Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:36:20 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6689
#KOTW6689
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 11, 2011
கடற்கரை மணற்பரப்பில் குப்பை கூளங்கள்! குப்பை கொட்ட தனி வசதிகள் இன்றி பொதுமக்கள் தவிப்பு!!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 4230 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையின் மணற்பரப்பில் குப்பை கூளங்கள் நாளுக்கு நாள் அதிகளவில் சேர்ந்து வருகிறது.



தினமும் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக கடற்கரைக்கு வருவோர் அங்கு சாப்பிடும் தின்பண்டங்களின் உறைகளையும், தண்ணீர் பாக்கெட்டுகளையும், குப்பைகள் போடவதற்கென தனி வசதிகள் எதுவுமில்லாத காரணத்தால், இருந்த இடத்திலேயே போட்டுவிட்டுச் சென்று விடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, கடற்கரையில் அடுப்பு வைத்து வியாபாரம் செய்வோர், தமது வியாபாரம் முடிந்ததும், அடுப்புக் கரிகள், கழிவு நீர்களை அங்கேயே கொட்டிவிட்டுச் செல்வதால், கடற்கரையின் வெண்மையான மணற்பரப்பும் நாளுக்கு நாள் நிறம் மாறி மாசடைந்து வருகிறது.



பிஞ்சுக் குழந்தைகள் முதல் இளம் மாணவ-மாணவியர் வரை அனைவருக்கும் பள்ளிக்கூடங்களில் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஒருபுறம் ஏற்படுத்திக் கொண்டிருக்க, மறுபுறம் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால், கற்ற கல்வியும் பயனற்றுப் போகும் நிலைதான் உள்ளது.

அண்மையில், ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் பயிலும், காயல்பட்டணம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த ஆரிஃபா முஹம்மத் செய்யித் ஹஸன் தம்பதியின் மூன்றே வயதான பிஞ்சுக்குழந்தை எம்.எஸ்.ஹெச்.அப்துல்லாஹ் தனது பெற்றோருடன் கடற்கரைக்குச் சென்றிருக்கிறான். அங்கு பிஸ்கட் சாப்பி்ட்ட அவன் அதன் உறையைப் போடுவதற்காக குப்பைத் தொட்டியைத் தேடியிருக்கிறான்.

குப்பைத் தொட்டி எங்கும் இல்லாததையறிந்த அவன் தன் பெற்றோரிடம், “எங்க மிஸ் குப்பைகளை குப்பை தொட்டியில்தான் போடனும்னு சொன்னாங்க... இங்க ஒன்னுமே இல்லையே...?” என்று கேட்டிருக்கிறான்.

இதனால் மனம் நெகிழ்ந்த பெற்றோர் அக்குழந்தையிடமிருந்து பிஸ்கட் உறையை வாங்கி ஒதுக்குப் புறத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

செய்தி திருத்தப்பட்டுள்ளது!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரஃப்யாஸ் ரோஸெரி பள்ளி மாண...
posted by T.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852) [11 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5903

இது ஒரு சாதாரண விஷயமல்ல. ஈமான் சம்மந்தப்பட்ட விஷயம் . ஏனெனில் சுத்தம் ஈமானில் ஒரு பிரதான பகுதியாகும். இந்த அருமை பிள்ளையின் யூகமான அறிவிற்குக் ஒன்று பெற்றோர்களின் வளர்ப்பு முறை, இரண்டு aasiriyaikaLin அரவணைப்பு கலந்த போதனை..ஆக நம் எல்லோர்க்குமே அல்லாஹ் நற்கூலியை நிச்சயம் தருவான்.அல்லாஹு த ஆலா இந்த குழந்தையின் ஆயுளை ஈமான் சலாமத்தில் வெற்றியாக்கி ஈருலக நல் வாழ்வை தந்தருள்வானாக. ஆமீன்

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரஃப்யாஸ் ரோஸெரி பள்ளி மாண...
posted by சாளை நவாஸ் (singapore) [11 July 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 5904

ஆஹா, வயதில் பாலகனாக இருந்தாலும், எனது பார்வையில் நீ சிறந்த மனிதன். :ரஃப்யாஸ் ரோஸெரி பள்ளிக்கு என் மனதார வாழ்த்துக்கள். என் மகனும் :ரஃப்யாஸ் ரோஸெரி பள்ளியில் பயின்றான் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். நல்லதொரு மாணவ சமுதாயத்தை அமைக்க கலங்கரை விளக்கமாய் இருங்கள்.

அந்த பெற்றோர்களுக்கு என் கனிவான வேண்டுகோள்!! நகராட்சியை எதிர்பார்கதீர்கள். (எதிர்பார்த்தாலும் ஒன்றும் நடக்காது அது வேறு விஷயம்) உங்களுக்கு வசதி இருந்தால் உங்கள் சொந்த செலவில் வாங்கி வையுங்கள். அல்லாஹ் உங்கள் வீட்டை பரகத் செய்வான். கூடவே ஒரு மரகன்றும் வையுங்கள். உங்கள் குடும்பம் என்றும் பசுமையாக இருக்கட்டும். அமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இதற்கு பதில் கொடுக்குமா நம் நகராட்சி .....
posted by முத்துவாப்பா (அல்-கோபர் ) [11 July 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5905

மாஷா அல்லாஹ்..
கண்மணியே அப்துல்லாஹ்...
கடலே தன்னிலிருக்கும் குப்பைகளை
கரையில் கொட்டும் இந்த உலகில்...
கரையில் இருக்கும் நீயோ உன் செயலால்
கடலளவு உயர்ந்து விட்டாய் ..

குத்துக்கல்லாய் இருப்பவர்கள் எல்லாம்
குப்பையை வழியில் போடா ...
குத்துக்கல் தெருவில் இருக்கும் நீயோ
குப்பை தொட்டியை தேடி இருக்கிறாய்
உன்னை குப்பை தொட்டியை தேட வைத்தது உன் மனசாட்சி
இதற்கு பதில் கொடுக்குமா நம் நகராட்சி .....

கல்வியுடன் கடமையையும் பிஞ்சுகளுக்கு ஊட்டும்
ரஃப்யாஸ் ரோஸெரி மழலையர் பள்ளியே...
கடல் தாண்டி இருக்கும் அடியேன் – உன் புகழ் வளர
கருணை இறைவனிடம் இரு கரம ஏந்தி பிராதிக்கின்றேன்...

அன்பு சகோதரன்
முத்துவாப்பா ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கடற்கரை குப்பைகள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [11 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5906

காயல் கடற்கரை புஹாரி ஷரீப் அபூர்வ துஆவிற்கு பிறகு குப்பை மேடாகிவிட்டது. ஒன்று, நகராட்சி கடற்கரையை சுத்தப்படுத்த வேண்டும் அல்லது தன்னார்வ தொண்டுகள் பள்ளி மாணாக்கர்களின் துணையுடன் ஒரு துப்புரவு முகம் நடத்த வேண்டும்.

பொலிவிழந்து நிற்கும் காயல் கடற்கரையின் இழிவு நிலை என்றுதான் விலகுமோ? கடற்கரையில் குப்பை தொட்டிகள் மற்றும் விளம்பர தட்டிகள் வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கடற்கரயில் கஞ்சி குடிக்கும் போது......
posted by A.R.Refaye (ABUDHABI) [11 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5907

தயவு செய்து கடற்கரை வியாபாரிகள் குறிப்பாக கஞ்சி விர்ப்போர் கண்ணாடி கிளாசை பயன் படுத்த வேண்டாம், காரனம் சில சமயங்களில் அது உடைந்து அதன் துகள்கள் கடற்கரை மண்ணோடு மண்ணாக உட் புதைந்து அதுவால் நாமோ, நம் பிள்ளைகளோ,பொதுமக்களோ காலனி இல்லாமல் கடற்கரையில் உலவும் பொது அந்த கண்ணாடி உடைந்த பாகங்கள் நம் பாதங்களை பதம் பார்க்காமல் விட்டதில்லை அனுபவத்தால் என் நண்பர் மகளின் காலில் கண்ணாடி துளைத்து ரத்தம் சொட்ட சொட்ட தூக்கி கொண்டு மருத்துவரிடம் கொண்டு சென்ற நிகழ்வுகள் என் மனதில் மாறாத வடுவாகவே உள்ளது.

ஊரில் நான் இருகும்போதேல்லாம் கடற்கரையின் கஞ்சி வியாபாரிகளை கடிந்து கொண்டும் எந்த பயணம் இல்லை, காயல் கண்மணிகளே கடற்கரயில் கஞ்சி குடிக்கும் போது நம் பிஞ்சு பிள்ளைகளின் பாதங்கள் நம் நினைவுக்கு வந்து கழிவுகளையும், கண்ணாடி பொருள்களையும் நாம் இரட்டிப்பு கவனம் செலுத்த அகல்வாய் கரைக்கு வரும் அனபர்களை அன்போடு கேட்டுக்கொள்வதோடு, நகராச்சி இதில் ஆவணம் செலுத்த முற்படவேண்டும். என்பதை இதில் பதிவு செய்கிறேன்.

A.R.Refaye-Abudhabi.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. போர்க்களம்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [11 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5909

என் நண்பர் ஒருவர், உதவி இயக்குனர் ஆக இருக்கிறார். அவர் பல குறும்படங்களும் எடுத்து உள்ளார். அவரிடம் நான் சொல்லி உள்ளேன்.. "உனக்கு போர்க்களத்திற்கு பின்பு அல்லது கலவரம் நடந்த பின்பு, அந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த விரும்பினால் என்னிடம் சொல்லு, எங்கள் ஊரின் கடற்கரையை படம் பிடித்தால் போதும்" என்று.

ஆகவே அப்படியே விட்டுவிடுங்கள்.. அவர்களுக்காவது பயன் அளிக்கட்டும்.

இன்னும் அதிகமாக எழுதலாம் தான், கமெண்ட்ஸ் பகுதி பத்தாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கடற்கரை மணற்பரப்பில் குப்...
posted by Soofi (Riyadh) [11 July 2011]
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 5912

கடற்கரை பயனாளிகள் சங்கம் செயல் பட தொடங்கியாச்சா இல்லையா? ஒன்று இருந்ததே! அதன் பிறகு வீட்டில் பெற்றோர்கள் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் சுத்தம் பற்றி விளக்க வேண்டும், குப்பைகளை எல்லா இடத்திலும் வீச கூடாது, குப்பை தொட்டியில் மட்டும் தான் போட வேண்டும் என்ற விழிப்புணர்வை சிறு வயதிலேயே கற்று கொடுக்க வேண்டும். நமது இஸ்லாம் மார்க்கம் எவ்வளவு அழகா சுத்தத்தை பற்றி சொல்லி தந்திருக்கிறது ஆனால் யாரும் நடப்பதில்லை. உலக கல்வியின் முக்கியத்தில் மார்க்க கல்வியை மறந்து விடாதீர்கள். நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கடற்கரை மணற்பரப்பில் குப்...
posted by drnoordeen (muscat) [11 July 2011]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 5914

கடற்கரை மணலை எப்படி சுத்தமாக வைப்பது பற்றி ஆக்கபூர்வமான் கருத்துக்களை சொன்னால் நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாப்பா வாடா..
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [11 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5920

எப்படி நம் கடற்கரையை சுத்தமாக வைப்பது என்று பல தடவை கருத்துக்கள் பதிந்து விட்டோம், பயன் தான் கிட்டவில்லை.

மறுபடியும் என் கருத்தை சொல்லுகிறேன்.

1 . கடற்கரை மணலில் எந்த ஒரு வியாபாரமும் நடக்கக்கூடாது, குறிப்பாக வடை சுடுதல், கஞ்சி வியாபாரம்.

2 . ஐஸ் கிரீம் வண்டி உள்ளே வரக்கூடாது, அப்படி அனுமதி கொடுத்தால் அங்கு கிடக்கும் அனைத்து ஐஸ் கிரீம் கழிவுகளான கப், குச்சிகள் அனைத்தையும் அவர்கள் தான் துப்புரவு பண்ணனும்.

3 . அதிகமான குப்பை தொட்டிகள் வைக்கணும்.(குப்பைகள் போடவே இடம் இல்லாத போது, எங்கு கொட்டுவது )

4 . சீரிய இடைவேலை விட்டு ஒட்டு மொத்தமாக கடற்கரையை சுத்தம் செய்யணும். (நம் ஊரில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரியிலும் N.S.S ( National Service Scheme) என்று ஒன்று உள்ளது. அவர்கள் நாட்டுக்கு இதுவரை என்ன சேவை செய்து உள்ளார்கள் என்று தெரியவில்லை. அனைத்து பள்ளி NSS பிள்ளைகளையும் ஒருங்கினைத்து ஒரு அரைமணி நேரம் ஒதுக்கினாலே போதுமானது).

இதற்கும் அதிகமாக மக்களிடம் ஒரு அக்கறையும், விழிப்புணர்வும் இருந்தாலே மிக்க சந்தோசம்.

அப்புறம் அங்கு இருக்கும் கஞ்சி கம்மாவை வெத்தலை போட்டு புளிச், புளிச் என்று அங்கும் இங்கும் துப்புவதையும், "வாப்பா வாடா.. " என்று மரியாதை இல்லாமல் சொல்லுவதையும் நிறுத்த சொல்லுங்க..அதற்கு பதிலாக வாப்பா மஞ்ச வாடா, சமுசா என்று சொல்ல சொல்லுங்க... சரிங்களா டாக்டர் நூர்தீன் காக்கா அவர்களே.

மீண்டும் சந்திக்கலாம்,

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. செயலில் இறங்குவோம்.இன்ஷா அல்லாஹ்
posted by Moulavi Hafil M.S;Kaja Mohideen Mahlari (Singapore.) [11 July 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 5921

நமதூர் கடற்கரை நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். சென்னை மெரீனா பீச்சுக்கு அடுத்ததாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க அதனை நாமும், நம்மை சேர்ந்தவர்களும்தான் சுத்தமாக வைக்க வேண்டும்.

நமது மார்க்கத்தில் "சுத்தம் ஈமானில் பாதியாகும்" என்பது சொல்லாக மட்டும் இருந்து விடக்கூடாது. அதனை செயல்படுத்த நீ, நான், அவன், இவன் என்று இருந்து விடாமல் அனைவரும் முயற்சி செய்தால்தான் நமது அழகான கடற்கரையை சுத்தமானதாக, சுகாதாரமானதாக பாதுகாக்க முடியும்.

எனவே நமது வீட்டை போல் இந்த இறை அருட்கொடையை அனைவரும் பாதுகாப்போம் என சொல்லி செயலில் இறங்குவோம். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:கடற்கரை மணற்பரப்பில் குப்...
posted by vsm ali (Kangxi, Jiangmen, China) [12 July 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 5922

மிகவும் அவசரம் , அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட " கடற்கரை பயனாளிகள் சங்கம் " எங்கே போனார்கள் என்று தெரியவில்லை . ( வெளியூர்வாசி ஒருவர் கோடை நேரத்தில் அரைக்கால் சட்டை போட்டு வந்தார் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது . ) சாக்லேட் பேப்பரை , dust bin இல் போட, அதை தேடி அலைந்த அந்த மழலையை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் .

இங்கு என் வீட்டிற்கு அருகில் ஒரு ஜூனியர் ஸ்கூல் . அங்கு சுத்தம் செய்யும் பணியாளர்கள் பலபேர் உள்ளனர். இருப்பினும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை , மாணவர்கள் அனைவரும் , ( ஏழை பணக்காரன் பாகுபாடு இன்றி ) தாங்கள் படிக்கும் பள்ளி , அதை முன்னோக்கியுள்ள தெரு ஆகியவற்றை சுத்தம் செய்கின்றனர். சுத்தம் செய்ய பயன்படும் பொருட்களை , தங்கள் வீட்டில் இருந்தே , வெட்கப்படாமல் எடுத்து வருகின்றனர். அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம், மாணவர்களை இது போன்ற காரியங்களில் ஈடுபடுத்தலாமா என்று கேட்டதற்கு , இதை இப்போதே , இங்கேயே பழகினால்தான் , நாளை பொது இடத்தை சுத்தமாக வைக்கும் எண்ணம் தோன்றும். ஒரு மாணவன் எங்கள் பள்ளியை விட்டு வெளியேறும்போது , இது போன்ற செயல்களையும் சேர்த்துதான் " conduct cerificate " வழங்குகிறோம். என்று சொன்னார். என் மனதிற்கும் சரியாகவே பட்டது.

நமது கடற்கரையில் குப்பை போட இடமே இல்லாத போது , யாரை குற்றம் சொல்லி என்ன பயன் ? கஞ்சி கம்மாவும் , வாடா அப்பாவும் , கடற்கரையில் ஆங்காங்கே அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களை தேடிப்பிடித்தல்லவா , வியாபாரம் செய்கின்றனர். சாப்பிட்ட பின் , வாடிக்கையாளர் , பேப்பர் மற்றும் கழிவுகளை போட , குப்பை தொட்டியை தேடிப்பிடித்தா அலைய முடியும் ? வியாபாரம் செய்ய ஒரு குறிப்பிட்ட இடத்தை வரைமுறை படுத்தி, வாடிக்கையாளர்கள் அங்கு வந்துதான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். அங்கு சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு , வியாபாரிகளிடம் ஒரு தொகையை கட்டணமாக வசூலிக்கலாம் என்பது என் கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. கடல் குப்பைகள்
posted by HASBULLAH MACKIE (dubai) [12 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5928

சாரணர் இயக்கம் என்ற ஒரு பகுதி படை ஸ்கூல் இல் இயங்கி வருகிறதை நாம் அறிவோம். எதேற்காக என்பது தான் புரியாத புதிர். சொல்லிகொல்லுவார்கள் நாட்டிற்க்கு சிறந்த சேவைகள் செய்பவர்கள். சில சீசன் TIME வரும் பொது பத்திரிக்கைகளில் வருவதற்காக இவர்கள் தெருவிற்கு சென்று ஒரு சில பகுதிகளில் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்து வருவார்கள். இப்பொழுது அவர்களை எல்லாம் காண்பதில்லை,

இரண்டாவது விஷயம்
கஞ்சி, வாடா இவைகள் எல்லாம் கடல்கரைக்கு வெளியில் விற்பதற்கு அனுமதிக்க வேண்டும். விற்பவர்கள் கடற்கரை விட்டு செல்லும் போது ஏதேனும் குப்பைகள் இருந்தால் ஓரமாக [குப்பைதொட்டி இருந்தால் ] அதிலே போட்டு விட்டு செல்ல வேண்டும். சுத்தத்தை நாமும் பேணவேண்டும், மீறுகின்ற வியாபாரிகளை பயனாளிகள் சங்கத்தினர் அவர்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுக்க வேண்டும்.

முறையாக municipality அதிகாரிகளை அணுகி குப்பைகளை அப்புறபடுத்த முயற்சி செய்ய வேண்டும்.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்று போயிவிட்டால் குப்பைகளே சுகாதாரமாக மாறி விடும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved