக உள்ளது. மாலைக்கண் நோயாளிக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியுமாம். தமிழ் கூறும் நல்லுலகே காயலை பெருமையோடு பார்க்கும் இவ்வேளையில், இறைவன் இம்மாநாட்டை பொருந்தி பங்காற்றியவர்களுக்கு அருள் பாலிப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கொஞ்சம் பார்த்து எழுதுங்க
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார். ) [10 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5895

சகோ.நஹ்வி அவர்களே..

மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பார்வை ஒன்றும் மஞ்சளாக தெரியாதுங்க.. பெயரிலேயே அதன் குறைபாடு தெரியவில்லையா. அவர்களுக்கு மாலை ஆகிவிட்டால் பார்வை தெரியாதாம்.

மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு தான் பார்வைகள் அனைத்தும் மஞ்சளாக தெரியுமாம். யாருக்கும் இந்த குறைபாடுகள் வராமல் வல்ல ரஹ்மான் காப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [11 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5901

அல்ஹம்துலில்லாஹ் . நல்ல முறையில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு நிறைவேறி முடிந்தது.

குறை கூறுபவர்கள் எதிலும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். குறை கூறாவிட்டால் அவர்களுக்கு சாப்பிட்ட சாப்பாடு செமிக்காது. குறை கூறுபவர்கள் தான் தான் புத்திசாலி என்று தன்னை தான் நீனைத்து கொள்வார்கள்.

அல்லாஹ் நம் அனைவர்க்கும் நல்ல புத்தியை கொடுத்து நல்லதை நன்மையை ஏற்று நடக்கவும் நல்லவற்றை புகழ்ந்து பேசவும். தீயவைகளை களையவும் அவற்றை விமர்சனம் செய்யாமல் நம்மை தவிர்த்து கொள்வானாக.

தீயவைகளை களைய நல் வழி அதனை நடத்துபவர்களிடம் நல்ல முறையில் எடுத்து பக்குவமான முறையில் சொன்னால் அதனை களையலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவ...
posted by Cnash (Makkah ) [11 July 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5910

Ziya Kaka, இன்னும் இந்த மாநாட்டை பற்றி நிறைய எழுத வேண்டி இருகிறது என்று சொன்னீங்க!! ஒன்னையும் காணோமே...சும்மா இருந்த நவாஸ் சை உசுப்பி விட்டு ..சாட்டையை எடு, பெரம்பே எடுன்னு.........இப்போ காமாலை கண்ணு மாலை கண்ணு, digestion problem என்று வங்கி கேட்ட வச்சிட்டீளே!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved